ஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை!!

நெஞ்சம் மறப்பதில்லை..

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாகவும், ரெஜினா மற்றும் நந்திதா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெஜினா பேயாக நடித்திருக்கிறார்.

2017ம் ஆண்டே படப்பிடிப்பு முடிக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தொடர்ந்து பலமுறை தள்ளிப்போனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், இப்படம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யுடன் மீண்டும் இணையும் ஷங்கர்?

விஜய்யுடன் ஷங்கர்..?

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் மீண்டும் விஜய்யை வைத்து திரைப்படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்-ஷங்கர் கூட்டணியில் 2012-ல் வெளியான நண்பன் படம் பெரிய வெற்றி பெற்றது. ஆனாலும் அது நேரடி தமிழ் படம் இல்லை. இந்தியில் அமீர்கான் நடித்து வசூல் அள்ளிய 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாக்கி இருந்தனர். இருவரும் புதிய படத்தில் மீண்டும் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினர். இதுவரை அது நடக்கவில்லை.

இந்த நிலையில் ஷங்கரிடம் மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்குவீர்களா? என்று கேள்வி எழுப்பியபோது, நானும் விஜய்யும் தயார். நாங்கள் எப்போது வேண்டுமானாலும் புதிய படத்தில் இணைய தயாராக இருக்கிறோம் என்று கூறினார். ஷங்கரின் பதில் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் விஜய்க்கான கதையை ஷங்கர் தயார் செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கதையை விஜய்யிடம் சொல்லி ஒப்புதல் பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஓரிரு மாதங்களில் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷங்கரும் கமல்ஹாசனின் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக இருக்கிறார். இருவரும் பட வேலைகளை முடித்து விட்டு புதிய படத்தில் இணைவது குறித்து முடிவு செய்து அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

தளபதி 65 கதை ரெடி, பிரபல இயக்குனர் ஓபன் டாக்!!

விஜய்..!

நடிகர் விஜய் தற்போது இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் முதன் முறையாக இணைந்திருக்கும் படம் தான் தளபதி 64.

மேலும், இப்படமே இன்னும் முடியாத நிலையில் விஜய் 65, 66 படத்தை பற்றி ரசிகர்கள் அப்டேட் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த வகையில் வெற்றி மாறன், மகிழ் திருமேனி போன்ற இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டு வந்தது.

இந்நிலையில் இயக்குனர் பேரரசு பேட்டி ஒன்றில் “தளபதிக்கு கதை ரெடி நான் அவரிடம் பேசிகிட்டு இருக்கேன்” என்று ஓப்பனாக கூறியுள்ளார்.

கையில் மதுவுடன் போட்டோ…. நடிகை மாளவிகாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு!!

மாளவிகா..!

கையில் மது வைத்திருக்கும் போட்டோவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட நடிகை மாளவிகாவிற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நடிகை மாளவிகா தமிழில் உன்னைத்தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தமிழில் அவர் நடித்த திருட்டுப்பயலே, வெற்றி கொடிக்கட்டு, சந்திரமுகி, உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மாளவிகா.

பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட மாளவிகா, தற்போது சினிமாவில் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா, தற்போது மீண்டும் ஒரு போட்டோவை பதிவிட்டிருக்கிறார்.

அதாவது பார்ட்டியில் பங்கேற்றுள்ள மாளவிகா கையில் சரக்குடன், தனது தோழியுடன் நெருக்கமாக உள்ளார். இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் மாளவிகா. அவரது இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை திட்டி வருகின்றனர்.

கதை எழுதியது என்னவோ விஜய்க்கு.. ஆனால் நடிக்க போவது ரஜினி : சீக்ரெட் அப்டேட்!!

விஜய்-ரஜினி…!

சினிமாவில் ஒருவருக்கு எழுதிய கதையில் இன்னொருவர் நடிப்பது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் எதிர்பாராத விதமாக பல நடிகர்களுக்கு ஹிட் கிடைத்துள்ளது. அதை ஒரு சில இயக்குனர்கள் வெளிப்படையாக பேட்டிகளில் தெரிவித்துவிடுவர்.

இது பல முன்னணி நாயகர்கள் இளம் கதாநாயகர்களாக இருக்கும்போதே இந்த மாதிரி சில சம்பவங்களால் பெரும் வெற்றியும் பெற்றுள்ளனர். அதே சமயத்தில் கதை தேர்வில் சொதப்பி தோல்வியும் பெற்றுள்ளனர். அந்நாளில் தளபதி விஜய்க்கு நிறைய கதைகள் கைவிட்டுச் சென்றது.

அதற்கு காரணம் அவருக்கு கதை பிடிக்காமல் இருக்கலாம். விஜய் மட்டுமல்ல, அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களும் தங்களக்கு கதைபிடிக்காமல் நிராகரித்த திரைப்படங்கள் மற்ற நடிகர்களின் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தகவல் கௌதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகிறார் என்பது. அந்த படத்திற்கு யோகன் அத்தியாயம் ஒன்று என பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளிவந்தன.

இந்த படத்தின் மீது அப்போதே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் கதையில் சிறு குழப்பம் ஏற்பட்டதால் விஜய் படத்திலிருந்து விலகினார். தற்போது அந்த கதையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் அந்த கதையை ரஜினியிடம் கூறியிருக்கிறார். ரஜினியும் பச்சைக்கொடி காட்டி விட்டதாக தெரிகிறது. இந்த படத்தை மாபெரும் பொருட்செலவில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கலாம் எனவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் புகழ் லொஸ்லியா தற்போது எப்படியுள்ளார் தெரியுமா?

லொஸ்லியா…!

லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இதை தொடர்ந்து இவரை தமிழ் சினிமாவில் கமிட் செய்ய பலரும் காத்திருக்கின்றனர்.

கூடிய விரைவில் இவரை ஏதாவது ஒரு படத்தில் காணலாம், அப்படியிருக்க லொஸ்லியா எந்த ஊடகங்களையும் சந்திக்காமல் தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வந்தார்.

சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு விருது விழாவில் மட்டுமே கலந்துக்கொண்டார், அப்படியிருக்க லொஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இன்று வெளிவந்து இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

மணிகண்டன் இயக்கத்தில் அழுத்தமான கதையில் விஜய்சேதுபதி!!

கடைசி விவசாயி..!

கடைசி விவசாயி என்ற இன்னொரு அழுத்தமான கதையில் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.காக்கா முட்டை படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற மணிகண்டன் இயக்கத்தில் இந்த படம் தயாராகி உள்ளது.

இவர் ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை ஆகிய படங்களையும் இயக்கி உள்ளார்.

கடைசி விவசாயி படத்தின் டிரெய்லரை விஜய்சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.பில்கேட்சிடம் பேசி விட்டாயா? என்று ஒருவர் கேட்க நான் பேசி விட்டேன்.

அவர்தான் என்னுடன் பேசவில்லை என்ற நக்கலான வசனத்தோடு டிரெய்லரில் அறிமுகமாகும் விஜய்சேதுபதியின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

அஜித்துக்கும், உங்களுக்கும் எப்போது ஆகாதா என்று கேட்ட தொகுப்பாளர்- தளபதி விஜய் கொடுத்த பதில்!!

அஜித்-விஜய்…!

அஜித்-விஜய் தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரங்கள். ரஜினியை அடுத்து பெரிதாக இவர்களது படங்கள் தான் அதிகம் கொண்டாடப்படும்.

அதிலும் பாக்ஸ் ஆபிஸில் படத்துக்கு படம் இவர்களது படம் உலகளவில் பேசப்படும்.ஒரு காலத்தில் தொகுப்பாளர்களில் கலக்கியவர் ஆனந்த கண்ணன்.

இவர் அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் விஜய் மற்றும் அசினை பேட்டி எடுத்தது பற்றி பேசியிருந்தார்.

அப்போது விஜய்யிடம், உங்களுக்கும் அஜித்துக்கும் எப்போதும் ஆகாதா என்று கேட்டேன். அதற்கு விஜய் அவர்கள் மிகவும் கூலாக எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

தலைமுடியை வெட்டிய சம்பவம் : தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர்!!

ஷேன் நிகம்..!

ஒரு படத்திற்காக தலைமுடியை வளர்த்து வெட்டிய சம்பவத்தால் தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் மலையாளர் நடிகர் ஷேன் நிகம்.

மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் சர்ச்சையில் சிக்கி உள்ளார். வெயில் என்ற படத்தில் ஷேன் நிகமுக்கு தலைமுடியை நீளமாக வளர்த்து நடிக்கும் கதாபாத்திரம். ஆனால் படப்பிடிப்பு முடியும் முன்பே தலைமுடியை வெட்டி தோற்றத்தையும் மாற்றியதால் படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டது.

இதையடுத்து மலையாள தயாரிப்பாளர் சங்கம் ஷேன் நிகம் சினிமாவில் நடிக்க தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஷேன் நிகம் தயாரிப்பாளர்கள் மனநலம் பாதித்தவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள் என்று சாடினார். ஷேன் நிகமை தமிழில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர்.

விக்ரம் படம் உள்ளிட்ட எந்த தென்னிந்திய மொழி படங்களிலும் ஷேன் நிகமை நடிக்க அனுமதிக்க கூடாது என்று வற்புறுத்தி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு மலையாள திரைப்பட வர்த்தக சபை கடிதம் அனுப்பி உள்ளது. இந்த நிலையில் ஷேன் நிகம் தான் பேசியதை தவறாக சித்தரித்து விட்டனர் என்று முகநூல் பக்கத்தில் தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்டு கருத்து பதிவிட்டார்.

ஆனால் அவரது மன்னிப்பை ஏற்க முடியாது என்று மலையாள நடிகர் சங்க பொதுச்செயலாளர் இடைவேளை பாபு தெரிவித்துள்ளார். ஷேன் நிகம் பிரச்சினை குறித்து வருகிற 22-ந்தேதி நடக்கும் நடிகர் சங்க கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பிக்பாஸ் காஜலை மிகவும் மனம் பாதிக்க வைத்த சோக சம்பவம்!!

காஜல் பசுபதி..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை காஜல் பசுபதி. இந்நிகழ்ச்சியின் அடுத்த சீசன்களை தொடர்ந்து பார்த்து தன் கருத்துக்களை கூறி வந்தார்.

இதனால் ரசிகர்கள் இவரை விடாது டிவிட்டரில் சாட் செய்து வந்தார்கள். அவரும் சலிக்காமல் அதற்கு பதிலளித்து வந்தார். பல விஷயங்கள் குறித்து ட்விட் போட்டு வரும் அவர் தற்போது ராஜஸ்தானை சேர்ந்த 7 வயது சிறுவன் ஓம்கார் பிரஜாபத்துக்கு ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறான்.

அவனின் சிகிச்சைக்கு ரூ 12 லட்சம் செலவாகும் என மருத்துவமனை கூறியுள்ளது. அந்த தாயின் கண் முன்னே மகன் செத்துக்கொண்டிருப்பது குறித்து மன வேதனையுடன் காஜல் குறிப்பிட்டுள்ளார்.