பொன்னியின் செல்வன்..
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.
இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என ஏராளமான நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியானது,
அதில் PS-1பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் 2022-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் தற்போது இப்படத்தின் 75% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், பாண்டிச்சேரியில் இப்படத்தின்,
அடுத்தகட்ட படப்பிடிப்பில் கார்த்தி கலந்து கொள்வதற்காக படக்குழு காத்திருப்பதற்காகவும் தகவல் வெளியாகியுள்ளது.