இரண்டு நாயகிகளுடன் ரொ மான்ஸ் செய்யும் விஷால்!!

இரண்டு நாயகிகளுடன் விஷால்..

கோலிவுட்டின் பிரபல கதாநாயகர்களுள் ஒருவரான விஷால் திரையுலகில் எண்ட்ரி கொடுத்து 15 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதை சமீபத்தில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடினார்கள். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அயோக்கியா படம் ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனத்தை பெற்று தோல்வியை சந்தித்தது.

அதைத் தொடர்ந்து தற்போது இவர் தனது 28வது படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கி வரும் இந்த படத்தை, விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 15 நாட்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா என்று இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளார்களாம். இது தவிர படத்தை பற்றிய மற்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் கடைசியாக தல அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்திலும், ரெஜினா கசாண்ட்ரா சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்திலும் நடித்துத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பலரையும் மயக்கிய பிரபல பாடகி என்ன ஆனார் தெரியுமா?

பலரையும் மயக்கிய பிரபல பாடகி

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகிகள் சினிமாவில் முகம் பார்க்கா முடியாவிட்டாலும் பலரின் குரல் இன்னும் மக்கள் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

அதில் ஒருவர் பாடகி மின்மினி. மணிரத்னம் இயக்கத்தில் ரஹ்மான் இசையமைப்பில் ரோஜா படத்தில் வந்த சின்னச்சின்ன ஆசை பாடல். இன்னும் பள்ளிக்கூட விழாக்களில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கின்றன.

இப்பாடலுக்கு பிறகே மின்மினி யார் என பலருக்கும் தெரியவந்தது. பின்னர் அரண்மனைக்கிளி படத்தின் அடி பூங்குயிலே, சின்ன மாப்பிள்ளை படத்தில் கண்மனிக்குள் சின்ன சின்ன மின்மினிகள் பாடல், எங்க தம்பி படத்தின் மலையோரம் மாங்குருவி என பல பாடல்கள் சூப்பர் ஹிட் தான்.

அண்மைகாலமாக இவர் என்ன ஆனார்? எப்படி இருக்கிறார்? என செய்திகள் இடம் பெற்று வருகிறது.இந்நிலையில் இசை விமர்சகர் ஷாஜி என்பவர் மின்மினி மீண்டும் பாடத்தயார். அவரது குரலை இசையமைப்பாளர்கள் பயன்படுத்திக்கொள்ள தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்து அதிரடி டுவிட் போட்ட வனிதா: பரபரப்பின் உச்சம் அப்போ சம்பவம் இருக்கு!!

அதிரடி டுவிட் போட்ட வனிதா.

பிக்பாஸ் வீட்டில் தனக்கு தோன்றியதை செய்து எப்போதும் மற்றவர்களிடம் ச ண்டையில் ஈடுபட்டவர் வனிதா.

அந்த வீட்டிற்குள் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்துமே பிக்பாஸிற்கு சவால் விட்ட வனிதா இப்போது வெளியே வந்துவிட்டார்.

இதுநாள் வரை டுவிட்டர் பக்கம் வராமல் இருந்த அவர் ஒரு டுவிட் போட்டுள்ளார். அதாவது அவர் டுவிட்டரில் லைவ் வர யோசித்துள்ளாராம்.

அப்படி மட்டும் அவர் வந்தால் கண்டிப்பாக எல்லோரையும் பற்றி கிழி கிழி என கிழித்து விடுவார் என ரசிகர்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

இந்த வார பிக்பாஸில் இவர் தான் வெளியேறுவாரா? ரசிகர்கள் கருத்துக்கணிப்பு கிடைத்த அதிர்ச்சி!!

பிக்பாஸில் இவர் தான் வெளியேறுவாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தற்போது சேரன், கவின், லொஸ்லியா, ஷெரின், முகேன் ஆகியோர் உள்ளனர்.

இதில் இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என்று ரசிகர்கள் தரப்பில் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

அதில் இந்த வாரம் லொஸ்லியா தான் குறைந்த வாக்குகள் பெற்றுள்ளதாக தெரிகின்றது, இவை அதிகாரப்பூர்வம் இல்லையென்றால், லட்சக்கணக்கில் வாக்குகள் பதிவான ஒரு டெமோவாக பார்க்கலாம்.

3 பிரிவுகளில் வழக்கு: கைதாகுகிறாரா பானுப்ரியா?

கைதாகுகிறாரா பானுப்ரியா?

பானுப்ரியா வீட்டில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ஒரு வருடமாக வேலை செய்து வந்துள்ளார்.அந்த சிறுமியின் தாயார் பிரபாவதி கடந்த ஆண்டு தன்னுடைய மகளை பானுப்ரியா மற்றும் அவரது சகோதரர் கோபால கிருஷ்ணன் கொடுமைப்படுத்துவதாக ஆந்திர மாநிலம் சமல்கோட் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதற்கிடையே பானுப்ரியா அந்த சிறுமி மற்றும் தாய், தன் வீட்டில் இருந்து 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கப்பணம், விலை உயர்ந்த கை கடிகாரம் போன்றவற்றைத் திருடிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். இதையடுத்து அந்த சிறுமியின் தாய் புழல் சிறையிலும், சிறுமி சென்னை சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அந்த சிறுமியின் தாயார் ஏற்கனவே ஆந்திர மாநிலத்தில் கொடுத்த புகார் தகவலை அம்மாநில போலீசார் சென்னை போலீசுக்கு அனுப்பி வைத்திருந்தனர். இதையடுத்து பானுப்ரியா மீது பாண்டி பஜார் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிறுமியை வேலைக்கு சேர்த்தது, அவரை காயப்படுத்தியது, மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பானுப்ரியா கைது செய்யப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

சும்மாவே TREND பண்ணுவோம்.. தளபதி சொன்னா விடுவோமா? TREND ஆகும் மரண ஹேஷ் டேக்!!

TREND ஆகும் ம ரண ஹேஷ் டேக்!!

தளபதி விஜய்க்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே போவது அனைவரும் அறிந்த ஒன்றே. தளபதி சொல்வதை அப்படியே கேட்டு அதைப் பின்பற்றுவது தளபதி ரசிகர்கள் வழக்கம். தளபதி எதை செய்யச் சொன்னாலும் அதை அப்படியே செய்வதில் அவரைப்போலவே தளபதி ரசிகர்களும் கில்லி தான்.

தளபதி விஜய் ”பிகில்” ஆடியோ வெளியீட்டு விழாவில் ”பேனர் விழுந்து இ றந்த சுபஸ்ரீ பற்றி பேசினார். இதில் ஆன்லைனில் தேவையில்லாத விஷயங்களை ட்ரெண்ட் பண்ணுவதற்கு பதிலாக சுபஸ்ரீ இ றந்ததைத் பற்றி ட்ரெண்ட் பண்ணலாமே,. ஒரு நியாயம் கிடைக்குமே”என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரை செய்தார். சுபஸ்ரீ விவகாரத்தில் அரசு தரப்பு நடந்துகொண்ட விதம் கேவலமாக இருந்தது அனைவரும் அறிந்ததே.

இதைப்பற்றி தளபதி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். ஏனெனில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது கூட அனைவரது வீட்டிற்கும் சென்று ஆறுதல் கூறி வந்தவர், விஜய். பொதுவாக சமூக பிரச்சனைகள் அனைத்திற்கும் குரல் கொடுப்பவர், பேனர் விஷயத்தில் ஏன் மௌனம் காக்கிறார்? என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது. அதனை நேற்றைய மேடையில் பொதுமக்களின் முன்னிலையில் அவர் பேசியது அனைவரிடமும் வரவேற்பை பெற்றது.

இதனை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் தளபதி ரசிகர்கள் இன்று,#JusticeforSubhashree என்ற hashtag உருவாக்கினார். மற்ற நடிகர்களின் ரசிகர்களும் சுபஸ்ரீக்கு ஆதரவாக இந்த hashtag பதிவிட்டு இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் கொண்டு வந்தனர்

ரீ எண்ட்ரி கொடுக்கும் அசின் : வரவேற்பது கோலிவுட்டா? பாலிவுட்டா?

ரீ எண்ட்ரி கொடுக்கும் அசின்!

‘உள்ளம் கேட்குமே’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் அசின். கேரளாவைச் சேர்ந்த இவர் விஜய், அஜித்,கமல், சூர்யா, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றி படங்களைக் கொடுத்துள்ளார்.

கோலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வந்த இவர், கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர்கானுடன் இணைந்து நடித்துள்ளார். அதன் பிறகு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மாவை கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி.19ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு அசினுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

அதிலிருந்து அசின் இனிமே படத்தில் நடிக்கமாட்டார் என்று வதந்தி பரவியது. ஆனால் வடிவேலு பாணியில் எனக்கு எண்டே கிடையாது என்று மீண்டும் திரைத்துறையில் ரீ எண்ட்ரி கொடுக்கவுள்ளார். இதை உறுதிசெய்யும் வகையில் அவர் மிகவும் கவர்ச்சியாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பாலிவுட்டா? அல்ல கோலிவுட்டா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ரகசிய திருமணம் செய்த ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு புகைப்படங்கள்!!

ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு..

ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு

ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு

ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு

ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு

ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு

ஆல்யா-சஞ்சீவ் திருமண வரவேற்பு

கிடப்பில் போடப்பட்ட படத்தை மீண்டும் தொடங்கும் முடிவில் சிவகார்த்திகேயன்- இவரது படம் தானா?

சிவகார்த்திகேயன்..

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் உழைப்பின் மூலம் ஜொலித்து வருபவர். ஆனால் கடைசியாக இவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை என கூறப்படுகிறது.

அவரது நடிப்பில் அடுத்த வாரம் செப்டம்பர் 27ம் தேதி நம்ம வீட்டுப் பிள்ளை வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் நேற்று இன்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் படம் கமிட்டானார்.

புதிய படத்திற்கு ராகுல் ப்ரீத் சிங் நாயகி என்றும் கூறப்பட்டது. இடையில் பண பிரச்சனையால் கிடப்பில் போடப்பட்ட இப்படம் சிவகார்த்திகேயனின் தலையீட்டிற்கு பிறகு மீண்டும் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இவங்க கூட நடிக்குறது ரொம்ப கஷ்டம்.. பிகில் மேடையில் விஜய் குறிப்பிட்ட இரண்டு நடிகர்கள்!!

பிகில் மேடையில் விஜய்..

நேற்றைய பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது பற்றித்தான் அவரது ரசிகர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்தது அவரது பேச்சு.

விழாவில் ஒரு மீம் விஜய்க்கு போட்டு காட்டப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு ட்ரெண்ட் ஆன பிரெண்ட்ஸ் நேசமணி பற்றிய மீம் தான் அது. இதை பார்க்கும்போது என்ன தோணுது சார் உங்களுக்கு என தொகுப்பாளர் ரம்யா கேட்டார்.

“இதை பார்க்கும்போது என்ன தோணுதுன்னா, ஒரு ஆணியும்…(ரசிகர்கள் ஆரவாரம்). அந்த சீன் எடுக்கும்போது நான் சிரித்துக்கொண்டே தான் இருந்தேன். சூர்யா வந்து சிரிப்பை கண்ட்ரோல் பண்ணிகிட்டார். என்னால முடியல. வடிவேலு சார் கூட, விவேக் சார் கூடலாம் நடிக்குறது ரொம்ப கஷ்டம்ங்க. என்னோட பேவரட் படங்கள்ல பிரெண்ட்ஸ் படமும் ஒன்னு” என விஜய் பதில் அளித்துள்ளார்.