அனல் பறக்கும் இறுதி நாள் Voting : கவீனால் ஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் : வெளியேற போவது இவரா?

அனல் பறக்கும் இறுதி நாள் voting..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் பணத்துடன் கவின் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இதனால் பெரும் சோகத்தில் ரசிகர்கள் ஆழ்ந்துள்ளார். அது மாத்திரம் இல்லை, லொஸ்லியாவும், யாரிடமும் பேசாமல் என்னையும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுங்கள் என பிக்பாஸிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்.

இறுதி வாரம் என்பதால் இந்த வாரம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த முகெனை தவிர அனைவரும் நாமினேட் ஆகி இருந்தனர்.தற்போது கவின் வெளியேறிய நிலையில் லொஸ்லியாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஷெரீனுக்கு மிகவும் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனால் ஷெரீன் இந்த வாரம் வெளியேற்றப்படலாம் என்பது பார்வையாளர்களின் கருத்து கணிப்பாக உள்ளது. மேலும், ஷெரீன் வெளியேற்றப்பட்டால் லொஸ்லியா மட்டுமே இறுதி பெண் போட்டியாளராக இருப்பார்.

இதனால், பெண்களின் ஆதரவு இவருக்கு அதிகம் இலங்கை பெண்ணுக்கு கிடைக்கும். இந்நிலையில், இறுதி வெற்றியாளர் யாராக இருக்கும் என்ற குழப்பத்தில் பார்வையாளர்கள் உள்ளனர்.

மேலும், இந்த தகவல் எந்த அளவு உறுதியானது என்பது தெரிய வில்லை. பொருத்திருந்து பார்ப்போம். இன்னும் இரண்டு நாட்களில் முடிவு தெரிந்து விடும்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்ற சேரனுக்கு அடித்த பேரதிர்ஷ்டம்!

சேரனுக்கு அடித்த பேரதிர்ஷ்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சேரன்  எவிக்ஷன் முறையில் வெளியேற்றப்பட்டார்.

மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தவர்கள் எல்லாம் பிக்பாஸ் வீட்டில் இருக்க, மனிதத் தன்மையுடன் இருந்து மக்களின் மதிப்பை பெற்ற சேரன் வெளியேற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் அவர் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நன்றியை தெரிவிக்கும் வகையில் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இயக்குனர் தனஞ்ஜெயன் ‘வெல்கம் பேக்’ சேரன் சார், நீங்கள் உங்களுடைய முழு முயற்சியை கொடுத்தீங்க என்னுடைய வாழ்த்துக்கள் சார். மேலும் உங்களுக்கான அடுத்த பணி காத்துக் கொண்டிருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

இதற்காக சேரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

நான் சொன்ன மாதிரி பிக்பாஸ் வீட்டில் இருந்தனா , இல்லையான்னு எனக்குத் தெரியல. என்ன பொறுத்தவரை வெற்றி, தோல்வி எல்லாத்தையும் தாண்டி இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்தது எனக்கு ஒரு புது விதமான அனுபவமாக இருந்தது.

இந்த உலகத்தில் நாம் அனுபவமாக இருப்பது ரொம்ப கஷ்டமான விஷயம். அந்த விஷயத்தை தந்தது பிக்பாஸ்.

இந்த தருணத்தில் பிக் பாஸ் வீட்டிற்கு நன்றி தெரிவிக்கிறேன்.நாம் என்ன தான் நாமாக இருந்தாலும் நம்மை சுற்றியுள்ள சூழல் நம்மை அந்த மாதிரி வாழ விடாது.

அதையும் தாண்டி வாழ்ந்தால் நம்முடைய அதிர்ஷ்டம் என்றும் கூறினார். இந்த வகையில் நான் பிக் பாஸ் வீட்டில் இருந்த இந்த 90 நாட்கள் ரொம்ப பாக்கியம் செய்தவன் என்று பெருமையுடன் கூறியுள்ளார்.

மேலும், சேரன் அவர்கள் டைரக்டர் தனஞ்ஜெயன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அடுத்தகட்ட பணிக்கு நான் தயாராக உள்ளேன் என்றும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

மலேசிய மக்கள் ஏன் இப்படி கேவலமான ஒருத்தனை.. அங்க வச்சிருக்கீங்க : லைவ் வீடியோவில் அபிராமி கூறியது யாரை?

அபிராமி கூறியது யாரை?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் கடந்த இரண்டு சீசனைவிட பல விமர்சனங்களையும், ச ர்ச்சைகளையும் பெற்றது.

இந்த பிக்பாஸ் சீசனில், பல காதல் கதைகள் ஓடிக்கொண்டிருந்தன. அந்த வகையில் நடிகையும், மொடல் அழகியுமான அபிராமி மலேசிய நபரான முகேன் ராவை காதலித்து வந்தார்.

அதாவது, ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்த அபிராமி அதன் பின்னர், முகெனை காதலித்து வந்தார். இதனால், பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சனைகள் எழுந்தது.

இதைத்தொடர்ந்து, அவரிடமும் ச ண்டைபோட்டுக் கொண்டு பிரிந்துவிட்டார். அபிராமி இருந்த வரை முகென் அவரை காதலிக்கவில்லை என்று ஆணித்தனமாக கூறியிருந்தார். ஆனால், அபிராமி வெளியே சென்றதும் அவர் உடைத்து சென்ற மெடலை ஓட்ட வைத்துக்கொண்டு இருந்தார் முகேன். இதனால், முகேன் அபிராமியை காதலிக்கிறாரோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது.

இது ஒருபுறமிருக்க, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அபிராமி அடிக்கடி பல்வேறு போட்டியாளர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து புகைப்படங்களை வெளியீட்டு வந்தார்.

இதனால் கடுப்பான சாக்க்ஷி, அபிராமியை மறைமுகமாக தா க்கி பேசி இருந்தார். அதே போல அபிராமி விளம்பரத்திற்காக தான் பல்வேறு பதிவுகளை போட்டு வருகிறார் என்று பலரும் குறை கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அபிராமி, லைவ் வீடியோ செய்துகொண்டிருந்த போது மலேசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், நீ மலேசியா வந்தால் கல்லால் அடிப்பேன் என்று கூற, உடனே கோபமான அபிராமி இதுபோன்ற கேவலமான ஆட்களை மலேசியாவில் ஏன் வைத்துள்ளீர்கள் என்று மிகவும் ஆ த்திரமாக பேசியுள்ளார்.குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பரவி வருகிறது.

கவின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா? பிக்பாஸ் வரும் முன்பு நடந்த சம்பவங்கள்!!

கவின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?

நடிகர் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் முன்பு டிவி சீரியல் மற்றும் ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதற்காகத்தான் கவின் சரவணன் மீனாட்சி சீரியலில் இருந்து விலகினார். ஆனால் படம் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் ஆகாமல் வருடக்கணக்கில் தள்ளிப்போனது. ஆரம்பத்தில் அவரை பல தயாரிப்பாளர்கள் தேடி வந்தாலும், முதல் படம் ரிலீஸ் தள்ளிப்போனதால் புதிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

அதனால் அவர் ஒரு பிரபல இயக்குனரிடம் அசிஸ்டன்டாக சேர்ந்துவிட்டாராம் கவின். உதவி இயக்குனர் வேலையில் சரியாக உணவு, தூக்கம் இல்லாமல் கவின் உடல்நலம் பாதிக்கப்பட்டு அதிகம் ஒல்லியாகியுள்ளார்.

மேலும் சமீபத்தில் நட்புன்னா என்னனு தெரியுமா படம் ரிலீஸ் ஆனாலும் பெரிய படத்துடன் மோதியதால் வசூல் அதிகம் பெறவில்லை. அதன் பிறகு பிக்பாஸ் சென்ற அவர் ரசிகர்கள் பெரிய அளவில் கவர்ந்தாலும், தற்போது இறுதி கட்டத்தில் தானாக வெளியேறியுள்ளார்.

டிவி நடன நிகழ்ச்சியில் நடந்த அதிர்ச்சி : இரண்டு கைகளும் செயலிழந்து பரிதாபமான நிலையில் பிரபல நடிகை!!

பரிதாபமான நிலையில் பிரபல நடிகை!!

தற்போதெல்லாம் டிவியில் ஒளிபரப்பாகும் டிவி நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளர்கள் மிக அதிக ரிஸ்க் கொண்ட பல விஷயங்களை செய்கிறார்கள்.

அப்படி Nach Baliye என்ற ஹிந்தி ஷோவின் 9வது சீசனில் பிரபல நடிகை பூஜா பேனர்ஜி ஆடிய நடனத்தின் போது அவர் தவறி கீழே விழுந்துள்ளார்.

வலியால் துடித்து மயங்கிய அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரது இரண்டு கைகளும் தற்போது செயல்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் பூஜா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இதை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.

திருமணத்திற்கு பின்பு தான் இது நடந்தது…என் வாழ்க்கையின் மிகப் பெரிய கஷ்டம் : பிரபல தமிழ் நடிகை வேதனை!

தமிழ் நடிகை வேதனை!

பிரபல நடிகையான சுலக்‌ஷனா தன் வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களையும், தனி ஒருத்தியாக குடும்பத்தை எப்படி நடத்தி வருகிறேன் என்பதை பற்றியும் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு உச்சத்தை தொட்டவர் நடிகை சுலக்‌ஷனா, தற்போது இவர் வெள்ளித்திரை மற்றும் நாடகங்களிலும் கலக்கி வரும் நிலையில், பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு தன் வாழ்க்கையை பற்றி பகிர்ந்துள்ளார்.

ஆந்திராவிலுள்ள ராஜமுந்திரி தான் என்னுடைய சொந்த ஊர். எனக்கு நினைவு தெரிவதற்குள்ளையே சென்னைக்குக் குடும்பத்தோடு வந்துவிட்டோம்.

என் தாத்தா பத்திரிகையாளரா இருந்ததால், அவர் சினிமா பிரபலங்களைப் பேட்டி எடுப்பார். அப்போது என்னையும் அழைத்து செல்வார்.

அது போன்ற சமயத்தில், காவியத் தலைவி என்கிற படத்தில், ஒரு சின்னப்பொண்ணு சரியா நடிக்காததால், அங்க ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த என்னை இயக்குனர் பாலசந்தர் நடிக்கக் கேட்டார், இதன் மூலம் தான் நான் வெள்ளித்திரையில் கால்பதித்தேன்.

குறிப்பாக அந்தப் படத்தில், ஜெமினி கணேசன் – செளகார் ஜானகிக்கு மகளாக நடித்தேன். மூன்று வயதில் துவங்கி, தொடர்ந்து குழந்தை நட்சத்திரமா பல மொழிகளிலும் 100 படங்களுக்கு மேல் நடிச்சேன், தெலுங்கிலும் அதிகம் நடித்தேன்.

ஸ்ரீதேவி என்கிற நிஜப் பெயர்ல புகழ்பெற்ற நடிகை இருந்ததால, இயக்குநர் கே.விஸ்வநாத் தான் என் பெயரை சுலக்‌ஷனா என்று மாற்றினார்.அதன் பின் தொடர்ந்து சில படங்களில் நடித்தேன். நடிகை என்ற புகழுடன் இருந்த போது அதாவது என்னுடைய 18 வயதிலே எனக்கு திருமணம் ஆகிவிட்டது.

மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஐயாவின் மகன் கோபி கிருஷ்ணன் என் முன்னாள் கணவர். திடீர் திருமணம். திருமணத்துக்கு பிறகுதான் எனக்கு சினிமா வாய்ப்புகள் அதிகமாக வந்தது. இதனால் அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்தேன்.

கே.பாலசந்தர் சாரின் சிந்து பைரவி படத்துக்குப் பிறகுதான் நல்ல நடிகை என்ற பெயர் கிடைத்தது.

கருத்து வேறுபாடு காரணமா, என் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. எதிர்பார்ப்பு பொய்த்துப் போய் வாழ்க்கை கஷ்டமானது. அதுக்காக வருத்தப்பட்டாலும், அத்துடன் வாழ்க்கை முடிந்து போனதா? என்ன என்று சவாலா இருந்தாலும், தனி ஒருத்தியாக வாழ்க்கையைத் தைரியமா எதிர்கொண்டு வாழ்ந்தேன்.

குழந்தைப் பருவத்தில், இருந்து நடிச்சிட்டு வந்த நான், என் தனிப்பட்ட அமைதி மற்றும் என் குழந்தைகளுக்கு முழுமையா நேரம் ஒதுக்க, சினிமா துறையிலிருந்து ஒன்பது ஆண்டுகள் விலகியிருந்தேன். வருத்தமும் விரோதமும் இல்லாம பிரிந்ததால் இப்போவரை நானும் என் முன்னாள் கணவரும் நண்பர்களாதான் இருக்கிறோம்.

சினிமா, சின்னத்திரையில நடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. என் இரண்டு பசங்களையும் நன்றாக படிக்க வைத்து, நல்ல நிலைக்கு ஆளாக்கினேன்.

காலம் உங்க குணத்தை மட்டும் மாத்தவேயில்லை என்று பலரும் சொல்வார்கள், வெகுளித்தனமான குணம் கொண்ட நான், எந்த விஷயத்தையும் ரொம்ப யோசிக்க மாட்டேன். அதனால எனக்கான வளர்ச்சியும் புகழும் குறைவாக இருக்கலாம். ஆனா, இப்படி இருக்கவே விரும்புறேன்.இது எனக்கு மன நிம்மதி கிடைக்கிறது என்று கூறியுள்ளார்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் கல்யாணம் : மாஸான பிளான் இதோ!!

நயன்தாரா விக்னேஷ் சிவன் கல்யாணம்..

தமிழ் சினிமாவில் ஹீரோயின்களில் தனியான இடம் பிடித்தவர் நடிகை நயன்தாரா. மலையாள சினிமாவில் இருந்து இங்கு வந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் ரசிகர்களிடம் பெற்றுவிட்டார்.

தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் அவர் தான் இங்கு அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின். அவரின் ரசிகர்கள் தற்போது அவரிடம் எதிர்பார்ப்பது அவரின் திருமணத்தை தான்.

நீண்ட நாட்களாக அவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் இருக்கிறார். இந்நிலையில் இவர்களின் திருமணம் வரும் டிசம்பரில் நடைபெறுவதாக தகவல் வெளியானது.

தற்போது அவர்களின் திருமணம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி நடைபெறுவதாகவும், 5 நாட்கள் இந்த நிகழ்வை நடத்தவுள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. வட இந்தியாவில் அல்லது வெளிநாட்டில் நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

பிரபல காமெடியனின் மரணம் : சினிமாவுக்கு முன் என்ன வேலை செய்தார் தெரியுமா?

பிரபல காமெடியனின் மரணம்!

தற்போது தெலுங்கு சினிமாவை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம் நகைச்சுவை நடிகர் வேணு மாதவின் மரணம். இதனால் குடும்பத்தினர் மிகவும் கவலையில் இருக்கிறார்கள்.

சிறுநீரக பாதிப்பால் இறந்து போன அவர் 600 படங்களுக்கும் அதிகமாக நடித்துள்ளாராம். பல குரல் பேசுவது, டப்பிங் செய்வது, நடிகர், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் என கலக்கிவந்தார்.

சினிமாவுக்கு வருமுன் அவர் தெலுங்கு தேசம் கட்சியில் தொலைபேசி ஆப்ரேட்டராக இருந்தாராம். அவருக்கு ஸ்ரீவானி என்ற மனைவியில் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.

சமூகவலைதளங்களில் அடித்துக்கொள்ளும் அபிராமி, சாக்ஷி… தாறுமாறாக பதில் வெளியிட்ட சண்டை!!

அ டித்துக்கொள்ளும் அபிராமி, சாக்ஷி..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனது காதலரை தெரிவு செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பத்திலிருந்தே வந்தவர் அபிராமி.

பாத்திமா பாபு வெளியேறியவுடன் பிக்பாஸ் குறித்து பேட்டி கொடுக்கையில், இங்காவது யரையாவது பிடித்துவிட வேண்டும் என்று அபிராமி குறித்து கூறியிருந்தார்.

அதே போன்று அபிராமி வந்ததும் கவினைக் காதலிப்பதாக கூறினார். ஆனால் கவின் மறுத்தநிலையில் முகேனை நண்பராக நினைத்து பழகி வந்து பின்பு காதலிக்கவும் ஆரம்பித்தார்.

பின்பு வனிதா ரீ எண்ட்ரி கொடுத்த பின்பு இருவருக்குள்ளும் பிரிவு ஏற்பட்டது. அபிராமி உள்ளே இருந்த வரை முகேன் அபியை காதலிக்கவில்லை என்றே கூறினார். பின்பு அபிராமி வெளியேறிய பின்பு அவரது உடைந்த மெடலை ஒட்ட வைத்துக்கொண்டிருந்தார்.

அதேப் போல பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பின்னர் அபிராமி பல்வேறு போட்டியாளர்களின் குடும்பத்தினரை சந்தித்து வருகின்றார்.

இந்நிலையில் அபிராமியின் நடவடிக்கையினால் கடுப்பான சாக்க்ஷி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிக்பாஸில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை சந்தித்து அவர்களிடம் தவறான கருத்தினை பரப்புவதை முதலில் நிறுத்துங்கள். அப்படியே பேசும் போது தவறாக எதையும் கூறாமல் நல்ல விடயங்களை மட்டும் கூறுங்கள் என்று கூறியிருந்தார்.

இதனால் கடுப்பான அபிராமி, பிக்பாஸ் குறித்து கேள்வி கேட்பதை நிறுத்துங்கள் என்றும் அதை விட்டு நான் வெளியே வந்துவிட்டேன். தற்போது படப்பிடிப்பிலும் எனது வேலையிலும் கவனம் செலுத்தி சந்தோஷமாக இருக்கிறேன். எனவே, பிக்பாஸ் பற்றி எதுவும் எனக்குத் தேவையில்லை என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் அபிராமியினை சாக்ஷி மறைமுகமாக பேசி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய ரசிகர்களை திட்டினாள் நாள் எ ரித்துவிடுவேன் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பொறாமை பிடித்த நபர்களை எப்படி கையாள வேண்டும் என்று எனக்கு டிப்ஸ் கொடுங்கள்.

நீங்கள் தான் என்னை வெறுக்கும் வகையில் மெசேஜ் செய்திருந்தீர்கள். ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டே இருக்கும் நீங்களா நேர்மையை பற்றி பேசுகிறீர்கள் என்று சாக்க்ஷி பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருப்பது போன்றே தற்போது இருவர்கள் போட்டி போட்டுக்கொண்டு வா க்குவாதம் செய்து வருகின்றனர்.

அந்த பழக்கத்திற்கு நான் அடிமையாகிவிட்டேன் : அதனால் தான் படங்களில் நடிக்கவில்லை : ஆண்ட்ரியா அதிரடி!!

ஆண்ட்ரியா..

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக்கூடியவர்.

அதில் ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.

அவருக்கு முறிந்த சிறகுகள் என்ற பெயரில் கவிதை தொகுப்பை எழுதியுள்ளார். தன் சமூகம் பற்றி வரலாறையும் அவர் புத்தகமாக எழுதப்போகிறாராம்.

பெங்களூரில் நடந்த கவிதை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் சில கவிதைகளை வாசித்திருக்கிறார். அதில் சோகம் அதிகமாக இருக்க ஏன் என அவரை கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு அவர் திருமணமான ஒரு நபருடன் நான் தொடர்பு வைத்திருந்த இருண்ட காலத்தை துயரத்தை அடக்க முடியாமல் எழுதியவை என கூறினார்.

சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என கூறியுள்ளார்.