மகளை காணவில்லை : பாடகர் புஷ்பவனம் குப்புசாமி பரபரப்பு புகார்!!

புஷ்பவனம் குப்புசாமி

பிரபல கிராமிய பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகளை காணவில்லை என அவருடைய உறவினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். பிரபல கிராமிய பாடகரும், சினிமா பாடகருமான புஷ்பவனம் குப்புசாமி, சென்னைப் பல்கலைக் கழக இசைத் துறையில் பயின்ற அனிதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியினருக்கு பல்லவி, மேகா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பல்லவி மருத்துவத்துறையில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் பல்லவியை கா ணவில்லை என புஷ்பவனம் குப்புசாமியின் உறவினரான கவுசிக் என்பவர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், நேற்று இரவு மேகாவிற்கும், பல்லவிக்கு இடையே ச ண்டை ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த பல்லவி கோபித்துக்கொண்டு காரில் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போது பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஜினிக்கு அடுத்த கதை ரெடி : கார்த்திக் சுப்புராஜ்!!

ரஜினி…!

ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், மீண்டும் ரஜினியுடன் பணிபுரிய கதையுடன் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பீட்சா, ஜிகர்தண்டா படத்தின் மூலம் திரைத்துறையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் கார்த்திக் சுப்புராஜ். அதன் பிறகு, மேயாத மான் மற்றும் மெர்குரி படங்களை தயாரித்துள்ளார். ரஜினியின் பேட்டைப்படத்தை இயக்கி டாப் இயக்குனர்களின் வரிசையில் வந்தார் கார்த்திக் சுப்புராஜ். நண்பர்களுடன் இணைந்து குறும்படம், இணைய தொடர்களை தயாரித்து வருகிறார்.

கார்த்திக் சுப்புராஜ் தற்போது அல்லி எனும் சுயாதீன படத்தை தயாரித்துள்ளார். செக்ஸி துர்கா எனும் மலையாளப்படத்தை இயக்கிய சனல் குமார் அல்லி படத்தை இயக்க உள்ளார். இப்படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இருமொழிகளிலும் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்ட கார்த்திக் சுப்புராஜ். புதிய கலைஞர்களின் படைப்பை ஆதரித்ததால் தான், நான் இன்று இயக்குனராக ஆனேன்.

அதனால் தான் நானும் ஸ்டோன் பென்ஞ்ச் மூலம் பல புதிய முயற்சிகளை ஆதரித்து வருகிறேன். அல்லிப்படம் தான் தமிழில் முதன்முறையாக வெளியாகப்போகும் சுயாதீனப்படம் என்று கூறினார். இதுபோன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாகாது ஆனால் படவிழாக்கள் மற்றும் விருது நிகழ்ச்சிகளில் மட்டுமே வெளியாகும் என்றார். இப்படத்தில் பாடல்கள், நகைச்சுவைகள், சண்டைக் காட்சிகள் என்று எந்த ஒரு விசயமும் இருக்காது படம் முழுவதும் மிக எதார்த்தமாக தான் இருக்கும்.

இந்த படம் எடுக்க எந்த ஒரு வியாபார நோக்கமும் இல்லை என்று கூறினார் கார்த்திக் சுப்புராஜ். ஒரு காதலனுடன் ஊரைவிட்டு செல்லும் பெண் வழியில் சந்திக்கும் பிரச்சினையே ’செக்ஸி துர்கா’ படத்தின் கதை, அதை மிகவும் ஆழமாகவும், அழகாகவும் சொல்லி இருப்பார் இயக்குனர் சனல் குமார். அதே போல, அல்லியும் ஒரு பெண்ணின் பயணத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது தான் என்று கார்த்திக் சுப்புராஜ் கூறினார். தனுசை வைத்து படம் இயக்கி வரும் இவர் அடுத்து மீண்டும் ரஜினியுடன் பணிபுரிய கதையுடன் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

பிரபாஸை வைத்து பெருசா பிளான் பண்ணும் ஷங்கர் : அப்போ விஜய்?

பிரபாஸை வைத்து பெருசா பிளான்…!

ஷங்கர் பிரபாஸை வைத்து பிரமாண்ட படம் ஒன்றை எடுக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பிரமாண்ட படங்களை எடுப்பதற்கு பெயர் போன ஷங்கர் மீண்டும் விஜய்யை வைத்து படம் எடுக்கப் போவதாக கூறப்படுகிறது. நண்பனை போன்று இல்லாமல் இம்முறை சொந்தக் கதையில் விஜய்யை நடிக்க வைக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பிரபாஸை வைத்து மெகா பட்ஜெட் படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர். தற்போது பிரபாஸ் படத்திற்கு ஸ்க்ரிப்ட் எழுதும் வேலையில் ஈடுபட்டுள்ளாராம் ஷங்கர். பிரபாஸ், ஷங்கர் இணையும் படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஷங்கர் தற்போது கமல் ஹாஸனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். இந்தியன் 2 பட வேலைகள் நினைத்ததை விட கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறது. படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தாலும் பட வேலைகள் விரைவில் முடிந்த பாடில்லை.

ஷங்கர் கமல் ஹாஸன் பட வேலையை முடித்துவிட்டு விஜய்யை வைத்து படம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பிரபாஸ் படத்திற்கு ஸ்க்ரிப்ட் எழுதிக் கொண்டிருக்கிறார். பிரபாஸுக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளதால் படம் மூலம் முக்கிய மெசேஜ் சொல்லப் போகிறாராம் ஷங்கர்.

பாகுபலி 2 படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த சாஹோ படம் நல்ல வசூல் செய்தது என்றாலும் அதை பலரும் வேறு மாதிரியாக விமர்சனம் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வளத்த கெடா இப்படி மார்பில் மோதுதே.. சிவகார்த்திகேயன் மீது கொலவெறியில் தனுஷ்!!

தனுஷ் – சிவகார்த்திகேயன்…!

நடிகர் தனுஷ் தயாரிப்பில் ஹீரோவாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் தான் சிவகார்த்திகேயன். தொடர்ந்து அவருடைய தயாரிப்பிலேயே நடித்து வந்த சிவகார்த்திகேயன், ஒரு கட்டத்தில் தன்னுடைய மவுசு தெரிந்து கொண்டு வெளி தயாரிப்புகளில் நடிக்க வந்துவிட்டார்.

இதனால் இருவருக்கும் சின்ன உரசல் ஏற்பட்டு விட்டதாக மீடியாக்கள் பரப்பிவிட்டனர். அவர்களும் அதற்கு தகுந்த மாதிரி மீண்டும் இணையவில்லை. அதற்குமுன் நட்பாக இருந்தவர்கள் பிறகு பார்த்துக் கொள்வதே அரிதாகிவிட்டது.

பத்தாததுக்கு சிவகார்த்திகேயன் மேடை போட்டு மறைமுகமாக தனுசை தாக்கியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த வாரம் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் தயாரிப்பு நிறுவனம் சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

சத்யம் சினிமாவில் பெரிய பேனர், ரயில் பெட்டிகளில் விளம்பரம் என சிவகார்த்திகேயனை முன்னணி ஹீரோ ரேஞ்சுக்கு வியாபாரம் செய்து வருகின்றனர். அதேபோல் தனுஷ் நடித்த பட்டாஸ் படமும் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகள் படு பயங்கரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஹீரோ படத்தின் வாட்ஸ்அப் ஸ்டிகர் அறிமுகமாகும் என கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கு போட்டியாக சத்யஜோதி நிறுவனம் சமீபத்தில் வெளியான சில் ப்ரோ பாடலின் ஒரு குறிப்பிட்ட நடனத்தை டிக்டாக் செய்து வெளியிடுமாறு #ChillBroChallenge அறிவித்துள்ளது.
இதனால் இருவருக்கும் பனிப்போர் நடந்து வருவது தெள்ளத் தெளிவாக தெரிந்துள்ளது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

சீன மொழியில் ரீமேக்காகும் கமல் படம்!!

கமல் படம்..!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் தமிழில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் ஒன்று, தற்போது சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

கமல்ஹாசன், எ ஷீப் வித்தவுட் எ ஷெப்பர்டு பட போஸ்டர்
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்-மீனா ஜோடியாக நடித்து திரைக்கு வந்த ‘திரிஷ்யம்’ படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படம் தமிழில் கமல்ஹாசன்-கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையாக கமல்ஹாசன் நடித்து இருந்தார்.

பாபநாசம் படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதுபோல் தெலுங்கு, இந்தி, கன்னடம், சிங்கள மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. இந்தியில் அஜய்தேவ்கானும், தெலுங்கில் வெங்கடேசும், கன்னடத்தில் ரவிசந்திரனும் நடித்து இருந்தனர்.

தற்போது இந்த படம் சீன மொழியிலும் ‘எ ஷீப் வித்தவுட் எ ஷெப்பர்டு‘ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளது. யாங் சியோ, சுஹோ டன், ஜோன் சென் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. படம் வருகிற 20-ந்தேதி திரைக்கு வருகிறது.

இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்!!

இருட்டு அறையில் முரட்டு குத்து 2..!

சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் கடந்த வருடம் ரசிகர்களை குறிப்பாக இளைஞர்கள் கிலுகிலுப்பாக்கிய படம் இருட்டு அறையில் முரட்டு குத்து.

18 வயதை கடந்தோர் மட்டும் பார்க்கும் படமாக இப்படம் பல இரட்டை அர்த்த வசனங்களுடன் தியேட்டரில் கலக்கியது. பெரும் கூட்டம். வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளில் தற்போது சந்தோஷ் இறங்கியுள்ளார். இதில் அவரே ஹீரோவாக நடிக்கிறாராம்.

இப்படத்தில் பிக்பாஸ் சீசன் 2 பிரபலம் டேனி, ரவி மரியா, சாம்ஸ்ம் விஜய் டிவி பிரபலம் டி.எஸ்.கே, ராஜேந்திரன் ஆகியோர் இணைந்துள்ளனர்.கரிஷ்மா மற்றும் அகிருதி என இரண்டு அறிமுக ஹீரோயின்கள் படத்தில் இணைந்துள்ளார்கள்.

தம்பி அனைவரும் கொண்டாடக்கூடிய படமாக இருக்கும் : கார்த்தி!!

கார்த்தி…!

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி உள்ள தம்பி படம் அனைவரும் கொண்டாடக்கூடிய படமாக இருக்கும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தியும் ஜோதிகாவும் தம்பி, அக்காள் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் தம்பி. சத்யராஜ், இளவரசு, சவுகார் ஜானகி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் குறித்து கார்த்தி அளித்த பேட்டி வருமாறு:- “தம்பி படத்தில் அண்ணி ஜோதிகாவுடன் நடித்தது உற்சாகமான அனுபவமாக இருந்தது. இந்த படம் குடும்ப கதையை மையப்படுத்தி உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு உள்ளது. ‘பையா‘ படத்தை போன்று தனித்தன்மையான, வித்தியாசமான கதையாகவும் நடிப்பிற்கு வாய்ப்புள்ள படமாகவும் தம்பி அமைந்துள்ளது.

அண்ணி ஜோதிகா படப்பிடிப்பிற்கு வருவதற்கு முன்பே அன்றைக்கு உடுத்த வேண்டிய உடைகள், சிகை அலங்காரம் என்று முன்பே திட்டமிட்டு தயார் செய்து வைத்துவிடுவார். என்ன வசனம் பேசவேண்டும்? என்பதை முன்பே வாங்கி மனப்பாடம் செய்துவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு தயாராக வருவார்.

அவருடைய கலாசாரம் எனக்கு பிடித்திருந்தது. அவர் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதில் பெரிய உழைப்பு தெரிந்தது. இப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் தன்மை வேறு. என்னுடைய கதாபாத்திரத்தின் தன்மை வேறு. என்னுடைய சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறேன். இந்த கதாபாத்திரம் என்னுடைய நிஜ கதாபாத்திரத்திற்கு ஒன்றி இருப்பதால், நடிப்பது சுலபமாக இருந்தது.

இப்படத்தின் கதை கோவாவில் ஆரம்பிக்கும். அங்கிருக்கும் மக்களுக்கேற்ப பார்வையை மட்டும் சிறிது மாற்றினோம். அங்கிருந்து கதை மாறும்போது என்னுடைய கதாபாத்திரமும் மாறும். அனைவரும் கொண்டாடக்கூடிய படமாகவும், புது அனுபவமாகவும் இந்த படம் இருக்கும்.” இவ்வாறு நடிகர் கார்த்தி கூறினார்.

யோகிபாபுவுக்காக காத்திருந்த ரஜினி!!

ரஜினி..!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் யோகிபாபுவுக்காக ரஜினிகாந்த் காத்திருந்ததாக கூறப்படுகிறது.

பேட்ட படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவர் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மற்றும் பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதில், ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். பெரும்பாலான படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடந்துள்ளது.

இந்நிலையில் தர்பாரின் கடைசி நாள் ஷூட்டிங், சென்னையில் சனிக்கிழமை நடந்தது. இதில் யோகிபாபு, ரஜினிகாந்த் உட்பட பலர் பங்குபெற்றனர். யோகிபாபு பிசியாகிவிட்டதால் அவர் கால்ஷீட் கிடைக்கவில்லை.

அவருக்காக காத்திருந்து ஷூட்டிங் நடந்ததாக கூறப்படுகிறது. ‘யோகிபாபு வரும்போது ஷூட்டிங்கை வைத்துக்கொள்ளலாம்’ என்று ரஜினி சொல்லி இருக்கிறார். ரஜினியின் பெருந்தன்மையை பார்த்து யோகி பாபு வியந்து இருக்கிறார். தர்பார் படம் பொங்கலுக்கு முன்னதாக ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வருகிறது.

விஜய்யின் அடுத்த படம் இவரோடு தானா? ரிலீஸ் எப்போது தெரியுமா

விஜய்..!

விஜய்யின் படங்களுக்கு சினிமாவில் நல்ல மார்க்கெட் உண்டு. அண்மைகாலமாக அவரின் படங்கள் ரூ 200 கோடி வசூலை தாண்டி வருகின்றன.

இதில் அட்லீ இயக்கத்தில் அவர் நடித்த பிகில் படம் ரூ 300 கோடி வசூலை தாண்டியது. இந்த வெற்றியை தொடர்ந்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை அடுத்து விஜய்யின் படத்தை இயக்கப்போவது யார் என்ற பட்டியலில் பல இயக்குனர்களின் பெயர் சொல்லப்படுகிறது.

இதில் அதிகமாக சொல்லப்படுவது இயக்குனர் சங்கர் தான். ஏற்கனவே நண்பன் படத்தில் இந்த கூட்டணி இணைந்துள்ளது.

இதன் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கினால் படம் வரும் 2021 பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகலாம் என்று தகவல்கள் உலா வருகின்றன.

அப்படியெல்லாம் சொல்லக்கூடாது! விஜய் போட்ட கண்டிசன் : இதை அனைவரும் பின்பற்றுவார்களா?

விஜய் போட்ட கண்டிசன்..!

விஜய்க்கான ரசிகர்கள் வட்டாரம் மிகவும் உயர்ந்து வருகிறது. அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் தற்போது கர்நாடகாவின் சிமோகா பகுதியில் நடைபெற்று வருகிறது.

அவரை காண படப்பிடிப்பில் தினமும் ரசிகர்கள் கூட்டம் கூடி வருகிறது. அவரும் தன்னை காண வந்த தாம் ஏமாற்றிவிடக்கூடாது என்பதால் ரசிகர்களை பார்த்து சில நிமிடங்கள் நின்று கையசைத்து அன்பை வெளிப்படுத்துகிறார்.

கூட்டத்தில் சிலர் அவரை வருங்கால தமிழகமே என கோஷம் போட அவர் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது என அன்புடன் கண்டிசன் போட்டுள்ளார்.

ரசிகர்கள் இதை பின்பற்றுவார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்……