இளைய தளபதி விஜயை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த பிக்பாஸ் கவின் : அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்!!

பிக்பாஸ் கவின்

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தினை எட்டியுள்ள நிலையில், ஏழு போட்டியாளர்களில் முகேன் நேரடியாக இறுதிப் போட்டிக்கு கோல்டன் டிக்கெட்டினைப் பெற்று சென்றுள்ளார்.ஷெரின், கவின் காப்பாற்றப்பட்ட நிலையில் லொஸ்லியா, சேரன் இருவரையும் கமல் பிரியாவிடை கொடுத்துவிட்டு வெளியே வரும்படி கூறியுள்ளார்.

இதனால் இன்று இரண்டு எலிமினேஷனா என்ற கேள்வியில் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பாரத்துக்கொண்டிருக்கின்றனர்.பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதலே போட்டியாளர்களின் ஆர்மி கலக்கு கலக்கி வருகின்றனர்.நேற்றைய நாளின் இறுதியில் சேரன் மட்டும் வெளியற்றப்பட்டு லாஸ்லியா வீட்டிற்குள் அனுப்பப்பட்டார்.

அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள போட்டியாளர்களில் அதிக ரசிகர்களை கொண்டவர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் கவின். இதற்கு முக்கிய காரணமே சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த வேட்டையன் கதாபாத்திரமே.

பிக்பாஸ் ஆரம்பித்த நாள் முதல் தற்போது வரை எலிமினேஷன் லிஸ்டில் இருந்து வரும் கவினை ரசிகர்கள் காப்பாற்றியது மட்டுமின்றி கொண்டாடியும் வந்தனர். அடிக்கடி கவின் பெயரை பயன்படுத்தி பல்வேறு ஹேஷ்டெக்கள் ட்ரெண்டிங்கில் இடம்பெற்று வந்தார். இந்த நிலையில் #Weadmirekavin என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளத்தில் முதல் இடத்தில் வந்துள்ளது.

இன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிகில் படத்தின் இசை வெளியிட்டு நிகழ்ச்சியை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் #BigilAudioLaunchOn SunTv-என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கினர். SunTv ஹேஷ் டேக்கை #Weadmirekavin டேக் முந்தி முதல் இடத்தில் வந்தது மட்டுமின்றி, சிறிது நேரத்தில் இந்திய அளவில் 4-வது இடத்தினையும் பிடித்துள்ளது.

 

மருத்துவமனையில் அனாதையாக வைக்கப்பட்ட சில்க் ஸ்மிதாவின் உடல் : இறுதிவரை நிறைவேறாத ஆசை இந்த கண்ணீர் கதை தெரியுமா?

சில்க் ஸ்மிதாவின்

சில்க் ஸ்மிதாவை யாராலும் மறந்துவிட முடியாது. அந்த அளவிற்கு ரசிகர்களை தன் நடிப்பாலும் கவர்ச்சியாலும் கவர்ந்தவர் அவர்.தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய பல மொழிப் படங்களில் 450 திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிய சில்க் ஸ்மிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை பல்வேறு சோகங்கள் நிறைந்ததாகவே இருந்தது.

விஜயலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட சில்க் ஸ்மிதா 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் திகதி இந்தியாவின் ஆந்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஏலூரு என்ற இடத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார்.

இளமையில் இவருடைய வசீகரத் தோற்றத்தினால் பலருடைய தொல்லைக்கு ஆளானார். இதனால், இவருடைய பெற்றோர்கள் இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் முடித்துவைத்தனர். பிறகு குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக சென்னைக்கு வந்து சேர்ந்த அவர், அங்கு உறவினர் வீட்டில் தங்கி வேலைத் தேடினார்.

அவரின் சொந்த வாழ்க்கை இருள் சூழ்ந்தபடியே இருந்தது, குடும்ப வாழ்க்கை மீது அதிக ஆசை கொண்ட சில்க் ஸ்மிதாவுக்கு அது கடைசி வரை கனவாகவே இருந்தது.அவர் வாழ்க்கையில் பல ஆண்கள் வந்தனர், ஆனால் அவர் எதிர்பார்த்த அன்பு கடைசி வரை கிடைக்கவில்லை.

இது வரை ஒரு நல்லவனை கூட நான் பார்க்கவில்லை என ஒருமுறை சில்க் கூறிய வார்த்தையில் உள்ள அர்த்தங்கள் ஏராளம்!ஒருமுறை பத்திரிக்கையாளர் ஒருவர் உங்களுக்கு நிறைவேறாத ஆசை உள்ளதா என சில்க்கிடம் கேட்க, நான் ந க்சலைட் ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன், ஆனால் என் வாழ்க்கை திசைமாறியது, இருந்தாலும் அந்த நெருப்பு என் நெஞ்சில் எரிந்து கொண்டிருக்கிறது என்றார் அவர்.இதோடு காதல் தோல்வியாலும் அவர் துவண்டதாக கூறப்பட்டது.

இந்த சூழலில் தான் கடந்த 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி சில்க் ஸ்மிதா வீட்டில் தூ க் கிட்டு த ற்கொ லை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இறந்த அவரின் உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனாதையாக வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் அவரின் தாயும், சகோதரரும் ஆந்திராவில் இருந்து சென்னை வந்து சில்க் உடலை பார்த்து கதறினார்கள். அவரை சொத்துக்காக கொ ன்றுவிட்டார்கள் என கூறினார்கள, இதே குற்றச்சாட்டை பலரும் முன் வைத்தனர். ஆனால் அவர்களின் குரல் அப்போது எடுபடவில்லை. ஏன், இன்று வரை சில்க் ம ரணம் கொ லையா அல்லது த ற்கொ லையா என்ற மர்மம் நீடித்து தான் வருகிறது.

நாக்கு வறண்டு என் புருஷன் இறந்தார் ஆதாரம் இருக்கு : கண்ணீருடன் கூறிய நடிகர் ராஜசேகர் மனைவி!!

ராஜசேகர்

பிரபல திரைப்பட நடிகரான ராஜசேகர் உடல்நிலை சரியில்லாமல் இறந்த நிலையில், அவர் தற்போது எப்படி இ றந்தார் என்பதை கண்ணீருடன் கூறியுள்ளார்.

பாலைவன சோலை, மனசுக்குள் மத்தாப்பு, சின்னப்பூவே மெல்ல பேசு போன்ற பல திரைப்படங்களை ராபர்ட்டுடன் சேர்ந்து இயக்கிய ராஜசேகர் இன்று மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் உ யிரிழந்தார்.

இவர் ஏராளமான திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ராஜசேகர் மனசுக்குள் மத்தாப்பு படத்தை இயக்கிய போது நடிகை சரண்யாவை மணந்தார்.பின்னர் இருவரும் பிரிந்த நிலையில் இரண்டாவதாக தாரா என்பவரை திருமணம் செய்தார்.

கணவர் குறித்து தாரா கூறுகையில், முதலில் அவர் எனக்கு நெஞ்சில் எரிச்சல் இருக்கிறது என்று கூறினார். இதனால் அவரை நான் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன்.

அப்போது மருத்துவமனையில் உடலை எல்லாம் பரிசோதித்து விட்டு சிறிய அளவில் சிகிச்சை செய்து, நன்றாக இருக்கிறார், கொஞ்சம் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடுவார் என்று மருத்துவமனை அறையில் தங்க வைத்தனர்.

அதன் பின் நான் அவர் குடிப்பதற்கு சுடு தண்ணீர் கேட்டார், அதை எடுப்பதற்காக வெளியில் சென்றிருந்தேன். அந்த நேரத்தில் திடீரென்று பார்த்தால் அவரை அவசர சிகிச்சை பிரிவில் வைத்திருந்தனர். என்ன திடீரென்று இவரை இங்கு வைத்திருக்கிறீர்கள் என்று கேட்ட போது, அவர் கீழே விழுந்துவிட்டார் என்று கூறினர்.

நானும் அவரிடம் கேட்டன், விழுந்துவிட்டேன் என்று கூறினார், அதன் பின் அறுவை சிகிச்சை எல்லாம் நடந்தது நல்ல படியாக அவர் வெளியே வந்தார். இரண்டு தினங்களில் மீண்டும் ஏதோ மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதனால் மீண்டும் அவரை அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்துச் சென்று, முகத்தில் ஏதே, எதோ மாட்டியிருந்தனர். என்னையும் பார்க்கவிடவில்லை. அதன் பின் இதயத்தில் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று கூறினர்.

அதற்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினர். நான் நம் கணவர் பிழைத்தால் போது என்று கூறினேன், அதன் பின் மீண்டும் நுரைடப்பாவில் தண்ணீர் இருக்கிறது, அது தான் பிரச்சனைக்கு காரணம் என்று கூறினார்கள்.

நானும் சரி என்று கூறினேன், அப்போது நான் நீங்கள் சிகிச்சை பாருங்கள், மருந்து மாத்திரை எல்லாம் தனியாக வாங்கி கொடுக்கிறேன் என்று கூறினேன், அதற்கு முன்பு ஒரு மூன்று லட்சம் ரூபாய் வரும் என்று கூறினர்.

ஆனால் அதன் பின் ஒரு எட்டு லட்சம் ரூபாய் வரைக்கும் கொண்டு வந்துவிட்டனர். நான் அவ்வளவு பணம் எல்லாம் இல்லை என்றேன், சரி நீங்கள் மீதி பணத்தை கொடுத்துவிட்டு, அழைத்து செல்லுங்கள் என்று கூறினர்.

அதற்கு கூட என்னிடம் காசு இல்லை, அப்போது கடவுள் போன்று சீரியல் இயக்குநர் விக்ரமாதித்யன் வந்து ஒரு லட்சத்திற்கு மேல் கட்டினார். நுரைடப்பாவில் தண்ணீர் இருக்கிறது என்று கூறியதால், அவருக்கு இரண்டு நாட்களாக தண்ணீரே கொடுக்கவில்லை.

என் கணவர் இவ்வளவு பெரிய உலகில், ஒரு கிளாஸ் தண்ணீர் கூட எனக்கு கிடையாதா? என்று கேட்டார், நான் உடனே செவிலியர்களிடம் கேட்ட போது, அதெல்லாம் கொடுக்க கூடாது என்று கூறிவிட்டனர்.

கடைசியில் என் கணவர் நாக்கு வறண்டு தான் இறந்தார். மருத்துவமனைகளை பொறுத்தவரை பணம் தான் முக்கியம், உயிர் முக்கியமில்லை, நான் என் கணவருக்கு மருத்துவமனையில் என்ன எல்லாம் நடந்தது என்பது தொடர்பான வீடியோ, புகைப்படம் இருக்கிறது.

எங்களுக்கு குழந்தை இல்லை, நான் ஒருத்தி என்ன செய்ய போகிறேன், உறவினர்கள் கூட கடைசி நேரத்தில் அவருக்கு உதவ வரவில்லை, என்று வேதனையுடன் கூறி முடித்தார்.

கணவரைப் பற்றி நடிகை குஷ்பூ வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு!!

நடிகை குஷ்பூ வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு..

1980 முதல் இன்று வரை தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக வளம் வருபவர் நடிகை குஷ்பூ. அவருக்காக கோவில் கட்டும் அளவிற்கு சென்றவர்தாம் நம் தமிழ் ரசிகர்கள்! அந்த அளவிற்கு ரசிகர்கள் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர்.

பிறந்தது வட மாநிலமாக இருந்தாலும் தமிழில் சரளமாக பேச மற்றும் எழுதும் திறமை உள்ளவர். தமிழக அரசியலில் நுழைந்த அவர், முதலில் திமுக வில் சேர்ந்து பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்திதொடர்பாளராக இருக்கிறார்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான “சுந்தர்.சி” குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் “சுந்தர்.சி” என்ற பெயரில் நிறைய போலி அக்கவுண்ட்கள் இருக்கின்றனவாம்.

அவற்றுள் ஒன்றைக் குறிப்பிட்டு “இந்த பக்கம் ஒரு போலியான பக்கமாகும். யாரும் இதை பின்தொடராதீர்கள். நான் மறுபடியும் கூறுகிறேன். என் கணவருக்கு எந்த ஒரு சமூகவலைதள பக்கங்களும் கிடையாது. எனவே இது போன்ற போலி அசிக்கவுண்ட்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள்” என்று அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை ராய் லக்ஷ்மியின் காதலன் யார் தெரியுமா : பலரும் அறியாத உண்மை தகவல்!!

நடிகை ராய் லக்ஷ்மியின் காதலன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை ராய் லட்சுமி. இவர் பல படங்களிலும் நடித்திருந்தாலும் இன்னும் முன்னணி நடிகையாக வர முடியவில்லை.இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மறறும் இந்தியிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் தமிழில் ‘நீயா 2’ படத்தில் ஜெய் உடன் இணைந்து நடித்தார்.

தொடர்ந்து, தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பட வாய்ப்புகளுக்கான வேட்டையில் தீவிரமாக உள்ள இவர் சமூக வலைதளங்களில் பயங்கர ஆக்டிவாக இருப்பவர்.

அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இன்று, தனது நண்பர் வீர் ஆர்யன் என்பவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறியுள்ளார்.

அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது, உன்னுடன் பல ஆண்டுகளாக நான் பயணித்து வருகிறேன். இனிவரும் உன்னுடைய பிறந்தநாட்களையும் நான் உன்னுடன் கொண்டாட வேண்டும். உணர்வுப்பூர்வாமாகவும், அக்கறையுடனும், புத்திசாலித்தனத்துடனும், காதலுடனும், நட்புடனும் ( ஓ.. அதை நான் கூறிவிட்டேன் என்று நினைக்கிறேன்.) என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் தனது காதலன் இவர் தான் என லக்ஷ்மி ராய் கூறியுள்ளார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்

என் மனைவி அழகாய் இருப்பது பலரால் பொறுத்து கொள்ள முடியவில்லை : ஷாக் கொடுத்த பிகில் அட்லி!

ஷாக் கொடுத்த பிகில் அட்லி..

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்துவரும் இயக்குநராக இருப்பவர் அட்லி இவர் முதன்முதலாக இயக்குனர் சங்கர் அவர்களின் உதவி இயக்குனராக அறிமுகமானார் அதன் பிறகு நடிகர் ஆர்யா மற்றும் ஜெய் நடிப்பில் உருவான ராஜாராணி திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் இந்த திரைப்படம் ஆனது மாபெரும் வெற்றி பெற்றதால் இவர் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக கண்டறியப்பட்டார்.

ராஜா ராணி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி மற்றும் மெர்சல் போன்ற திரைப்படங்களை இயக்கினார் இந்த திரைப்படங்கள் ஆனது மாபெரும் வெற்றி பெற்று தற்போது இயக்குனர்களில் முன்னணி இயக்குனராக தற்போது அட்லி உள்ளார்.

மேலும் இயக்குனர் அட்லி மூன்றாவது முறையாக தற்போது நடிகர் விஜய்யை வைத்து பிகில் எனும் திரைப்படத்தை இயக்கிவருகிறார்.

தற்போது பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் அட்லி என் நிறத்தை வைத்து பலரும் என்னை கிண்டல் செய்தார்கள் எனவும் எனக்கு இதுபோன்ற அழகான மனைவி கிடைத்திருக்க கூடாது எனவும் பலரும் என் காதில் படும்படி கூறியுள்ளனர் எனவும் நிறமொரு தடையே இல்லை என தற்போது கூறியுள்ளார்.

போட்டியாளர்களை திட்டமிட்டு ஏமாற்றிய செரின் : ஏமாற்றப்பட்டது தெரியாமல் தர்சன்,முகென்,சாண்டி..டைட்டில் வின்னர் செரின் தான்.. இத பாருங்க புரியும்!!

போட்டியாளர்களை திட்டமிட்டு ஏமாற்றிய செரின்

பிக் பாஸ் வீட்டில் அனைவரும் டைட்டிலுக்காக போராட ஆரம்பித்து விட்டனர். ஆனால் டைட்டில் வெற்றிபெற டாஸ்க்குகள் முக்கியம் இல்லை என்பதை சில போட்டியாளர்கள் மறந்துவிட்டார்கள். குறிப்பாக தர்சன், முகென், சாண்டி , ஆகியோருக்கு இது புரியவில்லை. காரணம் இவர்கள் மக்களின் வாக்குகள் பற்றி இன்னும் யோசிக்கவில்லை. Ticket to finale வெற்றி பெற மட்டுமே டாஸ்குகள் உதவும்.

பைனல் வெற்றிபெற மக்களின் வாக்குகள் மட்டுமே உதவும். அதனை செரின் நன்றாக புரிந்து வைத்துக் கொண்டார். ஆரம்பத்தில் வனிதா, சாக்‌ஷி ரேஷ்மாவுடன் ஒட்டிக் கொண்டிருந்த செரின் அதன் பின் தர்சனுக்கு கிடைத்த கைதட்டுகளால் தர்சனின் பக்கம் சாய்ந்துகொண்டார். அதன் பின் மக்கள் யாருக்கு அதிக கைதட்டல் கொடுக்கிறார்கள் என்பதை கணக்கிட்டு அவர்களை கெட்டவராக சித்தரிக்க ஆரம்பித்தார்.

அபி தன் காதல் பற்றி ஷெரினிடம் கூறினார் அபிக்கு வாழ்த்து சொல்லி அவருடன் நன்றாக இருக்கும் போதே கவினுக்கு என் மீது ஈர்ப்பு இருக்கிறது என சாக்‌ஷி செரினிடம் கூற விட்டுவிடாதே கவினை காதலி என்ற செரினிடம் அபி கவினை காதலிக்கிறாளே என்றதற்கு இது உன் வாழ்க்கை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதே என சாக்‌ஷியின் மனதை மாற்றி கவினுடன் காதலில் கோர்த்து விட்டார்.

அதன் பின் லொஸ்லியாவின் முன் தர்சனுக்கு என இதய வடியில் தோசை போட்டு லொஸ்லியாவை வெறுப்பேற்றி லொஸ்லியாவை கெட்டவராக சித்தரித்தார். அதன் பின் அவரது கண்களுக்கு மதுமிதா பட்டார். மது தமிழ் பெண் நிச்சயம் பைனல் வந்தால் வெற்றி பெறுவார் என்பது புரிந்தது. அதனால் மொழி பிரச்சனையை இழுத்து மதுவை வெளியேற்றினார். ஆனால் செரின் எது செய்தாலும் போட்டியாளர்கள் முன் அப்பாவி போல் அழகாக நடித்தார்.

நடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தாச்சு புகைப்படம் உள்ளே!!

நடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தாச்சு

தமிழில் ஆர்யா நடித்து வெளியான மதராசப்பட்டினம் திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். இதனைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து எந்திரன் திரைப்படத்தில் நடித்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் ஹிந்தி மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்து பட வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டார். அதன்பின் எமி ஜார்ஜ் பனாயோட்டா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவருடைய வளைகாப்பு சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. அந்த புகைப்படத்தை எமிஜாக்சன் கணவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து தனது கருத்தை வெளியிட்டு இருந்தார். அதில் எமிஜாக்சன் நீல நிற உடையில் அவர் பின்னால் பலூன்களை தொங்க விட்டவாறு இருந்தது. எனது ஆண் குழந்தை நல்ல நண்பன் மற்றும் சிறந்த குடும்பத்தினரிடம் கொண்டாடும் அழகான பிற்பகல் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனது மகன் பல அற்புதமான பெண்களை தன் வாழ்வில் பெற்ற அதிர்ஷ்டசாலி என்றும் நான் மிகவும் ஆசீர்வதிக்கப் பட்டதாக உணர்வதாக தெரிவிக்கிறேன் என்றும் எமி ஜாக்சன் கணவர் கருத்துகளை பதிவு செய்தார். இந்நிலையில் இன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து பல சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

பாஷா கதாநாயகி நக்மாவின் சுவாரசியமான நிஜ காதல் கதை!!

நக்மாவின் காதல் கதை

நடிகை நக்மா ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, போஜ்புரி என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர். கவர்ச்சியால் ரசிகர்களை அதிகம் ஈர்த்தவர் இவர்தான். இவரது தங்கை ஜோதிகா யவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர். முதலில் சரத்குமாருடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது.

பின்னர் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியைதான் காதலித்து வந்தார் என்று செய்திகள் பரவியது. அவர்கள் இருவரும் வெளிப்படையாகவே ஒன்றாக வெளியில் சுற்றினார்கள். சவுரவ் கங்குலி நக்மா ஆகியோரின் புகைப்படங்கள்தான் அவ்வப்போது பத்திரிகைகளில் மற்றும் மீடியாக்களில் அடிக்கடி ட்ரெண்ட்டாகும்.

கிரிக்கெட் போட்டியில் சவுரவ் கங்குலி சரியாக விளையாடவில்லை என்றால் நக்மா மீது மிக மோசமான விமர்சனங்கள் வந்து குவியும். இதையெல்லாம் பார்த்த ஜோடி தங்கள் இருவரின் கேரியரும் பாதிக்கப்படுவதை அறிந்து ஒத்த மனதுடன் பிரிய முடிவெடுத்து விட்டனர். அதன்பின்னர் நக்மா சினிமாவில் வாய்ப்புகள் குறையவே அரசியலில் பிஸியாகி ஆகிவிட்டார்.

தனது தங்கைக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருக்கிறது. ஆனால் 45 வயதைக் கடந்தும் இன்று வரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருந்து வருகிறார் நக்மா.

லண்டன் கணவருடன் ஏற்பட்ட பிரிவு : இலங்கையை சேர்ந்த நடிகை ராதிகாவுக்கு சரத்குமாருடன் காதல் ஏற்பட்டது எப்படி?

காதல் ஏற்பட்டது எப்படி?

பிரபல நடிகை ராதிகாவுக்கும், பிரபல நடிகர் சரத்குமாருக்கும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ராகுல் என்ற மகன் உள்ளான். சரத்குமாருக்கு ராதிகா இரண்டாவது மனைவியாவார். அதே போல ராதிகாவுக்கு சரத்குமார் மூன்றாவது கணவராவார்.

நடிகை ராதிகா இலங்கையை சேர்ந்தவர். நடிகர் எம். ஆர். ராதாவுக்கும் இலங்கையை சேர்ந்த அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் தான் ராதிகா.

அவர் கடந்த 1985ஆம் பிரபல இயக்குனரும், நடிகருமான பிரதாப் போத்தனை திருமணம் செய்த நிலையில் அடுத்த ஆண்டே அவரை பிரிந்தார்.

பின்னர் லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரை1990ஆம் ஆண்டு மணந்த ராதிகா அவரை 1992ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

இந்த தம்பதிக்கு ராயான்னே ஹார்டி என்ற மகள் உள்ளார். இந்த சூழலில் ராதிகாவுடன் சரத்குமார் நட்பானார். பின்னர் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து போக காதலிக்க தொடங்கியுள்ளார்.

திருமணத்திற்கு முன்னர், இருவரும் சேர்ந்து ரகசிய போலிஸ், நம்ம அண்ணாச்சி, சூரியவம்சம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அப்போதே இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். இது பின்னர் காதலில் தொடங்கி திருமண பந்தத்தில் இருவரையும் இணைத்தது.