என்னுடன் படுக்கையை பகிர்ந்த பிரபலங்கள் இவர்கள் தான்.. பரபரப்பை கிளப்பும் ஸ்ரீரெட்டி!!

467

ஸ்ரீரெட்டி..

கடந்த 2011ஆம் ஆண்டு, ‘நேனு நானா அபத்தம்’ என்னும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீரெட்டி. இப்படத்தை தொடர்ந்து அரவிந்த் 2 மற்றும் ஜிந்தகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா மூலம் பிரபலமானதை விட சர்ச்சைகள் மூலமாக தான் அதிகம் பிரபலமானார். பல நடிகர்கள், இயக்குனர் மீது metoo குற்றச்சாட்டுகளை வைத்து பரபரப்பை கிளப்பினார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்ரீ ரெட்டி, “நான் சினிமாவில் 25 பேரிடம் ஏமாந்திருக்கிறேன். என்னுடன் படுக்கையை பகிர்ந்த எல்லோரும் பெரிய புரொடியூசர், பெரிய நடிகர்கள், பெரிய இயக்குநர்கள் தான். பொதுவாக தென்னிந்திய நடிகைகளை தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ஏற்றுக்கொள்வது இல்லை. இப்போது தமிழ் சினிமாவில் அப்படி இல்லை படத்திற்கு தேவைப்பட்டால் நம் உடலை வெளிக்காட்டலாம்”.

“ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு ஆடியோ லாஞ்சுக்கு உடல் தெரியற மாதிரி ஆடை அணிவது தவறு தான். இப்படி உடை அணிந்தால் தான் பட வாய்ப்பு கிடைக்குமா? அப்போது திறமைக்கு மதிப்பு இல்லையா?இந்த காலத்தில் இருக்கும் கிளாமர் நடிகைகள் எல்லாம் கிளாமர் நடிகைகளை கிடையாது’.

‘சில்க் ஸ்மிதா, ஷகிலா, அனுராதா, ஜெயமாலினி, ஜோதிலட்சுமி போன்ற நடிகைகள் செய்தது தான் கிளாமர். தற்போது இருக்கும் நடிகைகளுக்கு உடம்பே இல்லை. அவர்கள் ஆண்களா? பெண்களா ? என்கிற சந்தேகம் எனக்குள் இருக்கிறது என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்’.