பிக்பாஸ் வீட்டில் சேரனுக்கு என்ன ஆனது? புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!!

பிக்பாஸ் வீட்டில் சேரனுக்கு என்ன ஆனது?

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில வாரங்களில் முடியவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.

இதற்கு முக்கிய காரணம் இலங்கை, மலேசியாவை சார்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது தான்.

இந்நிலையில் பிக்பாஸ் நேற்று முட்டையை எடுத்து அடிக்கும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது, அதில் சேரன் மிகவும் சோர்ந்து இருந்தார்.

அதோடு அவர் முதுகில் ஏதோ கட்டியிருந்தது போல் இருக்க, அதை பார்த்த ரசிகர்கள், அவருடைய முதுகில் அடிப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர்.

தன்னுடன் ஒன்றாக நடித்தவர்களையே காதல் திருமணம் செய்த தமிழ் நடிகர்கள்!!

தமிழ் நடிகர்கள்

தமிழ் திரையுலகில் தங்களுடன் ஒன்றாக நடித்தவர்களையே காதல் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் குறித்து இங்கு காண்போம்.

எம்.ஜி.ஆர்-ஜானகி : கடந்த 1967ஆம் ஆண்டு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-ஜானகி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மருதநாட்டு இளவரசி, நாம், மோகினி போன்ற பல படங்களில் இவர்கள் ஒன்றாக நடித்திருந்தனர்.

பாக்யராஜ்-பூர்ணிமா : திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பாக்யராஜும், பல தென்னிந்திய மொழிகளில் நடித்த பூர்ணிமாவும் ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அதன் பின்னர் 1984ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

அஜித்குமார்-ஷாலினி : நடிகர் அஜித்குமாரும், நடிகை ஷாலினியும் ‘அமர்க்களம்’ என்ற ஒரே படத்தில் தான் ஒன்றாக இணைந்து நடித்தனர். அப்போது தான் இவர்களுக்கிடையில் காதல் மலர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, படம் வெளியான அடுத்த ஆண்டிலேயே(2000) இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சூர்யா-ஜோதிகா : ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தில் முதன் முறையாக ஒன்றாக நடித்த சூர்யா-ஜோதிகா ஜோடி, அதன் பின்னர் காக்க காக்க, மாயாவி, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் இணைந்து நடித்தது. ஆனால், முதல் படத்திலேயே இவர்களின் காதல் மலர்ந்துவிட்டது. பின்னர் 2006ஆம் ஆண்டில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

பிரசன்னா-சினேகா : நடிகர் பிரசன்னாவும், நடிகை சினேகாவும் 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் கோவா, அச்சமுண்டு அச்சமுண்டு போன்ற படங்களில் நடித்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

சரத்குமார்-ராதிகா : சரத்குமார்-ராதிகா இருவரும் 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் நம்ம அண்ணாச்சி, சூர்யவம்சம் போன்ற பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

பொன்வண்ணன்-சரண்யா : இயக்குநரும், நடிகருமான பொன்வண்ணன், நடிகை சரண்யாவை 1995ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கருத்தம்மா, பசும்பொன் போன்ற படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

சுந்தர்.சி-குஷ்பு : இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான சுந்தர்.சி கடந்த 1997ஆம் ஆண்டு நடிகை குஷ்புவை திருமணம் செய்துகொண்டார். சுந்தர்.சி இயக்கிய முதல் படமான ‘முறை மாமன்’ திரைப்படத்தில் குஷ்பு கதாநாயகியாக நடித்துள்ளார்.

முதல் மனைவியின் கர்ப்பத்தை கலைத்த கமல்ஹாசன் : அவரை ஏன் பிரிந்தார் தெரியுமா? கசிந்த ரகசியம்!!

கமல்ஹாசன்

சினிமாவிலும், அரசியலிலும் பிரபலமாக இருக்கும் கமல்ஹாசன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளியில் அதிகம் பேசமாட்டார். இவர் காந்த 1978ஆம் ஆண்டு வாணி கணபதி என்ற பெண்ணை மணந்தார். பின்னர் பத்து வருடங்கள் கழித்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதன்பின்னர் சரிகாவை மணந்த கமல்ஹாசன் அவரையும் விவாகரத்து செய்தார். இதையடுத்து கவுதமியுடன் வாழ்ந்த அவர் 2016-ல் அவரை பிரிந்தார். மேல்நாட்டு கலாசாரத்தை பின்பற்றும் நடிகர் கமல்ஹாசன் திருமணத்தின் மீது நம்பிக்கையற்றவர்.

இதனை அவரே வெளிப்படையாக ஒரு பேட்டியின் போது தெரிவித்துள்ளார், திருமணம் என்பது பழைய கலாசாரம். ஒருவரை வலுக்கட்டாயமாக மற்றொருவருடன் தங்க வைப்பதற்கான சட்டப்படியான ஒப்பந்தம். யார் மீதாவது உண்மையான காதல் இருந்தால் பேப்பரில் எழுதும் அங்கீகாரம் தேவையே இல்லை என்று கூறினார்.

கமல்ஹாசன் வாணியை பிரிந்ததற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அதாவது இவர்கள் இருவருக்கும் குழந்தைகள் பிறக்கவில்லை.
இதன் காரணத்தினாலேயே கமல், வாணி கணபதியை விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் கூட நமது எம்.ஜி.ஆர் என்ற பத்திரிக்கையில் கமல் குறித்து ஒரு கவிதை போல் வெளியிட்டுள்ளனர். அந்த கவிதை முழுவதும் கமலை திட்டியுள்ளனர், அதில் வாணி கணபதி கர்ப்பமாக இருந்த போது வேண்டுமென்றே அவரை ராட்டினத்தில் ஏற்றினார்.

அவர் கர்ப்பத்தை கலைத்து மலடி என்று பெயர் சூட்டினார் என்று குறிப்பிட்டனர். ஆனால், இன்றுவரை தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கமல் விளக்கம் அளித்தது கிடையாது.

எனது படுக்கையறையை எட்டிபார்க்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்பது தான் அவரின் பதிலாக உள்ளது.

ரசிகர்களால் குடும்பத்தோடு பொது இடங்களுக்கு நிம்மதியாக செல்லமுடியவில்லை : குமுறும் நடிகை டாப்சி!!

நடிகை டாப்சி

தமிழ் மொழியில் ஆடுகளம் படத்தின் மூலம் பிரபல நடிகையாக அங்கீகாரத்தினை பெற்றவர் நடிகை டாப்சி. இவர் அதன்பின் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். வேலை இல்லாத சமயங்களில் ஷாப்பிங் செய்வதை வழக்கமாக கொண்டவர்.

இந்நிலையில் ஷாப்பிற்கு வெளியில் தன் குடும்பத்துட வெளியில் செல்லமுடியவில்லை. ரசிகர்கள் தன்மீது இருக்கும் அன்பால் தன்னிடம் நெருங்கி பேசுவதால் எனக்கு சில இடையூறும் நெருக்கடியும் ஏற்பட்டது. இதனால் இந்தியாவில் ஷாபிங் செய்ய முடியவில்லை. இதனால் வெளிநாடுகளுக்கு செல்லும்போது தான் ஆடைகளை வாங்கி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

நண்பர்களுடன் சென்று காஃபி ஷாப்பிற்கு கூட என்னால் செல்ல கஷ்டமாக உள்ளது என்று அவர் படும் துன்பத்தை கூறியுள்ளார்.

9ம் வகுப்பு பையனுடன் டேட்டிங் சென்ற முரட்டுகுத்து பட நடிகை.. மியா கலிஃபாவை வைத்து எப்படி ஒப்பிடலாம்??

மியா கலிஃபாவை வைத்து எப்படி ஒப்பிடலாம்??

இருட்டு அரையில் முரட்டுகுத்து படத்தின் மூலம் கவர்ச்சி நடிகை என்ற பெயரை பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன்பின் பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டு கடைசி வாரம் வரையில் இருந்தார். யாஷிகாவுன் ஐஸ்வர்யா தத்தாவுன் சேர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜாலியாக பார்ட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார்கள்.

போட்டோஹுட்டில் அதிக ஆர்வமுடன் இருக்கும் யாஷிகா சமீபத்தில் படுமோசமாக ஆடைகளை அணிந்து புகைப்படத்தினை வெளியிட்டு வருகிறார். ஒரு பேட்டியொன்றில் தான் 12ம் வகுப்பு படிக்கும் போது என் பள்ளியில் 9 வது படிக்கும் பையனுடன் டேட்டிங் சென்றேன். அது எனக்கு பெரிய தவறாக தெரியவில்லை.

தன்னுடைய ஹாட்டான படங்களை பார்த்த ரசிகர்கள் இவர் ஆபாச நடிகை மியா கலிஃபா போல இருப்பதாக சொல்லி இருப்பதை கண்டித்து மற்றவர்களை ஒப்பிட்டு என்னை பேசிவது தவறு என்றும், நான் அப்படி எல்லாம் இல்லவே இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் என்னை கவர்வதற்கு நல்ல பர்ஃப்யூம் போட்டும், உயரமாக, தாடி அதிகமாக வைத்திருக்கும் ஆண்களை இருந்தால் போதும் என்று கூறியுள்ளார்.

லொஸ்லியாவிற்காக கவின் செய்த கேவலம், இன்னும் திருந்தவில்லையா?

கவின் செய்த கேவலம்

கவின் பிக்பாஸ் வீட்டில் கடும் சர்ச்சையில் மாட்டும் போட்டியாளர். இவரை சுற்றி எப்போதும் ஒரு வகை சர்ச்சை இருந்துக்கொண்டே தான் இருக்கும்.

அந்த வகையில் தற்போது லொஸ்லியாவை வெறுப்பேற்ற இவர் ஷெரீனிடம் சென்று வழிந்து வருகின்றார்.

இது பார்ப்பவர்கள் அனைவரையும் செம்ம கோபத்தில் ஆழ்த்தியுள்ளது, லொஸ்லியா ஒதுங்கி சென்றாலும் கவின் வேண்டுமென்றே அவரை சீண்டுவது போல் தெரிகின்றது.

நீண்ட நாட்களுக்கு பிறகு இளம் நடிகருடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்!!

லட்சுமி மேனன்

லட்சுமி மேனன் தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, வேதாளம் என பல படங்களில் நடித்தவர். இவர் கடைசியாக நடித்த படம் றெக்க.

இப்படத்தை தொடர்ந்து இவர் வேறு எந்த படங்களிலும் தலைக்காட்டவில்லை, தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு அறிமுக இயக்குனர் ராஜசேகர பாண்டியன் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம்.

இவர் இயக்குனர் வசந்தபாலனின் உதவி இயக்குனர், மேலும், இப்படத்தில் லட்சுமி மேனனுக்கு ஜோடியாக ஆரி நடிக்க, சலீம் படத்தின் ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திராவும் கமிட் ஆகியுள்ளார்.

 

பிரபல சீரியலில் ஆபாச காட்சிகள் : சன்டிவிக்கு அபராதம்!!

சன்டிவிக்கு அபராதம்!!

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் கல்யாண வீடு சீரியலில் இடம்பெற்ற ஆபாச காட்சிகளுக்காக ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரை தொடர்கள் என்றாலே சன்டிவி தான், இன்றுவரையிலும் டாப் 5 இடங்களில் பெரும்பாலும் சன்டிவி தொடர்களே இடம்பெற்றுள்ளன.

மாலை நேரங்களில் சன்டிவி சீரியலே பார்க்காதவர்களே குறைவு என்று கூறும் அளவுக்கு பெரும்பாலான வீடுகளை அலங்கரித்துள்ளன.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணியளவில் ஒளிபரப்பாகும் கல்யாண வீடு சீரியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

இந்த சீரியலில் மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒளிப்பரப்பப் பட்ட எபிசோட்களில் கூட்டுப்பலாத்காரக் காட்சிகளும் அது பற்றிய தீவிரமான வசனங்களும் இடம் பெற்றிருந்தன.

இதற்கு எதிராக பலத்த கண்டனங்கள் எழுந்ததுடன், பிசிசிசி அமைப்புக்கும் புகார்கள் சென்றன, இதனை தொடர்ந்து சன் டிவிக்கு 2.5 லட்ச ரூபாய் அபராதமும் சன் நெக்ஸ்ட் தளத்தில் அந்த காட்சிகளை நீக்கவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் கல்யாண வீடு சீரியல் ஒளிப்பரப்பாகும் போது 30 வினாடிகள் கொண்ட மன்னிப்பு காட்சிகளையும் ஒளிப்பரப்ப வேண்டுமெனக் கூறியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3க்கு குரல் கொடுப்பவர் யார்? அது கடவுள் கொடுத்த வரம்.. ஓபனாக பேசிய பிரபலம்!!

பிக்பாஸ் சீசன் 3க்கு குரல் கொடுப்பவர் யார்?

பிக்பாஸ் சீசன் 3 கடந்த ஜூன் மாதம் 23 ஆம் திகதி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இன்னும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய 20 நாட்கள் தான் இருக்கிறது. இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் குரல் கொடுக்கும் பிரபலமான கோபி நாயர் நேர்காணல் ஒன்றில் பிக்பாஸ் குறித்து அவர் பேசியுள்ளார்.

கடந்த இரண்டு சீசன்களிலும், பிக்பாஸ் குரல் கொடுப்பவர் இவர் தான் என பல வதந்திகள் வந்தன. அதுபோல இந்த பிக்பாஸ் சீசனிலும் குரல் கொடுப்பவர் இவர் தான் என்று கூறிவந்த நிலையில் தற்போது அதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

அதில், சத்தியமாக பிக்பாஸ் வாய்ஸ் நான் கொடுக்கவில்லை. பிக்பாஸ் குரல் கொடுப்பவர் யாரென்றே எனக்கு தெரியாது. அவரை பார்க்கவும் முடியாது. காரணம் , அவரின் உருவம் வெளியே தெரிந்துவிட்டால் அந்த கர்ஜனையான குரல் சாதாரணமான குரலாக எண்ண நேர்ந்துவிடும். அதனால் அவரின் உருவம் கடைசி வரை வெளியே காட்ட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த இரண்டு சீசன்களை காட்டிலும், இந்த சீசனில் அந்த குரல் சற்று தொய்வை சந்திக்கிறது என்றே கூறலாம். அந்த குரலை கண்டால் முதல் இரண்டு சீசன்களில் மிரளுவார்கள். ஆனால் தற்போது அப்படி நிகழுவதில்லை. தலைகீழாக மாறியுள்ளது.

இன்னும் 20 நாட்கள் உள்ளது. போட்டியாளர்களை பிக்பாஸ் சுண்டி இழுக்க வாய்ப்பிருக்கிறது. அந்த குரலின் கர்ஜனை மேலோங்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கவின், 80 நாட்கள் தெரிந்து கொள்ளாததையா இனிமேல் தெரிந்துகொள்ள போகிறேன் என்று கூறினார். அவர் அவ்வாறு கூறுவது தவறு, தெரிந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. திருத்திக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

காதல் என்பது ஒரு புனிதமான விஷயம். அதை மற்றவர்கள் விமர்சிக்கும் விதமாக கவின் செய்யும் செயல்கள் வருத்ததிற்குரியதாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

லாஸ்லியா வெளிநாட்டிலிருந்து தன்னந்தனியாக வந்து தைரியமாக விளையாடிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவர் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் .மேலும், தர்ஷன் ஒரு வலிமையான போட்டியாளர் என்று கூறியுள்ளார்.

நடந்து முடிந்த முதல் நாள் வாக்கு பதிவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் : வெளியேற்றப்படுவாரா ஈழத்து பெண் : பரபரப்பாகும் பிக் பாஸ்!!

பரபரப்பாகும் பிக் பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 86 நாட்களை நிறைவு செய்துள்ளது. இன்னும் இரண்டு வாரமே உள்ள நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நேற்று நடைபெற்றது. அதில் சேரன், கவின், லொஸ்லியா, ஷெரின் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

கடந்த வாரத்தில் இறுதியில் சேரன் மற்றும் ஷெரின்னு அதிக போட்டிகள் நிலவியது. ஆனால், இந்த வாரம் திடீர் மாற்றமாக லொஸ்லியா மற்றும் ஷெரினுக்கு போட்டிகள் நிலவுகின்றது.

நடந்து முடிந்த முதல் நாள் வாக்கு பதிவில் மூன்றாவது, நான்காவது இடத்தில் லொஸ்லியா மற்றும் ஷெரின் உள்ளனர்.இந்த வாரம் சேரன் மற்றும் ஷெரீனுக்கு தான் அதிக போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பபட்டது.

சேரனுக்கு லொஸ்லியாவை விட அதிக வாக்குகள் விழுந்த நிலையில் இந்த வாரம் சேரனுக்கு அதிக வாக்குகள் விழுந்து வருகிறது. பொருத்திருந்து பார்ப்போம் இறுதி நேரத்தில் ஈழத்து பெண் காப்பாற்றப்படுவாரா என்று.