அஜித் பற்றிய ‘அந்த’ விஷயத்தை ஏன் இத்தனை வருஷமா சொல்லல முருகதாஸ்?

786

முருகதாஸ்..?

தர்பார் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசியதை கேட்டவர்களுக்கு ஒரேயொரு கேள்வி தான் எழுந்துள்ளது.
தர்பார் இசை வெளியீட்டு விழா அல்டிமேட் ஸ்டாராக இருந்த அஜித் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தீனா படத்தில் நடித்த பிறகு தல ஆனார்.

அதில் இருந்து அவரை அனைவரும் தல என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். அஜித்துக்கு தல என்று பெயர் வைத்தது முருகதாஸ் என்றே அனைவரும் நினைத்தார்கள். இந்நிலையில் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய முருகதாஸ் வேறு விதமாக கூறி அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

அஜித்துக்கு தல என்று பெயர் வைத்தது ரஜினி சார் தான் என்று முருகதாஸ் மேடையில் தெரிவித்தார். அஜித் மீது ரஜினி மிகுந்த மரியாதை வைத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் தான் ரஜினி அஜித்துக்கு இப்படி ஒரு பெயர் வைத்தது தெரிய வந்துள்ளது. அது சரி முருகதாஸ், இதை ஏன் நீங்கள் இத்தனை ஆண்டுகளாக சொல்லவே இல்லை என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். எத்தனையோ பேட்டிகளில் முருகதாஸிடம் அஜித்துக்கு தல என்று பெயர் வைத்தது குறித்து கேட்ட போது ஏன் இந்த உண்மையை சொல்லவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரஜினி தான் செய்யும் நல்ல காரியங்களை வெளியே சொல்வது இல்லை. அதே போன்று தான் அஜித்துக்கு தல என்று பெயர் வைத்ததையும் கூறவில்லை. அவர் அமைதியாக இருந்ததால் தான் முருகதாஸும் மவுனமாக இருந்துவிட்டாரோ. இல்லை என்றால் ரஜினியை வைத்து ஒரு நாள் படம் எடுப்போம், அந்த விழா மேடையில் தான் இதை தெரிவிக்க வேண்டும் என்று இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தாரோ என்னவோ?.

சிறு வயதில் நிலாவை பார்த்து சாப்பிடுவோம். ஆனால் தற்போது நிலவில் நிற்பது போன்று உள்ளது. ரஜினியை பார்த்து பார்த்து ரசித்த, ரசிக்கும் ரசிகன் நான். ஒரு குச்சியை ஹீரோ என்றால் கூட அது திமிருடன் ஆடும். ஆனால் 40 ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருந்தும் சிறிதும் திமிர் இல்லாதவர் ரஜினி. அவரை போன்றே இருக்க நான் ஆசைப்படுகிறேன் என்று முருகதாஸ் தெரிவித்துள்ளார். முருகதாஸ் பேச்சால் ரஜினி ரசிகர்கள் மட்டும் அல்ல அஜித் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.