நடிகன் என்பதையே மறந்துவிட்டேன் : விக்ரம்!!

விக்ரம்

‘ஆதித்ய வர்மா’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட போது தான் நடிகன் என்பதையே மறந்துவிட்டதாக நடிகர் விக்ரம் கூறியுள்ளார்.’ஆதித்ய வர்மா’ படத்தின் மலையாள பதிப்புக்கான விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று கேரளாவில் நடைபெற்றது.

இதில் விக்ரம், துருவ் விக்ரம் மற்றும் பிரியா ஆனந்த் மூவரும் கலந்து கொண்டனர். அப்போது பத்திரிகையாளர்கள் முன்னிலையில் விக்ரம் பேசும்போது, ” ‘ஆதித்ய வர்மா’ எனக்கு படம் தயாரிக்கும், இயக்கும் அனுபவத்தை தந்தது.

சில நாட்கள் இதன் படப்பிடிப்பில் நான் நடிகன் என்பதையே மறந்துவிடுவேன். துருவ்வின் டப்ஸ்மாஷ் வீடியோவை பார்த்துவிட்டு முகேஷ்தான் எங்களை அணுகினார். துருவ் வயதில் சிறியவர் என்பதால் என் மனைவிதான் சற்று யோசித்தார். ஆனால் படத்தை பார்த்த பின் அவர் நடிகனாக ஆரம்பிக்க இதுவே சரியான படம் என்று நினைத்தேன்.

படத்தின் கதை, துருவ்வின் நடிப்பு குறித்து நான் நம்பிக்கையாக இருக்கிறேன். ஆனால் தன் மகன் பள்ளிக்கூடப் போட்டியில் மேடையேறும்போது ஒரு தந்தைக்கு எப்படிப் படபடப்பாக இருக்குமோ அப்படி எனக்கு இருக்கிறது” என்று விக்ரம் பேசினார். ‘ஆதித்ய வர்மா’ படத்திற்கு தணிக்கை குழு ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் வருகிற நவம்பர் 21-ந் தேதி திரைக்கு வருகிறது.

தளபதி 64 படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகை!!

விஜய்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ படத்தில் ஆண்ட்ரியாவை தொடர்ந்து மேலும் ஒரு பிரபல நடிகை இணைந்திருக்கிறார்.

பிகில் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் தற்போது ‘தளபதி 64’ திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். வில்லனாக விஜய் சேதுபதியும், முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் நடிகை ஆண்ட்ரியா இணைந்திருப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. தற்போது இப்படக்குழுவுடன் பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகை ரம்யா இணைந்திருக்கிறார்.

விஜய்யின் ‘மெர்சல்’, ‘பிகில்’ படங்களில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரம்யாவிற்கு, தற்போது விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவின் கதாபாத்திரம் லீக்!!

இந்தியன் 2

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவின் கதாபாத்திரம் இணையத்தில் லீக்காகி இருக்கிறது.கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. 23 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் ஷங்கர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்து வருகிறார். காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், சமுத்திரக்கனி, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானிசங்கர், வித்யுத் ஜம்வால், டெல்லி கணேஷ் என ஏராளமான நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

முழு வீச்சில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கடந்த 6-ந் தேதி ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தளத்தில் பாபி சிம்ஹா தன்னுடைய பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதன்மூலம், பாபி சிம்ஹாவும் இந்தப் படத்தில் நடிப்பது உறுதியானது.

அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரியாத நிலையில், போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ‘இந்தியன்’ முதல் பாகத்தில் நெடுமுடி வேணு போலீசாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் தர்ஷனின் காதல் முடிவுக்கு வந்ததா? அவரது காதலி போட்ட பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்!!

தர்ஷனின் காதல்

 பிக்பாஸ் 3வது சீசனில் பலரின் கவனத்தை ஈர்த்தவர் தர்ஷன். தனது விளையாட்டில் சரியாக இருந்த அவர் டைட்டில் பெறவில்லை என்ற வருத்தமும் சிலருக்கு இருக்கிறது.

நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து தர்ஷன் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இந்த நேரத்தில் தான் அவரது காதலி என்று கூறப்படும் சனம் ஷெட்டி தனது இன்ஸ்டா போஸ்டில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

அதில், நான் அதிகமாக கேட்பதாக கேட்கவில்லை என்று இப்போது புரிகிறது, ஆனால் தவறான நபரிடம் கேட்டுவிட்டேன். யாராவது விலகி செல்ல நினைத்தால் விட்டுவிடுங்கள், காலம் அவர்களுக்கு பதில் சொல்லும் என பதிவு செய்துள்ளார்.

என் வாழ்நாளில் இனி அவரை பேட்டி எடுக்கவே கூடாது- ஓபனாக பேசிய டிடி, யார் அது தெரியுமா?

டிடி

தொகுப்பாளினிகளில் கடந்த 10 வருடங்களை தாண்டி இப்போதும் கலக்கி வருபவர் டிடி. இவர் நிகழ்ச்சி என்றால் மிகவும் கலகலப்பாக இருக்கும். அடுத்து இவர் என்ன நிகழ்ச்சி தொகுத்து வழங்க இருக்கிறார் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. அண்மையில் இதுனால் வரையிலான தனது சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

பேட்டியில் அவரிடம் இனி அவரை மட்டும் பேட்டி எடுக்கவே கூடாது என்று நீங்கள் நினைப்பது யார் என கேட்டுள்ளனர். அதற்கு அவர் இனி மிஷ்கின் அவர்களை எடுக்க கூடாது என்று நினைக்கிறேன். அவரை ஒருமுறை பேட்டி எடுக்க கஷ்டப்பட்டேன். சாதாரணமாக நன்றாக பேசுகிறார், கேள்வி கேட்கும்போது மிகவும் சீரியஸாக பார்ப்பார், எனக்கு என்ன செய்வது என்றே தெரியாது.

இதன் காரணமாக பேட்டி எடுக்கக்கூடாது என்ற லிஸ்டில் வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்

மூளையில் பாதிப்பு : பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் கவலைக்கிடம்!!

தென்னவன்

தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன், சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் தென்னவன். இவர் சில சீரியல்களிலும் சில ரோல்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்தி வந்துள்ளது. இது சினிமா துறையினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

2019ம் வருடம் முடிவுக்கு வர இருக்கிறது : இந்த வருடம் வசூலில் சாதனை படைத்த திரைப்படங்கள்!!

லாபம் கொடுத்த படங்கள்

இந்த வருடத்தின் சிறந்த படம், நடிகர் என பல விஷயங்களுக்காக கருத்துக் கணிப்புகள் நடந்து வருகின்றன. விநியோகஸ்தர்களில் எப்போதும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டிகள் கொடுப்பவர் திருப்பூர் சுப்பிரமணியம்.

அண்மையில் இவர் கொடுத்த பேட்டியில் 2019ம் ஆண்டின் லாபம் கொடுத்த படங்கள் என்னென்ன என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர்,

விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, பேட்ட என 3 படங்களின் பெயர்களை கூறியுள்ளார்.

முன்னணி நடிகர் பா லியல் தொ ல்லை கொடுத்தார் : நடிகை இஷா கோபிகர் கு ற்றச்சாட்டு!!

முன்னணி நடிகர் ஒருவர் தனக்கு பா லியல் தொ ல்லை கொடுத்ததாக நடிகை இஷா கோபிகர் ப ரபரப்பு கு ற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் நெஞ்சினிலே, ஜோடி, என் சுவாச காற்றே, நரசிம்மா, காதல் கவிதை போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் இஷா கோபிகர்.

தமிழ், இந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பிசியாக நடித்து வந்த இஷா தன்னுடைய திருமணத்திற்கு பின்பு நடிப்பில் இருந்து சற்று விலகி இருந்தார். இப்போது மீண்டும் திரைத்துறையில் ரீஎண்ட்ரி தருவதற்கு வந்திருக்கிறார்.

இஷாவின் இந்த ரீ எண்ட்ரி செய்தி பல்வேறு ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டது. இதனை அடுத்து பேட்டி ஒன்றில் பங்கேற்று பேசிய இஷா திரைத்துறையில் தான் சந்தித்த பல சவால்களையும் கஷ்டங்களையும் பற்றி பகிர்ந்து கொண்டார்.

இஷா கோபிகர் தான் நடித்துக் கொண்டிருந்த போது சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் தன்னை ப டுக்கைக்கு அழைத்ததாக கூறியிருக்கிறார். அதனை தான் மறுத்ததால் பல பட வாய்ப்புகளையும் இழந்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் அதனை பற்றி விரிவாக பேசியவர், சூப்பர்ஸ்டாருக்கு இணையாக இருக்கும் நடிகர் ஒருவருடன் உ ல்லாசமாக இருப்பதற்காக தயாரிப்பாளர் ஒருவர் இஷாவை அணுகியதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் அவருடன் அட்ஜஸ்ட்மென்டில் இருந்தால் ஏராளமான படம் குவியும் எனவும் இஷாவிடம் கூறினாராம் அந்த தயாரிப்பாளர். ஆனால் இதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாத இஷா தன்னிடம் தவ றாக அணுகியதாக கூறப்படும் தயாரிப்பாளரை போன் செய்து கண்டபடி திட்டி தீர்த்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திரைத்துறையினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் மீது நடிகைகள் மீடூ என்ற இயக்கம் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் பற்றியும் கூறிவந்தனர். இந்த பிரச்சினை தற்போது அடங்கியிருக்கும் நிலையில் மீண்டும் இஷா இவ்வாறாக கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இஷாவை படுக்கைக்கு அழைத்த அந்த முன்னணி நடிகர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் கொடுத்த நம்பிக்கையால் மீண்டேன் : அருண்விஜய்!!

நடிகர் விஜய் கொடுத்த அறிவுரைதான் தற்போது தன்னை முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கவைத்துள்ளது என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார். நடிகர் அருண் விஜய்யின் ஆரம்பகால சினிமா வாழ்க்கை எதிர்பார்த்தபடி இல்லாத போதும், தனது விடாமுயற்சியால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார்.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருண் விஜய், அடுத்ததாக பாக்ஸர், மாபியா, சினம், அக்கினிச் சிறகுகள் என பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது: தான் சினிமாவில் நடிகராக திணறிய போது சினிமா தயாரிப்பாளராக மாறி முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுங்கள் என்று குடும்பத்தில் இருப்பவர்களே சொன்னார்கள். அதனால் நடிகர் விஜய்யை சந்தித்து பேச சொன்றேன். “ஏன் இப்படி ஒரு முடிவை எடுக்கிறீர்கள். நல்லா நடிக்கிறீங்க, லவ்லி டான்சர், சண்டை போடுறீங்க. தொடர்ந்து செய்ங்க. நிறுத்திடாதீங்க” என்று கூறினார் விஜய்.

அவரது வீட்டில் இருந்து வெளியில் வந்து காரை நிறுத்தி ஒரு நிமிடம் யோசித்தேன். அவர் கொடுத்த நம்பிக்கையால் நான் வீட்டுக்கு வந்து நான் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறினேன். விஜய் கொடுத்த அறிவுரைதான் தற்போது என்னை முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்க வைத்துள்ளது” என்று அருண் விஜய் கூறியுள்ளார்.

அஜித்துக்கு முத்தம் கொடுக்கனும், லெஜண்ட் விருது தரனும் : மனம் திறந்து பேசிய பிரபல நடிகை!!

தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி.

இவர் சென்னையில் தங்கியிருந்து இப்போது தமிழில் படங்கள் நடித்த ஆரம்பித்துள்ளார்.அண்மையில் ஒரு பிரபலத்தின் ஆடைகளுக்கான பேஷன் ஷோவில் பங்குபெற்றார்.

அப்போது அவரிடம் நீங்கள் திரையுலகில் மனதார ஒருவருக்கு முத்தம் கொடுக்க விரும்பினால் யாருக்கு முத்தம் கொடுப்பீர்கள் என்று கேட்டுள்ளனர்.அதற்கு அவர், எந்த காமமும் இல்லாமல் அவருக்கு மனதார முத்தம் கொடுக்க விரும்புகிறேன்.

காரணம் அவர் நடித்த நேர்கொண்ட பார்வை படம் தான். அதில் வரும் 3 பெண்களுக்காக அவர் போ ராடியுள்ளார், அதுபோல் நான் பல கஷ்டம் அடைந்துள்ளேன் என பேசியுள்ளார்.