அஜித் பற்றிய ‘அந்த’ விஷயத்தை ஏன் இத்தனை வருஷமா சொல்லல முருகதாஸ்?

முருகதாஸ்..?

தர்பார் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசியதை கேட்டவர்களுக்கு ஒரேயொரு கேள்வி தான் எழுந்துள்ளது.
தர்பார் இசை வெளியீட்டு விழா அல்டிமேட் ஸ்டாராக இருந்த அஜித் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தீனா படத்தில் நடித்த பிறகு தல ஆனார்.

அதில் இருந்து அவரை அனைவரும் தல என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். அஜித்துக்கு தல என்று பெயர் வைத்தது முருகதாஸ் என்றே அனைவரும் நினைத்தார்கள். இந்நிலையில் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய முருகதாஸ் வேறு விதமாக கூறி அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

அஜித்துக்கு தல என்று பெயர் வைத்தது ரஜினி சார் தான் என்று முருகதாஸ் மேடையில் தெரிவித்தார். அஜித் மீது ரஜினி மிகுந்த மரியாதை வைத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் தான் ரஜினி அஜித்துக்கு இப்படி ஒரு பெயர் வைத்தது தெரிய வந்துள்ளது. அது சரி முருகதாஸ், இதை ஏன் நீங்கள் இத்தனை ஆண்டுகளாக சொல்லவே இல்லை என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். எத்தனையோ பேட்டிகளில் முருகதாஸிடம் அஜித்துக்கு தல என்று பெயர் வைத்தது குறித்து கேட்ட போது ஏன் இந்த உண்மையை சொல்லவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரஜினி தான் செய்யும் நல்ல காரியங்களை வெளியே சொல்வது இல்லை. அதே போன்று தான் அஜித்துக்கு தல என்று பெயர் வைத்ததையும் கூறவில்லை. அவர் அமைதியாக இருந்ததால் தான் முருகதாஸும் மவுனமாக இருந்துவிட்டாரோ. இல்லை என்றால் ரஜினியை வைத்து ஒரு நாள் படம் எடுப்போம், அந்த விழா மேடையில் தான் இதை தெரிவிக்க வேண்டும் என்று இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தாரோ என்னவோ?.

சிறு வயதில் நிலாவை பார்த்து சாப்பிடுவோம். ஆனால் தற்போது நிலவில் நிற்பது போன்று உள்ளது. ரஜினியை பார்த்து பார்த்து ரசித்த, ரசிக்கும் ரசிகன் நான். ஒரு குச்சியை ஹீரோ என்றால் கூட அது திமிருடன் ஆடும். ஆனால் 40 ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருந்தும் சிறிதும் திமிர் இல்லாதவர் ரஜினி. அவரை போன்றே இருக்க நான் ஆசைப்படுகிறேன் என்று முருகதாஸ் தெரிவித்துள்ளார். முருகதாஸ் பேச்சால் ரஜினி ரசிகர்கள் மட்டும் அல்ல அஜித் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இலங்கையில் விஜய்யின் பிகில் படம் திரையிட்ட திரையரங்கிற்கு இப்படியெல்லாம் நடந்ததா?- பூஜா ஓபன் டாக்!!

பூஜா ஓபன் டாக்..!

விஜய்யின் பிகில் படம் இந்த வருட தீபாவளிக்கு மாஸாக வெளியானது. தமிழ்நாட்டில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு, ஆந்திரா மற்றும் கேரளா, கர்நாடகா என தளபதி மாஸ் செய்துவிட்டார்.

இப்பட ரிலீஸை தொடர்ந்து தளபதி தனது அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டார். இப்போது பிகில் படம் குறித்து இலங்கையில் நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார் நடிகை பூஜா. அதில் அவர், பிகில் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க ஜாப்னாவில் இருந்தேன். அங்கு ஒரு பிரபலமான ராஜா திரையரங்கம் இருக்கிறது.

பிகில் படத்தின் முதல் நாள் முதல் ஷோ கிடைக்கவில்லை என ரசிகர்கள் எல்லாம் திரையரங்கின் கேட்டை எல்லாம் உடைத்து அப்படி ஒரு ஆர்வமாக பார்த்தார்கள்.

அவர்கள் தளபதி மேல் வைத்திருக்கும் வெறி கண்டு அதிர்ந்துவிட்டேன் என பேசியுள்ளார்.

சிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்…!

சதீஷ்…!

தமிழில் விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து பிரபலமான நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு இன்று திருமணம் நடைபெற்றது.

விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் நடிகர் சதீஷ். இவருக்கும் சிக்சர் பட இயக்குநரின் தங்கை சிந்துவுக்கும் சதீஷுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சிக்சர் படத்தில் நடிகர் வைபவ் உடன் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் காதல் திருமணம் என்று பேச்சு அடிபட்டது.

சிக்சர் பட இயக்குநரும் மணப்பெண்ணின் அண்ணனுமான இயக்குநர் சாச்சி சதீஷின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று கூறி சதீஷ் – சிந்து இருவரின் புகைப்படத்தையும் பதிவிட்டு அந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இருவருக்கும் இன்று திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் பிரபலங்களுக்கும் திரையுலகில் இருக்கும் தனது நண்பர்களுக்கும் சதீஷ் திருமன அழைப்பிதழ்களை கொடுத்து வந்தார்.

சதீஷ் – சிந்து திருமணம் இன்று காலை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நேற்று மாலை நடந்த திருமண வரவேற்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் சத்யராஜ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜீவா, ஜி.வி.பிரகாஷ், உதயநிதி ஸ்டாலின், கவுதம் கார்த்திக் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகைகள் இந்துஜா, அதுல்யா ஆகியோர் கலந்துகொண்டு மண மக்களை வாழ்த்தினார்கள்.

மனைவியை விவாகரத்து செய்தது ஏன்?- முதன்முறையாக கூறிய நடிகர் விஷ்ணு..!

விஷ்ணு விஷால்…!

கிரிக்கெட் வீரரான விஷ்ணு விஷால் 2009ம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு படத்தில் நாயகனாக சினிமாவில் அறிமுகமானார்.

பின் பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா போன்ற படங்களில் நடித்து அதிக வரவேற்பு பெற்றார்.

அண்மையில் அவரது நடிப்பில் வெளியான ராட்சசன் படத்தில் அவர் நடிக்க அப்படம் உலகம் முழுவதும் விருதுகள் பெற்று வருகிறது.

2011ம் ஆண்டு தனது கல்லூரி தோழியான ரஜினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார்.

ஆனால் நடுவில் பிரச்சனை காரணமாக தனது மனைவியை விவாகரத்து செய்வதாக விஷ்ணு டுவிட்டரில் கூறியிருந்தார்.

படங்களுக்காக காதல் காட்சி நடிப்பது, நடிகைகளுடன் பழகுவது என இருந்தேன். இதுவே சந்தேகமாக மாறி என் திருமண வாழ்வில் விவாகரத்து வரை சென்றுவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

என்னுடன் நடித்த ஹீரோவை தீவிரமாக காதலித்தேன் : இலியானா!!

இலியானா..!

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகையான இலியானா, என்னுடன் நடித்த ஹீரோவை தீவிரமாக காதலித்து வந்ததாக கூறியிருக்கிறார்.

நடிகை இலியானா, பிரபல நடிகர் ஒருவரை காதலித்ததாகவும், அந்த காதல் கைக்கூடவில்லை என்றும் கூறி அதிர்ச்சி அளித்திருக்கிறார். இது பற்றி இலியானா கூறியதாவது: ’என்னுடன் நடித்த ஹீரோவை தீவிரமாக காதலித்து வந்தேன்.

பல மாதங்களாக நல்ல நட்புடன் நாங்கள் இருந்தோம். பல முறை ஒன்றாக டேட்டிங் சென்றோம்.ஆனால் அந்த காதல் கைகூடவில்லை. இப்போது வெளிநாட்டுக்காரரை காதலிக்கிறீர்களா என கேட்கிறார்கள்.

என்னுடைய சொந்த வாழ்க்கை பற்றி எனது பெற்றோருக்கு தெரியும். அவர்களுக்கு மட்டும் எல்லாம் தெரிந்தால் போதும் என்று நினைக்கிறேன். நான் திமிர் பிடித்தவள் என்கிறார்கள். அது பற்றி யார் எது சொன்னாலும் கவலையில்லை.முதல் படத்துக்கு மட்டுமே டெஸ்ட் ஷூட்டில் பங்கேற்றேன்.

எல்லா படங்களுக்கும் டெஸ்ட் ஷூட்டில் நான் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை. மற்றவர்களின் உத்தரவுகளுக்கு ஏற்ப என்னால் ஆட முடியாது. என் மனம் என்ன சொல்கிறதோ அதன்படி மட்டுமே நான் வாழ்வேன்’ என்றார்.

ரசிகர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய நடிகர் லாரன்ஸ், என்ன செய்தார் தெரியுமா?

ராகவா லாரன்ஸ்….!

திரையுலகில் தான் நடித்தால் மட்டும் போதும் என்று கூட சிலர் இருக்கிறார்கள். ஆனால், நடிப்பதையும் தவிர்த்து ரசிகர்களுக்கு மக்களுக்கும் தன்னால் முடிந்தவரை உதவவேண்டும் என்று கூட பலர் உள்ளனர். அதில் நடிகர் ராகவா லாரன்ஸும் ஒருவர்.

அண்மையில் கூட இணையத்தில் இவரிடம் பலரும் உதவி கேட்டு வந்தார்கள். அதற்கு லாரன்ஸ் அவர்கள், “என்னிடம் நிறைய பேர் உதவி கேட்டு வருகிறார்கள் ஆனால், என்னால் முடிந்த வரை தான் உதவ முடிகிறது இதனால் நான் அரசாங்கத்திடம் உதவி கேட்க முயற்சிக்க போகிறேன்” என்று கூறினார்.

அதனை நிறைவேற்றும் விதமாக இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களை சந்தித்துள்ளார். தான் கேட்டதை விட அதிகமாகவே உதவுவதாக கூறினார் அவர் என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

தனது காதலனுடன் கன்னியாகுமரிக்கு சென்ற நயன்தாரா, ஏன் தெரியுமா?

நயன்தாரா..!

நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார். சும்மா ஒரு படத்தில் வருவது, காதல் காட்சி, நடனம் ஆடி முடித்துவிட்டு செல்லாமல் தனியாக தனக்கென்று தனி டிராக்கை உருவாக்கினார்.

தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அப்படி அவர் சோலோவாக நடித்த படங்கள் வெற்றியும் பெற்றுள்ளது.

இவர் அடுத்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் மூக்குத்து அம்மன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நேரத்தில் திடீரென்று நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : நித்யா மேனன்!!

நித்யா மேனன்…!

தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நித்யா மேனன், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியிருக்கிறார்.

தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நித்யா மேனன். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது, முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தி அயன்லேடி படத்தில் நடித்து வருகிறார். இதற்காக ஜெயலலிதா போன்று இருப்பதற்கான பல விசேஷ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் எதிர்பாராமல் சினிமாவில் அறிமுகமானதாகவும், ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டு போய் விடலாம் என்று நினைத்ததாகவும் ஆனால் அதன் மீது விருப்பம் அதிகமாகி திரை பயணத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், “சினிமா துறையில் மட்டும் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது என்பது சரியல்ல. எல்லா துறைகளிலுமே பாதுகாப்பின்மை இருக்கிறது. என் வாழ்க்கையில் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு ஏற்பட்டதில்லை. சிலர் என்னிடம் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயற்சி செய்தனர்.

நான் விட்டு கொடுக்காமல், பெண்களிடம் கவுரவமாக நடக்க கற்றுக்கொள் என்று கடுமையாக கூறினேன். என்ன தவறு நடந்தாலும் அதை எதிர்ப்பதில் நமது பங்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தலையிடுவார்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும். நமது முடிவை கொஞ்சமும் தயங்காமல் தைரியமாக முகத்தில் அறைந்த மாதிரி சொல்ல வேண்டும். தைரியமாக இருந்தாலே பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.’ என நித்யா மேனன் கூறியுள்ளார்.

மோசமாக நடந்துகொண்ட தளபதி 64 படக்குழுவினர் : பார்வையற்றோர் பள்ளி ஆசிரியர் புகார்!!

தளபதி 64 படக்குழுவினர்..

நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் முதன் முறையாக இணையும் படம் தான் தளபதி 64. இப்படத்தின் முதல் மற்றும் இராண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பி கர்நாடகாவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சில காட்சிகள் மட்டும் தற்போது சென்னையில் உள்ள பார்வையற்றோர் பள்ளி ஒன்றில் மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த முடிந்துள்ளது.மேலும், அதில் படகுழுவினரால் சில சங்கடங்கள் தங்களுக்கு நடந்துள்ளது என்று அந்த பள்ளியின் ஆசிரியர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதாவது “தளபதி 64 பட குழுவினர் தங்களது பள்ளியில் சிகரெட் பிடித்து விட்டு அங்கேயே போடுவது மற்றும் குப்பைகளை பொது இடத்தில போடுவது போன்ற தவறான செயல்களை செய்துள்ளனர். மேலும், பார்வையற்ற மாணவர்களையும் அவர்கள் தரக்குறைவாக நடத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி ரசிகர்கள் அதிகம் கூடுவதால் பள்ளிக்கு வந்த மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவர் இடமும் மாணவர்களிடம் வந்து 2 நிமிஷம் உரையாற்றும்படி கேட்டுள்ளனர். இதற்கு லோகேஷ் அவர்கள் வந்து பேசிவிட்டு சென்று விட்டாராம். ஆனால், விஜய் இப்போது வருகிறார் அப்போது வருகிறார் என மாணவர்களை காக்க வைத்திருந்தனராம்.

மாணவர்கள் விஜய்யை காண ஒரு இடத்தில் குழுவாக வரவைக்கப்பட்டனர். ஆனால் பல மணி நேரம் காத்திருந்த பிறகும் விஜய் வந்து சந்திக்காமல் ஷூட்டிங் முடிந்து ரகசியமாக சென்றுவிட்டார்” என அந்த ஆசிரியம் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது – ரஜினி…….!

ரஜினி…….!

தர்பார் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், மக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது என்று கூறினார்.மக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது .தர்பார் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி பேசிய காட்சி தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று மாலை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘தர்பார்’. இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இதில் நடிகர் ரஜினி பேசும் போது, ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய ரமணா படம் எனக்கு பிடித்தது, கஜினி படம் பார்த்து இவர் படத்தில் நடிகனும் ஆசை பட்டேன், ஆனால், காலம் அப்போது அமையவில்லை. தற்பொழுது தர்பார் படம் மூலம் அமைந்திருக்கு.

என்னுடைய பிறந்தநாள் இந்த வருடம் முக்கியமான பிறந்த நாள், ரசிகர்கள் ஆடம்பரமாக என் பிறந்த நாள் விழாவை கொண்டாட வேண்டாம், அதற்கு பதிலாக ஏழைகளுக்கு உதவுங்கள்.

இயக்குநர் பாலசந்தர் தான் எனக்கு ரஜினி காந்த் பெயர் வைத்தார், ஒரு நல்ல நடிகனுக்கு தான் இந்த பெயர் வைக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அவருடைய நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன். ரஜினியை வைத்து படம் எடுத்தால் நஷ்டம் அடையாது என்று என் மேல் நம்பிக்கை வைத்தவர்கள். அது போல் மக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது.

ஒரு வெற்றி வேண்டும் என்றால் நேரம், காலம், சந்தர்ப்ப சூழ்நிலை அந்த நேரத்தில் இருக்கும் மனிதர்கள் இருந்தால் தான் அந்த வெற்றிக் கிடைக்கும். அதிகம்பேர் எதிர்மறையாக பேசுகிறார்கள். ஆனால் அவர்களிடமும் நாம் அன்பாக இருப்போம், அன்பு செலுத்துவோம் என்றார்.