லொஸ்லியாவின் தந்தைக்கு குவியும் பாராட்டுகள் : யார் இவர்? கனடாவில் என்ன செய்கிறார்?

லொஸ்லியாவின் தந்தைக்கு குவியும் பாராட்டுகள்

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் உலகளவில் தமிழ் ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சி பிக்பாஸ், இந்த சீசனில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

இறுதி நாட்களை நெருங்கியுள்ளதால் Freeze Task வைக்கப்படுகிறது, செய்வாய்க்கிழமை ஒளிபரப்பட்ட நிகழ்ச்சியில் கனடாவிலிருந்து லொஸ்லியாவின் தந்தையான மரியநேசன் வந்திருந்தார்.

10 ஆண்டுகள் கழித்து மகளை பார்த்த சந்தோஷம் இருந்தாலும், பிக்பாஸில் அவரது செயல்களால் மனம் நொந்து போயே காணப்பட்டார். உள்ளே வந்ததும் மகளை அவர் கண்டித்த விதம், சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுகளை பெற்றிருக்கிறது.

யார் இவர்? : இலங்கையின் கிளிநொச்சியில் மரியநேசன்- மேரி மாக்ரட்டின் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர், 1996ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதி லொஸ்லியா பிறந்தார்.

யுத்த சூழ்நிலையின் காரணமாக திருகோணமலை மாவட்டத்திற்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்துள்ளனர். அங்கு அன்புவெளிபுரம் பகுதியில் ஓலைகளானாலான வீடொன்றைக் கட்டி வாழ்ந்து வந்துள்ளனர்.

பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில், மரியநேசன் ஓட்டுநராக பணியாற்றி குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இப்படியாக வாழ்க்கை சென்று கொண்டிருக்க, 2009ம் ஆண்டு காலப்பகுதியில் தொழில் வாய்ப்பை தேடி கனடாவுக்கு சென்றுள்ளார்.

அதன்பின்னர் லொஸ்லியா மற்றும் அவரது சகோதரிகள் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். திருகோணமலை சென் மேரிஸ் கல்லூரியில் கல்வி கற்ற லொஸ்லியாவுக்கு, தமிழில் ஆர்வம் அதிகம். பல்வேறு போட்டிகளில் தன் திறமையை லொஸ்லியா வெளிப்படுத்த, பிரபல தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஊடக துறையை தெரிவு செய்த லொஸ்லியா, முதலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி, செய்தி வாசிப்பாளராகவும் தன்னை தரம் உயர்த்தி கொண்டார்.

இதன் பின்னர் இலங்கை மக்கள் மத்தியில் பிரபலமான லொஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் உலக பிரபலமடைந்ததுடன் பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.

எனினும் தந்தை மற்றும் குடும்பத்தினரின் அறிவுரையால் லொஸ்லியாவின் செயல்பாடுகளை இனிவரும் நாட்களில் பார்க்கலாம்.

தர்ஷன் அம்மா, தங்கை சொன்ன அந்த ஒரு வார்த்தை : பொங்கி எழுந்த போட்டியாளர்கள்!!

தர்ஷண் அம்மா, தங்கை சொன்ன அந்த ஒரு வார்த்தை

தர்ஷணின் அம்மா மற்றும் தங்கை இருவரும் வந்திருந்தார்கள். அவர்களுக்கு நியூ படத்தில் இருந்து காலையில் தினமும் கண்விழித்தால் நான் கை தொழும் தெய்வம் அம்மா என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது.

அவர்களை பார்த்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி. அனைவரும் அவர்களோடு கலந்துரையாடினார்கள். பின் தர்ஷணின் தங்கச்சி சாண்டி அண்ணா இல்லையெனில் இந்த சீசன் 3 போர் என கூறினார்.

அதே போல தர்ஷணின் அம்மாவும் கூறினார். உடனே எல்லோரும் சாண்டியை கிண்டலடித்தனர். பின்னர் தர்ஷணின் அம்மா சியாமளாவுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பின் பிக்பாஸ் குரலில் வாழ்த்து கூறினார். உடனே சாண்டி சொல்வது போல சியாமளா நன்றி குருநாதா என கூற அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

தூக்கி எறிந்து பேசிய சேரன் மகள் : தனியாக கூட்டிச்சென்று காதில் ஓதிய ரகசியம் – கண்கலங்கிய சேரன்!!

தூக்கி எறிந்து பேசிய சேரன் மகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரு நாட்களாக போட்டியாளர்களுக்கு மறக்க முடியாத நிகழ்வுகளாக அமைந்துவிட்டது. முகென் குடும்பத்தாரை தொடர்ந்து, வனிதா மகள்கள், தர்ஷண் குடும்பத்தார், சேரன் குடும்பத்தார் என வந்திருந்தார்கள்.

சேரன் இயக்கிய ஆட்டோகிராஃப் படத்தில் இருந்து ஞாபகம் வருதே பாடலை போட்டு சேரன் குடும்பத்தாரை பிக்பாஸ் வீட்டிற்குள் வரவேற்றனர். அப்போது சேரன் கண்கலங்கி அழ, அவரின் மகள் தாமினி, சேரனின் அம்மா கமலாவும் அழுதுவிட்டார்.

மேலும் சேரனை பார்க்க சேரனின் தங்கை வனிதாவும் வந்திருந்தார். பின் சேரனின் மகள் தன் அப்பாவை தனியே கூட்டிச்சென்று நானும் அக்கா மட்டும் தான் உங்களுக்கு மகள்கள்.

என் தோழிகள் எல்லாம் உங்க அப்பா உன்ன மறந்திட்டாரா. லாஸ்லியா பத்தியே பேசிகிட்டு இருக்கிறாரு என கேட்பதாக சொல்லி வருத்தப்பட்டார்.லாஸ்லியா பக்கமே போகாதீங்க. அவ கூட பேசினீங்கனா நான் டென்சன் ஆகிடுவேன். உங்கள விட்டுக்கொடுத்த லாஸ்லியா கூட பேச்சு வச்சிகாதீங்க என கூறியுள்ளார்.

மேலும் தாமினி லாஸ்லியாவிடம் நீங்கள் எங்க அப்பா பக்கம் நிற்காவிட்டாலும் அவர் உங்க கூட எப்போதும் இருப்பார். எங்கள் குடும்பத்தில் எல்லோரும் உங்களை சந்திக்க காத்திருக்கிறார்கள் என கூறினார்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் பிரபலம் இவர்தானா?- ரசிகர்களுக்கு இது குஷியா? வருத்தமா?

வெளியேறப்போகும் பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாடு ரசிகர்கள் பரபரப்பாக்கிய ஒரு ஷோ. இறுதி கட்டத்தை நிகழ்ச்சி எட்ட இருக்கிறது, போட்டியாளர்களும் குறைந்து கொண்டே வருகின்றனர்.

இந்த வாரம் வந்துவிட்டது, யார் வெளியேறுவார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது. எலிமினேஷனுக்கு நாமினேட் ஆனவர்கள் கவின், வனிதா, தர்ஷன், ஷெரின் மற்றும் சாண்டி.

வாக்கு எண்ணிக்கைகள் வைத்து பார்க்கும் போது இந்த வாரம் வனிதா வெளியேறுவார் என கூறப்படுகிறது. அவருக்கு தான் மிக குறைவான ஓட்டுகள் வந்துள்ளது.

வனிதா வீட்டைவிட்டு வெளியே போவது ரசிகர்களுக்கு வருத்தமா? குஷியா?, அவர் தான் வெளியேறுகிறாரா, பொறுத்திருந்து பார்ப்போம்.

கவினுக்கு பிக்பாஸ் வைத்த ஆப்பு : அடுக்கடுக்காக சரமாறி கேள்விகள் கேட்ட நபர் : பயத்தில் காதல் மன்னன்!!

கவினுக்கு பிக்பாஸ் வைத்த ஆப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது உள்ளே 7 பேர் போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இதில் ஒவ்வொருவரும் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். காரணம் அனைவரின் உறவுகளும் உள்ளே வந்துள்ளதால் தான்.

இன்று கவினின் நண்பர் பிரதீப் உள்ளே வருகிறார். அப்போது கவின் இவனை இப்போதே அனுப்பிவிடுங்கள், இவனை அனுப்பாதீங்ககனு சொன்னேனே பிக்பாஸ், அவனுக்கு எனக்கு கருத்து ஒத்துவராது என கூறுகிறார்.

அதற்கு அவரின் நண்பர் கவின் சுயநலமாக தன்னை புத்திசாலியாக நினைத்துக்கொண்டிருக்கிறான், நல்லவர்களை கெட்டவர்கள் என நினைக்கிறான் என கூறினார்.

மேலும் கவின் நீ உன் விளையாட்டை விளையாடு, நீ யாருக்கும் விட்டுக்கொடுக்க வேண்டாம், நீ வெற்றி பெறுவாய் என எதிர்பார்த்திருக்கும் நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் நீ செய்வது கடுப்பாக இருக்கிறது. அப்பா, அம்மாவை நினைத்து பார் என அடுக்ககாக பல கேள்விகளை கவினிடம் கேட்கிறார்.

கவினுக்கு யாரும் பாவம் பார்க்கவேண்டாம். எதிர்த்து நில்லுங்கள். அப்போது தான் அவன் விளையாடுவான். ஒரு கட்டத்தில் கவினை ஓங்கி கன்னத்தில் அவர் அறைந்துவிடுகிறார். கவினை அனைவரும் காதல் மன்னன் என கூறுவதுண்டு.

யாரு உனக்கு ஃபிரண்டு? அவளா? வனிதாவை பற்றி அத்தனையும் போட்டுக்கொடுத்த முக்கிய பெண்!!

யாரு உனக்கு ஃபிரண்டு? அவளா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 83 நாட்களை எட்டிவிட்டது. விரைவில் 100 ம் நாட்களை எட்டவுள்ளது. இதில் தற்போது போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்துபோகிறார்கள்.

இன்று ஷெரினின் அம்மா மற்றும் தோழி ஸ்ரீஜா ஆகியோர் உள்ளே வந்திருந்தார்கள். ஷெரின் அம்மா சாண்டியுடன் பாட்டு பாடி நடனமாடி அசத்த, ஒருபக்கம் முகேனை அவர் கலாய்த்தார்.

இது ஒரு பக்கம் இருக்க வனிதாவை நம்பாதே! அவ செய்ஞ்சது. நீ வேலை செய்யல, அது பண்ணல, இது பண்ணல நு அவ சொல்றது சின்னபிள்ள தனமா இருக்கு. அவள் உனக்கு தோழி கிடையாது. சொல்லிட்டேன். எப்படி ஹாய் சொன்னேன்னு எனக்கு தெரியல. அவங்கள மேல செம கோபத்துல இருக்கேன். யாரையும் நம்பாதே என கூறியுள்ளார்.

கவின், லாஸ்லியா காதலுக்கு பச்சக்கொடி காட்டிய பிரபல இயக்குனர் : ஆதாரத்தை வெளியிட்டு கடும் கேள்வி!!

கவின், லாஸ்லியா காதலுக்கு பச்சக்கொடி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது விருந்தினர் வாரம் எனலாம். உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் அவ்வப்போது வந்து போகிறார்கள்.

இதனால் போட்டியாளர்கள் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்துள்ளார்கள். இதில் அண்மையில் வெளிநாட்டிலிருந்து லாஸ்லியாவின் அப்பா, அம்மா தங்கைகள் ஆகியோர் வந்திருந்தனர்.

உள்ளே வந்ததும் காதல் விசயத்தில் லாஸ்லியாவின் நடத்தைகளை கண்டித்து அறிவுரை கூறினார். அதே வேளையில் கவினிடமும் அவர் முகம் கொடுத்து நன்றாக பேசினார். உள்ளே இருந்து சேரனும் அவர்களின் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்தார்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் வசந்த் பாலன் மலையாள பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்துகொண்ட பியர்ல் மானே மற்றும் சீரியல் நடிகர் ஸ்ரீனிஷ் இருவரும் காதல் வயப்பட்டு பின் பிக்பாஸ் முடிந்து திருமணம் செய்துகொண்டார்கள்.தமிழகத்தில் இன்னும் காதல் எதிர்ப்பு இருக்கிறது? என்ன செய்ய பிக்பாஸ்! அனைவரும் கேம் விளையாடுங்க என அறிவுறுத்துகிறார்கள்.

என்னை பொறுத்தவரை உலகின் சின்ன மினியேச்சர் தானா பிக்பாஸ் வீடு. இங்கே கேம் விளையாடக்கூடாது, வாழத்தானே வேண்டும், வாழும் போது காதல் வருவது சகஜம் தானே என அடுக்கடுக்காக கேள்வி கேட்டுள்ளார்.

திரிஷா இஸ் பேக்.. டாப் ஹீரோ படத்தில் ஒப்பந்தம்!!

திரிஷா இஸ் பேக்..

தமிழ் சினிமாவில் பதினைந்து வருடங்களுக்கு மேல் ஹீரோயினாக ஜொலித்து வருகிறார் நடிகை திரிஷா. பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த அவர் அதன் பிறகு சோலோ ஹீரோயினாக பல படங்களில் நடித்தார். தற்போதும் அவர் கைவசம் ராங்கி, கர்ஜனை, சுகர், 1818 உள்ளிட்ட பல படங்கள் உள்ளன.

இந்நிலையில் தற்போது த்ரிஷா நடிகர் மோகன்லால் ஜோடியாக ஒரு மலையாள படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தினை ஜீத்து ஜோசப் இயக்குகிறார். மலையாளத்தில் திரிஷ்யம், தமிழில் பாபநாசம் படத்தினை இயக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சேரன் மகள், அப்பாவிற்கு அதிரடி கண்டிஷன்- மகள் கேட்டதை செய்வாரா? முடியுமா?

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சேரன் மகள்

பிக்பாஸில் இந்த வாரம் கலகலப்பாக செல்கிறது. போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வருகிறார்கள் எல்லோரின் முகத்திலும் ஒரே சிரிப்பு தான்.

முகென், லாஸ்லியா, தர்ஷன், வனிதா வீட்டின் உறவினர்கள் வந்துவிட்டார்கள். அடுத்து சேரனின் மகள் வீட்டிற்குள் வருகிறார்.

வீட்டிற்குள் வந்த அவர் தனது அப்பாவிடம் ஒரு கண்டீஷன் போடுகிறார். 5 பேரிடம் பேசுங்கள் ஆனால் அந்த 2 பேரிடம் பேசினால் நான் உங்களுடன் பேச மாட்டேன் என்று கட்டளையிடுகிறார்.சேரன் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தனது அம்மாவின் நிலையை தெரிந்துகொண்டு கவின் இப்படி ஒரு முடிவு எடுத்தாரா? நிகழ்ச்சியில் புதிய மாற்றமா?

கவின் இப்படி ஒரு முடிவு எடுத்தாரா?

தமிழில் நடந்த 2 பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அதிரடியாக சில விஷயங்கள் நடந்துள்ளது.இந்த 3வது சீசனில் சரவணன் அறிவிப்பு இன்றி வெளியேறுவது, மதுமிதா த ற்கொ லை செய்தது என சில பரபரப்பான சம்பவங்கள் நடந்தது.

இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி வரும் தகவல் என்னவென்றால் வீட்டிற்குள் நுழைந்த சாண்டியின் மனைவி கவினின் குடும்ப பிரச்சனையை கூறியதாகவும் அதை தெரிந்துகொண்ட அவர் வீட்டைவிட்டு அதிரடியாக வெளியேறிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.