டிடியை விவாகரத்து செய்ததற்கான உண்மை காரணத்தை கூறிய கணவர்.. மனவேதனையுடன் கூறிய அதிர்ச்சி தகவல்!!

அதிர்ச்சி தகவல்

பிரபலமான தொலைக்காட்சியான விஜய் டிவியின் மூலம் தொகுப்பாளாரான டிடி என்கிற திவ்யதர்ஷினி, மக்களின் மனதில் இடம்பிடித்தவர்.

இவர் பணியாற்றிய ஜோடி நம்பர்-1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், காபி வித் டிடி போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவருக்கு பிரபல தொகுப்பாளினி என்ற பட்டத்தையும் வழங்கி உள்ளார்கள்.

மேலும், திவ்யதர்ஷினி சின்னத்திரையில் உள்ள தொகுப்பாளர்கள் அனைவருக்கும் ரொம்ப பிடித்தமான தொகுப்பாளர் ஆவார். இவருடைய நகைச்சுவை பேச்சு மக்களை மட்டுமில்லாமல் பல சினிமா நட்சத்திரங்களையும் கவர்ந்துள்ளது.

அது மட்டும் இல்லைங்க ரசிகர்கள்தான் பிரபலமான நடிகர்கள் இடம் ஆட்டோகிராஃப் வாங்குவதும், செல்பி எடுப்பது போன்று செய்வார்கள். ஆனால் சினிமா பிரபலங்கள் டிடியிடம் ஆட்டோகிராப், புகைப்படம் எடுப்பது என எடுத்துள்ளார்கள்.

இவர் 2014 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். டிடி திருமணத்திற்குப் பிறகும் படங்களிலும் எந்த ஒரு டிவி பிறகும் கலந்து கொள்ளக் கூடாது என டிடி கணவர் வீட்டில் உள்ள அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் திவ்யதர்ஷினிக்கு அவருடைய கணவர் ஸ்ரீகாந்துக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர்கள் சில காலமாக தனியாக தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பிறகுதான் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து செய்யலாம் என விரும்பி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு அளித்தார்கள் பின்னர் உறுதியாக விவாகரத்தும் வாங்கினார்கள்.

இந்நிலையில் இவர்கள் விவாகரத்து வாங்கியது குறித்து டிடி கணவர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளது, திருமணத்திற்கு பிறகும் டிடி லேட் நைட் பார்ட்டிகளில் கலந்து கொண்டு வீட்டிற்கு லேட்டாகத்தான் வருவார். இதை நான் பலமுறை கண்டித்தும் இருந்தேன்.

மேலும், டிவி நிகழ்ச்சிகளிலும் படங்களிலும் நடிக்க வேண்டாம் எனவும் கூறி இருந்தேன். ஆனால், அவர் கண்டுக்கொள்ளவே இல்லை. அதுமட்டுமில்லாமல் ஆண் நண்பர்களின் பழக்கவழக்கங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருந்தது.

நான் இதெல்லாம் நம் குடும்பத்திற்கு ஏற்றது அன்று என்று பலமுறை கூறினேன். ஆனால், அவர் புரிந்து கொள்ளவே இல்லை. இதனால் தான் நாங்கள் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு விவாகரத்து வாங்கிக் கொண்டோம் என மன வேதனையுடன் கூறியுள்ளார்.

தன்னை சீரழித்த நடிகரை அம்பலப்படுத்திய பிரபல நடிகை… தமிழ் சினிமாவில் காத்திருக்கும் மிகப் பெரிய சர்ச்சை!!

நடிகரை அம்பலப்படுத்திய பிரபல நடிகை

பிரபல திரைப்பட நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா தன்னை ஏமாற்றி சீரழித்த நடிகரின் பெயரை அவருடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதால், அவருக்கு மிரட்டல் வர வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பாடகியாக வலம் வந்த ஆண்ட்ரியா அதன் பின் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்தார். இடையில் அவ்வப்போது காணமல் போகும் இவர், திடீரென்று ப்ரோக்கன் விங்க் என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தார்.

அப்போது அந்த புத்தகத்தில் சோகமான வரிகள் இடம்பெற்றிருப்பதைப் பார்த்த இணையவாசிகள் ஆன்ட்ரியாவிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஆன்ட்ரியா, திருமணமான நடிகர் ஒருவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும், ஆனால் அந்த நடிகர் தேவை முடிந்தவுடன் தன்னை நிராகரித்துவிட்டு சென்றதாகவும், அந்த நடிகரால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், கஷ்டங்களை அனுபவித்து அதிலிருந்து மீண்டுவர தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து இணையவாசிகள் அந்த நடிகர் யார் என்று தொடர்ந்து கேள்வி கேட்க, அதற்கு பதிலளிக்கும் விதமாக அந்த புத்தகத்தில் தன்னை ஏமாற்றிய நடிகர் குறித்தும் அவரது பெயரையும் குறிப்பிட்டி எழுதியுள்ளதாக தற்போது ஆன்ட்ரியா தெரிவித்துள்ளார்.

அந்த நடிகர் ஒரு அரசியல் குடும்பத்தின் வாரிசு என்று குறிப்பிட்டுள்ளார். அந்த புத்தகத்தை முழுவதுமாக ஆண்ட்ரியா இன்று தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட இருப்பதாக கூறியுள்ளதால், கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ஒரு புதிய சர்ச்சை வெடிக்கும் என்று கூறப்படுகிறது.

அதோடு அந்த நடிகர் பெரிய அரசியல் கட்சியின் குடும்ப வாரிசு என்று ஆண்ட்ரியா கூறியுள்ளதால், இந்த புத்தகத்தை எப்படியும் அவர்கள் வெளியிட விட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

எனக்கு விஜய் சேதுபதியுடன் டூயட் பாட ஆசை : ஜோதிகாவின் டூப் சாரா!

ஜோதிகாவின் டூப் சாரா

விஜய் சேதுபதியுடன் இணைந்து டூயட் பாட ஆசைப்படுகிறார் சாரா. இவர் ஜோதிகாவிற்கு டூப் ஆக நடித்தவர். சாராவுக்கு சினிமாவில் கவர்ச்சியாக நடிப்பதற்கு துளியும் விருப்பமில்லையாம். ஒரு காதலியாகவோ அல்லது நேட்டிவிட்டி சார்ந்த திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறார்.

விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கவேண்டும் என்று சொந்தக்காரர்கள் ஆசைப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார். மு.மாறன் இயக்கத்தில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சாரா.

மேலும் சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன் நடித்துள்ள அப்பா-மகள் சார்ந்த ஒரு படமான ராஜாவுக்கு செக் திரைப்படத்தில் சிபிசிஐடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து தனக்கு காவல் துறை அதிகாரியாகவே நடிக்க வாய்ப்பு வருகிறது என்பதில் அவருக்கு சிறு வருத்தம் உண்டு. ஒட்டு மொத்த தமிழ் திரையுலகையே தன்னை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் பாலா. அவரின் படங்கள் என்றாலே அதில் ஒரு வித்தியாசம் இருக்கும். மிகவும் ஆழமான படைப்புகளை வழங்குவதில் திறமையான இயக்குனர் பாலாவை அடித்துக் கொள்ள ஆளே இல்லை.

அவரின் பல படைப்புகளில் ஒன்று 2018ஆம் ஆண்டு வெளியான பெண்கள் சார்ந்த திரைப்படமான நாச்சியார் திரைப்படம். இப்படத்தில் ஜோதிகா ஒரு கடுமையான காவல்துறை அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் பல ஃபைட் சீன்கள், சேசிங் சீன்கள், கார் சேசிங் சீன்கள் இருந்தன.

அதில் ஜோதிகாவிற்கு டூப்பாக நடித்தவர் மலேசியாவை சேர்ந்த சாரா சுப்பையா. இயக்குநர் பாலா, சாராவை இப்படத்தில் ஜோதிகாவிற்கு டூப்பாக நடிக்க வைத்ததற்கு முக்கிய கரணங்கள் ஜோதிகாவைப் போன்ற மிக பெரிய கண்கள் மற்றும் நன்றாக கார் ஒட்டக்கூடியவர் என்பதால் என்கிறார் சாரா சுப்பையா. சாரா மலேசியாவில் பிறந்திருந்தாலும் அவரது பூர்வீகம் சிவகங்கை மாவட்டம் தான். பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பலர் மலேசியாவில் வசித்துவருகின்றனர்.

சாராவுக்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியவர் இயக்குனர் பாலா. பாலா சார் எந்த கதாபாத்திரத்திற்காக தன்னை அழைத்தார் என்பது தெரியாமலேயே அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜோதிகாவை போலவே பிளாக் அண்ட் பிளாக் ட்ரெஸ்ஸில் ஒரு நாள் முழுக்க சேசிங் சீனில் நடித்துள்ளார் சாரா. இருப்பினும் ஜோதிகாவுடன் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை என்கிறார் சாரா சுப்பையா. பல விதமான கதாபாத்திரங்களில் நடிக்க சாரா ஆசைப்படுகிறார்.

குறிப்பாக தனது பூர்வீகமான சிவகங்கை மாவட்டம் சார்ந்த கிராமத்து கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறார். ஒரு நல்ல இயக்குநரால் நிச்சயம் அவருக்கு தேவைப்படும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு யாரை வேண்டுமானாலும் அவர்களால் எளிதில் மாற்றி விடமுடியும். சாராவிற்கு கவர்ச்சியாக நடிப்பதில் விருப்பமில்லை. ஒரு காதலியாகவோ அல்லது நேட்டிவிட்டி சார்ந்த திரைப்படங்களில் நடிக்க விருப்பம் தெரிவிக்கிறார்.

மேலும் எந்த கதாநாயகருடன் உங்களுக்கு நடிக்க விருப்பம் என்ற கேள்விக்கு, தனது சிவகங்கை மாவட்ட சொந்தபந்தங்கள், சாரா விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றார்.

வெளிநாட்டில் இலங்கை தமிழரை நெகிழ வைத்த பிரபல தமிழ்ப்பட நடிகை!

நெகிழ வைத்த பிரபல தமிழ்ப்பட நடிகை

நடிகையும், பாட்டி வைத்தியம் நிகழ்ச்சி மூலம் உலகமெங்கும் பிரபலமானவருமான ரேவதி சங்கரன் அமெரிக்காவில் உள்ள ஹோட்டலுக்கு சென்ற போது இலங்கை தமிழர் ஒருவர் கேட்ட உணவை தயாரித்து கொடுத்து அசத்தியிருக்கிறார்.

மிடில் கிளாஸ் மாதவன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ள ரேவதி சங்கரன் அண்ணி, அல்லி தர்பார் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர் பாட்டி வைத்தியம் என்ற நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் நடத்திய நிலையில் உலகெங்கிலும் புகழ்பெற்றார்.இந்நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் தனது பிள்ளைகளை பார்க்க சென்ற ரேவதி அவர்களுடன் ஹொட்டலுக்கு சாப்பிட சென்றார்.

அப்போது அங்கிருந்த இலங்கை தமிழர் ஒருவர் ரேவதியை அடையாளம் கண்டு கொண்ட நிலையில் அவரிடம் வந்து அன்பாக பேசினார்.பின்னர் தனக்கு பழைய சாதம் சாப்பிட வேண்டும் என தோன்றுவதாகவும் சமைத்து தருவீர்களா என்றும் ரேவதியிடம் அவர் கேட்க நிச்சயம் செய்து தருவதாக கூறினார்.

பின்னர் அந்த ஹொட்டல் ஊழியர்களிடம் தமிழ் பாரம்பரிய முறையில் மண் சட்டியில் பாசுமதி அரிசி போட்டு சாதம் வடித்து தண்ணீர் ஊற்றி ஊறவைக்க சொன்ன ரேவதி தான் அடுத்தநாள் வருவதாகவும், அந்த இலங்கை தமிழரையும் அடுத்த நாள் வரும்படியும் சொன்னார்.

அதே போல மறுநாள் வந்து மண்சட்டி சாதத்தை கேட்க ஹொட்டல் ஊழியர் கொண்டு வந்து கொடுத்து இருக்கார்.பின்னர் அதில் தயிர், உப்பு, வெங்காயம் பச்சை மிளகா போட்டு பிசைந்து இலங்கை தமிழருக்கு கொடுக்க அவர் உட்பட அனைவரும் அதை சாப்பிட்டுள்ளனர்.

 

நெருக்கம் காட்டி நடிக்கணுமா? எனக்கு இரண்டு குழந்தை இருக்கு : இயக்குனர்களை ஓட விடும் நடிகை!!

இயக்குனர்களை ஓட விடும் நடிகை

முன்னாள் முன்னணி நடிகையும் நடிப்பில் ஒட்டுமொத்த திரையுலகையும் கட்டி போட்டவர் இந்த நடிகை. திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என செட்டில் ஆனவர், பெரும் இடைவெளிக்கு பிறகு நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டும் நடித்து வருகிறார்.

என்றாலும் தற்பொழுதும் நாயகர்களுடன் ரொமான்ஸ் செய்து நெருக்கம் காட்டி நடிக்கும் கதாபாத்திரங்களுக்கும் இயக்குனர்கள் அவரை அணுகி வருகின்றனர்.

அப்படி முன்னணி நடிகர் ஒருவர் மூன்று வேடங்களில் நடித்த திரைப்படத்தில், ஒரு கதாபாத்திரத்தின் மனைவியாக கொஞ்சி குலாவும் வேடத்தில் இவரையே நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது.

ஆனால் கதையை கேட்டு கடுப்பான நடிகை, எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது இனியும் என்னால் நாயகர்களுடன் நெருக்கமாக நடிக்கும் கதாபாத்திரங்களை ஏற்க முடியாது என ஒரே போடாக போட்டு விட்டாராம்
இதனை அடுத்து அக்கடதேச நடிகை ஒருவர் அவரது கதாபாத்திரத்தில் நடித்து அதற்கு விருதுகளையும் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்லூரி விடுதியில் அந்த மாதிரி படம் பார்த்தேன் : ஓப்பன் பேட்டியால் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை!!

பேட்டியால் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை

முதல் முறையாக தான் ஆபாச படம் பார்த்த அனுபவம் குறித்து நடிகை பிரியா பவானிசங்கர் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமா நடிகையாக உயர்ந்தவர் பிரியா பவானிசங்கர்.

மேயாதமான் படம் மூலம் கிடைத்த நல்ல பெயரை சரியாக பயன்படுத்திக்கொண்டு, அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் அவர் நடித்த மான்ஸ்டர் திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, கோலிவுட்டின் ராசியான நடிகைகள் பட்டியலில் பிரியாவின் பெயர் முதலிடத்தில் உள்ளது.

பிரியா காட்டில் அடைமழை இந்தியன் 2, எஸ்.ஜே.சூர்யாவுடன் மீண்டும் ஒரு படம், அருண் விஜய்யுடன் மாஃபியா என பிரியாவின் காட்டில் அடைமழை பெய்து வருகிறது. தனது நல்ல பெயரை தக்க வைத்துக்கொள்ள அவரும் கடுமையாக உழைத்து வருகிறார்.

காதல் சர்ச்சை ஆனால் அவரது முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் விஷமிகள் சிலர், பிரியாவின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் சில வதந்திகளை பரப்பி விடுக்கின்றனர். சமீபத்தில் பிக் பாஸ் கவினின் முன்னாள் காதலி பிரியா தான் என சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

ஆபாச படம் பார்த்த அனுபவம் இந்நிலையில் பிரியா முதல் முறை ஆபாச படம் பார்த்தது தொடர்பாக அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் தான் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த போது, சீனியர் அக்காக்களுடன் சேர்ந்து அந்த மாதிரியான படம் பார்த்ததாக பிரியா கூறியுள்ளார்.

கல்லூரி விடுதியில் அந்த பேட்டியில் தொகுப்பாளினி பிரியாவிடம் ‘அந்த மாதிரி படங்கள் பார்த்ததுண்டா’ என கேட்கிறார். அதற்கு “அந்த படங்களை எல்லோருமே பார்த்திருப்பார்கள். என்னுடைய 18வது பிறந்தநாளின் போது கல்லூரி விடுதியில் இருந்தேன். பெரும்பான்மையான மாணவிகள் ஹாஸ்டலில் இல்லை.

அப்போது ஒரு சீனியர் அக்கா என்னோட அறிவுக்கண்களை திறந்து வைப்பதாகக் கூறி அந்த படத்தை எனக்கு போட்டு காண்பித்தார். அந்த மங்களகரமான காரியம் தான் அது”, என பிரியா பதிலளித்துள்ளார். வைரலாகும் வீடியோ பிரியா பவானிசங்கரின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உண்மையான ஓப்பன் டாக் என்றால் இது தான் என பிரியாவை சில ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். ஆனால் பலர் அந்த தொகுப்பாளினியை கடுமையாக விமர்சித்துள்ளனர். பொது நிகழ்ச்சியில் கேட்கக்கூடிய கேள்வியா இது என விளாசியுள்ளனர்.

நடிகை பிரியா பவானிசங்கருக்கு பொதுவெளியில் நல்ல பெயர் உள்ளது. குடும்பப்பாங்கான முக அமைப்பு கொண்டவர் என்பதால் நிறைய பெண் ரசிகைகளும் அவருக்கு உள்ளனர். சினிமாவில் வளர்ந்து வருக்கூடிய இந்த சூழலில் இப்படி பெயரை கெடுத்துக்கொள்ளும் படியாக பேட்டி கொடுப்பதை பிரியா தவிர்க்க வேண்டும் என்பது தான் அவரது ரசிகர்களின் அட்வைஸ்.

பிக்பாஸ் கஸ்தூரி செய்த மாஸான செயல் : பாராட்டாம இருக்க முடியாது – போட்டோவுடன் பதிவு!!

கஸ்தூரி செய்த மாஸான செயல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை கஸ்தூரி. சமூக வலைதளங்களில் பல விசயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

ஆனால் பிக்பாஸ் வீட்டில் அவர் ஏன் அவ்வளவாக பேசவில்லை என்ற விமர்சனங்களே எழுந்தன. அதற்கு அவர் நான் பேசினேன். ஆனால் டிவியில் வரவில்லை என கூறிவந்தார். இன்னும் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்.

இன்று விஞ்ஞானி அப்துல்கலாம் ஐயா அவர்களின் பிறந்த நாள், இதற்காக அவர் கலாம் சமாதிக்கு சென்றுவந்ததோடு, கலாம் குடும்பத்தாரையும் சந்தித்து பேசியுள்ளார்.

வழக்கம் போல அவரை விமர்சனம் செய்யாமல் இந்த விசயத்திறாக பலரும் அவரை வாழ்த்தியுள்ளனர்.

யாஷிகாவுடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன்.. அடம்பிடிக்கும் நடிகை.. ஏன் தெரியுமா?

யாஷிகாவுடன்  நடிக்கவே மாட்டேன் அடம்பிடிக்கும் நடிகை

உள்ளாடை அணியாமல் ஐஸ் வெளியிட்ட ஓவர் ஹாட் வீடியோ சென்னை: நடிகை யாஷிகா ஆனந்துடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன் என நடிகை ஐஸ்வர்யா தத்தா தெரிவித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா.

இருவருக்கும் இடையே பிக்பாஸ் வீட்டில்தான் நட்பு மலர்ந்தது. இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்து வருகின்றனர். ஐஸ்வர்யா தத்தாவும் யாஷிகாவும் நெருங்கிய தோழிகள் என்பது ஊரறிந்த விஷயம்.

லிப்லாக் அண்மையில் தங்கள் நட்பின் ஓராண்டு விழாவை ஹோட்டலில் பார்ட்டி கொடுத்து கொண்டாடினர். அதனை சமூக வலைதளங்களில் லைவ் செய்தனர். அப்போது யாஷிகாவின் ஆண் நண்பர் ஒருவர் அவருக்கு லிப்லாக் கொடுத்ததெல்லாம் வேறு கதை.

இணைந்து நடிப்பீர்களா இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஐஸ்வர்யா தத்தாவிடம், உங்களின் நெருங்கிய தோழியான யாஷிகா ஆனந்துடன் இணைந்து நடிப்பீர்களா என கேட்கப்பட்டது. எனக்கு பிடித்திருந்தது அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா நல்ல படங்களில் நடித்து வருகிறார்.

அவரின் ஜாம்பி படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நடிக்க வேண்டாம் நல்ல கதைகள் கிடைத்தால் இருவரும் இணைந்து நடிக்கலாம் என்று எண்ணியிருந்தோம். ஆனா இப்போது சேர்ந்து நடிக்க வேண்டாம் என தோன்றுகிறது.

நாங்க ரெண்டு பேரும் க்ளோஸ் ஃபிரன்ட்ஸ். இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடித்தால் எங்களுக்குள் போட்டி ஏற்பட்டு நட்பு கெட்டு போய்விடும். அதனால் எப்போதும் போல நல்ல தோழிகளாகவே இருக்க விரும்புகிறோம். சேர்ந்து நடிக்கும் ஐடியாவே இல்லை. என ஐஸ்வர்யா தத்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்!

கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு

கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், நாளை தனது 23வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஸ்டோன் பெஞ்ச் சார்பில் கார்த்திக் சுப்பராஜ், கீர்த்தி சுரேஷின் 24வது படத்தை தயாரிக்கிறார். நாளை அந்த படத்தின் டைட்டில் போஸ்டரை பகல் 11.11 மணிக்கு வெளியிடுகிறார்.

23 வயது 24 படம் அக்டோபர் 17, 1992ம் ஆண்டு சென்னையில் பிறந்த கீர்த்தி சுரேஷ், 2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். 2015ம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷிற்கு, 2016ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் மாபெரும் வெற்றியை தேடித் தந்தது.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என தனது 23 வயது பிறந்த நாளை கொண்டாடும் வேளையில் 24வது படத்தின் டைட்டில் அறிவிப்புக்காக காத்திருக்கிறார். ஓவர் ஆக்டிங் டு தேசிய விருது சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ, சீமராஜா என தொடர்ந்து நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், தனுஷ், சூர்யா, விஜய், விக்ரம் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.

முன்னணி நடிகையாக வலம் வந்தாலும், பெரும்பாலும் ஓவர் ஆக்டிங் என டிரோல் செய்யப்பட்டு வந்தார். இந்த நிலையில், நடிகையர் திலகம் படத்தில் நடித்ததன் மூலம் தனது ஓவர் ஆக்டிங் இமேஜை ஓரங்கட்டி விட்டு தேசிய விருது நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார்.

ரஜினிக்கு ஜோடி சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர் 168 திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜோதிகா நாயகிகளாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று கீர்த்தி சுரேஷ் காத்துக் கொண்டிருக்கிறார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் மேயாத மன், மெர்க்குரி படங்களை தொடர்ந்து மூன்றாவது தயாரிப்பாக கீர்த்தி சுரேஷின் 24வது படத்தை தயாரிக்கிறது. கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் ஒரு படத்தையும் தெலுங்கில் மிஸ் இந்தியா படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த இரு படங்களை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் தலைப்பை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் பரிசாக அவரது ரசிகர்களுக்கு நாளை காலை 11.11 மணிக்கு கார்த்திக் சுப்பராஜ் அறிவிக்க உள்ளார்.

15 வருடங்களுக்குப் பிறகு கணவருடன் இணையும் ரம்யா கிருஷ்ணன்!!

ராஜமாதா சிவகாமி தேவி

நடிகை ரம்யா கிருஷ்ணன் 15 வருடங்களுக்குப் பிறகு தனது கணவர் இயக்கத்தில் இணைந்து நடிக்கவுள்ளார். நடிகை ரம்யா கிருஷ்ணன் 1983 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, கன்னடம் மலையாளம் என ஐந்து மொழிகளிலும் கலக்கி வருகிறார்.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினியுடன் இவர் நடித்திருந்த படையப்பா படம் பெரும் வெற்றிப்பெற்றது. படையப்பா படம் அவரின் கேரியரில் மிக முக்கியப்படமாக கருதப்பட்டது.

இந்நிலையில் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் இவர் நடித்த ராஜமாதா சிவகாமி தேவி கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. அந்த கதாபாத்திரத்தின் மூலம் பேரும் புகழும் பெற்றார் ரம்யா கிருஷ்ணன். கணவரின் இயக்கத்தில் இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது கணவரின் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 15ஆண்டுகளுக்கு பிறகு ஏற்கனவே கிருஷ்ணா வம்சி இயக்கத்தில் 1998ஆம் ஆண்டு சந்திரலேகா படத்திலும் 2004ஆம் ஆண்டு ஸ்ரீ ஆஞ்சநேயம் படத்திலும் நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன்.

தற்போது 15 ஆண்டுகள் கழித்து தனது கணவர் இயக்கத்தில் வந்தே மாதரம் என்றபடத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ரம்யா கிருஷ்ணன், 2003ஆம் ஆண்டு தெலுங்கு பட இயக்குநரான கிருஷ்ண வம்சியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.