ஒவ்வொரு அம்மாவும் தெய்வம் தான் : சினேகாவின் பிரசவ வலி பார்த்து மனம் திறந்து நெகிழவைத்த பிரசன்னா!!

938

மனம் திறந்து நெகிழவைத்த பிரசன்னா

நடிகை ஸ்னேஹாவை பிடிக்காத ஆட்களே இருக்க முடியாது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் பிடித்த நடிகையாக வலம்வந்த நடிகை சினேகா.புன்னகை இளவரசி என அனைவராலும் அழைக்கப்படும் சினேஹா அழகிய தீயே படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2012ல் திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோது நண்பர்களாகி, காதலர்களாகினர். பிறகு திருமணம் செய்துகொண்டனர்.இப்போது சினேகா இரண்டாவது முறையாக கருத்தரித்து இருக்கிறார். இந்நிலையில் தன் காதல் மனைவி குறித்தும், அவரது முதல் பிரசவம் குறித்தும் மனம் திறந்திருக்கிறார் நடிகர் பிரசன்னா.

அதில் அவர், ‘’சினேகாவின் எளிமை, பெரியவர்களை மதிக்கும் பண்பு இரண்டும்தான் என்னை காதல் வயப்படவைத்தது. எங்க பையன் விஹான் வந்த பின்னாடி எங்க லவ் இன்னும் கூடிருச்சு. எங்க ரெண்டு பேரையும் சேர்ந்து உட்காரவிடாம அவன் நடுவுல உட்கார்ந்துடுவான். சினேகாவுக்கு சுகப்பிரசவம் ஆகல. ஆனா அவுங்களுக்கு வலி வர்றதுக்கு ஊசிபோட்டாங்க. அதுவரை சினேகாவுக்கு ஆறுதல் சொன்ன நான், டாக்டர் பெரிய ஊசியை எடுத்ததும் தலைசுத்திட்டேன். ஒரு ஓரமா போய் உட்கார்ந்துட்டேன்.

தலைவலியையே என்னால் தாங்க முடியாத போது, பிரசவ வலி எப்படி இருக்கும்? அந்த வகையில் ஒவ்வொரு அம்மாவும் தெய்வம். அம்மாவை தெய்வத்தோட ஒப்பிடுறதுல தப்பே இல்லை”என உருகியிருக்கிறார் நடிகர் பிரசன்னா.