சாய் பல்லவி…
மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் மலர் டீச்சராக இளசுகள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் தான் சாய் பல்லவி.
இப்படத்தை தொடர்ந்து தமிழில் நிறைய பட வாய்ப்புகள் குவிந்தது தனுஷுக்கு ஜோடியாக மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே என முன்னணி நடிகர்களுடன் நடித்து கோலிவுட்டில் படிப்படியாக முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
மலையாள,தெலுங்கு படங்களை தாண்டி தெலுங்கு மொழி படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் சாய் பல்லவி பற்றி கிசுகிசு டோலிவுட் வட்டாரத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.
அதன்படி நடிகை சாய் பல்லவி, திருமணமாகி குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்கும் நடிகர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில இருப்பதாக சினி ஜோஷ் என்கிற தெலுங்கு ஊடகம் செய்தி வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறது. தற்போது இந்த விஷயம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.