காமெடி நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருபவர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஆம்பள, ரெமோ, கத்தி ஆகிய படங்களில் இவர் நடித்தவர்.
இந்நிலையில் நீண்ட நாட்களாக தனக்கு பொண்ணு கிடைக்கவில்லை என்று அவரே கூறி தன்னை தானே கலாய்த்துக்கொள்வார்.
சிவகார்த்திகேயனும் பல பேட்டிகளில் இவரை கலாய்த்துள்ளார், தற்போது இவருக்கு பொண்ணு கிடைத்துவிட்டது, அவர்களின் நிச்சயத்தார்த்த புகைப்படங்கள் வெளிவந்துள்ளது, இதோ…
நல்ல அழகும், நடிப்புத் திறமையும் உள்ளவர் அந்த நடிகை. நடிக்க வந்த புதிதில் இருந்தது போன்றே இன்றும் இருக்கிறார். இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட வெயிட் போடவில்லை. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அவ்வளவு அக்கறை.
நடிகைக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரின் அம்மா ஆசைப்படுகிறார். ஆனால் எப்பொழுது கல்யாணப் பேச்சை எடுத்தாலும் வேண்டாம் மம்மி என்கிறாராம் நடிகை. கல்யாணம் என்றால் இந்த பெண் ஏன் இப்படி பயப்படுகிறது என்று வியக்கிறாராம் நடிகையின் அம்மா.
நடிகையின் வாழ்வில் வந்த காதல் நிலைக்கவில்லை. பல ஆண்டுகளாக காதலித்த அந்த நபர் பிரிந்துவிட்டார். அதன் பிறகு ஏற்பட்ட காதலும் துவங்கிய வேகத்தில் முடிந்துவிட்டது. இப்படி அடுத்தடுத்து மனவேதனை அடைந்ததால் நடிகை திருமணத்தை வெறுக்கிறாரோ என்னவோ.
என்னால் தனியாக வாழ முடியும் என்று நடிகை நம்பிக்கையுடன் சொன்னாலும் அவரை திருமதி ஆக்கிப் பார்க்கத் துடிக்கிறாராம் அம்மா. கொஞ்சம் டல்லடித்த நடிகையின் கெரியர் வெற்றி நாயகனின் படத்தில் நடித்த பிறகு சூப்பராக பிக்கப் ஆகிவிட்டது.
கெரியர் நல்ல நிலைக்கு வந்ததாலும் நடிகைக்கு திருமணம் மீது ஈடுபாடு இல்லாமல் உள்ளது. முன்பு போன்று இல்லாமல் தற்போது வெயிட்டான கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் நாகார்ஜூனாவின் பண்ணையில் வீசிய துர்நாற்றம்..
இந்தியா – ஹைதராபாத்தில், பிரபல நடிகர் நாகார்ஜூனாவுக்குச் சொந்தமான பண்ணை தோட்டத்தில் மனித எலு ம்புக் கூடு இருந்தது பற்றி தெலுங்கானா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,நடிகர் நாகார்ஜூனா, தெலுங்கானா மாநிலம் மெகபூப்நகர் மாவட்டத்தில் சாத் நகர் அருகே பாப்பிரெட்டி குடா என்ற கிராமத்தில் 40 ஏக்கரில் விளை நிலம் ஒன்றை அண்மையில் வாங்கியிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்த விளைநிலம் இயற்கை விவசாயம் செய்வதற்கு ஏற்ற வகையில் உள்ளதா என மண்ணின் தன்மையை அறிவதற்காக நிபுணர் குழுவினை நாகர்ஜூனா கடந்த புதன்கிழமை அனுப்பி வைத்திருந்தார்.
அங்கு சென்ற அந்தக் குழு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. எங்கிருந்து வருகிறது என்பதை அறியும் நோக்கோடு தேடிய போது களஞ்சிய அறையில் இருந்து இந்த துர்நாற்றம் வருவதை அறிந்து அந்த களஞ்சிய அறையை திறந்துள்ளனர்.
அங்கு மனித எ லும்புக் கூடு கிடந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பொலிஸிற்கு தகவல் வழங்கியதையடுத்து, எ லும்புக் கூட்டை மீட்ட பொலிஸார் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நிலத்தை இந்த மாதம் முதல் வாரத்தில் நாகார்ஜூனாவின் மனைவி நடிகை அமலா பார்வையிட்டு இருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அங்கிருந்து மீட்கப்பட்ட எ லும்புக் கூடு சுமார் 35 வயது மதிக்கத்தக்கவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் எனவும் அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உ யிரிழந்த நபர் 6 மாதத்திற்கு முன் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் எனவும், அவர் டீ சேர்ட் மற்றும் காற்சட்டை அணிந்திருக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் யாராக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு தான் மக்கள் மத்தியில் அதிகளவில் உள்ளது.
இந்நிலையில், இந்நிகழ்ச்சி தொடங்கிய சில வாரங்களிலேயே தர்ஷன் தான் டைட்டிலை வெல்வார் என்று பேசி வரும் நிலையில் தற்போது பிக்பாஸ் இரண்டாவது சீசன் போட்டியளரான நடிகை சுஜா வருணியின் கணவர் சிவக்குமார்.. முகேன் ராவ் தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதில், எனக்கு என்னவோ முகென் ராவ் தான் சத்தமில்லாமல் டைட்டிலை வெல்லப் போகிறார் என்று தோன்றுகிறது. நாளுக்கு நாள் அவர் ரசிகர்களை கவர்ந்து கொண்டே போகிறார். அவரின் செய்கைககள் ரசிக்கும்படி உள்ளது. எனக்கு ஏற்கனவே மலேசியாவை பிடித்துள்ளது. முகென் ராவ் மீதான பாசத்தால் மலேசியாவை மேலும் பிடிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்த பதிவிற்கு கவின் ரசிகர் ஒருவர் டைட்டில் கவின் தான் வெல்வார் என்று கூறியுள்ளார். அதை கண்ட சிவக்குமார் கண்களில் க ண்ணீர் வரும் அளவுக்கு சிரிப்பது போன்ற ஸ்மைலியை போட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசன் வெற்றிகரமாக 80 நாட்களை கடந்துசென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய கமலே இந்த சீசனையும் வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் பிக்பாஸை பற்றி ஊடகத்திற்கு பேட்டியளித்ததில், சேரனை பற்றி கேட்டதற்கு அவர், ஒரு சின்சியரான இயக்குனர். அவர் மற்றவர்கள் கா யப்படுவதை பற்றி கவலைப்பட மாட்டார்.
மேலும், அவருடைய பாரதி கண்ணம்மா படம் ஜா தி ஒ ழிப்பு பற்றி சமூகத்தில் பேசப்பட்ட ஒரு படம். அந்த படம் எடுக்கும் போது அவர் ரொம்ப சீரியசாக இருப்பதை உணர்ந்தேன். அதற்காக படத்தில் நானும், வடிவேலும் கொஞ்சம் டிராக்கை மாத்தி காமெடியை பயன்படுத்தினோம். ஆனால் சேரன் அதற்கு சம்மதிக்கவே இல்லை.
நான் கொடுத்த காமெடி ஒர்க்கவுட் ஆகவில்லை என்றால் அவருக்கு நல்ல பெயர் கிடைக்காது என அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்.
நாங்க எல்லோரும் பேசி சம்மதிக்க வைத்தோம். அதன் பின்பு தான் வெற்றிக்கொடிக்கட்டு படத்தில் காமெடி சீனை உருவாக்கி என்னையும் வடிவேலையும் நடிக்க வைத்தார். அந்த அளவிற்கு சின்சியரான இயக்குனர் நல்ல மனிதரும் கூட.
அதன் பின்னர் அவருகிட்ட எனக்கே பிடிக்காத ஒரு விஷயம், ஒரு மேடையில் வந்து குப்பையான ஏதோ ஒரு படத்தை பார்த்துவிட்டு, விமர்சனம் சொல்லுறாரு என்னாங்க பார்த்திபன் படம் மாறி பண்ணுறீங்க அப்படி மேடையிலேயே சொல்லுறாரு. அதனால மத்தவங்கள கா யப்படுத்துறதை பற்றி கவலையே பட மாட்டாரு அதுல ஷ்பெஷல் குணம் அவருக்கு.
மேலும், ஒத்த செருப்பு படத்தில் பிஸியாக இருந்ததால் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கவில்லை, ஆகையால் சேரனின் நடவடிக்கைகளை பற்றி விமர்ச்சிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர்கள் ஓரளவு பேசினாலும், தென்னிந்திய சினிமா நடிகர்கள் பெரும்பாலும் தங்களின் சொந்த விஷயங்கள் பற்றி வெளிப்படையாக பேசமாட்டார்கள்.
இந்நிலையில் பிரபல தெலுங்கு தெலுங்கு நடிகை லக்ஷ்மி மஞ்சு “Feet up with the stars” என்ற ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் மற்றும் நடிகைகளிடம் பல அந் தரங்க விஷயங்கள் பற்றி பேசியுள்ளார் அவர்.
இந்த நிகழ்ச்சியின் புதிய டீஸர் தற்போது வெளிவந்துள்ளது. அதில் காஜல், சமந்தா, ராகுல் உள்ளிட்ட நடிகைகள் பேசியுள்ளார்.
அதில் ஒரு இடத்தில் ராகுல் “He only dresses me and undresses me” என கூறுகிறார். யாரை பற்றி அப்படி கூறினார் என்பது செப்டம்பர் 23ம் தேதி தான் தெரியும். அன்று தான் ஷோ வெளியாகிறது.
விஜய், நயன்தாரா இணைந்து நடிக்கும் இரண்டாம் திரைப்படம் பிகில். இப்படத்தை அட்லீ இயக்கியுள்ளார்.
இப்படத்தன் இசை வெளியீட்டுவிழா இன்று நடைபெற்றுவருகிறது. இதற்காக பிரமாண்ட செட் அமைத்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியிடுவிழாவில் கலந்துகொண்ட அணைத்து ரசிகர்களுக்கும் பிகில் படத்தில் விஜய் அணிந்திருந்த ஜெர்சி மற்றும் விசில் பரிசாக வழக்கங்கப்பட்டது.
அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் நடிப்பில் இந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் வந்தது.
இந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் ஆகியுள்ளது, இந்நிலையில் அஜித் விஸ்வாசம் படம் விவேகம் படத்தின் தோல்விக்காக தான் உடனே செய்துக்கொடுத்தார் என்பது தெரிந்தது தான்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் அழகப்பன் ஒரு பேட்டியில் ‘தற்போதுள்ள நடிகர்கள் யார் தயாரிப்பாளரை பார்க்கிறார்கள்.
அஜித் விவேகம் தோல்விக்கு விஸ்வாசம் செய்துக்கொடுத்தார், அந்த படம் மிகப்பெரிய ஹிட்டாகி, அந்த தயாரிப்பாளர் நஷ்டத்திலிருந்து லாபத்தை சம்பாதித்தார், எவ்ளோ பெரிய மனுஷங்க அவர்’ என்று புகழ்ந்துள்ளார்.
ட்விட்டரில் அஜித் மற்றும் விஜய்யின் ரசிகர்கள் தொடர்ந்து ச ண்டை போட்டு வருவது அனைவருக்கும் தெரியும். அவர்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் விதத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் ஒரு வசனம் பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சமூக வலைத்தளங்கள் பற்றி பேசியுள்ளார்.
“சுபஸ்ரீ விவகாரத்தில் ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டால் நன்றாக இருக்கும். சமூக வலைத்தளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும். யார சந்தோசபடுத்த ஆன்லைன்ல ச ண்டை போடுறீங்களோ அவங்களுக்கே உங்கள பிடிக்காம போயிடும்” என விஜய் அட்வைஸ் கொடுத்துள்ளார்.