ஆளாளுக்கு மானத்தை வாங்கியதால், வனிதா எடுத்த அதிரடி முடிவு: பரபரப்பில் சமூக வலைதளங்கள் !

422

நடிகர்களான விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள்தான் வனிதா விஜயகுமார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர்.

வனிதா தமிழில் முதன்முதலாக விஜய்க்கு ஜோடியாக ‘சந்திரலேகா’ என்ற படத்தில் தான் அறிமுகமானார். இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி அதிகளவு பிரபலமாவதற்கு முக்கிய காரணம் வனிதா.மேலும்,பிக் பாஸ் வீட்டிற்கு வந்து கொஞ்ச நாட்களிலேயே வனிதாவினால் பயங்கர பிரச்சனைகள், சர்ச்சைகள் தோன்றினார்.

இதனால்,மக்கள் வனிதாவை வெறுக்கவும் ஆரம்பித்தார்கள். வனிதா குறித்து பல விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்கள். உண்மையில் தப்போ சரியோ தனக்கு என்ன தோணுதோ வனிதா விஜயகுமார் கேமரா முன் தைரியமாக பேசுவார்.

இவருக்கு ஒரு மாதம் முன்னாடி மூன்றாம் கணவரோடு திருமணம் நடைபெற்றது. அதைப்பற்றி சில சினிமாவை சார்ந்த பெண்கள் வேறுமாதிரியாக பேச ஆரம்பிக்க, உடனே பொங்கி எழுந்த வனிதா, ஆண்களே கூச்சப்படும் அளவுக்கு பேசுகிறார். தற்போது ஆளாளுக்கு தன் குடும்ப வாழ்க்கையைப் பற்றி மீடியாவில் கொச்சையாக பேசுவதால்,

தற்போது வனிதா ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். இதன்படி டுவிட்டரில் இருந்து அவர் திடீரென விலகியுள்ளார். வனிதாவின் டுவிட்டர் பக்கம் தற்போது காலியாக உள்ளது என்பதும், வனிதாவின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்பதும் தெரியவில்லை. வேற என்ன காரணமாக இருக்கும்… எல்லாம் தன்மானம் தான்.