குழந்தை பிறந்த பிறகு புதிய சீரியலில் கதாநாயகியாக களமிறங்கும் நடிகை ஆல்யா மானசா.. புதிய தொடரின் அறிவிப்பு..

413

நடிகை ஆல்யா மானசா…

பிரபல முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா.

இந்த தொடரில் இவருடன் இணைந்து நடித்து வந்த நடிகர் சஞ்சீவ காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதன்பின் சில மாதங்களுக்கு முன் இவர்கள் இருவருக்கும் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

சமீப காலமாக ஆல்யா மானசா தனது பெண் குழந்தையின் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் லாக் டவுன் முடிந்து தற்போது சின்னத்திரை படப்பிடிப்புகள் துவங்கிவிட்டது. குழந்தை பிறந்த பிறகு தற்போது மீண்டும் புதிய சீரியலில் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார் ஆல்யா.

இந்த சீரியலை ராஜா ராணி தொடரை இயக்கிய பிரவீன் என்பவர் தான் இயக்க போகிறார். மேலும் இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார் நடிகை ஆல்யா மானசா தெரிவித்துள்ளார்.