“நான் ஆம்பளையா இருந்தா, இப்படிதான் இருந்திருப்பேன்” குஷ்பு வெளியிட்ட புகைப்படம் !

570

தர்மத்தின் தலைவன், வருஷம் 16, சின்னதம்பி என படங்கள் மூலம் தமிழில் கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ. தமிழைத் தவிர்த்து, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

சொல்லப்போனால், எந்த நடிகைக்கும் அமையாத அளவுக்கு நடிகை குஷ்புவிற்கு கோவில் கட்டியது தமிழ்நாட்டு ரசிகர்கள்தான்.

இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்தனர் இவர்களுக்கு 20 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.

சினிமா வாய்புகள் குறைந்து போகவே அ ரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தார் குஷ்பு. தற்போது, அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார்.

இணையத்தில் தற்போது மிகப் பரவலாகப் பேசப்படும் Faceapp செயலி மூலம் ஆணின் புகைப்படத்தை கொண்டு பெண்ணாகவும், பெண்ணின் புகைப்படத்தை கொண்டு ஆணாகவும் மாற்ற முடியும்.

அதுபோல் தற்போது தன்னுடைய போட்டோவை ஒரு ஆணை போல மாற்றி அமைத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் “அமீர்கான் சார் நீங்களா?” என்று கேட்க்கிறார்கள்.