ஸ்ரீகாந்தை கல்யாணம் செய்துக்காத… அவர் அதுல வீக்- வருங்கால மனைவியிடம் பற்றவைத்த த்ரிஷா!!

1386

ஸ்ரீகாந் மனைவியிடம்..

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக கனவுக்கண்ணியாக வலம் வருபவர் திரிஷா. லேசா லேசா படம் மூலமாக அறிமுகமான அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அவருக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் நடித்துள்ள குந்தவை கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இதையடுத்து மீண்டும் அவருக்கு படங்கள் வந்து குவிய ஆரம்பித்துள்ளன. 39 வயதாகும் திரிஷா இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஏற்கனவே ஒரு முறை அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு சொல்லிக்கொள்ளும் படியான ஹிட் படம் ஒன்றும் அமையவில்லை.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் உள்ளவர்கள் பலரோடு நெருக்கமாக இருக்கும் த்ரிஷா ஸ்ரீகாந்துக்கும் நண்பர்தான். அவர்கள் இருவரும் இணைந்து மனசெல்லாம் படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் தன்னுடைய திருமண விஷயத்தில் திரிஷா செய்த பிராங்க் பற்றி ஒரு நேர்காணலில் ஸ்ரீகாந்த் பேசியுள்ளார்.

அதில் “ என் மனைவி வந்தனா, த்ரிஷாவுக்கு நெருங்கிய தோழி. எங்கள் திருமணம் நிச்சயமான போது திரிஷா, வந்தனாவிடம் ‘ஸ்ரீகாந்தை கல்யாணம் செய்துகொள்ளாதே. அவருக்கு இங்கிலீஷ் சரியாக பேச வராது’ என சொல்லியுள்ளார். இதை வந்தனா வந்து என்னிடம் சொன்ன போது நான் மனம் உடைந்துவிட்டேன்.

ஏன் இப்படி சொன்னீர்கள் என த்ரிஷாவிடமே நேரடியாகக் கேட்டேன். அவர் ‘நான் சும்மா அவளிடம் பிராங்க் பண்ணினேன்” என உண்மையை சொன்னார். அப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருந்தது. அந்த விஷயம் அதோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது” எனக் கூறியுள்ளார்.