“வனிதா என்னை பூட்டி வைத்திருக்கிறார்” பல உண்மைகளை உருக்கமாக பேசும் பீட்டர் பால் ! வைரலாகும் வீடியோ !

555

ஊரே Corona வைரஸ் காரணமாக தவித்துக் கொண்டிருக்கும்போது, சாப்பாடு இல்லாமல் சாப்பிடாமல் இருக்கும்போது, தாகத்தில் தி ணறிக்கொண்டிருக்கும் போது, வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் போது, இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, பிரபல முன்னாள் திரைப்பட நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணத்தை பற்றி அலசி ஆராய்ந்து வருகிறார்கள் மக்கள்.

வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணத்தைப் பற்றி சூர்யா தேவி என்னும் பெண்மணியும் ரவீந்தர் என்னும் திரைப்படத் தயாரிப்பாளரும், தங்களது கருத்துக்களை கோபமாகவும், சில பேருக்கு மன வருத்தத்தை உண்டாக்கும் விதமாகவும் பேசியுள்ளார்கள். அப்படிப் பேசியதற்கு தனது வக்கீல் மூலம் சட்டபடி நடவடிக்கை எடுக்க இவர்கள் இருவர் மீதும் புகார் அளித்துள்ளார் வனிதா. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மக்கள், “உங்கள் கணவர் பீட்டர் பால் எங்கே?, ஏன் உங்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார்?” என்னும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக பீட்டர் பாலை பேட்டி எடுத்துள்ளார் வனிதா.

இதை தற்போது வனிதா தன்னுடைய யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அதில், ” பீட்டர் பால் எங்கே.. அவரை பேச சொல்லுங்கள் என கேட்கிறார்கள். எதிர்க்கட்சியில் இருக்கும் உங்களுடைய வைஃப் நான் உங்களைப் பூட்டி வைத்திருக்கிறேன் என்று சொல்கிறார்கள்” என வனிதா கூறுகிறார். அதற்கு பதிலளித்த பீட்டர் பால் “பூட்டி தானே வைத்திருக்கிற” என்று தடாலடியாக கூறிவிட்டார். உடனே வனிதா அதிர்ச்சியாக, சுதாரித்த பீட்டர் பால் “நீ உன் இதயத்தில் பூட்டி தானே வெச்சுருக்கிற” என அதற்கு பிறகு பீட்டர் சொன்ன பிறகு தான் அவர் பெருமூச்சு விட்டார்.

மேலும் தன்னுடைய முதல் மனைவி பற்றி பேசிய பீட்டர் பால், “ஒரு உண்மையான மனைவி என்றால் புருஷன் கஷ்டத்தில் இருக்கும் போது, இல்ல வேணாம் மரணத்தின் விளிம்பில் இருக்கும் போது கூட வந்து எட்டி பார்க்காத ஒரு பொம்பள ஒரு பொம்பளையா” என பேசிருக்கிறார்.

மேலும், அவர் “நான் இரண்டு வருடம் எனது மகள் பிறந்தநாளன்று மகளை பார்க்க அவள் வீட்டில் நின்றிருக்கிறேன்” என கூறுகிறார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.