பெண்களின் வாழ்க்கையை சூறையாடிய பிரபல டிவி நடிகர் கைது : நடந்தது என்ன?

1012

சமீபகாலமாக சினிமாவை சேர்ந்த பெண்கள் பலர் மீ டூவில் பாலியல் புகார் அளித்து வந்தார்கள். இதில் சில முக்கிய பிரமுகர்களின் பெயரும் சிக்கியது. அடுத்தடுத்து இது தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது கத்தி முனையில் இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த கன்னட டிவி நடிகருடன் சேர்த்து 3 பேரை காவல் துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.

பெங்களூர் கோரமங்களா பகுதியில் இரண்டு பெண்கள் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். கடந்த மே 12 ம் தேதி ஆன்லையின் உணவு ஆர்டர் செய்த இவர்கள் உணவுக்காக காத்திருந்திந்தார்களாம்.

அப்போது இரவும் 8.20 மணியளவில் உணவு வந்துவிட்டது என கதவை திறந்து வெளியே வந்த போது மர்ம நபர்கள் 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் அந்த பெண்கள் போலிசில் புகார் அளித்துள்ளனர். இதன் விசாரணையின் போது நடந்த சம்பவத்தில் கன்னட டிவி நடிகர் ராகேஷ், கார் டிரைவர் மணிகண்டா, பானி பூரி விற்கும் சூர்யா ஆகியோரை கைது செய்யப்பட்டுள்ளனர்.