பிக்பாஸ் வீட்டிலிருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட வனிதா : பிக் பாஸின் மிகப்பெரிய பிளான்!!

பிக் பாஸின் மிகப்பெரிய பிளான்

பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதாவை வெளியேற்றியதன் பின்னணியில் பிக் பாஸின் மிகப்பெரிய பிளான் உள்ளது. பிக் பாஸ் வீடா இல்லை வனிதா வீடா என மக்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தவர் வனிதா.

ஆனால் மூன்றாம் வாரமே அவர் அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் மீண்டும் அவரை வைல்ட் கார்ட் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்து வரப்பட்டார்.

எதிர்பார்த்தபடியே கண்டெண்டுகளை வாரிக் கொடுத்த வனிதா, நேற்று மீண்டும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை யார் எது பேசினாலும், அதை வைத்து குட்டி கலாட்டாக்கள் பண்ணுவதில் வல்லவராக இருந்தார் வனிதா.

இதனால் அவர் வெளியேற்றப்பட்டதும் இனி கண்டெண்ட்டுகள் கிடைக்காதோ என்ற தவிப்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. வனிதாவின் வெளியேற்றத்திற்கு பின்னணியிலும் சரி, இனி வரும் எபிசோட்களுக்கான பிளானிலும் சரி, பிக் பாஸ் வேறொரு திட்டம் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இன்னமும், வீட்டுக்குள் சண்டை சச்சரவுகளை வைத்து மட்டும் ஓட்ட முடியாது. ஏற்கனவே இது பிக் பாஸா இல்லை சீரியலா எனக் கேட்கும் அளவிற்கு அழுகாச்சி காவியமாக நிகழ்ச்சி நகர்ந்து வருகிறது.

காதல், நட்பு, குடும்ப செண்டிமெண்ட் என போர் அடிப்பதாக நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர். எனவே, போட்டியாளர்களை ஆக்சனில் இறக்க வேண்டிய கட்டாயம் பிக் பாஸிற்கு வந்துவிட்டது.

இனியும் வனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தால், அவர் மூலம் ஏதாவது பிரச்சினை வந்து கொண்டே தான் இருக்கும். எனவே தான் அவரை வெளியில் அனுப்பி விட்டார்கள் என்கிறார்கள்.

பிரச்சினை செய்யாமல் உள்ளே இருந்தால் அவரது கெத்தே போய் விடும் என்பதால் வனிதாவும் இந்த காண்ட்ராக்ட்டிற்கு ஓகே சொல்லி விட்டார் போல.

பிரபுவுடன் எனக்கு அழகான உறவு இருந்தது உண்மை தான் : மனம் திறந்து பேசிய குஷ்பு!!

மனம் திறந்து பேசிய குஷ்பு

கடந்த 1990 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் பிரபுவும் குஷ்புவும் காதலிப்பதாகவும் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருவதாகவும் கிசுகிசுக்கள் எழுந்தன.

ஆனால் சிவாஜி குடும்பத்தினர்களின் முயற்சியால் இந்த ஜோடி பிரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் குஷ்பு, இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டது தெரிந்ததே.

இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த குஷ்பு, பிரபுவுடனான உறவு குறித்து கூறியதாவது, சுந்தர் என்னை புரபோஸ் செய்யும் போதே திருமணத்தை மனதில் வைத்து தான் புரப்போஸ் செய்தார். அது எனக்குப் பிடித்திருந்ததால் நான் உடனே சம்மதித்தேன்.

ஆனாலும் எங்களது திருமணம் உடனே நடந்து விடவில்லை. ‘ஒரு நடிகையான உனக்கு செளகர்யமான வாழ்க்கைமுறை அமைத்துத் தரும் அளவுக்கு நான் எப்போது பொருளாதார வசதி அடைவேனோ அப்போது நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என சுந்தர் கூறியிருந்தார்.

அதன்படி 1999 ல் அவர் சொந்த வீடு கட்டினார். அவர் எதிர்பார்த்த பொருளாதார வசதிகளை எனக்கு ஏற்படுத்தித் தந்தார். உடனே அடுத்த வருடமே 2000 ல் எங்களது திருமணம் நடந்தது.’ இவ்வாறு குஷ்பு அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

பிரபுவும் குஷ்புவும் இணைந்து தர்மத்தின் தலைவன், வெற்றி விழா, சின்னத்தம்பி, பாண்டித்துரை, மை டியர் மார்த்தாண்டன், கிழக்குக்கரை, சின்ன வாத்தியார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தனர் என்பதும் இதில் சின்னத்தம்பி திரைப்படம் சூப்பர் ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கமல் சாரிடம் ஏன் அந்த வார்த்தையை சொன்ன… கவின் லொஸ்லியா இடையே மீண்டும் வாக்குவாதம்!!

கவின் – லொஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் லாஸ்லியா காதலித்து வருகின்றனர். ஆனால் லாஸ்லியாவின் பெற்றோர் வீட்டுக்குள் வந்தபோது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் லாஸ்லியா இனி கேமில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என முடிவெடுத்தார்.

இந்நிலையில் கமலிடம் லாஸ்லியா சொன்ன ஒரு விஷயம் பற்றி கவின் நேற்று கோபத்துடன் பேசினார். “நேத்து நீயும் அதைத்தானே சொன்ன. கமல் சார் கிட்ட பேசும்போது. பிக்பாஸ் வந்ததில் இருந்து சில பழக்கங்கள் ஏற்பட்டது. அது உண்மையா பொய்யா தெரியல இன்னும் அப்டினு” என கவின் கேட்டார்.

அதற்கு லாஸ்லியா “நான் உன்னைப்பற்றி சொல்லவில்லை. சேரன் பற்றி இதற்குமுன் கூறியதை தான் மீண்டும் கூறினேன். உண்மையை பொய்யா என்கிற கேள்வி ஆரம்பத்தில் இருந்தே இருப்பது பற்றித்தான் பேசினேன்” என பதில் அளித்தார்.

கலக்கல் போஸ் : யாஷிகா ஆனந்த் எடுத்த ஹாட் போட்டோக்கள்!!

யாஷிகா ஆனந்த்

லாஸ்லியா தந்தை பிக்பாஸ் வீட்டில் செய்த செயல் : சாண்டியின் முதல் மனைவி எடுத்த திடீர் முடிவு!!

சாண்டியின் முதல் மனைவி

குணச்சித்திர வேடங்களில் பல திரைப்படங்களில் தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை காஜல் பசுபதி. இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை பார்த்து அடிக்கடி தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் புதிய பதிவை வெளியிடுபவர் ஆவார்.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகை காஜல் பசுபதியும் , இந்நிகழ்ச்சியைப் பற்றி என தன்னுடைய சொந்த கருத்துக்களை தினந்தோறும் வெளியிட்ட வண்ணம் இருந்தார்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் கவின் மற்றும் இலங்கையை சேர்ந்த பெண்ணான லாஸ்லியா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது கவின் , லாஸ்லியா இடையேயான காதல் விவகாரம்தான்.

கவின் , லாஸ்லியா இடையேயான காதல் விவகாரத்தை பற்றியும் நடிகை காஜல் பசுபதி தினமும் புதிய வெளியிட்டவர் பதிவுகளை வெளியிட்ட வண்ணம் இருந்தார்.

கடந்த சில வாரங்களாகவே நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆகியோர் வந்து அவர்களை ஊக்குவிப்பதற்காக வந்த வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் லாஸ்லியாவின் பெற்றோரும் இலங்கையிலிருந்து அவரைக் காண்பதற்காக வந்திருந்தனர் . அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த உடனே லாஸ்லியாவிடம் கவின் உடன் அவருக்கு ஏற்பட்ட பழக்கத்தை பற்றி கோபமாக கேட்டனர்.

இதனால் பிக்பாஸ் வீடு பரபரப்பு நிறைந்த இடமாக மாறியது. லாஸ்லியாவின் பெற்றோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த எபிசோடை பார்த்த நடிகை காஜல் பசுபதி,

“இனிமேல் நான் கவின் லாஸ்லியா ஆகியோரின் காதலைப் பற்றி விமர்சிக்க போவதில்லை” என்று கூறியுள்ளார். இதனை பார்த்த காஜல் பசுபதி ரசிகர்கள் எதற்காக இந்த முடிவை எடுத்துள்ளீர்கள் என்று கமென்ட் செய்த வண்ணம் உள்ளனர்.

நடிகை காஜல் பசுபதி ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்தாண்டு போட்டியாளராக பங்கேற்றார். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடன இயக்குனர் சாண்டியின் முன்னாள் மனைவி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மிப்பூட்டும் அழகான தோற்றத்தில் பிக்பாஸ் ஜனனியின் புகைப்படங்கள்!!

பிக்பாஸ் ஜனனி

வனிதாவை தொடர்ந்து இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்களா : ரசிகர்கள் ஷாக்!!

ரசிகர்கள் ஷாக்

தமிழில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இருக்கிறது. போட்டியாளர்களுக்கு பைனல் என்ற உணர்வை பிக்பாஸ் ஏற்படுத்தி பல டாஸ்குகள் கொடுத்திருக்கிறார். அவர்களுக்கு இப்போது வைக்கப்பட்டுள்ள போட்டிகளில் யார் ஜெயிக்கிறார்களோ அவர் பைனலுக்கு போகும் வாய்ப்பை பெறுகிறார்கள்.

இந்த நிலையில் கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் வீட்டைவிட்டு வெளியேறப்போகும் 3 போட்டியாளர்கள் யார் என கேட்டிருந்தார். ஒவ்வொருவரும் 3 பெயர்கள் கூறியிருந்தனர், ஆனால் கடந்த வாரம் வனிதா மட்டுமே எலிமினேட் ஆனார்.

போட்டியாளர்கள் சொன்னதில் லாஸ்லியா மற்றும் கவினுக்கு தான் அதிக ஓட்டு, இதனால் இவர்கள் இருவருமே அடுத்த வாரம் எலிமினேட் ஆக வாய்ப்பு இருக்கிறதோ என்ற சந்தேகம் ரசிகர்களிடம் உள்ளது.

ராசி இல்லை : நடிகைக்கு சிபாரிசு செய்வதை நிறுத்திய ஹீரோ!!

நடிகர்

நடிகர் ஒருவர் நடிகை ஒருவரை தன் படங்களுக்கு பரிந்துரை செய்வதை நிறுத்திக் கொண்டுள்ளாராம். கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர் அந்த நடிகர். அவரை முன்னுதாரணமாகக் கொண்டு பல இளைஞர்கள் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

நடிகருடன் ஒரு திறமையான நடிகை பல படங்களில் நடித்துவிட்டார். அந்த நடிகையை தனது படங்களில் பரிந்துரை செய்து வந்தார் நடிகர். அதனால் அவருக்கும், நடிகைக்கும் இடையே ஏதோ இருக்கிறது என்று எல்லாம் பேச்சு கிளம்பியது. ஆனால் நடிகர் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் நடிகைக்கு சிபாரிசு செய்தார்.

மேடைகளில் நடிகையின் திறமையை பாராட்டி பேசி வந்தார். அந்த நடிகையுடன் சேர்ந்து நடித்த படங்கள் எதுவும் ஓடவில்லை. இதை பார்த்த நடிகர் அவர் ராசியில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இதையடுத்து நடிகையை தனது படங்களில் நடிக்க வைக்குமாறு பரிந்துரை செய்வதை நிறுத்திவிட்டார்.

நடிகர் ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நேரத்தில் தான் இந்த காரியத்தை செய்திருக்கிறார். தன் பெயர் கெட்டபோது எல்லாம் செய்யாத ஒரு காரியத்தை ராசிக்காக செய்திருக்கிறார் நடிகர்.

இவர் மட்டும் அல்ல மற்றொரு முன்னணி நடிகரும் ராசி காரணமாக ஒரு நடிகையை ஒதுக்கி வைத்துள்ளார். முன்பெல்லாம் நடிகைகள் தான் ராசி பார்த்தார்கள், தற்போது நடிகர்கள் பார்க்கிறார்கள்.

பிக்பாஸ் தர்ஷனுடன் பிரேக்கப் என அறிவித்த நடிகை சனம் ஷெட்டி செய்த நெகிழ்ச்சியான விஷயம்!!

சனம் ஷெட்டி செய்த நெகிழ்ச்சியான விஷயம்..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இலங்கையை சேர்ந்த தர்ஷனை காதலித்து வருவதாக நிகழ்க்ச்சி துவங்கிய போதே செய்திகள் வந்தது. அப்போதே அதை உறுதி செய்யும் விதத்தில் அவர் பேட்டி கொடுத்தார்.

அதன்பிறது இது தர்ஷனுக்கு சிக்கல் ஏற்படுத்துகிறது என கூறி தர்ஷன் வாழ்க்கையில் இருந்து விலகுவதாகவும் பின்னர் அறிவித்தார் அவர்.

இந்நிலையில் தர்ஷன் பிறந்தநாளை சனம் ஷெட்டி குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாடியுள்ளார். குழந்தைகளில் பலர் தர்ஷனின் ரசிகர்களாக இருப்பதாக குறிப்பிட்டு அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அவர்.

சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி முக்கிய இடத்திற்கு திடீர் விஜயம் : எங்கே இருக்கிறார் தெரியுமா?

ஸ்ரீரெட்டி  திடீர் விஜயம்!

சமீபத்தில் #me too மூலம் சினிமா உலகத்தில் பல ச ர்ச்சைகள் உருவாக்கியவர் ஸ்ரீ ரெட்டி. அவரால். பல சர்ச்சைகள் எழும்பினாலும் ஸ்ரீ ரெட்டிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது.

அவ்வப்போது சமூக வலைதளத்தில் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அதை தொடர்ந்து ஸ்ரீ ரெட்டியின் முகப்புத்தகத்தில் அவர் நெல்லூரில் உள்ள தர்காவில் இருப்பது போல் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

மேலும் நடிகை சமந்தா அல்லது ஸ்ரீ ரெட்டி யார் மிகவும்  என்று ரசிகர்கள் இடையே கேள்வி எழுப்பியுள்ள புகை படமும் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.