ஒரு விரலை காட்டிய நடிகை : ஆளையே மாற்றும் யோசனையில் தயாரிப்பாளர்!!

நடிகை

நடிகை ஒருவர் ஒரு விரலை காட்டியதால் ஹீரோயினை மாற்றுவது குறித்து யோசிக்கிறாராம் தயாரிப்பாளர். பிரபல நடிகை ஒருவருக்கு அண்டை மாநிலத்தை சேர்ந்த பெரிய இடத்து பையனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது.

அம்மணியும் பெரிய இடமாச்சே என்று சந்தோஷமாக நடிக்க ஒப்புக் கொண்டார். நடிக்கிறேன் என்று கூறிவிட்டு சம்பளமாக இந்த தொகை வேண்டும் என்று ஒரு விரலை காட்டினாராம். அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர் தயாராக இல்லையாம்.

அம்மணியை நடிக்க வைப்பதா இல்லை வேறு நடிகையை நடிக்க வைக்கலாமா என்று தயாரிப்பாளர் யோசிக்கிறாராம். அந்த நடிகை கேட்ட சம்பளத்தை விட மிக குறைந்த பணத்திற்கே சிறப்பாக நடிக்கும் நடிகைகள் அந்த மாநிலத்தில் உள்ளார்கள்.

அதனால் அம்மணி போட்ட கன்டிஷனால் படக்குழுவுக்கு எந்த வருத்தமும் இல்லை. நடிகையை நம்பி வெயிட்டான கதாபாத்திரங்களை கொடுக்க பெரும்பாலான இயக்குநர்கள் தயாராக இல்லை. இந்நிலையில் தான் நடிகை தனது சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்தியுள்ளார்.

நானும் நடிகை தான், நான் நல்லா நடிப்பேன் என்று அவர் மீண்டும் மீண்டும் கூறி வருவதை நம்ப யாரும் தயாராக இல்லை. நடிகையின் நிலைமை பாவமாக உள்ளது. ஆனால் அவர் கேட்கும் சம்பளத்தால் அவரை பார்த்து பரிதாபப்படக் கூட ஆள் இல்லை.

முகமூடி கிழிந்தது… பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான்? கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான்

பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வனிதா வந்த பின்னரே நிழ்ச்சி மிகவும் சுவாரஷ்யமாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த வாரம் வனிதா எலிமினேட் ஆனார் என்ற தகவல் பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த பல பிரச்சினைகளுக்கு வனிதாதான் காரணமாக இருந்தார் என்பதால் அனைத்து போட்டியாளர்களும் அவரை நாமினேட் செய்தனர்.

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா எவிக்ட் செய்யப்பட்டார். இந்த வாரம் தான் வனிதா அமைதியாகவும் மற்றவர்களுக்கு நல்ல மாதிரியான அட்வைஸ்களையும் கொடுத்து தனக்குள் இருக்கும் இன்னொரு முகத்தையும் காட்டினார். மக்கள் மத்தியில் வனிதா ஒரு சிறந்த போட்டியாளர் என்ற பெயர் வரும் போது அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இது தான் அவரின் உண்மையான குணம் என்பது பலருக்கு அவர் வெளியேறும் தருணத்தில் தெரிய வந்துள்ளது. நிகழ்ச்சியின் இறுதியில் கூட வனிதாவை கமலே பாராட்டியுள்ளார். இப்படியான ஒரு சூழலில் அவர் வெளியேற்றப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, இன்னும் நிகழ்ச்சி முடிய சில வாரங்களே இருக்கும் நிலையில் வனிதா இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக இருந்திருக்கும் என்பது பார்வையாளர்களின் கருத்தாக இருந்து வருகிறது.

பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று உள்ளே நுழையும் பிரபலம்… டிக்கெட் டூ பினாலே இறுதிப்போட்டிக்கு செல்வது யார்?

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி கட்டத்தை எட்டிவரும் நிலையில் போட்டியாளர்களின் நிலை என்ன என்பதைக் குறித்து பார்வையாளர்கள் அதிகமாகவே ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

தற்போது நடக்கும் நிகழ்ச்சியில் இதுவரை போட்டியாளர்களுக்கு கஷ்டமான டாஸ்க் என்பதை இன்னும் கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.பிக்பாஸ் சீசன் 1 யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள். அதிலும் சுஜா, சினேகன் பங்கேற்று கடைசிவரை முட்டிக்கொண்டிருந்த கார் டாஸ்க்கை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள்.

டிக்கெட் டூ பினாலே என்று ஆரம்பித்த கடினமான டாஸ்கில் சினேகள் வெற்றி பெற்று கோல்டன் டிக்கெட்டினைப் பெற்று இறுதிப்போட்டிக்கு நேரடியாக தெரிவானார். இவருக்கு கமல் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து இந்த டிக்கெட்டினைக் கொடுத்தார்.

அதே போல் இரண்டாவது சீசனில் ஜனனி நேரடியாக இந்த டாஸ்க் மூலமாக தெரிவானார்.தற்போது இந்த சீசனுக்கு இறுதிப்போட்டிக்கு நேரடியாக தெரிவு செய்வதற்கு டிக்கெட் டூ பினாலே என்ற தலைப்பில் கடுமையான போட்டி இந்த வாரம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் பிரபலம் ஒருவர் உள்ளே நுழைந்து டிக்கட் டூ பினாலேவிற்கான டாஸ்கை போட்டியாளர்களுக்கு அறிமுகம் செய்யவிருக்கிறாராம்.

இந்த பகுதி இன்று நிகழ்ச்சியில் ஒளிபரப்பபடும் என்று எதிர்பார்க்கப்படும் இவ்வேளையில், இதுவரை கஷ்டமான டாஸ்க்கினை சந்திக்காத போட்டியாளர்கள் இனி கடுமையான டாஸ்க்கினை செய்யும் அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுகின்றார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாமே….

நடிகை இலியானாவுக்கு இப்படி ஒரு வியாதியா? ரசிகர்கள் அதிர்ச்சி!!

நடிகை இலியானா

பிரபல நடிகை இலியானா தன்னுடைய நீண்டநாள் காதலர் ஆன்ட்ரூ நீபோன் என்பவரை சமீபத்தில் பிரிந்துவிட்டார் என செய்திகள் வெளியானது. அதை நிரூபிக்கும் விதத்தில் அவரும் இந்தியாவில் தனியாகவே பொது இடங்களுக்கு சென்று வருகிறார்.

இந்நிலையில் தற்போது இலியானா கூறியுள்ள ஒரு விஷயம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பதாக அவர் கூறியிருப்பது தான் பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

காலையில் எழுந்து பார்க்கும்போது கால்களில் அடிபட்டு இருக்கும் என்று இலியானா கூறியுள்ளார்.

பிக்பாஸ் சாண்டியை அழ வைத்த முக்கிய பெண் : கண்கலங்கிய மனைவி : வாழ்க்கையில் முதல் முறையாக நடந்த சம்பம்!!

பிக்பாஸ் சாண்டி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுக்க ஃப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்களின் குடும்பத்தார் பலர் வந்திருந்தார்கள். அழுகை, கோபம், சந்தோசம் எல்லாம் நிரம்பி வழிந்தது.

இதில் சாண்டியை காண அவரின் மனைவி சில்வியா மற்றும் குழந்தை லாலாவும் வந்திருந்தார்கள். சாண்டி மகளை பார்த்து கண்கலங்கி அழுதார். குழந்தையுடன் அனைவரும் கொஞ்சி விளையாடினார்கள்.

இந்நிலையில் சாண்டியில் எதிர்பார்ப்பு என நேற்று கமல் கேட்டபோது என் மச்சினிச்சியும் நானும் நடனமாடுவோம், மாமியாரும் வருவார்கள் என எதிர்பார்த்தேன் ஆனால் அவர்கள் வரவில்லை என கூறினார்.

இந்நிலையில் சாண்டி மாமியார் வெளியே இருந்து இதுவரை சாண்டியை நான் மருமகனாக பார்க்கவில்லை. என் அப்பா, அம்மாவை போல தான் பார்த்தேன். மாப்பிள்ளை என கூப்பிட்டதில்லை.

இப்போது முதல் முறையாக சொல்கிறேன் ஜெயித்துவிட்டு வாங்க மாப்பிள்ளை என கூறி வாழ்த்தியுள்ளார்.

வனிதாவை ஏமாற்றிய பிக்பாஸ்!!

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை வனிதா. அதில் அதிகாரத் தன்மையாலும், மற்றவர்கள் அடக்கி ஆள்வது போல பேசியதால் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார்.

முன்பே வெளியேற்றப்பட்டாலும் மீண்டும் ஒய்ல்டு கார்டு சுற்று மூலம் போட்டியாளராகும் வாய்ப்பை மீண்டும் பெற்றார். பிக்பாஸ் விட்டில் கடந்த வாரம் குடும்ப சுற்றில் போட்டியாளர்களை காண அவரின் குடும்பத்தார்கள் வந்தார்கள். இதில் வனிதாவின் இரண்டு மகள்கள் வந்தார்கள்.

இந்நிலையில் நேற்று கமல் ஹாசன் வனிதாவை அன்னை வனிதா அவர்கள் என கூறி பெருமைப்படுத்தியதோடு வனிதா மீது இருந்த முந்தய இமேஜ் மாறிவிட்டது. எனக்கும் ஆச்சர்யமாக இருந்தது. மாற்றம் வந்துவிட்டது என கூறி பாராட்டி பேசினார்.

அப்போது வனிதாவிடம் எதிர்பார்ப்பு குறித்து கேட்ட போது அவர் மனக் குமுறலோடு குழந்தைகள் மீதிருந்த பாசத்தால் மற்றவர்களை பகைத்துவிட்டேன். தன் மகன் வருவான். பிக்பாஸ் அழைத்துக்கொண்டு வருவார் என எதிர்பார்த்தேன்.

பரவாயில்லை, அவனுக்கு ஏதோ என் மீது கோபம் இருக்கிறது. அவன் என்னை புரிந்துகொண்டு திரும்பி வருவான் என நம்புகிறேன் என கூறினார்.

ஆ பாச திரைப்பட நடிகையானது எப்படி? அதிலிருந்த சவால்கள் : மனம் திறந்து பேசிய மியா கலீபா!!

மியா கலீபா

ஆ பாச திரைப்பட நடிகையாக இருந்த மியா கலிபா அந்த துறைக்குள் தான் நுழைந்தது பற்றியும் பின்னர் வெளியேறியது எப்படி எனவும் மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்து பேசியுள்ளார்.

ஒரு சமயம் ஆ பாச திரைப்பட துறையில் கொடி கட்டி பறந்தவர் நடிகை மியா கலீபா. பின்னர் ஆபாச படங்களில் நடிப்பதில்லை என முடிவு செய்து அவர் அதிலிருந்து விலகிவிட்டார்.

அவர் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில், நான் என் சிறு வயது முழுவதும் மிகவும் பருமனாக இருந்தேன். ஆண்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை, நான் க வர்ச்சிகரமாக இல்லை என்று நினைப்பேன்.

பின்னர் என் எடையை கணிசமாக குறைக்க தொடங்கினேன். மிகவும் பெரிதாக இருந்த என் மார்பகங்கள், சரியான அளவிற்கு மாறின. திடீரென ஆண்கள் பார்வை என் பக்கம் திரும்பியது. முதன்முதலில் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது. என்னை அவர்கள் புகழ்ந்து பேசியதை முதல் முறையாக கேட்டேன்.

திடீரென ஒருவர் வந்து என்னை ஆ பாசப் படங்களில் நடிக்க அழைக்கவில்லை. என்னை பார்த்து நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், மொடலிங் செய்கிறீர்களா? நி ர்வாண மொடலாக நீங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். இப்படி தான் ஆ பாச திரைப்பட துறைக்குள் நுழைந்தேன்.

ஹிஜாப் அணிந்து ஆ பாசக் காட்சிகளில் நான் நடித்த போது ஐஎஸ் இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் என்னை மி ரட்டினார்கள்.

ஆ பாச படங்களில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்தபின்னர் ஒரு மாதம் கழித்து நான் ஒரு சந்திப்புக் கூட்டத்தை ஒருங்கிணைத்து, அவர்களிடம் என் ராஜினாமா கடிதத்தை அளித்தேன். பின்னர் அவர்களிடம் நான் எப்படி உணர்கிறேன் என்று கூறினேன்.

என்னை அந்த துறையை விட்டு போக வேண்டாம், இதெல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார்கள், ஆனால் நான் என் முடிவை மாற்றவில்லை என கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட இலங்கையை சேர்ந்த நடிகை சுஜாதா : கவனிக்கப்படாத கண்ணீர் கதை!!

நடிகை சுஜாதா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர் சுஜாதா. இலங்கையின் காலியில் கடந்த 1952ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி சுஜாதா பிறந்தார்.

இளம் வயதிலேயே இந்தியாவின் கேரள மாநிலத்துக்கு வந்து செட்டில் ஆன சுஜாதா அங்கு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். சினிமா மீது அவர் பெரிதாக ஆர்வம் இல்லாமல் இருந்தும் அவரை தேடி சினிமா வாய்ப்புகள் வந்தன.

1971-ம் ஆண்டு தபஷ்வினி என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். சுஜாதா எர்ணாகுளம் ஜங்ஷன் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இயக்குநர் கே.பாலசந்தர் அவரை பார்த்தார்.

சுஜாதாவின் நடிப்பு, பாலசந்தரைக் கவர்ந்த நிலையில் அவரின் அவள் ஒரு தொடர்கதை படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் சுஜாதா.

தமிழில் அது அவரின் முதல் படம் என்பதை நம்பமுடியாத அளவில் சுஜாதாவின் நடிப்பு பிரமிக்க வைத்தது. பின்னர் பல திரைப்படங்களில் நடித்த சுஜாதா முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

சிவாஜி கணேசன், முத்துராமன், சிவக்குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாகேஸ்வரராவ், சோபன் பாபு, சிரஞ்சீவி, மோகன் பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

முன்னணி நடிகையாக இருந்தபோது, ஜெயகர் என்பவரைக் காதலித்துக் கரம்பித்தார். திருமண பந்தத்தின் மூலம் சுஜாதாவைச் சுற்றி ஒரு வேலி உண்டாக்கப்பட்டது. ஒரு கட்டத்தில், இவரிடம் கதை சொல்லவும், கால்ஷீட் பெறவும் ஏன் அவரை சந்திப்பதுமே பெரிய சவாலாக இருந்தது.

அதற்குச் சுஜாதா இடம் கொடுத்தாரா என்பதும் தெரியவில்லை. இருப்பினும், சினிமாவில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். 1990-ம் ஆண்டுக்குப் பிறகு, பெரும்பாலும் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார்.

சுஜாதாவின் கடைசித் தமிழ்த் திரைப்படம், அஜித்துடன் நடித்த வரலாறு. பின்னர் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர், 2011-ம் ஆண்டு காலமானார்.

அப்போது தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் தருணம். பிரசாரம், தேர்தல், ஆட்சி மாற்றம் என அப்போதைய அரசியல் சூழல்களால் சுஜாதாவின் மரணமும் பலருக்கும் அறியா கதையாகவே முடிந்துவிட்டது தான் பெரும் சோகம்.

மகள் வயது பெண்ணுடன் திருமணம் : தொடர் சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகர்!!

மிலிந்த் சோமன்

அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்தது குறித்த தொடர் சர்ச்சைக்கு, நடிகர் மிலிந்த் சோமன் விளக்கம் அளித்துள்ளார். தமிழில் பையா, அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்களில் நடித்தவர் மிலிந்த் சோமன்(53).

பிரபல நடிகரும்-மொடலுமான இவர், தனது மனைவியும், பிரெஞ்ச் நடிகையுமான Mylene Jampanoi-வை கடந்த 2009ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன்பின்னர் கடந்த ஆண்டு, விமான பணிப்பெண்ணான அங்கிதா கொன்வரை(26) காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு இடையிலான வயது வித்தியாசம் 27 என்பதால், சமூக வலைதளங்களில் இவர்களது திருமணம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

அதிலிருந்து தொடர் சர்ச்சைக்கு மிலிந்த் ஆளானார். இந்நிலையில், தன்னுடைய திருமணம் குறித்த தொடர் சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளக்கம் அளித்துள்ளார்.

மிலிந்த் சோமன் தனது காதல் திருமணம் குறித்து கூறுகையில், ‘பொதுவாக சமூகம் காதலிப்பவர்களுக்கு சாதி, மதம், பாலினம், நாடு என பல காரணங்களை கூறி தடைகளை உருவாக்கும்.

ஒருவர் தங்களுக்கு பொருத்தமான ஒரு உறவை தேர்வு செய்வதற்கு அவரவருக்கு உரிமையும், சுதந்திரமும் உண்டு. அது அவரவர் உள்ளங்களில் ஏற்படும் உணர்வுகளின் அடிப்படையில் அமைய வேண்டும்.

இதில் சமூகம் தங்களது கருத்துக்களை கூறுவது சரியல்ல. இருவரும் பரஸ்பரம் புரிந்துகொண்டு அன்பை பரிமாறிக்கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வது தான் அவசியமானது’ என தெரிவித்துள்ளார்.

ஹீரோயின் இல்லாத படமா? வெளியானது கைதியின் கதை!!

ஹீரோயின் இல்லாத படமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் தளபதியுடன் இருந்தாலும்.அவர் இப்போ இயக்கி வெளிவர இருக்கும் படம் கைதி. இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் பிகில் படத்துடன் போட்டியிட இருக்கிறது.

இந்த நிலையில் கைதி படத்தின் முக்கிய ரகசியங்கள் வெளியாகியுள்ளது. படத்தின் ஒன்லைன் கேட்பவர்களுக்கு ஹாலிவுட் படம் பர்ஜ் நினைவிற்கு வரலாம் என்று கூறப்படுகின்றது. இந்த படத்தில் ஹீரோயின் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.