ஆர்யா சாயிஷா தம்பதியின் சந்தோசமான அறிவிப்பு: ரசிகர்கள் குஷி

817

ஆர்யா சாயிஷா……!

நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா சமீபத்தில் திருமணம் செய்தார்கள் என்பதும் இந்த புதுமண தம்பதிகள் இணைந்து ’டெடி’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.

என்பதும் தெரிந்ததே இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதனையடுத்து படக்குழுவினரும் இதனை கொண்டாடினார்

இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக ஆர்யா மற்றும் சாயிசா இணைந்து அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் அவர்களது ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

ஆர்யா மற்றும் சாயிஷா ஏற்கனவே சூர்யாவின் ’காப்பான்’ படத்தில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில்தான் முதன்முதலாக ஜோடியாக இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

வரும் பிப்ரவரியில் காதலர் தினத்தன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் இதனையடுத்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் அடுத்த வாரம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற உள்ளது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்