இனி காத்திருந்து பயனில்லை.. திருமணத்துக்கு தயாரான பிரபல நடிகை.. மாப்பிள்ளை தேடல் தீவிரம்!

திருமணத்துக்கு தயாரான பிரபல நடிகை

நடிகை லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கும்கி படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால் பிஸியான நடிகையானார். இரண்டாவது படமான சுந்தரபாண்டியனும் வெற்றி பெற, முன்னணி நடிகைகளின் வரிசைக்கு டக்கென சென்றுவிட்டார்.

இதையடுத்து குட்டிப்புலி, பாண்டியநாடு, ஜிகர்தண்டா, கொம்பன் என தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். விஷாலுடன் கிசுகிசு இடையில் நடிகர் விஷாலும், லட்சுமி மேனனும் காதலிப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அது வெறும் வதந்தி தான் என பின்னர் தெரியவந்தது.

கடைசியாக கடந்த 2016ம் ஆண்டு விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்தார் லட்சுமி மேனன். அதன் பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை. இந்த ஆண்டு தான் பிரபு தேவா ஹீரோவாக நடிக்கும் யங் மங் சங் படத்தில் அவர் நடித்துள்ளார்.

ஆனால் அதன் பிறகு அவர் நடிப்பில் கவனம் செலுத்தவில்லை. 10வது படிக்கும் போதே லட்சுமி மேனன் நடிக்க வந்துவிட்டார். இதனால் அவர் படிப்பில் முழு கவனம் செலுத்தி வந்தார். திருமணம் செய்ய முடிவு அவருக்கு தற்போது 22 வயது ஆகிறது. எனவே லட்சுமி மேனனுக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாப்பிள்ளை தேடும் படலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அவருக்கு திருமணம் நடக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரங்கள்.

 

போ தைக்கு அடிமை ஆனேன்.. யாருக்கும் தெரியாது.. மறைத்துவிட்டேன்.. பிரபல நடிகை பகீர்!!

போ தைக்கு அடிமை ஆனேன் பிரபல நடிகை பகீர்

நடிகை ஸ்ருதி ஹாசன் தான் போ தைக்கு அடிமையாகி கஷ்டப்பட்டு வந்ததாக பேட்டி அளித்துள்ளார். நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது தெலுங்கு பட உலகில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். வரிசையாக நிறைய தெலுங்கு படங்களில் அவர் நடித்து வருகிறார்.

தமிழில் வாய்ப்பு குறைந்தாலும் தெலுங்கில் அவர் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் எதிர்காலத்தில் சில படங்களில் அவர் நடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

இந்த நிலையில் ஏற்கனவே இவர் தனது காதல் முறிவு குறித்து பேசினார். அதில், என்னை சிலர் ஏமாற்றிவிட்டனர். நாம் எல்லோரிடமும் உண்மையாக இருப்போம். ஆனால் மற்ற எல்லோரும் நம்மிடம் அப்படி இருப்பது கிடையாது. சிலர் நம்மை மோசமாக நடத்துவார்கள்.

நான் உண்மையான காதல் கிடைக்குமா என்று இப்போது காத்துக் கொண்டு இருக்கிறேன், எனக்கு வேறு எதுவும் வேண்டாம் என்று கூறியுள்ளார். தற்போது எப்படி தற்போது தன்னுடைய போதை பழக்கம் குறித்து பேசியுள்ளார். அதில், ஆம் முன்பு நான் போ தை பொ ருளுக்கு அடிமையாகி இருந்தேன்.

ஒரு காலத்தில் நான் வி ஸ்கி அதிகமாக குடிப்பேன். இப்போது அப்படி இல்லை. யாருக்கும் தெரியாது நான் அப்படி இருந்தது யாருக்கும் தெரியாது. இதை எல்லோரிடமும் இருந்து மறைத்துவிட்டேன். தற்போது மொத்தமாக இதை நிறுத்திவிட்டேன்.

என்னுடைய உடல் நிலை இதனால் மோசமாக பாதிக்கப்பட்டது. அதனால் இந்த போ தை அ டிமை தொடர்பாக சிகிச்சை மேற்கொண்டேன். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சிகிச்சை எடுத்து சரியாக முயற்சி செய்து வருகிறேன்., என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏழை குடும்பத்தில் பிறந்து சோதனைகளை சாதனையாக்கிய மாபெரும் கலைஞன் வடிவேலு : சொல்லப்படாத கதை!!

மாபெரும் கலைஞன் வடிவேலு

தமிழ்சினிமா அகராதியில் இருந்து தவிர்க்கவே முடியாத ஒரு மாபெரும் நகைச்சுவை கலைஞன் வடிவேலு.மதுரையை சேர்ந்த வடிவேலு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இன்று அவரின் பிறந்தாள் என சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் தனக்கு செப்டம்பர் 12ஆம் திகதி தான் பிறந்தநாள் என வடிவேலு வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

இவரின் தந்தை பெயர் நடராசன், தாய் பெயர் சரோஜினி அம்மாள்.வடிவேலு தனது சிறுவயதிலிருந்தே பள்ளிக்கூடம் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து சிறு சிறு நாடகங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து அசத்துவாராம்.

இந்த சூழலில் எதிர்பாராதவிதமாக வடிவேலுவின் தந்தை மரணமடைய அவர் குடும்பம் வறுமையான நிலைக்கு தள்ளப்பட்டது.இதன்பின்னர் மதுரையில் புகைப்படங்களுக்கு பிரேம் மாட்டும் கடையில் வடிவேலு வேலைக்கு சேர்ந்தார்.

இந்த சூழலில் வடிவேலு ஊருக்கு பிரபல நடிகரும், இயக்குனரான ராஜ்கிரண் சென்ற போது வடிவேலுக்கு அவர் அறிமுகம் கிடைத்தது.

இதையடுத்து சென்னையில் உள்ள ராஜ்கிரண் வீடு மற்றும் அலுவலகத்தில் வடிவேலு பணிபுரிந்த நிலையில் அவர் நடிப்பு திறமையை பார்த்து தனது என் ராசாவின் மனசிலே படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பளித்தார்.

அதன்பின்னர் கவுண்டமணி, செந்திலுடன் சிறுசிறு நகைச்சுவை வேடங்களில் நடித்த வடிவேலுவுக்கு பின்னர் தனியாக நகைச்சுவை நடிகராக படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.

இதையடுத்து விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை காட்டிய வடிவேலு தமிழ் திரையுலகில் நம்பர் 1 நகைச்சுவை நடிகராக ஆனார்.இவர் எழுதி நடித்த காமெடி காட்சிகளுக்காகவே ஓடிய திரைப்படங்கள் ஏராளம்.

கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டாலும் மீம்ஸ் வாயிலாக சமூக வலைதளங்களிலும் வடிவேலுவின் ராஜ்ஜியம் தான் தொடர்கிறது.

வடிவேலுவுக்கு விசாலாட்சி என்ற மனைவியும், கன்னிகாபரமேஷ்வரி, கார்த்திகா, கலைவாணி என்ற மூன்று மகள்களும், சுப்ரமணியன் என்ற மகனும் உள்ளனர்.

தனது ஆரம்பகால ஏழ்மையை மறக்காத வடிவேலு தனது மகன் சுப்ரமணியனுக்கு கூரை வீட்டில் வசிக்கும் ஏழை பெண்ணை திருமணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா ஸ்டார்களுடன் இணைந்த பிரபல நடிகரின் மகள் :அழகான அந்த பெண் என்ன செய்கிறார் தெரியுமா!!

பிரபல நடிகரின் மகள்

சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் தாங்களும் இத்துடன் இணைய வேண்டும் என களத்தில் குதித்து விடுகிறார்கள். நடிகர்கள், நடிகைகள் தான் ஆக வேண்டும் என்பதில்லை.

சினிமாவை சார்ந்த மற்ற பணிகளிலும் சினிமா வாரிசு இருக்கிறார்கள். தற்போது புதுவரவாக தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா கோனிடெலா ஆடை வடிவமைப்பாளாராக இறங்கியுள்ளார்.

அண்மையில் வெளியான சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் அமிதாப் பச்சன், தமன்னா, நயன்தாரா, சிரஞ்சீவி ஆகியோரின் உடைகளை சுஷ்மிதா தான் வடிவமைத்தாராம்.

1800 களில் நடந்த வரலாறு என்பதால் இப்படம் பற்றிய ஆவணங்கள் எதுவும் சரிவர கிடைக்கவில்லையாம். இதனால் ஆராய்ச்சியாளர்கள் கொடுத்த தகவலை கொண்டு அவர் இந்தியாவின் பல இடங்களிலிருந்து துணிகளை வரவழைத்து ஆடைகளை வடிவமைத்தாராம்.சுஷ்மிதாவுக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகை ரோஜாவுக்கு அடித்த சூப்பரான ஜாக்பாட் : என்ன தெரியுமா?

பிரபல நடிகை ரோஜா

பிரபல நடிகையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவுமான ரோஜாவுக்கு அவர் கட்சி தலைமையால் ஜாக்பாட் அடித்துள்ளது.

90களில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரோஜா. பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு ஆந்திராவில் தீவிர் அரசியலில் ரோஜா குதித்தார்.ஆந்திராவின் நகரி தொகுதியில் 2வது முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் சார்ந்த, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தான் இப்போது ஆந்திராவில் ஆளும் கட்சியாக உள்ளது. இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ரோஜாவுக்கு ஆந்திர மாநில தொழில்துறை உள்கட்டமைப்பு கழக தலைவர் பதவியை வாரி வழங்கியுள்ளார்.

இது ரோஜா ஆதரவாளர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த பதவியானது அமைச்சருக்கு நிகரான பதவியாகும்.அதன்படி ரோஜாவுக்கு, மாத ஊதியமாக, ரூ. 2 லட்சம் கிடைக்கும்.

இதோடு வாகன படி என்பதன் கீழ் ரூ 60,000, தங்குமிடத்திற்கு ரூ 50000, தனிப்பட்ட சலுகையாக ரூ. 70000, மொபைல் கட்டணங்களுக்கு ரூ.2000 ரோஜாவுக்கு வழங்கப்படும்.ஆக மொத்தம் மாதம் 3.82 லட்சம் ரூபாய் ரோஜாவுக்கு கிடைக்க போகிறது.

வெளிநாட்டில் கைதானாரா பிரபல நடிகரின் மகள்?-நடந்தது என்ன?

பிரபல நடிகரின் மகள்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஒய்.ஜி.மகேந்திரன். பல திறமைகளை வெளிக்காட்டியிருக்கும் இவர் நடனத்தில் நிறைய பயிற்சிகள் மற்றவர்களுக்கு கொடுத்து வருகிறார்.

அண்மையில் இவர் ஒரு நிகழ்ச்சிக்காக USA சென்றுள்ளார்.

அங்கு அவரது விசா விவரம் தவறாக இருக்க இந்தியா திரும்ப அந்த நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அவர், நான் கைதாகவில்லை, சரியான விவரத்துடன் வாருங்கள் என்று தன்னை இந்தியா அனுப்பிவிட்டதாக கூறியுள்ளார்.

காதல் பிரிவுக்கு இது தான் காரணம் : முதன் முறையாக போட்டு உடைத்த நடிகை ஸ்ருதிஹாசன்!!

நடிகை ஸ்ருதிஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் கடந்த சில வருடங்களாக மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்து வந்தார். அவர்கள் இருவரும் ஒன்றாக வெளியில் சுற்றும் புகைப்படங்களும் அதிகம் வெளியாகின.

இதனால் கிடைத்த பட வாய்ப்புகளை தவிர்த்து விட்டு காதலனுடன் பொழுதை போக்கி கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து, அவர்களுக்கு திருமணம் நடக்கவுள்ளது என்றும் செய்திகள் பரவிய நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தனர்.

ஆனால் தற்போது தான் தன்னுடைய காதலின் பிரிவு பற்றி ஸ்ருதிஹாசன் பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசியுள்ளார். உண்மையாக, நான் ஒரு எமோஷனலான நபர். அதனால் என்னுடன் இருப்பவர் என் மீது எளிதில் ஆதிக்கம் செலுத்திவிடுகிறார்கள். அதுவும் ஒரு நல்ல அனுபவம் தான்.

“இப்போதும் என்னிடம் எந்த பார்முலா இல்லை. நல்லவர்கள் நன்றாக தான் நடந்துகொள்கின்றனர், சில சமயங்களில் தவறும் செய்கின்றனர். இதற்கு நான் வருத்தப்படவில்லை. ஒரு சிறந்த காதலை தேடிக்கொண்டிருக்கிறேன். அது வரும்போது ‘இதற்காகத்தான் காத்திருந்தேன்’ என உலகத்திற்கு அறிவிக்க காத்திருக்கிறேன் என ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

 

மயக்கமாக கிடந்த பிரபல தொகுப்பாளினி… மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி : வெளிவரும் திடுக்கிடும் தகவல்!!

மயக்கமாக கிடந்த பிரபல தொகுப்பாளினி

பிரபல தொகுப்பாளினி ஒருவர் கடந்த வாரம் மயங்கி கிடந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருடைய உடலை சோதித்து பார்த்த மருத்துவர்கள் காரணத்தை கண்டு அதிர்ந்த நிலையில், அது குறித்து தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல தனியார் தொலைகாட்சி ஒன்றில் முன்னணி தொகுப்பாளினியாக இருக்கும் பெண் கடந்த வாரம் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அதன் பின் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஏனெனில் அவரின் இரத்ததில் செ க்ஸ் உணர்வை அதிகரிக்க செய்யும் போ தைபொருள் கலந்திருப்பதை கண்டனர். அந்த போ தைபொருளின் பெயர் ஹேப்பி பில்ஸ், இதை கல்லூரி பெண்கள், திரையுலகின் முன்னணி நடிகைகள் பலரும் புதிதாக பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

இதை ஒரு நெட்வர்க சத்தமே இல்லாமல் சப்ளை செய்து வரும் நிலையில், அந்த நெட்வர்க்கிடம் தான் இவர்இந்த போ தை பொருளை வாங்கியுள்ளார். இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்த நெட்வர்க்கை பிடிக்க, பொலிஸ் தனிப்படை தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த நெட்வார் யார் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை சப்ளை செய்பவர்கள் பெண்களை தான் அதிகம் டார்கட் செய்கின்றனர். முதலில் அவர்கள் குடிக்கும் பீரிலோ அல்லது ம துபானத்திலோ குறித்த போ  தை பொருளை கலந்து விடுவார்களாம்.

அப்படி முடியவில்லை என்றால், அவர்கள் அதைப் பற்றி கூறி, இதை கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள், அதன் சுகமே தனி என்று ஆசை காட்டுவார்களாம், அதன் பின் பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள் என்று முதலில் இலவசமாக கொடுத்து, அதன் பின் அவர் இது எனக்கு பத்தவில்லை, இன்னும் கொடு என்ற அளவிற்கு ஆக்கிவிடுவார்களாம்.

இந்த ஹேப்பி பில்ஸை திரைத் பிரபலங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர் ஒரு இசையமைப்பாளர் தானாம், இசையமைப்பாளர், பப் நிர்வாகி மற்றும் ஒரு நடிகை இந்த மூவர் கூட்டணி மூலமே சென்னையில் இந்த நெட்வொர்க் கொடிகட்டிப் பறக்கிறது.

இவர்களிடம் சிக்கியவர்கள் தப்பிக்கவும் முடியாமல் விஷயத்தை வெளியே சொல்லவும் முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் இந்த நெட்வர்க் கும்பலை பொலிசார் பிடித்தால், பல தகவல்கள் வெளிவரும்

யாழ்ப்பாணத்தில் பிறந்து தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்த முதல் கவர்ச்சி நடிகை தவமணி தேவியை தெரியுமா?

க வர்ச்சி நடிகை தவமணி தேவி

தமிழ் சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் தவமணி தேவி. இவர் தான் தமிழ்நாட்டின் முதல் க வர்ச்சி நடிகையாவார். இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்த தவமணி தேவி கொழும்பில் வளர்ந்தவர்.

இவரின் தந்தை கார்த்திகேசு, ஒரு பிரபலமான வழக்கறிஞர். பெற்றோரின் விருப்பப்படி இவர் சிறு வயதிலேயே சென்னைக்குக் குடி பெயர்ந்தார். தவமணி தேவியின் திறமையை அவதானித்த பெற்றோர்கள் இவரை பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் படிப்பதற்காக ஊக்குவித்தார்கள்.

இதனால் இவருக்கு தமிழ்த் திரைப்படங்களில் பாடி நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 1937 இல் தனது 15வது வயதில் திரைப்படத்துறையில் நுழைந்தார். அந்தக் கால கட்டத்திலேயே காற் சட்டையுடன் துணிச்சலாக நடிக்க வந்த பெண்மணியாக தவமணி தேவி திகழ்ந்தார்.

இவரது முதல் படமான சதி அகல்யா, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1937 ஆம் ஆண்டில் வெளிவந்தது. முதல் படத்திலேயே அகலிகை வேடத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். படமும் சிறந்த வரவேற்பைப் பெற்றது. இவர் நடித்து 1941 இல் வெளிவந்த வனமோகினியும் பெரும் வெற்றி பெற்றது.

வித்யாபதி, சகுந்தலை, ஆரவல்லி சூரவல்லி, வேதவதி [சீதா ஜனனம்], நாட்டிய ராணி, கிருஷ்ணகுமார், ராஜகுமாரி, பக்த காளத்தி, ஷியாம் சுந்தர் ஆகிய படங்களில் இவரின் நடிப்பு மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.

இவர் 1940 களிலேயே ஒரு படத்திற்கு ரூ.16 ஆயிரம் சம்பளம் வாங்கியவர். இவரது காலத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதற்கே ஒரு படத்திற்கு சம்பளம் ரூ.4000 தான் தரப்பட்டது.

தவமணி தேவி கடந்த 1962ஆம் ஆண்டு ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்த கோடிலிங்க சாஸ்திரி என்பவரைக் காதலித்து மணந்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர்.

திருமணத்தின் பின்னர் திரைப்படத் துறையை விட்டு முற்றாக விலகி ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார் தவமணி தேவி. இந்நிலையில் இராமேசுவரத்தில் தனது இறுதிக் காலத்தைக் கழித்த அவர் 2001ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் திகதி தனது 76வது வயதில் ம ரணமடைந்தார்.

1937இல் தனது 15வது வயதில் திரைப்படத்துறையில் நுழைந்த தவமணி தேவியின் படங்கள் இன்றும் பேசப்படுகின்றதென்றால் அவர் எந்தளவு பதிவுகளை தமிழ்த் திரையுலகில் விட்டுச் சென்றிருக்கின்றார் என்பதை உணர முடிகின்றது.

ஒவ்வொருத்தரா என்னை விட்டு இறந்து போறாங்க.. பிரபல நகைச்சுவை நடிகர் மரணம் குறித்து வடிவேலு கண்ணீர்!!

நடிகர்  வடிவேலு கண்ணீர்..

நடிகர் கிருஷ்ணமூர்த்தி ம ரணமடைந்த நிலையில் அவர் குறித்து பேசியுள்ளார் நடிகர் வடிவேலு.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த கிருஷ்ணமூர்த்தி நேற்று முன் தினம் பேய் மாமா படப்பிடிப்புக்காக குமுளி போயிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு உ யிரிழந்தார்.

மறைந்த நடிகர் கிருஷ்ணமூர்த்தி, சினிமாவில் ச ண்டைப் பயிற்சியாளராக இருந்தவரின் மகள் மகேஸ்வரியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டவர். இவருக்கு பிரஷாந்த், கெளதம் என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.

கிருஷ்ணமூர்த்தி ம ரணம் குறித்து பேய் மாமா படத்தின் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறுகையில், குமுளியில் பேய் மாமா படப்பிடிப்பு நடப்பதால் எங்கள் படக்குழுவினர் ஹொட்டலில் தங்கியிருந்தோம், அங்கு கிருஷ்ணமூர்த்தி தனியறையில் தங்கியிருந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 3 மணிக்கு நெஞ்சு வலிப்பதாக க த்தினார்.

அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே இ றந்துவிட்டார் என கூறினார். நடிகர் வடிவேலுவுடன் கிருஷ்ணமூர்த்தி தவசி, சாணக்கியா, எல்லாம் அவன் செயல், ஐயா போன்ற ஏராளமான திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

அவரின் ம ரணம் வடிவேலுவை அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வடிவேலு கூறுகையில், கிருஷ்ணமூர்த்தி இ றந்த விடயமே எனக்கு தெரியாது, பின்னர் ஊடகம் மூலம் தான் தெரிந்தது.

அவர் நல்ல மனிதர், என் வீட்டுக்கு அவர் குடும்பத்தார் அடிக்கடி வருவார்கள். அந்தளவுக்கு குடும்ப நண்பர் கிருஷ்ணமூர்த்தி. இப்போது அவரோட குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வது என தெரியலியே,

இனிமேல் நான் நடிக்கப் போகும் படத்தில் எல்லாம் அவருக்கும் ஒரு கதாபாத்திரம் உருவாக்கி வைத்திருந்தேன், அது அவருக்கும் நல்லாவே தெரியுமே!

முதலில் ’என்னத்த’ கண்ணையா, அப்புறம் சண்முக சுந்தரத்தாம்மாள், செல்லதுரை, இடையில ‘அல்வா’ வாசு.

இப்போது கிருஷ்ணமூர்த்தி என வரிசையாக என் கூட்டணியில இருந்து ஒவ்வொருவரா இ றந்து போயிட்டே இருக்காங்க என வடிவேலு வேதனையுடன் கூறியுள்ளார்.