வெறும் பிளாஸ்டிக் பேப்பரை சுத்திக்கொண்டு வீடியோ வெளியிட்ட சாய் பல்லவி!!

417

சாய் பல்லவி…

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘பிரேமம்’இதன் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி.அடுத்து தொடர்ந்து மலையாளத்திலேயே ‘களி’ என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்ததன் மூலம் மலையாளத்தில் முன்னணி நடிகை ஆனார் .

பின்னர் ‘பிடா’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்குக்குச் சென்ற சாய் பல்லவி, விஜய் இயக்கத்தில் வெளியான ‘தியா’ படத்தின் மூலம் தமிழ்த் சினிமாவில் அறிமுகமானார். தற்போது சாய்பல்லவி படங்களில் நடிப்பதைக் குறைத்து கொண்டு வருகிறார். ஷியாம் சிங்காராய் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

இதையடுத்து அவருக்கு நிறைய படங்கள் நடிக்க வாய்ப்பு வந்தும் எந்த படத்திலும் நடிக்க அவர் ஒத்துக்கொள்ளவில்லை. அவரது கடைசி படமாக ராணா டகுபதியுடன் விராட பர்வம் என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் வெளியீடு தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது . சமீபத்தில் தயாரிப்பாளர்கள் ஜூலை 1-ம் தேதி இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள் .

ஆனாலும் இதன் பிறகு வேரு எந்த படத்திலும் நடிக்க சாய் பல்லவி சம்மதிக்காதது ரசிகர்களுக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்திள்ளது. சாய் பல்லவிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறதோ என்ற சந்தேகம்தான் அது . இதை பற்றி சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், படம் ஒன்றில் நடிக்க கெட்டப் மாற்ற மேக்கப் போடும் சாய் பல்லவியின் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், உடை எதுவும் அணியாமல் வெறும் பிளாஸ்டிக் பேப்பரை சுத்திக்கொண்டு அமர்ந்திருக்கிறார்.