முதன் முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் தெய்வமகள் : யாருக்கு ஜோடி தெரியுமா?

சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் தெய்வமகள்

தெய்வமகள் சீரியல் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் வானி போஜன். இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இந்த சீரியல் மூலம் வந்தது.

இந்நிலையில் வானி போஜன் தற்போது விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. தற்போது இவர் முதன் முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

அஷோக் செல்வன், ரித்திகா சிங் நடிக்கும் ஓ மை கடவுளே படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வானி போஜன் நடிக்கவுள்ளாராம்.

ஏற்கனவே சீரியலில் இருந்து வெள்ளித்திரை வந்து ப்ரியா பவானி ஷங்கர் செம்ம ஹிட் அடித்தார், அவரை போலவே இவரும் ஜொலிப்பாரா பார்ப்போம்.

பிக்பாஸ் தர்ஷனை மனம் நெகிழ வைத்த தருணம் : போட்டோவுடன் பதிவு!!

பிக்பாஸ் தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரின் மனங்களை கொள்ளை கொண்ட போட்டியாளர் தர்ஷன். பிக்பாஸ் வீட்டிற்குள் யாராக வருவீர்கள் என்ற கேள்வி கேட்ட போது கமல்ஹாசன் நான் தர்ஷனாக வருவேன் என கூறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் தான் டைட்டில் பெறுவார் என கணிக்கப்பட்ட போது அது பொய்யாக ஆனதில் பலருக்கு கவலையே.

ஆனாலும் தர்ஷனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சி. அதே வேளையில் தர்ஷனுக்கு தன் நண்பன் முகென் ஜெயித்தது பெரும் சந்தோசம்.

அதே வேளையில் தர்ஷன் ஆர்மியும் மிக ஸ்ட்ராங்காக இருக்கிறது. அவருக்கு ரசிகர்கள் பல பரிசுகளை அளித்து மகிழ்ந்துள்ளார்கள்.

பிரபல நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாகும் அழகி இவர் தான் : அப்போ இன்னொரு நடிகை?

சந்தானத்துக்கு ஜோடியாகும் அழகி

நடிகர் சந்தானம் தில்லுக்கு துட்டு2, A1 படங்களின் மூலம் தொடர்ந்து ஹிட் கொடுத்துவிட்டார். இவ்விரு படங்களும் காமெடி கலந்ததாக ரசிகர்களை ஈர்த்தன. நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது. இதனையடுத்து அவர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் புது படத்தின் நடித்து வருகிறார்.

இவர் சந்தானம் காமெடியனாக நடித்த ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை படங்களை இயக்கியவர். சந்தானத்தின் புதிய படத்திற்கான ஹீரோயின் தேர்வு நடைபெற்று வந்தநிலையில் தற்போது இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவர் ஏற்கனவே A1 படத்தில் அவருடன் டாக்டராக நடித்த தாரா அலிஷா பெர்ரி நடிக்கிறாராம். இன்னொரு ஹீரோயினாக மிஸ் கர்நாடகா அழகி பட்டம் வென்ற ஸ்வாதி முப்பாலா தேர்வாகியுள்ளாராம்.

 

முக்கிய ஹீரோவுடன் நடித்த பிரபல நடிகை கைது? நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை!!

பிரபல நடிகை கைது

சினிமா பிரபலங்களுக்கென்ன ஜாலியான வாழ்க்கை என நினைக்கிறோம். ஆனால் அவர்களுக்கும் சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகள் உண்டு. சிலர் சர்ச்சைகளிலும் குற்ற சம்பவங்களிலும் சிக்குகிறார்கள்.

அந்த வகையில் தற்போது நடிகை அமீஷா படேல் செக் மோசடி குற்ற வழக்கில் சிக்கியுள்ளார். ஃபைனாசியர் அஜய் சிங் என்பவர் அமீஷா மீது ராஞ்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதில் அமீஷாவும் அவரின் பாட்னர் குணால் என்பவரும் படத்திற்காக 2018 ல் ரூ 2.50 கோடி பணம் என்னிடம் பெற்றனர். ஆனால் படம் வெளிவரவில்லை.

பணத்திற்காக அவர்களை தொடர்பு கொண்ட போது ரூ 3 கோடிக்கான செக் கொடுத்தனர். ஆனால் செக் பௌன்ஸ் ஆகிவிட்டது. இதற்காக தொடர்பு கொண்ட போது அவர்களை என் தொலைபேசி அழைப்பை நிராகரித்து வருகின்றனர் என கூறியுள்ளார்.

இந்நிலையில் வழக்கை விசாரித்த ராஞ்சி நீதிமன்றம் அவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.அமீஷா புதிய கீதை படத்தில் விஜய்யுடன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

ஸ்ரீதேவியாக நடிக்க வேண்டும் : முன்னணி தமிழ் நடிகையின் ஆசை நிறைவேறுமா?

முன்னணி தமிழ் நடிகையின் ஆசை

நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமா தொடங்கி பாலிவுட் வரை அதிகம் பிரபலமான நடிகை. லேடி சூப்பர்ஸ்டார் என அவரை சொல்லும் அளவுக்கு அதிக படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி.

சென்ற வருடம் அவர் திடீரென இறந்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. ஹோட்டல் அறையில் குளியல் தொட்டியில் அவர் மூழ்கி இறந்து கிடந்தார்.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவேண்டும் என விரும்புவதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

“வாழக்கை வரலாற்று படங்களில் நடிக்க விரும்புகிறேன். குறிப்பாக நடிகை ஸ்ரீதேவியின் வாழ்கையை யாரவது படமாக்கினால், நான் அதில் இருக்கவேண்டும் ஏன் விரும்புகிறேன்” என தமன்னா தெரிவித்துள்ளார்.

காதலர் தினம் நடிகர் குணால் உயிரிழந்தது எப்படி தெரியுமா..? பலருக்கும் தெரியாத உண்மை..!

நடிகர் குணால்

கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான காதலர் தினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் குணால்.

இவர் மும்பையைச் சேர்ந்த இவர், அணுராதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், இவருக்கும், அணுராதாவிற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு, ஒருநாள் திடீரென்று அணுராதா கோபமாக தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து, குணால் இளம்நடிகையான லவீனா என்பவரை காதலித்து வந்தார்.

அந்த சமயத்தில் தான், அதாவது கடந்த 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆம் திகதி மும்பையில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில், மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதையடுத்து போலிசார், காதல் பிரச்சனையால் தான் த ற்கொ லை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் லவீனாவை கைது செய்து விசாரித்த நிலையில் பின்னர் அவரை விடுவித்தனர்.

பின்னர், சினிமா வாய்ப்பு இல்லாததும் அவர் இம்முடிவை எடுக்க காரணம் என கூறப்பட்டது. ஆனால் இன்றளவும் குணால் மரணத்தில் மர்மம் நீடித்து தான் வருகிறது.

இந்நிலையில், குணால் நடிகராக மட்டுமில்லாமல், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்த நிலையில், தொழில் நஷ்டம் காரணமாக மரணித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

15 வயதில் ஆசிரியரை மயக்க துப்பட்டாவை பயன்படுத்தினேன்.. முதல் காதல்.. மனம் திறந்த பிரபல நடிகை!

மனம் திறந்த பிரபல நடிகை!

நடிகை கங்கனா ரனாவத் தனது முதல் காதல் முதல் முத்தம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். நடிகை கங்கனா ரனாவத் அவ்வபோது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அண்மையில் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், குழந்தைகள் உடலுறவு கொள்வதை பெற்றோர் அனுமதிக்க வேண்டும். குழந்தைகள் உடலுறவு கொள்வதை பார்த்து பெற்றோர் மகிழ்ச்சியடைய வேண்டும், நான் பாலியல் உறவில் ஆக்டிவாக இருப்பதை பார்த்து எனது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர் என்று கூறினார்.

15 வயதில் காதல் கங்கனாவின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது முதல் காதல் குறித்து பேசியுள்ளார் கங்கனா ரனாவத். அதாவது நான் 15 வயதிலேயே ஆசிரியர் ஒருவரின் மீது காதல் கொண்டேன். துப்பட்டாவை வைத்து.. அப்போது நான் 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.அப்போது சந்த் சுப்பா பாதல் பாடல் வெளியானது. அதனால் அந்த ஆசிரியரை மயக்க என்னுடைய துப்பட்டாவை பயன்படுத்தினேன்.

என்னுடைய முதல் ரிலேஷன்ஷிப் 17-18 வயதில் வந்தது. நான் அப்போது சண்டிகரில் இருந்தேன். என்னுடைய ஃபிரன்ட் அவளுடைய பாய் ஃபிரன்டுடன், டேட்டிங் சென்றிருந்தாள். அப்போது அவரின் நண்பரும் நானும் அவளுக்காக காத்துக்கொண்டிருந்தோம்.

அவர் பஞ்சாப்பை சேர்ந்தவர். ரொம்ப க்யூட்டாக இருப்பார். அவருக்கு 28 வயசு. எனக்கு 16- 17 வயசு இருக்கும். அவர் மீது நான் காதல் கொண்டேன். அவர் என்னை ஒரு குழந்தையை போன்று பார்த்தார். காதல் விளையாட்டுக்கு நான் புதியவள் என்பதை கண்டுபிடித்துவிட்டார். என் இதயமே நொறுங்கிவிட்டது.

நான் அவரை வெறித்தனமாக காதலித்தேன். நான் அவருக்கு மெஸேஜ் அனுப்பினேன், எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், நான் வளருவேன் என்று. இவ்வாறு தனது காதல் குறித்து கூறிய கங்கனா ரனாவத், தனது முதல் முத்தம் குறித்தும் பேசினார்.

முத்தம் குறித்து அவர் பேசியதாவது “என்னால் அவரை முத்தமிட முடியவில்லை, அதனால் நான் என் உள்ளங்கையில் முத்தமிடுவதைப் பயிற்சி செய்தேன். எனது முதல் முத்தம் மேஜிக் போன்று அல்ல, அது குழப்பமாக இருந்தது. என் வாய் உறைந்துவிட்டது. அப்போது அவர் உன் வாயை கொஞ்சமாவது அசை என்றார். இவ்வாறு தனது முதல் காதல் முத்தம் குறித்து மனம் திறந்து பேசினார்.

கங்கனா ரனாவத், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான மேக்கப் டெஸ்ட் அமெரிக்காவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஒரே ஒரு போட்டோ.. சத்தமில்லாமல் திரும்பவும் பற்ற வைத்த ‘வத்திக்குச்சி’.. வனிதாக்கா நீங்க மாறவேயில்ல!!

சத்தமில்லாமல் திரும்பவும் பற்ற வைத்த ‘வத்திக்குச்சி’

பிக் பாஸ் நிகழ்ச்சி முடியும் தருவாயில் வனிதா எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கோபத்தில் திட்ட ஆரம்பித்து விட்டனர். பிக் பாஸ் சீசன் 3யில் ஆரம்பத்தில் நேரடி போட்டியாளராகவும், பின்னர் வைல்ட் கார்ட் எண்ட்ரியாகவும் சென்று வரலாற்றை மாற்றியவர் வனிதா.

பைனஸ்சின் போது சாண்டி கூறியது போல, பிக் பாஸ் வீட்டில் நடந்த பெரும்பாலான பிரச்சினைகளுக்கு விதை போட்டவர் வனிதா தான். அதனால் தான் பிக் பாஸ் வீட்டில் அவருக்கு வத்திக்குச்சி என்ற பட்டப்பெயரே வைக்கப்பட்டது. பதனீ பதனீ என்ற ரேஞ்சில் சத்தமில்லாமல் பற்ற வைத்து விட்டு, போட்டியாளர்களை அடித்துக் கொள்ள வைத்து விடுவார்.

வத்திக்குச்சி வனிதா பிக் பாஸ் வீட்டில் தான் இப்படி என்றால், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் அதே வேலையைத் தான் அவர் செய்துள்ளார். ஆனால் இம்முறை அவர் மாட்டிவிட்டது போட்டியாளர்களை அல்ல. பிக் பாஸ் நிகழ்ச்சியின் சில எடிட்டர்களை.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பின்னணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்தது நமக்குத் தெரிந்த விசயம் தான். கமலும் கூட சில எபிசோட்களில் அதனை மக்களுக்கு தெரியப்படுத்தினார். ஆனால் பிக் பாஸ் குரலைப் போலவே அந்த தொழிலாளர்களின் முகங்களும் மக்களுக்கு அறிமுகம் இல்லை.

பிக் பாஸ் எடிட்டர்ஸ் மற்ற தொழிலாளர்களைக் காட்டிலும் பிக் பாஸ் ரசிகர்களிடம் அதிகம் பாராட்டு மற்றும் திட்டு வாங்கிக் கட்டிக் கொண்டது நிகழ்ச்சியின் படத்தொகுப்பாளர்கள் தான். அதிலும் குறிப்பாக புரொமோக்களில் கவிலியா காதலுக்கு செம பிஜிஎம் போட்டு தெறிக்க விட்டார்கள்.

இந்நிலையில் நிகழ்ச்சியின் கடைசி தினத்தில் பிக் பாஸ் படத்தொகுப்பாளர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வனிதா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நான்கு படத்தொகுப்பாளர்கள் உள்ளனர். இந்த புகைப்படத்தைப் பார்த்த கோபத்தில் கொந்தளித்து விட்டனர் நெட்டிசன்கள்.

‘ஓ நீங்க தானா அது. யாரு தேவையில்லையோ அவங்க பத்தின நெகடிவ்வா காட்டறது. யாரு உங்களுக்கோ முக்கியமோ அவங்களைப் பத்தி பாசிடிவ்வா காட்டறது. உங்களைத் தான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தோம்’ என சகட்டுமேனிக்கு திட்டி வருகின்றனர்.

மறக்க முடியாத ஜில் ஜில் ரமாமணி : ஆச்சி மனோரமா!!

ஆச்சி மனோரமா

ஆச்சி என்று இன்றும் மரியாதையோடு அனைவராலும் அழைக்கப்படும் மனோரமா ஆச்சியின் இழப்பு திரையுலகையே கலங்க வைத்தது. அவரின் இழப்பு ஈடுகட்ட முடியாத ஒரு பேரிழப்பு. தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் என பல விருதுகளை தனது திரையுலக வாழ்வில் பெற்றவர்.

மேலும் 1000 படங்களுக்கு மேல் திரைப்படங்களில் நடித்ததால் இவரின் பெயர் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. அவரது நான்காவது நினைவு தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் அவரைப்பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறோம்.

மன்னார்குடியில் இருந்து வந்து மாபெரும் கலைஞராக தன்னை மெருகேற்றிக்கொண்டு, ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையே அண்ணாந்து பார்க்க வைத்து கொண்டாடிய ஒரு ஈடில்லா பெண்மணி ஆச்சி மனோரமா. தமிழ் மட்டுமே பேச தெரிந்தாலும், தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், சிங்களம் என ஆறு மொழி திரைப்படங்களில் நடித்தவர்.

குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை தான் அவர் சினிமா உலகத்திற்குள் வர காரணமாய் இருந்தது. 5 வயதிலேயே நாடக மேடை ஏறிய சிறுமி கோபி சாந்தா, தன்னால் முடிந்த அளவிற்கு குடும்பத்தின் வறுமையை போக்குவோமென்ற நல்லெண்ணத்தில் நடிக்க தொடங்கினார். கோபி சாந்தாவிற்கு மனோரமா என்று பெயர் சூட்டியவர் நாடக இயக்குனர் திருவேங்கடம்.

அப்படி தொடங்கிய மனோராவின் நாடக கலை பயணம், கவிஞர் கண்ணதாசன் மூலம் சினிமா துறையில் 1958ஆம் ஆண்டில் மாலையிட்ட மங்கை திரைப்படம் மூலம் தொடங்கப்பட்டது. அறிமுகமான முதல் படத்திலேயே நகைச்சுவையில் கலக்கியவர் மனோரமா.

கோபி சாந்தா, மனோரமாவாக உருமாறி சுமார் 55 ஆண்டுகளாக யாராலும் நெருங்கக் கூட முடியாத அளவிற்கு சினிமாவையே உயிர் மூச்சாக சுவாசித்து இறக்கும் தருவாய் வரையிலும், நடிகையாகவே வாழ்ந்து புகழின் உச்சியில் இருந்தவர். அறிஞர் அண்ணாதுரை மற்றும் கலைஞர் கருணாநிதியோடு நாடகங்களில் நடித்துள்ளார்.

மேலும் தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் உடன் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இப்படி ஐந்து முதல்வர்களோடு இணைந்து நடித்த பெருமை மனோரமாவை சேரும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்துள்ளார் ஆச்சி மனோரமா.

இவர் நாடகக் கலைஞர்களையும், சினிமா கலைஞர்களையும் எந்த வேறுபாடுமின்றி ஒரே மாதிரி தான் பாவிப்பார். நகைச்சுவை நடிகர் நாகேஷ் உடன் இணைந்து இவர் நடித்த பல நகைச்சுவை காட்சிகள் இன்றும் நம் உள்ளங்களில் பசுமையாய் பூத்து குலுங்குகிறது. நகைச்சுவை மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பாக யதார்த்தமாக நடித்தவர்.

தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த ஜில் ஜில் ரமாமணி கதாபாத்திரம் இன்றும் நம் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கிறது. சின்னத்தம்பி, சின்ன கவுண்டர் என பல திரைப்படங்களில் அவரது நடிப்பு நம்மை நெகிழ வைத்துள்ளது. மனைவி, அம்மா, மாமியார், பாட்டி என இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது.

கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, வடிவேலு, விவேக் என அனைத்து நகைச்சுவை நடிகர்களோடும் இணைந்து நடிக்கும் போதும் அவர்களது காம்பினேஷன் பிரமாதமாக இருக்கும். இவருடன் நடிக்காத கதாநாயகர்களே இல்லை. தனது தனிப்பட்ட வாழ்வில் பல ஏமாற்றம், நம்பிக்கை துரோகம் என பல இன்னல்களை சந்தித்தாலும் அவருடன் நடித்த ஒவ்வொரு கலைஞர்களையும் அவரது சொந்த உறவுகளாகவே எண்ணியவர்.

நடிப்பு மட்டுமின்றி பல திரைப்படங்களில் 100க்கும் மேற்பட்ட பாடல்களும் பாடியுள்ளார். டில்லிக்கு ராஜனாலும் பாட்டி சொல்ல தட்டாதே என இவர் பாடிய பாடல் மிகவும் பிரபலம். நாடகங்களில் உடன் நடித்த எஸ்.எம்.ராமநாதன் என்பவரை பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரது கணவர் இவரை விட்டு விலகி மறுமணம் செய்து கொண்டார். இவருக்கு பூபதி என்ற ஒரு மகன் இருக்கிறார். தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் என பல விருதுகளை தனது திரையுலக வாழ்வில் பெற்றவர். மேலும் 1000 படங்களுக்கு மேல் திரைப்படங்களில் நடித்ததால் இவரின் பெயர் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

இத்தனை திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நாடங்களில் நடிப்பதை மிகவும் பெருமையாக கருதும் ஒரு மகா கலைஞர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஆச்சி மனோரமாவும் அண்ணன் தங்கையாகவே வாழ்ந்தார்கள்.

ஆச்சி என்று இன்றும் மரியாதையோடு அனைவராலும் அழைக்கப்படும் மனோரமா ஆச்சியின் இழப்பு திரையுலகையே கலங்க வைத்தது. அவரின் இழப்பு ஈடுகட்ட முடியாத ஒரு பேரிழப்பு. அவர் நம் மத்தியில் இல்லையே தவிர, அவரின் ஆசிகளும், அன்பும், திறமையும், நடிப்பும் நம்மோடு என்றும் பின்னிப்பிணைந்து தான் இருக்கும்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு : ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை!!

ஜெயலலிதாவின் வாழ்க்கை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகவும், வெப் சீரிஸாக எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கே தனி போட்டி சினிமாவில் நிலவி வருகிறது.

இதில் படத்தை இயக்குனர் விஜய் இயக்க அதில் பாலிவுட் நடிகை கங்கனா ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு தலைவி என பெயர் வைத்து அண்மையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இந்நிலையில் காவேரி கூக்குரல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை. அரசியல் படத்தில் மட்டுமே அவ்வாறான கேரக்டர்களில் நடிப்பேன்.

இப்படத்தில் முதல் பாதி ஜெயலலிதாவின் 20 முதல் 30, 40 வயது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் இருக்கும். இரண்டாம் பாதியில் அரசியல் சம்மந்தப்பட்டதாக, எம்.ஜி.ஆர், கருணாநிதியுடான அரசியல் விஷயங்கள் இருக்கும் என கூறியுள்ளார்.