தமிழர்களை தரக்குறைவாக பேசிய பிரபல பாலிவுட் நடிகை.. கிளம்பிய எதிர்ப்பு!!

தமிழர்களை தரக்குறைவாக பேசிய  நடிகை

உலகத்தில் தமிழ் பேசும் மக்கள் பல கோடி பேர் இருக்கின்றனர். தமிழ் மொழியின் சிறப்பை பற்றி இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலரும் பேசுகின்றனர்.

ஆனால் பிரபல பாலிவுட் நடிகை நீது கபூர் தற்போது தமிழர்களை பற்றி தரக்குறைவாக பேசியுள்ளது பலரையும் கோபமடைய வைத்துள்ளது. நீது கபூர் 70 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரின் அம்மா என்பது கூடுதல் தகவல்.

தற்போது குடும்பத்துடன் இத்தாலி சென்றுள்ள அவர், அங்கு இருப்பவர்கள் போல Italian accent ல் பேச முற்பட்டபோது தான் பேசியது தமிழர்கள் போலத்தான் இருந்தது என அவர் கூறியுள்ளார்.

நல்லவேளை நீ ஆணாக பிறக்கவில்லை.. பிரபல நடிகையை பார்த்து கூறிய சூப்பர்ஸ்டார் ரஜினி!!

சூப்பர்ஸ்டார் ரஜினி

நடிகர் ரஜினி முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் ஷூட்டிங் சமயத்தில் நடிகர் தன்ஷிகா அவரை சந்தித்தாராம்.

அவர் ஹீரோயினாக நடித்த ‘யோகி டா’ படத்தின் சில காட்சிகளை ரஜினிக்கு போட்டு காட்டினாராம். படத்தில் வரும் சண்டை காட்சியை பார்த்து வியந்த ரஜினி “நல்லவேளை நீ ஆணாக பிறக்கவில்லை. என்னைப்போன்ற ஹீரோக்கள் காணாமல் போயிருப்பார்கள்” என கூறினாராம்.

அதை கேட்டு தன்ஷிகாவிற்கு புல்லரித்துவிட்டதாம். மேலும் கபாலி படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்தது பற்றி பேசிய அவர், “அந்த படத்திற்கு பிறகு அனைவரும் என்னை யோகி என்றே அலைகிறார்கள். என்னுடன் புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

77 வயதிலும் ஃபிட் ஆக இருக்கும் அமிதாப் பச்சன்.. அவரது உணவுப்பழக்க முறையின் ரகசியம் இதுதான்!!

ஃபிட் ஆக இருக்கும் அமிதாப் பச்சன்

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இன்று 77வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், அவரது உணவுப்பழக்க முறை குறித்து இங்கு காண்போம்.

அமிதாப் பச்சன் 77 வயதிலும் ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படுகிறார். இதற்காக அவர் உணவுக்கட்டுப்பாட்டை தீவிரமாக கடைபிடிக்கிறார்.

அவர் மேற்கொள்ளும் உணவுப்பழக்க முறை குறித்து இங்கு காண்போம்.

அமிதாப் பச்சன் ஒரு சைவ பிரியர். சில ஆண்டுகளுக்கு முன்பு மாமிசம் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்த அவர், வயதாவதால் சைவத்திற்கு மாறினார்.

அதன் பின்னர் பழங்கள், காய்கறிகள் மூலம் அவர் அத்தியாவசிய வைட்டமின்கள், கனிமச்சத்துகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்டுகளை பெறுகிறார்.

தினமும் காலையில் தவறாமல் அமிதாப் உடற்பயிற்சியை மேற்கொள்கிறார். காலையில் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால், அவர் மாலையில் மேற்கொள்வாராம். அத்துடன் தினமும் யோகா செய்வாராம்.

அமிதாப் பச்சன் நீர் மற்றும் எலுமிச்சை சாற்றை மட்டுமே பருகுவாராம். தண்ணீர் நீர்ச்சத்தை கொடுப்பதுடன், எலுமிச்சை செரிமானத்தையும் உடலில் செய்கின்றது.

அமிதாப் மட்டும் இன்றி அவரது குடும்பமே தினமும் ஒரு தேக்கரண்டி தேனை சாப்பிடுவார்களாம். இதனை அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

தேநீர்-காபி குடிக்கும் பழக்கத்தை அமிதாப் தற்போது கடைபிடிப்பதில்லை. ஆனால் முன்பு காபி குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்த அமிதாப், வயதாவதை கருத்தில் கொண்டு அதையும் கைவிட்டார். காபியில் உள்ள காப்ஃபைன் என்ற பொருள், குறிப்பிட்ட வயதிற்கு பின் கேடு விளைவிக்கக்கூடியது. நினைவாற்றலை பாதிக்கும் என்பதால், அமிதாப் பச்சன் அதனையும் கைவிட்டாராம்.

அரிசி சாதம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அமிதாப் சாப்பிடமாட்டாராம். ஆரம்ப காலத்தில் கீர் மற்றும் ஜிலேபியை விரும்பி சாப்பிட்டு வந்த இவர், உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அனைத்து சர்க்கரை பலகாரங்களையும் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டாராம்.

குளிர் பானங்கள், சோடா அல்லது காற்றூட்டப்பட்ட பானங்களை இவர் எப்போதும் குடிக்கமாட்டாராம். கார்போனேட்டட் பானங்களில் அதிகளவு சர்க்கரை மற்றும் கலோரிகள் இருப்பதால், ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று ஒருமுறை பேட்டியில் கூறியுள்ளார்.

முன்பு பீர் மட்டும் பருகி வந்த அமிதாப் பச்சன், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதனையும் கைவிட்டுவிட்டாராம்.

திரைப்படங்களில் அமிதாப் புகைப்பிடிப்பது போல் நடித்திருந்தாலும், நிஜ வாழ்க்கையில் அவர் புகைப்பிடிக்க மாட்டாராம். ஆனால், ஆரம்ப காலத்தில் அந்த பழக்கத்தை வைத்திருந்த இவர், பின்னர் அதனை கைவிட்டுவிட்டார்.

விமான நிலையத்தில் என்னை பார்த்து அந்த கேள்வி கேட்டனர்.. நான் பட்ட கஷ்டம்.. மனம் திறந்த அறந்தாங்கி நிஷா!!

மனம் திறந்த அறந்தாங்கி நிஷா

தொலைக்காட்சி பிரபலம் அறந்தாங்கி நிஷா தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா (38)

பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நகைச்சுவை மேடையை தன் அசாதாரண பேச்சாற்றலால் தெறிக்கவிட்டவர் இவர்.

தற்போது ஏழு மாதம் கர்ப்பமாக இருக்கும் அறந்தாங்கி நிஷா, ஓய்வில்லாமல் உழைத்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் துபாய்க்கு சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய அறந்தாங்கி நிஷா அளித்த பேட்டியில், நான் துபாயிலிருந்து இரு தினங்களுக்கு முன்னர் தான் வந்தேன்.

என்னை விமான நிலையத்தில் பார்த்த எல்லோரும் ஏன் இந்த சமயத்தில் பயணம் செய்கிறீர்கள் என கேட்டனர். என் மீதுள்ள அக்கறையில் தான் அப்படி கேட்டார்கள்.

ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும் நான் ரொம்ப தைரியமாக இருக்கேன். வயிற்றில் உள்ள என் குழந்தையும் தைரியமாக இருக்கு.இந்த இடத்துக்கு வர என் வாழ்க்கையில் நான் அதிகம் கஷ்டப்பட்டுள்ளேன்.

என் கணவர் அரசு வேலை பார்த்தாலும் பொருளாதார ரீதியாக கஷ்டத்தில் தான் இருக்கோம். எல்லா போராட்டத்தையும் தாண்டி மேலே வருவது அதிக கஷ்டம்.

என் வயிற்றில் இருக்கும் என் குழந்தைக்காகவும் சேர்ந்து தான் ஓடுறேன். சில சமயம் கால்கள் வீங்கிடும். சோர்வாக இருக்கும். அப்போது நான் நகைச்சுவை செய்த நிகழ்ச்சிகளை பார்ப்பேன் என கூறியுள்ளார்.

 

ஆடைக்கு கிடைத்த வரவேற்பு… அடுத்த கட்டத்திற்கு துணிந்த அமலா பால்!!

அமலா பால்

ஆடை படத்திற்கு ரசிகர்கள் தந்த வரவேற்பும் ஆதரவும் என்னை இன்னும் மேலும் அதிகமாக புதியதை செய்ய தூண்டியுள்ளது. அந்த வழியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் என் சினிமா பயணத்தில் அடுத்ததொரு புதிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன் என்று நடிகை அமலபால் கூறியுள்ளார்.

மிகுந்த திறமை வாய்ந்த பெண் இயக்குநரான நந்தினி ரெட்டி போன்றவருடன் பணிபுரிவது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. ஓ பேபி முதலாக அவரது வெற்றிப்படங்களுக்கு நான் ரசிகை. பெண்களை மையமாகக் கொண்டு கதை சொல்லும் அவரது இயக்கத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று நெட்ஃபிளிக்ஸில் இணைந்தது பற்றி தெரிவித்துள்ளார் நடிகை அமலா பால்.

நடிகை அமலா பால் ஆடை படத்திற்குப் பின், நெட்பிளிக்ஸில் வெளியான சர்சைக்குரிய லஸ்ட் ஸ்டோரீஸ் இந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். கடந்த ஆண்டு, நெட்பிளிக்ஸ் தளத்தில் நான்கு குறும்படங்கள் அடங்கிய திரைப்படமாக வெளியானது லஸ்ட் ஸ்டோரீஸ்.

அனுராக் கஷ்யப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜீ, கரன் ஜோஹர் என இந்தி சினிமாவின் முக்கியமான நான்கு இயக்குநர்கள் இதில் இடம்பெற்ற குறும்படங்களை இயக்கியிருந்தனர். பெண்களின் பாலியல் குறித்த முக்கியமான கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பிய இப்படம் வழக்கம் போல சர்ச்சையானது.

பல்வேறு அமைப்புகள் இப்படத்திற்கு எதிராக கண்டனங்களை தெரிவித்திருந்த போதும், இப்படம் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அமலா பால் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தில் இடம்பெற்ற முதல் குறும்படத்தில் அமலா நடிக்கவிருக்கிறார். இந்தியில் ராதிகா ஆப்டே நடித்த பாத்திரத்தை தெலுங்கில் அமலா ஏற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமலாபால் டிஜிட்டல் மீடியா பலமாக வளர்ந்துள்ள இந்த சூழலில், வட இந்தியாவைப் போலவே தென்னிந்திய பிரபலங்களும் டிஜிட்டல் மீடியத்தில் களமிறங்கி வருகிறார்கள். OTT எனும் டிஜிட்டல் மீடியத்தில் தற்போது தமிழ், தெலுங்கு சினிமா பிரபலங்களின் படங்களும், வெப் சீரிஸ்களும் வரிசைகட்டி களமிறங்குகின்றன.

இந்த வரிசையில் உலகின் நம்பர் 1 டிஜிட்டல் மீடியவான நெட்ஃபிளிக்ஸில் ஒரு புதிய படத்திற்காக தற்போது அமலா பால் இணைந்திருக்கிறார். ஆந்தாலஜி முறையில் உருவாகும் இப்படத்தில் அமலா பால் நடிக்கும் பகுதியை நந்தினி ரெட்டி இயக்குகிறார்.

சவாலான கதாபாத்திரங்கள் இது பற்றி நடிகை அமலா பால் தெரிவிக்கும்பொழுது, கடந்த சில வருடங்களாக நான் மிகவும் வித்தியாசமான சவால் நிறைந்த கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறேன். ரசிகர்கள் புதிய சிந்தனைகளுக்கு எப்போதும் பெரும் வரவேற்பும் மதிப்பும் தருகிறார்கள்.

ஆடை படத்திற்கு ரசிகர்கள் தந்த வரவேற்பும் ஆதரவும் என்னை இன்னும் மேலும் அதிகமாக புதியதை செய்ய தூண்டியுள்ளது. அந்த வழியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் என் சினிமா பயணத்தில் அடுத்ததொரு புதிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன்.

அதிலும் மிகுந்த திறமை வாய்ந்த பெண் இயக்குநரான நந்தினி ரெட்டி போன்றவருடன் பணிபுரிவது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. ஓ பேபி முதலாக அவரது வெற்றிப்படங்களுக்கு நான் ரசிகை. பெண்களை மையமாகக் கொண்டு கதை சொல்லும் அவரது இயக்கத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

என்னை இந்த திரைப்படத்திற்காக தேர்வு செய்தமைக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உலகின் முன்னணி OTT டிஜிட்டல் மீடியமாக விளங்கும் நெட்ஃபிளிக்ஸின் தென்னிந்திய வருகை, இங்கே பல புதிய மாற்றங்களையும், கதைக்கருக்களில், எதார்த்தமான படைப்புகளை உருவாக்கும் என நம்புகிறேன்.

இந்த மாற்றத்தின் ஆரம்ப கட்டத்திலேயே நெட்ஃபிளிக்ஸ் உடன் இணைந்ததில் மேலும் பெருமை கொள்கிறேன். நீங்கள் அனைவரும் உங்கள் ஆதரவை எனக்கு தொடர்ந்து அளிப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி என்று கூறியுள்ளார்.

அச்சு அசல் சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் பெண்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் பெண்

நடிகை சில்க் ஸ்மிதா தமிழ் சினிமா தற்போதும் கொண்டாடும் நடிகைகளில் ஒருவர். அவர் தற்கொலை செய்துகொண்டு இந்த உலகத்தில் இருந்து மறைந்தாலும் அவரது பாடங்கள் பற்றி தற்போதும் பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர் ரசிகர்கள்.

தற்போது அச்சு அசலாக சில்க் ஸ்மிதா போலவே தோற்றமளிக்கும் பெண்ணின் புகைப்படம் மற்றும் விடீயோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இருப்பினும் அந்த பெண் பற்றிய மற்ற விவரங்கள் தெரியவில்லை.

பிக்பாஸ் அபிராமிக்கு வாழ்க்கை குடுத்ததே நான் தான் : தொடரும் பிக்பாஸ் பிரலத்தின் ச ண்டை சர்ச்சை!!

பிக்பாஸ் அபிராமி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அபிராமி. அதே போல மற்றொரு போட்டியாளர் மீரா மிதுன்.

மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததையும் அபிராமி, சாக்‌ஷி அவரை கார்னர் செய்ததையும் நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.

பின் மீரா குறைவான ஓட்டுக்களால் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அபிராமியின் ரசிகர்களுக்கும் மீராவுக்கு இன்ஸ்டாகிராமில் ச ண்டை எழுந்துள்ளது. இதில் அவர் அபிராமிக்கு வாழ்க்கை குடுத்ததே நான் தான் என கூற அதற்கு அபிராமி ரசிகர்கள் அவரை திட்டி வருகிறார்கள்.

பிக்பாஸ் முகென் விசயத்தில் தொடரும் சர்ச்சை : பொங்கியெழுந்த பிரபலம் : சதி செய்யப்படுகிறதா?

பிக்பாஸ் முகென்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் அதிக ஓட்டுகளை பெற்று பிக்பாஸ் பட்டத்தை வென்று சாதனை படைத்தவர் முகென். அவருக்கு தனி ஆர்மி உருவாகிவிட்டது. மலேசியாவிலும் அவருக்கு பெரும் ஆதரவுகள் குவிந்துள்ளது.

இந்நிலையில் அவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக சக போட்டியாளர் மீராவின் குரல் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து மீராவுக்கு எதிராக பல அதிரடி குற்றச்சாட்டுக்களை ஜோ மைக்கேல் என்பவர் வைத்து வந்தார்.

தற்போது இவ்விசயத்தில் மீரா எனக்கு முகென் மூலம் பிரபலம் ஆக வேண்டும் என்ற தேவையில்லை. அவர் ஏற்கனவே என்னுடன் இருந்தபடி எல்லா டிவி சானல்களில் காட்டப்பட்டார். இதனை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கூலாக எடுத்துக்கொண்டேன். இதற்கு மேல் என் சொந்த யாரும் வாழ்க்கையில் விளையாடாதீர்கள். நான் உங்கள் எல்லோரையும் எச்சரிக்கிறேன் என கூறியுள்ளார்.

பிக்பாஸ் டைம்ல எல்லோரும் கொண்டாடினாங்க.. இப்போ யாருமே இல்லை.. புலம்பும் நடிகை!!

புலம்பும் நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலம் ஆன நடிகை ஒருவர் தற்போது பட வாய்ப்புகளே இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார். தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இதன் மூலம் பலர் சினிமா உலகில் அடையாளம் காணப்பட்டார்கள்.

யார் என்றே தெரியாத பலர் இணையம் முழுக்க இந்த நிகழ்ச்சி காரணமாக வைரலாகி பெயர் பெற்றார்கள். அப்படித்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அந்த நடிகையும் வைரலானார். முதலில் அவர் பெரிய நடிகை எல்லாம் கிடையாது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு பெரிய பிரேக் கொடுத்தது.

தமிழகமே கொண்டாட்டம் சரியாக சொல்ல வேண்டும் என்றால் தமிழகமே அவரை வைத்து கொண்டாடியது. பல பேர் அவரை குறித்து டிவிட் செய்தனர். அந்த 80+ நாட்களில் அவரின் வாழ்க்கையே தடம் மாறியது. யார் வெற்றி இதையடுத்து அவர் வெளியே வந்த பின் பெரிய அளவில் கொண்டாடப்படுவார் என்று எல்லோரும் நினைத்தார்கள்.

அவரும் அப்படித்தான் நினைத்தார். ஆனால் அவர் வெளியே வந்த பின் அடையாளமே தெரியாத நிலைக்கு சென்றார். ஒரு சில படங்களில் சிறிய ரோலில் நடித்தார். மிக மோசம் ஆனால் அதற்கு பின் அவருக்கு பட வாய்ய்ப்புகளே கிடைக்கவில்லை. இப்போது ஒரு பட வாய்ப்பு கூட இல்லாமல் இருக்கிறார். பிக்பாஸ் நேரத்தில் எல்லோரும் கொண்டாடினார்கள், இப்போது யாருமே இல்லை என்று அவர் புலம்பி வருகிறார்.

ரியலில் ஜோடியாகும் முன்.. ரீலில் ஜோடியாகும் கவின் – லாஸ்லியா.. விஜய் டீவி மாஸ்டர் பிளான்!

ரீலில் ஜோடியாகும் கவின் – லாஸ்லியா

பிக்பாஸ் 3 போட்டியாளர் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் விஜய் டீவி சீரியல் ஒன்றில் நடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் தமிழகத்தில் வைரலானார் லாஸ்லியா மரியநேசன். இவர்கள் இளைஞர்கள் மத்தியில் இவர் பெரிதும் பிரபலம் அடைந்தார்.

அதேபோல் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் கவின் பெரிய அளவில் வைரலானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்ற நேரத்தில் இருந்து இவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உருவானார்கள். இதில் கவின் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார்.

லஸ்லியா மூன்றாவது இடம் பிடித்தார். தொடக்கத்தில் இவர்கள் நல்ல பெயர் எடுத்தனர்,. ஆனால் போக போக மக்கள் இவர்களை விமர்சனம் செய்யவும் தொடங்கினார்கள். ஆனால் என்ன ஓவியா போலவே இருவருக்கும் இணையத்தில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருக்கு ஆர்மி எல்லாம் இருக்கிறது.

தற்போது கவின் மற்றும் லாஸ்லியாவிற்கு சினிமா வாய்ப்புகள் கதவை தட்ட தொடங்கி உள்ளது. நிறைய இயக்குனர்கள் இவர்களை படத்திற்காக அணுகி வருகிறார்கள். சீரியல் தற்போது விஜய் டீவியும் இவர்களை சீரியலில் நடிக்க அணுகி இருக்கிறது. விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் பெரிய ஹிட் அடித்து நிறைவு பெற்றது.

இதன் இரண்டாவது பாகம் வெளியாக உள்ளது. என்ன உள்ளனர் ராஜா ராணி 2ல் தற்போது லாஸ்லியா, கவின் இருவரும் சேர்ந்து நடிக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். இதனால் சீரியல் தரப்பு தற்போது கவின் – லாஸ்லியாவுடன் பேசி வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.