இரட்டை வேடத்தில் நடிகர் கார்த்தி, இயக்குனர் யார் தெரியுமா?

கார்த்தி..!

தமிழ் திரையுலகில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் கார்த்தியும் ஒருவர் என்று கூட சொல்லலாம்.

அண்மையில் வெளிவந்த தம்பி மற்றும் கைதி ஆகிய படங்களை கூட இதற்கு உதாரணமாக கூறலாம்.

மேலும், தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் கார்த்தி. இதனை தொடர்ந்து இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சிறுத்தை, காஷ்மோரா படத்தை தொடர்ந்து இப்படத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம் கார்த்தி என்று தகவல்கள் கசிந்துள்ளது.

புதிய அவதாரம் எடுத்த அஜித் மகள்!!

அஜித் மகள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்கா புதிய அவதாம் ஒன்றை எடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது ஒவ்வொரு நகர்வுகளையும் அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். அவர்களது பிறந்த நாள் கொண்டாட்டங்கள், வெளியூர் செல்லும் புகைப்படங்கள் என அனைத்தையும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி மகிழ்வார்கள்.

தற்போது அஜித்தின் மகள் அனோஷ்கா பாடும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. அனோஷ்கா தனது பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஆங்கிலப் பாடல் ஒன்றை பாடியதாக தெரிகிறது. அவர் பாடும் வீடியோவை ரசிகர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். இதை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

ரஜினியுடன் நடிக்க பயம் : குஷ்பு!!

ரஜினி – குஷ்பு..

சிவா இயக்கும் தலைவர் 168 படத்தில் நடிக்க உள்ள குஷ்பு, ரஜினியுடன் இந்த படத்தில் நடிப்பது பயமாகவும், அதே சமயம் எதிர்பார்ப்பாகவும் உள்ளது என கூறியுள்ளார்.

தமிழில் ரஜினி – பிரபு நடித்த தர்மத்தின் தலைவன் படத்தில் தான் குஷ்பு அறிமுகமானார். அந்த படத்தில் பிரபுவிற்கு ஜோடியாக நடித்த அவர் பின்னர் மன்னன், பாண்டியன், அண்ணாமலை போன்ற படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். இந்த நிலையில், தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 168வது படத்தில் நடிக்கிறார்.

இதே படத்தில் மீனா, கீர்த்தி சுரேசும் நடிக்கிறார்கள். இந்தநிலையில் தனது டுவிட்டரில், டிசம்பர் 22-ந் தேதி முதல் ஐதராபாத்தில் நடக்கும் தலைவர் 168வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். இந்த படத்தில் நடிப்பது பயமாகவும், அதே சமயம் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ரஜினியுடன் மீண்டும் நடிப்பது பெரிய சந்தோசத்தை கொடுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அஜித் குடும்பத்துடன் நட்பாக இருக்கிறோம் : விஜய்யின் தாயார்!!

விஜய்,அஜித் குடும்பம்…!

ராஜாவின் பார்வையிலே படத்தில் இருந்தே அஜித் குடும்பத்துடன் நட்பாகத்தான் இருக்கிறோம் என்று நடிகர் விஜய்யின் தாய் ஷோபா கூறியிருக்கிறார்.

நடிகர் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர். இவர் பிரபல பாடகியும் கூட. சமீத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியுள்ள ஷோபா சந்திரசேகர் விஜய், அஜித் நட்பு பற்றி கூறியிருக்கிறார் ’விஜய் – அஜித் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் இருந்தே அஜித் குடும்பத்துடன் நட்பாகத்தான் இருக்கிறோம்.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஷாலினியை கூட திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியதே என் கணவர் தான். அன்று முதல் இன்று வரை இந்த உறவு நீடித்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் தான் நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா என்ற கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

பிரபல காமெடி நடிகர் வடிவேலு கொடுத்த எதிர்பாராத அதிர்ச்சி : ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்!!

வடிவேலு…!

தமிழ் சினிமாவின் காமெடியன்களைல் அன்று தொட்டு இன்றைய தலைமுறைகள் வரை பலருக்கும் பிடித்த நகைச்சுவை நடிகராக இருப்பவர் வடிவேலு.

அவரின் காமெடி காட்சிகள் இன்னும் மக்களுக்கு நல்ல பொழுதுபோக்காகவும், சிரிப்பு சிகிச்சை அளிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.

24 ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளால் அவர் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரசிகர்களோ அவரை விடவில்லை.

சில நாட்களுக்கு முன் அவர் தான் விரைவில் இணையதளத்தில் வரப்போவதாக கூறியிருந்தார். இதனால் புதுவிதமான லேட்டஸ்ட் களத்தில் அவரை காண மிக ஆவலாக இருந்தார்கள்.

அதே போல செய்திகளும் அண்மையில் வந்தன. இந்நிலையில் அவர் அதை மறுத்துள்ளார். மேலும் நடித்தால் சினிமா மட்டும் தான், வெப் சீரிஸ் எல்லாம் இல்லை என அவர் கூறியுள்ளார். இது வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

5 ரூபாய் டாக்டர் விருது பெற்றார் ராகவா லாரன்ஸ்!!

5 ரூபாய் டாக்டர்..!

சென்னை ராயபுரத்தில் 5 ரூபாய்க்கு மருத்துவ சேவை செய்த மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரனின் விருதை நடிகர் ராகவா லாரன்ஸ் பெற்றிருக்கிறார்.

சென்னை ராயபுரத்தில் 5 ரூபாய்க்கு மருத்துவ சேவை செய்த மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன். இவரது முதலாமாண்டு நினைவு நாளையொட்டி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில், நடிகர் ராகவா லாரன்சுற்கு மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன் விருது வழங்கி தாயன்பு ட்ரஸ்ட் கௌரவித்தது. மக்கள் சேவைக்காக சென்ற வருடம் ராகவா லாரன்ஸ் அன்னை தெரசா விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் சேவைக்காக பெறும் விருதுகள் ஒரு புறம் மகிழ்ச்சியாகவும், ஒருபுறம் பொறுப்பை அதிகப்படுத்தி இருப்பதாகவும் லாரன்ஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

குடிப்பதை நிறுத்திவிட்டேன் : சோனா!!

சோனா..!

ஷாஜகான், குசேலன், குரு என் ஆளு உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி வேடத்தில் பிரபலமான நடிகை சோனா, குடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.

ஷாஜகான், குசேலன், குரு என் ஆளு உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்தவர் சோனா. கடந்த ஆண்டு பிரசாந்த் உடன் ஜானி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்தநிலையில் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் சோனா கூறியிருப்பதாவது:-சிலர் என்னை திரையில் காணவில்லை. ஏன் படங்களில் நடிப்பதில்லை. எங்கே போய்விட்டீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த வருடத்தில் 4 படங்களில் நடித்திருக்கிறேன். 12 படங்களை நிராகரித்திருக்கிறேன். நிம்மதியான நிலையை அடைய வேண்டும் என்று பயணித்து வருகிறேன். பணத்திற்காக ஓட வேண்டிய அவசியமில்லை.

முன்பு இருந்தது போல் இல்லாமல் இப்போது முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறேன். குடிப்பதை நிறுத்தி விட்டேன். 2020ம் ஆண்டு நல்ல கதாபாத்திரங்கள் அமையும் என்று நம்புகிறேன். இந்த வருடம் நான் சேஸிங், பரமபதம் விளையாட்டு, அசால்ட், தேடுதல், பச்ச மாங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கறுப்பாக இருக்கிறேன் என்று ரஜினி வருத்தப்பட்டார் – நடிகர் சிவகுமார்

சிவகுமார்…!

மூன்று முடிச்சு படத்தில் நடித்தபோது கறுப்பாக இருக்கிறேன் என்று ரஜினி வருத்தப்பட்டதாக நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர் பெயரில் ‘கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்கத்தை’ ‘கவிதாலயா’ பாபு மற்றும் ‘கவிதாலயா’ பழனிசாமி இருவரும் தொடங்கி உள்ளார்கள்.

அதற்கான தொடக்க விழாவில் நடிகர் சிவகுமார் பேசியதாவது:- இயக்குநர் கே.பாலசந்தரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மூன்று பேர் நாகேஷ், ரஜினி மற்றும் கமல். ‘மூன்று முடிச்சு’ படத்தில் விருந்தினர் கதாபாத்திரத்திற்காக என்னை அணுகியபோது நான் நடிக்க மறுத்துவிட்டேன். ஆனால், மூன்று முடிச்சு படத்தில் ரஜினி நடிக்கும்போது நீ கறுப்பாக இருக்கிறாய் என்று வருந்தாதே நீ கருப்பு வைரம் தமிழ்நாட்டையே கலக்கப் போகிறாய் என்று அன்றைக்கே கூறியவர்.

அதே போல், இயக்குநர் பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்டியவர் நடிகர் ரஜினிகாந்த். ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் என் கதாபாத்திரத்தை அனைவரும் பேசும்படியாக அமைத்தவர் கே.பாலசந்தர். கே.பாலசந்தரின் இயக்கத்தில் முக்கிய இடம்பெற்ற 5 படங்களில் ‘அக்னிசாட்சி’யும் ஒன்று. ‘சிந்து பைரவி’ மூலம் எனக்கு அனைவரின் கைதட்டல்களையும் வாங்கிக் கொடுத்தவர் கே.பாலசந்தர். சினிமா இருக்கும்வரை அவர் புகழ் மறையாது.

தன் அடுத்தப்படத்தை இயக்க முன்னணி நடிகருக்கு அழைப்புவிடுத்த ரஜினிகாந்த் : ஆனால்?

ரஜினிகாந்த்…!

ரஜினிகாந்த் இவருடன் பணியாற்ற ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இயக்குனர்களின் கனவும் ரஜினியுடன் ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என்பது தான்.

ஆனால், ரஜினியே தன் அடுத்தப்படத்தை இயக்க வாய்ப்பு அழைத்தும் ஒரு நடிகரால் அந்த படத்தை இயக்க முடியாமல் போனதாம்.

ஆம், மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ப்ரித்விராஜ் நடிகர் மட்டுமின்றி இயக்குனரும் கூட, இவர் இயக்கிய லூசிஃபர் படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது.

அந்த படத்தின் படப்பிடிப்பின் போதே இவர் ரஜினியிடம் ஒரு கதை சொல்லியிருப்பார் போல, அந்த கதை ரஜினிக்கு பிடித்து போக, நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி ஓகே சொன்னாராம்.அந்த நேரத்தில் ப்ரித்விராஜ் வேறு ஒரு படத்தில் கமிட் ஆகியிருக்க, தன்னால், இந்த நேரத்தில் உங்கள் படத்தை இயக்க முடியாது என்று ஒரு நீண்ட மன்னிப்பு கடிதத்தை எழுதி அனுப்பியதாக அவரே கூறியுள்ளார்.

திருநங்கையாக நடிக்க வேண்டும், சூப்பர் ஸ்டார் ஓபன் டாக்!!

சூப்பர் ஸ்டார்…!

ரஜினி முதன் முறையாக எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் தான் தர்பார்.

இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று மாலை மும்பையில் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் அந்த ட்ரைலர் லான்ச் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் பல கேள்விகள் கேட்டனர்.

அதில் ஒருவர் நீங்கள் இதுவரை இல்லாமல் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, ரஜினி ‘திருநங்கையாக நடிக்கவேண்டும்’ என்று கூறி அதிரவைத்தார்