ஆண்ட்ரியா..
தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் மல்டி டேலண்டட் நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். தமிழ் சினிமாவில் ஆண்ட்ரியா கோரஸ் பாடகியாகதான் தன்னுடைய சினிமா வாழ்வை தொடங்கினார். 1985 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆண்ட்ரியா.
அவரின் நடிப்புப் பயணம் தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தை ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார் . அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்த ஆண்ட்ரியா அந்த படம் மூலமாக பிரபல நடிகையானார்.
அந்த படம் பெரியளவில் பேசப்படவில்லை. ஆனால் ஆண்ட்ரியா மீதான கவனம் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைபடத்தின் மூலம் உருவானது. தொடர்ந்து பல தமிழ் மட்டும் மலையாள திரைப்படங்களில் நடித்துவரும் ஆண்ட்ரியா. ராம் இயக்கத்தில் அவர் நடித்த தரமணி திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.
இப்போதுவரை நடிப்பு மற்றும் பாட்டு என இரண்டு துறைகளிலும் வெற்றிகரமாக நடைபோட்டு வரும் அவர் இளமையாக உடலைப் பேணுவதில் ஆர்வம் காட்டி வருகின்றார். இந்நிலையில் இப்போது அவர் வெள்ளை நிற ஃபிராக் அணிந்து ஸ்டைலிஷாக நடத்தியுள்ள போட்டோஷுட் இணையத்தில் வைரலாகி வருகிறது.