“நீ யாருடி கிழிச்சு தொங்க விட்டுறவன்டி உன்ன” லக்ஷ்மி ராமகிருஷ்ணனோடு அனல் பறந்த Live பேட்டி கிழிச்செடுத்த வனிதா!

596

பல நாளிதழ் பத்திரிக்கைகள், பல இணையதள பத்திரிகைகள் கண்டன்ட் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த இந்த நான்கு மாத காலங்களில் தெய்வமாக வந்தவர்தான் இந்த வனிதா. நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணத்தை பற்றி பார்ட்னர்ஷிப் போட்டு அலசி ஆராய்ந்து வருகிறார்கள் இந்த பத்திரிக்கையாளர்களும் மக்களும்.

வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணத்தைப் பற்றி சூர்யா தேவி என்னும் பெண்மணியும் ரவீந்தர் என்னும் திரைப்படத் தயாரிப்பாளரும், தங்களது கருத்துக்களை கோபமாகவும், சில பேருக்கு மன வருத்தத்தை உண்டாக்கும் விதமாகவும் பேசியுள்ளார்கள். அப்படிப் பேசியதற்கு தனது வக்கீல் மூலம் சட்டபடி நடவடிக்கை எடுக்க இவர்கள் இருவர் மீதும் புகார் அளித்துள்ளார் வனிதா.

நடுவில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ புகழ் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வனிதாவின் மூன்றாவது திருமணத்தைப் பற்றி பேசி, பிறகு மன்னிப்பு கேட்டு விட்டு நகர்ந்து சென்றார். ஆனால் பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத்தின் தூண்டுதல் காரணமாக மீண்டும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இந்த பஞ்சாயத்துக்குள் இறங்கினார், மேலும் “உங்களுக்கு ஆதரவாக இருப்பேன்” என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் எலிசபெத்திற்கு ஆறுதல் கூறி இருந்தார்.

இதனால், கோபம் கொண்ட வனிதா, “Live பேட்டி ஒன்று வைங்க” என்று கூறி லக்ஷ்மி ராமகிருஷ்ணனை Live-இல் வரவைத்து இல்லாததை பொல்லாததை கூறி திட்டி தீர்த்து விட்டார். அந்த வீடியோ ஓடிக்கொண்டிருந்த ஒரு சமயத்தில் அந்த வீடியோவின் நடுவில் Host-ஐ வெளியே போ என வனிதா கூற, அவரும் பயத்தில் வெளியே சென்றுவிட்டார். அதன்பிறகு ஆரம்பித்ததுதான் விளையாட்டு.

“நீ யாரு மொதல்ல, நீ ஏன் இதுல தலையிடற, கிழிச்சி தொங்கவிட்ருவன் உன்ன. நீ ஒன்னும் பத்தினி மாதிரி போர்வ போத்தாத, ஒரு புருஷன வெச்சிக்கிட்டு இருந்தா நீ என்ன ஒரு யோக்கியமா, நானும் அதே இண்டஸ்ட்ரில இருக்கவ தான் உன்ன பத்தி தெரியாதடி. ஒரு புருஷன கட்டிக்கிட்டு 100 பேர வெச்சிக்கிட்டு இருக்க, இந்த வீடியோவை Record பண்ணி நான் போட்டு உன்ன கிழிக்கிறேன்டி” என்று லட்சுமியை திட்டியுள்ளார்.

வனிதாவை விட சில வயது மூத்தவரான இருப்பார் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆனால் சிறிதளவு கூட மரியாதை இல்லாமல் கன்னா பின்னா என்று பேசியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.