முகினை கவிழ்க்க மறைமுகமாக வேலை பார்க்கும் அபிராமி செய்த வேலை!!

முகினை கவிழ்க்க  வேலை பார்க்கும் அபிராமி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பழைய தருணங்கள் குறித்து பேசுதல் தொடங்கியது, ஒவ்வொரு போட்டியாளர்களும் நடந்துமுடிந்த தருணங்களைப் பற்றிப் பேசினர்.

அப்போது பேசிய அபிராமி, “லோஸ்லியா எனக்கு ஃப்ரண்டு கிடையாது. அவளை தங்கையாகவே பார்க்கிறேன். இந்த உறவு வாழ்நாள் முழுதும் தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.

ஜெயிலில் ஒருவர் தூங்குவதே கடினம், ஆனால் தனியாக இருக்கிறேன் என்பதால் எனக்காக ஜெயிலுக்கு வந்தார்” என்று கூறி அழத் துவங்கிவிட்டார். முகினைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை.அபிராமி முகினிடம் பேசினார், முகினுடைய வோட்டு குறையலாம் என்று எண்ணித்தான் அவர் இவ்வாறு செயல்படுவதாக கூறுகின்றனர்.

ஏற்கனவே ஒருமுறை அவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டபோதுகூட, மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக வீ ஆர் த பாய்ஸ் கூட்டணியில் மட்டுமே இருந்துவிட்டு சென்றார்.இந்த முறை வனிதாவுக்கும் ஷெரினுக்கும் சண்டை ஏற்பட்டபோதும்கூட, ஒட்டாமலே விலகி இருந்தார்.

மக்களே நீங்கள் லாஸ்லியாவை ஜெயிக்க வைத்தால்… கவினின் நண்பர் போட்ட அதிரடி ட்விட்!!

கவினின் நண்பர் போட்ட அதிரடி ட்விட்

பிக்பாஸ் சீசன் மூன்று முதல் இரு சீசன்களைவிட மிகவும் விறு,விறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதிலும் இப்போது கிளைமேக்ஸை நெருங்கும் பிக்பாஸ் உச்சகட்ட பரபரப்பை எட்டியிருக்கிறது.

சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்த அனைவரையும் ஒரு பிள்ளையைப் போல் நடத்தினார். ஆனால் அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றிய போதே விமர்சனமாக எழுந்தது. அதேபோல் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தர்ஷனும் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் இன்றோடு 101வது நாளை எட்டி, யார் டைட்டில் வின்னர் என்னும் பரபரப்பில் இருக்கிறது.

இப்போதைய சூழலில் லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகேன் என நான்கு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த சில தினங்களாகவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரபலங்கள் தான் சிறப்பு விருந்தினராக வந்து கொண்டிருக்கின்றனர். அந்தவகையில்  நிகழ்ச்சியில் சாக்சி, கஸ்தூரி, வனிதா, அபிராமி, சேரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகின்றனர்.

இந்த நிலையில் கவினுக்காக குடும்பத்தினர் சந்திப்பில் பிக்பாஸ் வீட்டுக்கு வந்த அவரது நண்பர் பிரதீப் இப்போது ஒரு ட்விட் போட்டுள்ளார். அதில் அவர், லாஸ்லியாவை நீங்கள் வெற்றிபெற செய்தால் நான் அவரிடம் கவினுக்கு பதிலாக அடிவாங்கத் தயார்..”என ட்விட் போட்டுள்ளார்.

 

போயும் போயும் அந்த படத்தில் நடிச்சது தான் நான் செய்த பெரிய தப்பு கண்ணீர் வடிக்கும் யாஷிகா!!

கண்ணீர் வடிக்கும் யாஷிகா

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற கோக்கு மாக்கான படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

அதனை தொடர்ந்து, தமிழில் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்குக்கேற்று வலுவான போட்டியாளராகத் திகழ்ந்து, மக்கள் மனத்தை வென்றார். பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் மகத்துடன் காதல் சர்ச்சையில் சிக்கினாலும், பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பின்னர் இருவரும் நண்பர்களாகப் பழகி வருகின்றனர்.

பிக்பாஸிற்கு பின் தொலைக்காட்சி நிகழ்ச்சி, அடுத்தடுத்து ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் யாஷிகா இன்ஸ்டராகிராமில் பதிவிடும் சில புகைப்படங்களுக்கு பல ரசிகர்கள் அத்துமீறி கருத்து தெரிவிப்பதும், மோசமான வர்ணனைகளை செய்வதும் வாடிக்கையாகி விட்டது.

அந்த அளவுக்கு தான் அம்மணியும் மோசமான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள இவர், “ஒருவர் படத்தில் ஒரு வேடத்தில் நடித்தால் நிஜத்திலும் அப்படியே தான் இருப்பார் என்று நினைக்காதீர்கள். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தது நான் செய்த மிகப்பெரிய தவறு. அதனை ஏன் நான் செய்தேன் என்று மிகவும் வேதனைப்படுகிறேன்.” என்று கூறியுள்ளார்.இதனை கேட்டநெட்டிசன்கள் சகட்டு மேனிக்கு வச்சி செய்து வருகிறார்கள்.

 

அப்படி சேர்ந்து வாழ்வதற்கு பிரிந்தே வாழலாம் : நடிகை சீதாவை விவாகரத்து செய்தது ஏன்? முதல் முறையாக மனம் திறந்த நடிகர் பார்த்திபன்!!

முதல் முறையாக மனம் திறந்த நடிகர் பார்த்திபன்

சினிமாவில் கொடிகட்டி பறந்த போதே வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டவர் நடிகை சீதா.

ஆண்பாவம் படத்தில் அறிமுகமான சீதா, புதிய பாதை என்ற படத்தில் பார்த்திபனுடன் சேர்ந்து நடித்த போது காதல் வயப்பட்டார். இவர்களது காதல் வீட்டுக்கு தெரிந்து எதிர்ப்பு எழ, பெற்றோரை எதிர்த்து ஓடிவந்து பார்த்திபனை கரம்பிடித்தார்.

சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வெடித்தது. இதனால் இருவரும் சமரசமாக விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டனர்.

இதுகுறித்து பார்த்திபன் அளித்துள்ள பேட்டியொன்றில், என்னை பொறுத்த வரையில் பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணத்தை விட காதல் திருமணம் முழுக்க முழுக்க சென்டிமெண்டுகள், எமோஷனல் நிறைந்தது.

வாழ்க்கையில் சின்ன சின்ன மாறுபாடுகள், வேறுபாடுகள் வரத்தான் செய்யும், இந்த சண்டைகள் மணமுறிவு என்ற நிலைக்கு சென்றுவிட்டால் பிரிவது கூட காதலில் இணைந்தது தான்.

அனைத்தையும் சகித்துக் கொண்டு கடைசிவரை வாழ வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை, இந்த வாழ்க்கை எனக்கு ஒருமுறை தான், அந்த பெண்ணுக்கும் அப்படித்தான்.

வருத்தங்களுடன் வாழ்வதற்கு பதிலாக பிரிந்து சந்தோஷமாக வாழலாம், இதுவும் கூட காதல் தான் என தெரிவித்துள்ளார்.மேலும் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் வாழ்க்கைக்கு தங்களால் ஆன பங்களிப்பை இருவரும் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அழகும் நடிப்பும் ஒருங்கே அமைந்த சீதா, ஹோம்லி கேரக்டர்களில் நடித்துப் புகழ்பெற்றவர். நான்கரை ஆண்டுகள் மட்டுமே கதாநாயகியாக நடித்தாலும், மக்களின் அன்பை அதிகம் பெற்றார். வாழ்க்கையில் இவர் பயணித்த தடங்கள் பலவும் திருப்பங்கள் நிறைந்தவை. இன்றும் நடிப்பைத் தொடரும் சீதா, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.

“என் பூர்வீகம், சென்னைதான். எப்போதும் எங்க வீட்டில் உறவினர் கள் உட்பட 25 பேர் இருப்பாங்க. எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுறதே அளவில்லா மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதில் ஒரே பெண் குழந்தை யான என்னை, கஷ்டம் தெரியாம செல்லமா வளர்த்தாங்க. அமைதி மற்றும் வெகுளித்தனம்கொண்ட நான், யாராச்சும் அதட்டினாக்கூட அழுதுடுவேன். அப்பா மோகன் பாபு, தமிழ் சினிமாவில் கேரக்டர் ரோல்களில் நடிச்சிட்டிருந்தார். வீட்டில் சினிமா பத்தி பேச மாட்டோம். சினிமா தியேட்டருக்கும் கூட்டிட்டுப்போக மாட்டாங்க. எனக்குப் பிடிச்ச மசால் தோசை மற்றும் ரோஸ் மில்க் சாப்பிட மட்டும் எப்பவாச்சும் அவுட்டிங் கூட்டிட்டுப்போவாங்க. நல்லா படிப்பேன். டாக்டராகணும்னு ஆசைப்பட்டேன்.

ஒரு கல்யாண நிகழ்ச்சியில் நான் கலந்துகிட்டதை வீடியோ கேசட்டில் பார்த்த இயக்குநர் பாண்டியராஜன் சார், என் அப்பா மூலமா என்னை நடிக்கக் கேட்டார். அப்போ பத்தாவது படிச்சுகிட்டிருந்த எனக்கு நடிக்க விருப்பமில்லை. ‘வர்ற வாய்ப்பை ஏன் வேண்டாம்னு சொல்லணும்? இந்த ஒரு படத்தில் மட்டும் நடி. பிறகு, உன் விருப்பம்’னு அப்பா சொன்னார். ஒருநாள் எங்க வீட்டுக்கு வந்த பாண்டிய ராஜன் சார், ‘நீ பயப்படாம நடிக்கலாம். உன்னை யாரும் தொட்டுப் பேச மாட்டாங்க. உனக்கு எந்தத் தொந்தரவும் இல்லாம நான் பார்த்துக்கிறேன்’னு சொன்னார். வெளிநாட்டில் வேலை செய்துட்டிருந்த எங்கம்மாவும் வலியுறுத்தி னாங்க. பிறகுதான், ‘ஆண் பாவம்’ படத்துல நடிக்க சம்மதிச்சேன்…

…கல்யாணத்துக்குப் பிறகும்கூட, எனக்கு நிறைய நல்ல பட வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா, நான் மேற்கொண்டு நடிப்பதில் அவருக்கு விருப்பமில்லை. அவர் விருப்பப்படி நடந்துக்கிறதுதான் சரின்னு 13 வருஷம் நடிக்காமல் இருந்தேன். நான் முழுமையா நம்பி, பெற்றோரை எதிர்த்துட்டுப் போன இல்லற வாழ்க்கையில் நிறைய மனக்கசப்புகளையும் கஷ்டங்களையும் எதிர்கொண்டேன். கல்யாண விஷயத்தில் நான் எடுத்த முடிவு தவறுன்னு உணர்ந்தேன். திருமணப் பந்தத்திலிருந்து இருவரும் சுமுகமா விலகி, விவாகரத்து பெற்றோம். அதுமாதிரி ஒரு நாளை யாருமே எதிர்கொள்ளக் கூடாது. அவ்வளவு அழுகை, அவ்வளவு தவிப்பு… அதன் பிறகுதான் என் பெற்றோர் வீட்டுக்கே போனேன்.

என் வாழ்க்கையை மீண்டும் பூஜ்யத்துல இருந்து தொடங்கினேன். பொருளாதார ரீதியா சிரமப்பட்டேன். எதிர்கால வாழ்க்கைக்கு சினிமா தவிர எனக்கு வேறு தொழில் எதுவும் தெரியாது. அதனால், மீண்டும் நடிக்க முடிவெடுத்தேன். பெரிய இடைவெளிவிட்டு நடிக்க ஆரம்பிச்சது, சிரமமா இருந்துச்சு. மன ரீதியா கொஞ்சம் ரிலாக்ஸ்டா நடிக்கணும்னு, முதலில் ‘வேலன்’ சீரியல்ல நடிச்சேன். அதேநேரம், சினிமாவிலும் நடிக்க ஆரம்பிச்சு, ‘மாறன்’, ‘மதுர’, ‘வியாபாரி’ உட்பட பல படங்கள்ல குணச்சித்திர ரோல்களில் நடிச்சேன். மலையாளம் உட்பட நாலு தென்னிந்திய மொழிகளிலும் திருப்தியான படங்கள் அமைஞ்சது. மீண்டும் சினிமாதான் என்னை வளர்த்துவிட்டது. இதுவரை 200 படங்களுக்கு மேல் நடிச்சிருப்பேன்.

என் வாழ்க்கையில எப்போதும் யார்கிட்டயும் நான் எந்த உதவியும் கேட்டு நின்னதில்லை. என் குடும்ப வாழ்க்கை பற்றி சில தவறான வதந்திகள் இணையதளத்தில் வெளியாகிட்டே இருக்குது. அது எனக்கு பெரிய வருத்தத்தை உண்டாக்குது. யாரைப் பற்றி இருந்தாலும், உறுதிசெய்யப்படாத தகவல்களை பகிராமல் இருப்பது தான் மனிதநேயம். பிரிந்த திருமணப் பந்தத்தில், இனி இணைந்து வாழும் எண்ணமே எனக்கில்லை. இவ்வளவு நாள் வாழ்ந்ததுபோல, இனியும் தனியாகவே வாழ விரும்புறேன். இரண்டு மகள்களின் கல்யாணத்தையும் நல்லபடியா நடத்தியாச்சு. பையனுக்கு நல்ல வாழ்க்கை அமையணும் என்கிற ஆசை மட்டும்தான் எனக்குப் பாக்கியிருக்கு!”

ஒவ்வொரு அம்மாவும் தெய்வம் தான் : சினேகாவின் பிரசவ வலி பார்த்து மனம் திறந்து நெகிழவைத்த பிரசன்னா!!

மனம் திறந்து நெகிழவைத்த பிரசன்னா

நடிகை ஸ்னேஹாவை பிடிக்காத ஆட்களே இருக்க முடியாது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் பிடித்த நடிகையாக வலம்வந்த நடிகை சினேகா.புன்னகை இளவரசி என அனைவராலும் அழைக்கப்படும் சினேஹா அழகிய தீயே படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2012ல் திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோது நண்பர்களாகி, காதலர்களாகினர். பிறகு திருமணம் செய்துகொண்டனர்.இப்போது சினேகா இரண்டாவது முறையாக கருத்தரித்து இருக்கிறார். இந்நிலையில் தன் காதல் மனைவி குறித்தும், அவரது முதல் பிரசவம் குறித்தும் மனம் திறந்திருக்கிறார் நடிகர் பிரசன்னா.

அதில் அவர், ‘’சினேகாவின் எளிமை, பெரியவர்களை மதிக்கும் பண்பு இரண்டும்தான் என்னை காதல் வயப்படவைத்தது. எங்க பையன் விஹான் வந்த பின்னாடி எங்க லவ் இன்னும் கூடிருச்சு. எங்க ரெண்டு பேரையும் சேர்ந்து உட்காரவிடாம அவன் நடுவுல உட்கார்ந்துடுவான். சினேகாவுக்கு சுகப்பிரசவம் ஆகல. ஆனா அவுங்களுக்கு வலி வர்றதுக்கு ஊசிபோட்டாங்க. அதுவரை சினேகாவுக்கு ஆறுதல் சொன்ன நான், டாக்டர் பெரிய ஊசியை எடுத்ததும் தலைசுத்திட்டேன். ஒரு ஓரமா போய் உட்கார்ந்துட்டேன்.

தலைவலியையே என்னால் தாங்க முடியாத போது, பிரசவ வலி எப்படி இருக்கும்? அந்த வகையில் ஒவ்வொரு அம்மாவும் தெய்வம். அம்மாவை தெய்வத்தோட ஒப்பிடுறதுல தப்பே இல்லை”என உருகியிருக்கிறார் நடிகர் பிரசன்னா.

20 வயதிலேயே திருமணம் செய்து கொண்ட பிரபல சின்னத்திரை நடிகை நீலீமா ராணியின் கணவர் யார் தெரியுமா?

சின்னத்திரை நடிகை நீலீமா ராணியின் கணவர் யார் தெரியுமா

தமிழ் திரையுலகில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை இரண்டிலும் பல முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் தான் நடிகை நீலிமா ராணி . இவர் தமிழ் சினிமாவில் தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். குழந்தைப்பருவத்திலேயே நடிகர் திலகம் சிவாஜி மற்றும் உலக நாயகனுடன் நடிக்கும் பெறும் வாய்ப்பைப் பெற்றவர்.

அதற்கு பிறகு பல திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகையானார். இவர் சுமார் 50 சீரியல்களிலும் 30கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் வாணி ராணி , செல்லமே என என பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.

தற்போது அரண்மனை கிளி சீரியலில் நடிப்பது மட்டும் இல்லாமல் தனியாக ஒரு சீரியலை தயாரிக்கவும் ஆரம்பித்துவிட்டார் நடிகை நீலிமா. இவரது தயாரிப்பில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தற்போது 500 எபிசோடுகளை கடந்து வந்துள்ளது . நீலிமா ஒரு மிடில்கிளாஸ் பெண்ணாகத்தான் வாழ்ந்து வந்தார். தான் வேலைக்கு சென்றால் சாப்பிடுவதற்கு உணவு கிடைக்கும் என்ற ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் தன்னுடைய சொந்த முயற்சியாலும் ஆர்வத்தினாலும் சினிமாத்துறையில் நல்ல நிலைக்கு வந்துள்ளார்.

இவர் திமிரு , நான் மகான் அல்ல, இதயத்திருடன் , பாண்டவர் பூமி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . இவர் நான் மகான் அல்ல திரைப் படத்தில் நடித்ததில் இவருக்கு சிறந்த துணை நடிகை விருது கிடைத்தது. பின்னர் தனக்கு இருபது வயது இருக்கும் போதே இசைவாணன்.

என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு இசை என இரண்டு வயது மதிக்கத்தக்க ஒரு மகள் உள்ளார். இந்த தம்பதியினர் அவரது குழந்தையின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பிக்பாஸ்-3 வெற்றியாளர் இவர் தான், பிரபல சினிமா பிரபலம் அறிவித்துவிட்டார்!!

பிக்பாஸ்-3 வெற்றியாளர் இவர் தான்

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஓவியா தான் என்றால் மிகையல்ல.

இதை தொடர்ந்து இரண்டாவது சீசன் கொஞ்சம் டல் ஆனது, ஆனால், மூன்றாவது சீசன் தற்போது செம்ம ரீச் ஆகிவிட்டது.

இந்நிலையில் நாளை பிக்பாஸ் வின்னர் யார் என்பதன் அறிவிப்பு வரும் என்று மக்கள் அனைவரும் நிகழ்ச்சியை பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர்.

ஆனால், பிரபல தயாரிப்பாளர் மற்றும் சினிமா பிரபலம், ஜே.எஸ்.கே.கோபி தன் டுவிட்டர் பக்கத்தில் முகென் தான் வின்னர் என அறிவித்துவிட்டார்.

இதை ரசிகர்கள் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

பிக்பாஸில் 4வது இடம் பிடித்த போட்டியாளர் இவர் தான், மீதம் மூன்று பேர் தான் பைனல், யார் அவர்கள் தெரியுமா?

பிக்பாஸில் 4வது இடம் பிடித்த போட்டியாளர் இவர் தான்

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை முடியவடைய உள்ளது. இதனால் பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர், பலரும் முகென் தான் வெற்றியாளர் என கூறி வருகின்றனர்.

எது உண்மையோ இன்னும் ஒரு நாளில் ரிசல்ட் தெரிந்துவிடும், இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 4 பேரில் ஒருவர் வெளியேறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.

அவர் வேறு யாருமில்லை, ஷெரின் தான், இதன் மூலம் லொஸ்லியா, முகென், சாண்டி மூவரும் பைனல் செல்லவுள்ளனர்.

 

முதல் காதலில் தோல்வியடைந்த தர்ஷன்.. சனம் செட்டியை காதலிக்கிறாரா? உண்மை இது தான்!!

முதல் காதலில் தோல்வியடைந்த தர்ஷன்

பிக்பாஸ் வீட்டைவிட்டு கடந்த வாரம் தர்ஷன் நாமினேஷன் மூலம் வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேற்றப்பட்டது பிக்பாஸ் ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் தர்ஷனிற்கு சனம் ஷெட்டியுடன் காதல் இருக்கிறதா இல்லையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தர்ஷன் இதுவரை சனம் ஷெட்டியை காதலிக்கிறேன் என்று ஒரு முறைகூட கூறியதில்லை. ஆனால் சனம் ஷெட்டி தர்ஷனை காதலிப்பதாக பல நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் தன் காதல் குறித்து பேசியுள்ளார்.

அதில், அவரிடம் நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா என்ற கேள்விக்கு தர்ஷன் இல்லை நான் சிங்கிள் என்று கூறியுள்ளார். ஆக சனம் ஷெட்டியை தர்ஷன் காதலிக்கவில்லை என்று தெளிவாக தெரிகிறது.

தர்ஷனிடம் நீங்கள் யாரையாவது காதலித்துள்ளீர்களா என்றும் கேள்விக்கு, தர்ஷன் கூறியதாவது ஆம் காதலித்துள்ளேன், ஆனால் அந்த பெண் என்னை வேண்டாம் என்று கூறிவிட்டாள். அதற்கான காரணமும் தெரியவில்லை என்று கூறியுள்ளார். தர்ஷனின் முன்னாள் காதலி பற்றின விவரம் அவர் குறிப்பிடவில்லை.

மீண்டும் ஆடை பிரச்சனையை கையிலெடுத்த பிக்பாஸ் மதுமிதா : என்ன சொல்லியிருக்கார் பாருங்க!!

பிக்பாஸ் மதுமிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மதுமிதா டிவிட்டரில் ஒரு கேள்வி கேட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுமிதா காவிரி விவகாரம் குறித்து பேசியதால் சக ஹவுஸ்மேட்ஸ் அவரிடம் சண்டையிட்டனர். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மதுமிதா கத்தியால் தனது கையை சரமாரியாக கிழித்துக் கொண்டார்.

இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் மதுமிதா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்ட பின்னர், விஜய் டிவி ஏற்பாடு செய்த பிரஸ் மீட்டில் கலந்து கொண்ட மதுமிதா, அபிராமி, சாக்ஷி ஆகியோரின் ஆடை குறித்து விமர்சித்தார்.

பெரும் பரபரப்பு அத்தனை ஆண்கள் இருந்த பிக்பாஸ் வீட்டில் அபிராமியும் சாக்ஷியும் உள்ளாடை அணியாமல், அரைகுறை ஆடையில் சுற்றித்திரிந்ததாக கூறினார் மதுமிதா. மதுமிதாவின் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மீண்டும் ஆடை விவகாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோதே மதுமிதா, அபிராமி, சாக்ஷி ஆகியோரின் ஆடை குறித்து பேசி ஹவுஸ்மேட்ஸ்களின் கோபத்திற்கு ஆளானார்.

இந்நிலையில் மீண்டும் ஆடை விவகாரம் குறித்து பேசியிருக்கிறார் மதுமிதா. ஆடை சுதந்திரம் என்றால் என்ன? இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் சந்தேகத்தை எழுப்பியுள்ள மதுமிதா, அதற்கு மக்கள்தான் பதில் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது, ஆடை விவகாரத்தில் எனக்கு நியாயமான முடிவுகளை எடுக்க இரவுகள் நீள்கிறது. ஆடை சுதந்திரம் என்றால் என்ன? நாம் நினைத்த உடைகளை எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியுமா? நாம் அணியும் உடை மற்றவர்களை பாதிக்குமா? பாதிக்காதா? உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் என தெரிவித்துள்ளார்.

மதுமிதாவுக்கு ஆதரவு மதுமிதாவின் இந்த கேள்விக்கு நெட்டிசன்கள் பலரும் பதிலளித்து வருகின்றனர். பெரும்பாலான பதிவுகள் மதுமிதாவுக்கு ஆதரவாகவே உள்ளது. அவற்றில் சில.. ஆடை சுதந்திரம் நீங்க இருக்குற இடத்தை பொறுத்தது அது, இங்கே தமிழ்நாட்டுல எதுக்கு பேர் போனது? பண்பு, கலாச்சாரம் அதில் உடையும் அடங்கும், ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கட்டுப்பாடுகள் , இதே வெளிநாடு சென்றால் அங்கு கதையே வேறு, அதனால் நீங்கள் இருக்கும் இடத்தை பொறுத்தே இந்த ஆடை சுதந்திரம் நிர்ணயிக்கபடுகிறது என தெரிவித்துள்ளார்.

ஆபாசமாக இருக்கக்கூடாது நாம் அணியும் ஆடையே நமது மரியாதையை தீர்மானிக்கிறது. ஆடை குறைந்தால் நம்முடைய மரியாதையும் குறையும்.நமக்கு பிடித்த ஆடையை அணிய முழு சுதந்திரம் உண்டு ஆனால் அது ஆபாசமாக இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளார் இந்த ரசிகர்.