நீச்சல் உடையில் விஜய் டிவி டிடி : ரசிகர்கள் அதிர்ச்சி!!

விஜய் டிவி டிடி

பிரபல தனியார் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற தொகுப்பாளர் வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன‌.

பிரபல தனியார் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற தொகுப்பாளரான டிடி தன்னுடைய குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் தன்னுடைய கூடப்பிறந்தவர்களுடன் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகி வருகின்றன.

இவர் தன்னுடைய கூடப்பிறந்தவர்களுடன் நீச்சல் குளத்திலும், மால்கள் மற்றும் பல்வேறு இடங்களில் மகிழ்ச்சியாக சுற்றித் திரிந்துள்ளனர்.

நயன்தாராவை சுற்றி பாதுகாப்பு வளையம் : போட்டது யார் தெரியுமா?

நயன்தாரா

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெருமையோடு வலம் வருகிறார்.

முன்னணி ஹீரோக்கள் படங்களின் முதல் தேர்வாக இருக்கும் நயன், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார். நயனை ஹீரோயினாக்க விரும்பும் தயாரிப்பாளர்கள் அவர் கேட்கும் சம்பளத்தை பேரம் பேசாம் வழங்குவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், வேல்ஸ் பிலிம்ஸ் நிருவனம் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்திற்காக நயன்தாராவுக்கு, தற்போது அவர் வாங்கும் சம்பளத்தை இரண்டு மடங்காக வழங்கியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, நயன்தாரா நடித்து வந்த ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு சுமார் ஒரு மாதம் நடைபெற்ற நிலையில், தற்போது சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.

இதற்கு காரணம், இரண்டு மடங்கு சம்பளம் வாங்கிய மூக்குத்தி அம்மன் படத்தை விரைவாக முடித்துக் கொடுத்துவிட்டு, அந்த பணத்தில் நெற்றிக்கண் படப்பிடிப்பு நடத்தலாம், என்று நயனும், சிவனும் முடிவு எடுத்திருக்கிறார்களாம்.

இந்த நிலையில், ‘நெற்றிக்கண்’ படப்பிடிப்பின் போது விக்னேஷ் சிவன், நயன்தாராவை சுற்றி பாதுகாப்பு வளையம் ஒன்றை போட்டு வைத்திருந்தாராம். யாராவது நயனை குறுகுறுவென்று பார்த்தார்கள் என்றால், உடனே அவர்கள் அந்த இடத்தில் இருந்து அகற்றப்படுவதோடு, படத்தில் இருந்தே தூக்கப்பட்டு விடுவார்களாம்.

மேலும், படத்தில் நடிப்பவர்கள் மற்றும் பிற பணியில் இருப்பவர்கள், தங்களது வேலை முடிந்த பிறகு ஒரு நிமிடம் கூட அந்த இடத்தில் இருக்க கூடாதாம். அப்படி இருக்க விரும்பினால், அவர்களின் வேலையும் காலியாம்.

நயனை சுற்றி சிவன் போட்ட இந்த பா துகாப்பு வளையம் குறித்து நயனுக்கு எதுவும் தெரியாதாம். தெரிந்தால், நயன்தாராவை பார்ப்பவர்களை அப்புறப்படுத்தப்படுவது போல விக்னேஷ் சிவனும், நயன்தாரா வாழ்க்கையில் இருந்து அப்புறப் படுத்தப்படலாம், என்று கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

நடிகர் வடிவேலு இணையதள தொடரில் நடிப்பது தொடர்பாக புத்தாண்டில் அறிவிப்பு!!

வடிவேலு….!

வசனத்தில் மட்டுமல்ல, தனது உடல் மொழியால், மக்களை மகிழ்வித்த மாபெரும் கலைஞன், நடிகர் வடிவேலு. மீம்ஸ்களில் மூழ்கி கிடக்கும், தற்போதைய தலைமுறையின் தலைவனாகவே வலம் வருகிறார், வடிவேலு. அனைத்து விதமான தருணங்களுக்கும், வடிவேலுவின் வசனங்கள் அப்படியே பொருந்தும்.

சில காலங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த வடிவேலு, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாக நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்கள் பெரிய அளவிற்கு சோபிக்கவில்லை. அதன் பின்னர், விஜய்யுடன் மெர்சல் படத்தில் கலக்கினார். மெர்சல் படத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் வடிவேலு கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த நிலையில், தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள இணையதள தொடர்கள் மீது வடிவேலுவின் கவனம் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள குயின் இணையதள தொடர் மக்கள் மத்தியில், வரவேற்பை பெற்றுள்ளதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

முன்னணி நட்சத்திரங்கள் இணையதள தொடரில் களமிறங்கியுள்ள நிலையில், வடிவேலுவும் இது தொடர்பாக புதிய முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இணையதள தொடரில் நடிப்பது தொடர்பாக புத்தாண்டில் அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவுடன் நடித்தால் சண்டை வரும் : ஜோதிகா!!

சூர்யா – ஜோதிகா…!

கார்த்தியுடன் தம்பி படத்தில் நடித்திருக்கும் ஜோதிகா, சூர்யாவுடன் நடித்தால் சண்டை வரும் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், நிகிலா விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தம்பி. இப்படம் குறித்து ஜோதிகா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சூர்யாவுடன் நடிப்பது தான் கஷ்டம். கார்த்தியுடன் நடிப்பது எளிது. சூர்யாவுடன் நடிக்கும்போது அடிக்கடி செல்ல சண்டைகள் வரும்.
அப்படி எதுவும் எனக்கோ, கார்த்திக்கோ கொடுத்தது இல்லை.

எனக்கு நடிக்க வாய்ப்பு இருக்கும் கதைகளாக தேர்வு செய்கிறேன். பழைய குறும்பு நடிப்புகளை குறைத்துக்கொள்கிறேன். எனக்கும் வயதாகிறது எல்லவா?

17 வயதிலேயே நடிக்க வந்து அடுத்த சில ஆண்டுகளில் சென்னையில் செட்டிலாகி விட்டேன். இந்த படத்தின்போது தான் தம்பியுடன் அதிக நேரம் செலவழித்தேன். நிறைய பேசினோம்.

அஞ்சலியுடன் திருமணமா? : நடிகர் ஜெய் விளக்கம்!!

ஜெய், அஞ்சலி..

நடிகை அஞ்சலியை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் தொடர்ந்து பரவி வந்த நிலையில், நடிகர் ஜெய் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் ஜெய்யும் அஞ்சலியும் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் ஜோடியாக நடித்த காலத்தில் இருந்தே இருவரும் காதலிப்பதாக கிசு கிசுக்கள் உள்ளன. நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் ஜோடியாக வெளியில் சுற்றுவது, சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவிடுவது, மகளிர் மட்டும் படத்துக்காக நடந்த தோசை சுடும் போட்டியில் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது.

என்று காதலை உறுதிப்படுத்துவதுபோல் நடந்து கொண்டனர்.ஜெய்யும், அஞ்சலியும் கொடைக்கானல் படப்பிடிப்பில் இருந்து யாரிடமும் சொல்லாமல் வெளியேறி விட்டதாக தயாரிப்பாளர் தெரிவித்த புகாரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் பேசப்பட்டது. ஜெய் ஒரு பேட்டியில் “அஞ்சலிக்கும் எனக்கும் நல்ல புரிதல் உள்ளது. எனக்கு அஞ்சலியையும் அஞ்சலிக்கு என்னையும் பிடித்து இருக்கிறது” என்றார்.

எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள கேப்மாரி படம் சமீபத்தில் திரைக்கு வந்துள்ள நிலையில், காதல் கிசுகிசுக்களுக்கு ஜெய் மீண்டும் விளக்கம் அளித்து கூறியதாவது:- “என்னையும் அஞ்சலியையும் இணைத்து அடிக்கடி செய்திகள் வருகின்றன. திருமணம் என்பது மகிழ்ச்சியான விஷயம்.

எனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றினால் அதை மறைக்க மாட்டேன். அஞ்சலியை நான் காதலிக்கவில்லை. அவரை திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை.”

அவரை பார்க்கும்போதெல்லாம் அந்த கேள்வியை அதிகமாக கேட்டிருக்கிறேன் – திரிஷா

திரிஷா..!

பட விழாவில் கலந்துக் கொண்ட நடிகை திரிஷா, அவரை பார்க்கும் போதெல்லாம் அந்த கேள்வியை அதிகமாக கேட்டிருக்கிறேன் என்று பேசியுள்ளார்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் திரிஷா இந்தியிலும் நுழைந்து தனது திறமையை காட்டினார். இதேபோல கடந்த ஆண்டு மலையாளத்தில் முதன் முறையாக ‘ஹே ஜூட்’ என்கிற படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அறிமுகமானார்.

தற்போது ஜீத்து ஜோசப் – மோகன்லால் இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘ராம்’ என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் துவக்கவிழா பூஜை கொச்சியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய திரிஷா, “நான் பல திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும்போது, அங்கே மோகன்லாலை பார்க்கும்போதெல்லாம் எப்போது நாம் இணைந்து நடிக்கப் போகிறோம் என்கிற கேள்வியையே அதிகமாக கேட்டிருக்கிறேன். இன்று என்னுடைய அந்த கனவு நனவாகியுள்ளது. மோகன்லால், ஜீத்து ஜோசப் என்கிற மிக அருமையான கூட்டணியில் நானும் இணைந்துள்ளது மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.

இரட்டை வேடத்தில் நடிகர் கார்த்தி, இயக்குனர் யார் தெரியுமா?

கார்த்தி..!

தமிழ் திரையுலகில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் கார்த்தியும் ஒருவர் என்று கூட சொல்லலாம்.

அண்மையில் வெளிவந்த தம்பி மற்றும் கைதி ஆகிய படங்களை கூட இதற்கு உதாரணமாக கூறலாம்.

மேலும், தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் கார்த்தி. இதனை தொடர்ந்து இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சிறுத்தை, காஷ்மோரா படத்தை தொடர்ந்து இப்படத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம் கார்த்தி என்று தகவல்கள் கசிந்துள்ளது.

புதிய அவதாரம் எடுத்த அஜித் மகள்!!

அஜித் மகள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்கா புதிய அவதாம் ஒன்றை எடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது ஒவ்வொரு நகர்வுகளையும் அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். அவர்களது பிறந்த நாள் கொண்டாட்டங்கள், வெளியூர் செல்லும் புகைப்படங்கள் என அனைத்தையும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி மகிழ்வார்கள்.

தற்போது அஜித்தின் மகள் அனோஷ்கா பாடும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. அனோஷ்கா தனது பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஆங்கிலப் பாடல் ஒன்றை பாடியதாக தெரிகிறது. அவர் பாடும் வீடியோவை ரசிகர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். இதை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

ரஜினியுடன் நடிக்க பயம் : குஷ்பு!!

ரஜினி – குஷ்பு..

சிவா இயக்கும் தலைவர் 168 படத்தில் நடிக்க உள்ள குஷ்பு, ரஜினியுடன் இந்த படத்தில் நடிப்பது பயமாகவும், அதே சமயம் எதிர்பார்ப்பாகவும் உள்ளது என கூறியுள்ளார்.

தமிழில் ரஜினி – பிரபு நடித்த தர்மத்தின் தலைவன் படத்தில் தான் குஷ்பு அறிமுகமானார். அந்த படத்தில் பிரபுவிற்கு ஜோடியாக நடித்த அவர் பின்னர் மன்னன், பாண்டியன், அண்ணாமலை போன்ற படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். இந்த நிலையில், தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 168வது படத்தில் நடிக்கிறார்.

இதே படத்தில் மீனா, கீர்த்தி சுரேசும் நடிக்கிறார்கள். இந்தநிலையில் தனது டுவிட்டரில், டிசம்பர் 22-ந் தேதி முதல் ஐதராபாத்தில் நடக்கும் தலைவர் 168வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். இந்த படத்தில் நடிப்பது பயமாகவும், அதே சமயம் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ரஜினியுடன் மீண்டும் நடிப்பது பெரிய சந்தோசத்தை கொடுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அஜித் குடும்பத்துடன் நட்பாக இருக்கிறோம் : விஜய்யின் தாயார்!!

விஜய்,அஜித் குடும்பம்…!

ராஜாவின் பார்வையிலே படத்தில் இருந்தே அஜித் குடும்பத்துடன் நட்பாகத்தான் இருக்கிறோம் என்று நடிகர் விஜய்யின் தாய் ஷோபா கூறியிருக்கிறார்.

நடிகர் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர். இவர் பிரபல பாடகியும் கூட. சமீத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியுள்ள ஷோபா சந்திரசேகர் விஜய், அஜித் நட்பு பற்றி கூறியிருக்கிறார் ’விஜய் – அஜித் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் இருந்தே அஜித் குடும்பத்துடன் நட்பாகத்தான் இருக்கிறோம்.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஷாலினியை கூட திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியதே என் கணவர் தான். அன்று முதல் இன்று வரை இந்த உறவு நீடித்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் தான் நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா என்ற கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.