திருமணத்திற்கு ஓகே சொன்ன பிகில் இந்துஜா! ப்ரொபோஸ் செய்தது யார் பாருங்க

பிகில் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தவர் நடிகை இந்துஜா. அவரது நடிப்புக்கு சமூக வலைத்தளங்களால் பாராட்டு குவிந்து வருகிறது.

இவர் தற்போது இன்ஸ்டாக்ராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்துவிட்டு நடிகை மஹிமா நம்பியார் ‘திருமணம் செய்துகொள்ளலாமா?’ என ப்ரொபோஸ் செய்துள்ளார்.

அவரும் அவருக்கு ஓகே சொல்லிவிட, நடிகை அதுல்யா ‘ஐ எம் வெயிட்டிங்’ என்று பதிவிட்டுள்ளார்.

அவர் ஓகே சொல்லவில்லை என்றால் நான் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என அதுல்யாவிடம் மஹிமா அடுத்த கமெண்டில் தெரிவித்துள்ளார்.

கமல் பற்றி வெளியில் தெரியாத 10 தகவல்கள்!!

நடிகர் கமல்ஹாசன்..

கமல் பற்றி வெளியில் தெரியாத 10 தகவல்கள்
கமல் : 1. கமல்ஹாசன் நடிக்க வந்தபோது அவருக்கு வயது 5. முதல் படமான களத்தூர் கண்ணம்மா படத்தில் (1959) அவர் ஆதரவற்ற சிறுவனாக நடித்து இருந்தார். மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ஜனாதிபதி தங்க பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது. இந்தியாவில், அறிமுகமான முதல் படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக தங்க பதக்கம் வென்றது கமல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

2. கமல்ஹாசன் சிறந்த நடிகர் மட்டுமல்ல. திரையுலகின் அனைத்து பிரிவுகளிலும் முத்திரை பதித்தவர். திரைத்துறையின் அனைத்து வி‌ஷயங்களையும் அவர் தனது கைவிரல் நுனியில் வைத்திருக்கும் வகையில் நுணுக்கமாக அறிந்து வைத்துள்ளார். மிகச்சிறந்த நடன கலைஞர், பின்னணி பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், தொழில்நுட்ப கலைஞர், ஒப்பனை கலைஞர் என்று பல அவதாரங்களை அவர் எடுத்துள்ளார்.

வேடங்களில் தனித்துவத்தை காட்டுவதற்காக அமெரிக்கா சென்று மேக்கப் துறையில் படித்து வந்தார். இதனால் மேக்கப்பின் அனைத்து அம்சங்களும் அவருக்கு அத்துபடியாக தெரியும்.

3. தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு படத்தில் நடிப்பதற்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய முதல் நடிகர் என்ற பெருமையை அவர் படைத்தார். 1994-ம் ஆண்டு அவரால் இந்த சாதனை உருவாக்கப்பட்டது.

4. கமல்ஹாசன் நடிப்பில் உருவான ஆளவந்தான் படம் 2001-ம் ஆண்டு இந்தியில் அபய் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. அந்த இந்தி படத்தை பார்த்த பிரபல ஆலிவுட் டைரக்டர் கியூன்டின் டரன்டினோ பிரமித்து போனார். ஆளவந்தான் படத்தில் வரும் காட்சிகள் போல இதுவரை எந்த படத்திலும் பார்த்தது இல்லை என்று மனம் திறந்து பாராட்டினார். 2003-ம் ஆண்டு அவர் இயக்கிய கில்பில் (வால்யூம்-1) என்ற படத்தில் ஆளவந்தான் போன்று அவர் காட்சிகளை அமைத்தார். தமிழ் படத்தின் காட்சிகளை பார்த்து ஆலிவுட் இயக்குனர் ஒருவர் அதே போன்று வைத்தது இதுவே முதல் தடவையாகும்.

5. கமல்ஹாசன் நடிப்பில் 1987-ம் ஆண்டு வெளியான “நாயகன்” படம் உலக தமிழர்கள் அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த படம் மக்கள் மனதில் பதிந்த படம் என்று டைம்மேக்கசின் புகழாரம் சூட்டியது. 1997-ம் ஆண்டு உலகின் சிறந்த நூறு திரைப்படங்களை டைம் இதழ் பட்டியலிட்டது. அதில் கமல்ஹாசனின் “நாயகன்” படம் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

6. பொதுவாக நடிகர்-நடிகைகளுக்கு இரண்டு அல்லது மூன்று மொழிகள் தெரிந்து இருக்கும். ஆனால் கமல்ஹாசனுக்கு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் சரளமாக பேச தெரியும். இதில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் அவர் நடித்த படங்கள் வெளியாகி வெள்ளி விழாக்கள் கொண்டாடி உள்ளன. இந்திய நடிகர்களில் யார் படமும் இப்படி 5 மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது இல்லை. அந்த வகையில் கமல்ஹாசனின் சாதனை இதுவரை எந்த நடிகராலும் முறியடிக்க முடியாத தேசிய சாதனையாக உள்ளது.

7. கமல்ஹாசன் நடிப்பில் 2008-ம் ஆண்டு வெளியான தசாவதாரம் படத்தில் அவர் 10 வேடங்களில் நடித்து இருந்தார். 10 மாறுபட்ட வேடங்களில் கமல் நடித்தது உலக அளவில் பேசப்பட்டது. இன்று வரை அந்த சாதனையை எந்த நடிகராலும் உடைக்க முடியவில்லை.

8. நடிகர்கள் பொதுவாக உடல் உறுப்பு தானம் செய்வது இல்லை. ஆனால் கமல்ஹாசன் உடல் உறுப்பு தானத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தனது மறைவுக்கு பிறகு தனது உடல் உறுப்புகளை சென்னை மருத்துவமனைக்கு தானமாக வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.

9. நல்ல பணிகளை செய்ய வேண்டும் என்பதில் கமல்ஹாசனுக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. தான் மட்டும் அந்த பணிகளை செய்யாமல் தனது ரசிகர்களையும் நற்பணிகளை செய்ய வைத்த தனி சிறப்பு அவருக்கு உண்டு. தனது ரசிகர்கள் தங்களால் முடிந்ததை ஏழை-எளியவர்களுக்கு தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். தமிழ் நடிகர்களில் ரசிகர்களை நற்பணியில் இறக்கிய முதல் நடிகர் கமல்ஹாசன்தான்.

10. நடிப்புக்காக கமல்ஹாசனுக்கு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகள், பட்டங்கள், பாராட்டுக்கள் கிடைத்துள்ளன. சிறந்த நடிகருக்கான விருதை அவர் ஏராளமான முறை பெற்றுள்ளார். பிலிம்பேர் பத்திரிகை மட்டும் 19 தடவை கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான விருதை வழங்கி உள்ளது. 19-வது தடவை அவர் விருது பெற்ற பிறகு, “இனி வேறு இளம் நடிகர்களுக்கு சிறந்த நடிகருக்கான விருதை தாருங்கள். எதிர்காலத்தில் எனக்கு மீண்டும் மீண்டும் அந்த விருதை தர வேண்டாம்” என்று அன்போடு கேட்டுக் கொண்டார்.

கணவரை விவாகரத்து செய்ததும் குழந்தையை தத்தெடுக்க விரும்பும் பிக்பாஸ் பிரபலம் : நடிகர் உதவுவாரா?

ராகவா லாரன்ஸிடம் உதவி கேட்டுள்ளார் காஜல் பசுபதி…!

பிக்பாஸ் என்ற ஒரு நிகழ்ச்சி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ரசிகர்களையும் கவனிக்க வைத்தது. முதல் சீசனிற்கு இருந்த மக்களின் ஆர்வம் அடுத்தடுத்த 2,3 சீசன்களுக்கு இருந்ததா என்றால் சந்தேகம் தான்.

ஆனாலும் அடுத்த 4வது சீசனை எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள் உள்ளார்கள். முதல் சீசனில் பாதியில் வந்து மக்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை காஜல் பசுபதி.

இவர் நடன இயக்குனர் சாண்டியை திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்றவர்.

தற்போது இவர் தனக்கு குழந்தையை தத்தெடுக்க ஆசையாக இருப்பதாகவும் குழந்தையின் செலவை தானே பார்த்துக் கொள்வதாகவும், அதற்கான உதவியை நீங்கள் செய்ய வேண்டும் என்று நடிகர் ராகவா லாரன்ஸிடம் உதவி கேட்டுள்ளார் காஜல் பசுபதி.

என் திரைப்பயணத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான் : நயன்தாரா வருத்தம்!!

நயன்தாரா..

நடிகை நயன்தாரா  லேடி சூப்பர்ஸ்டார் என குறிப்பிடும் அளவுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.

டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பது ஒருபுறம் இருந்தாலும், சோலோ ஹீரோயினாக படங்களில் நடித்தும் ஹிட் கொடுத்து வருகிறார்.இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன் திரைப்பயணத்தில் செய்த தவறு பற்றி பேசியுள்ளார்.

முருகதாஸின் கஜினி படத்தில் நடித்தது தான் செய்த தவறு என கூறியுள்ள அவர், படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் காட்டப்பட்டிருந்த விதம் முருகதாஸ் தன்னிடம் சொன்ன கதையில் இருந்து அதிகம் மாறுபட்டிருந்தது” என கூறியுள்ளார். அதற்குப்பிறகு நான் கதைகள் மிக கவனமாக கேட்க ஆரம்பித்துவிட்டேன் எனவும் தெரிவித்துள்ளார் அவர்.

தர்ஷன் மனுஷனே இல்லை.. அவரது காதலி கொடுத்த வாக்குறுதி : மறைமுகமாக தி ட்டிய பிக்பாஸ் மதுமிதா!!

தர்ஷன்.. பிக்பாஸ் வீட்டில் இருந்து ச ர்ச்சையான விதத்தில் வெளியேறியவர் நடிகை ஜாங்கிரி மதுமிதா. த ற்கொ லைக்கு முயன்று கையில் பெரிய கா யத்துடன் அவர் வெ ளியேற்றப்பட்டார். அவர் த ற்கொ லை மு யற்சி செய்த சம்பவம் டிவியில் காட்டப்படவில்லை. இந்நிலையில் தற்போது மதுமிதா அளித்துள்ள பேட்டி ஒன்றில் மற்ற போட்டியாளர்களை தா க்கி பேசியுள்ளார்.

தற்போது வரை கவின் உட்பட யாரும் தன்னை தொடர்பு கொண்டு பேசவே இல்லை என கூறியுள்ளார் அவர். மேலும் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் நடிகை சனம் ஷெட்டி (தர்ஷனின் காதலி) எனக்கு போன் செய்து பேசினார். “இவ்வளவு நடந்தும் தர்ஷன் மு தலுதவி செய்ய கூட வரவில்லை என நீங்கள் சொல்வது எனக்கு அ திர்ச்சியாக இருந்தது.

தர்ஷன் வெளியே வந்ததும் உங்களை சந்தித்து மன்னிப்பு கேட்கவேண்டும் இல்லை என்றால் மனுஷனே இல்லை” என சனம் ஷெட்டி கூறினாராம்.

ஆனால் தற்போது வரை அது நடக்கவில்லை, தர்ஷன் மனுஷனே இல்லை என மறைமுகமாக வி மர்சித்துள்ளார் மதுமிதா.

விஜய் 64 படப்பிடிப்பில் திடீர் சி க்கல்!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்து வரும் ‘தளபதி 64’ படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் சி க்கல் ஏற்பட்டுள்ளது. பிகில் படத்தை அடுத்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் நாயகியாக மாளவிகா மேனனும், வில்லனாக விஜய்சேதுபதியும் நடிக்கின்றனர். இவர்களுடன் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஸ்ரீமன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தை ‘தளபதி 64’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. அங்கு 40 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், டெல்லியில் ஏற்பட்டிருக்கும் காற்றுமாசு படப்பிடிப்புக்கு பெரும் த டையாக இருப்பதாக கூறப்படுகிறது.

காற்றுமாசு காரணமாக படப்பிடிப்பு நடைபெறுவதில் தொ ய்வு ஏற்பட்டுள்ள நிலையில், குறைவான நேரம் மட்டுமே விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

விஜய்யால் சிறுவனுக்கு நடந்த அதிசயம் : பலரையும் வியக்க வைத்த சம்பவம்!!

விஜய்..

நடிகர் விஜய்க்கு உலகளவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதே வேளையில் குழந்தைகள் பலருக்கும் அவரை மிகவும் பிடிக்கும்.

அதே போல அவரும் குழந்தைகள் மிக அதிகமாக விரும்புகிறார். மாநிலங்களை கடந்து அவருக்கு ஃபேன்ஸ் கூட்டம் இருக்கிறது.இந்நிலையில் கேரளாவின் இடுக்கியை சேர்ந்த சிறுவன் செபாஸ்டியனுக்கு நடக்க முடியாத, வாய் பேசமுடியாத குறைபாடு உள்ளது.

இந்த சிறுவனுக்கு அங்குள்ள மருத்துவர்கள் விஜய்யின் வசனங்களை கூறி சிகிச்சை அளித்து வருகின்றனர்.மருத்துவமனையில் செல்ஃபி புள்ள ரிங்டோனை கேட்ட சிறுவனிடம் அசைவுகள் ஏற்படுவதை மருத்துவர்கள் கவனித்துள்ளனர். அதே போல விஜய் படங்களை ஒளிபரப்பும் போது சிறுவனிடம் மாற்றத்தை கண்டுள்ளனர்.

விஜய்யின் பஞ்ச் வசனங்கள், நடனக்காட்சிகளை காட்டியதால் சிறுவன் மெதுவாக நடப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

உலகையே அதிரவைத்த ஜோக்கர் படத்தின் வசூல், பிரமாண்ட சாதனை!!

ஜோக்கர்

 உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படம் ஜோக்கர் . இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது.

தற்போது ஆர் ரேட்டட் படங்களில் உலகிலேயே அதிகம் வசூல் செய்த படமாக ஜோக்கர் அமைந்துள்ளது, இப்படம் உலகம் முழுவதும் 900 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.

இவை இந்திய மதிப்பில் சுமார் ரூ 6500 கோடியை தாண்டும், மேலும், 1000 மில்லியன் டாலரை ஜோக்கர் வசூல் செய்யுமா என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பும்.

லொஸ்லியாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

லொஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டங்களை கொண்டவர்களில் லொஸ்லியாவும் ஒருவர். இவர் கவினுடன் காதலில் விழ்ந்து கதை எல்லாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் லொஸ்லியா பிக்பாஸ் வீட்டை விட்டு சென்றத தற்போது என்ன செய்கிறார் என்றே தெரியாமல் இருந்து வந்தது.

தற்போது இவர் கொழும்பு விமான நிலையத்தில் ரசிகர் ஒருவருடம் எடுத்த புகைப்படம் இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது.இதன் மூலம் லொஸ்லியா மீண்டும் இந்தியா வருவதாக தகவல் பரவி வருகிறது.

அஜித் ஏன் பேட்டியே கொடுப்பதில்லை? இதுதான் உண்மைக் காரணம்!!

 

மற்ற நடிகர்களை போல இல்லாமல் நடிகர் அஜித் மீடியாவை சந்திப்பதையோ   பேட்டி கொடுப்பதையோ நிறுத்திவிட்டார்.
அதற்கான காரணம் என்ன என்பதை விஜய் டிவி கோபிநாத்திடம் ஒருமுறை கூறினாராம் அஜித்.

“ஆரம்பத்தில் நடிக்க வந்தபோது எனக்கு தமிழ் சரியாக தெரியாது. பேட்டி கொடுக்கும்போது ‘தமிழ் நடிகருக்கு தமிழ் தெரியாதா?’ என விமர்சித்தார்கள். அதன் பிறகு ஆங்கிலத்தில் பேட்டி கொடுக்க ஆரம்பித்தேன், ‘தமிழ் நடிகர்.. பெரிய இத்தாட்டம்.. இங்கிலிஷ்ல தான் பேசுவாரு!’ என்று விமர்சித்தார்கள்.

அதன் பிறகு பேட்டி கொடுப்பதையே தவிர்த்தேன். அதற்கும் ‘பேச கூட மாட்டேங்குறாரு.’ என விமர்சித்தார்கள்.

நான் எதார்த்தமாக பேசிய வார்த்தைகளுக்கு வேறு அர்த்தம் இருந்தால் அதை வேறு விதமாக செய்தி போட செய்தார்கள். அதனால் தான் சைலண்டாக இருக்க ஆரம்பித்துவிட்டேன்” என அஜித் கூறினாராம்.