மாடலும், விளம்பர பட நடிகையுமான அபிராமி வெங்கடாசலம் கடந்த 2017-ம் ஆண்டு இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கி, கலையரசன் நடித்து வெளிவந்த ‘களவு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.
மேலும், Ctrl Alt Del’ என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தின் ஆடிஷனுக்கு சென்று, படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.
மிகவும் சிறப்பாக பாடுவாராம். மாதவன், அஜித் உடன் எல்லாம் நடிக்க வேண்டும் என ஆசை இருந்தவருக்கு, இறுதியாக அஜித்துடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இவர்sசமீபத்தில் உடலோடு ஒட்டிய மிக இறுக்கமான உடையில் செம்ம ஹாட்டான போஸ் கொடுத்து இளசுகளை ஜொள்ளு விட வைத்துள்ளார்.
சிவா மனசுல சக்தி படம் தமிழ் சினிமாவில் இயக்குனராக வந்தவர் எம்.ராஜேஷ். பின்னர் பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் அழகு ராஜா, கடவுள் இருக்கான் குமாரு படங்களை இயக்கினார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வந்த மிஸ்டர் லோக்கல் படத்தை இயக்கியிருந்தார். தற்போது அவரை சோகம் சூழ்ந்துள்ளது. அவரின் மாமனார் அருமணயம் ஜெயகரன் இன்று காலமானார்.
இதனால் குடும்பத்தினர், உறவினர்கள் சோகத்தில் உள்ளனர். சினிஉலகத்தின் சார்பாக அவருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்த வேகம் தற்போது இல்லை என்பதே உண்மை. இதற்கு முக்கிய காரணம் கவின், லொஸ்லியாவின் காதல் தான்.
இதை பார்த்த பலருக்கும் அலுப்பு தான் வருகின்றது, அந்த வகையில் லொஸ்லியா இலங்கையில் இருந்து வந்து தன்னை எல்லோருக்கும் தெரிய வேண்டும், புகழடைய வேண்டும் என்பதற்காக தான்.
ஆனால், இவர் கவின் பின்னாடியே சுற்றி வருவது பலருக்கும் கோபம் தான், இதனால், இவருக்கு கெட்டப்பெயர் தான் வந்துள்ளது.
இதன் காரணமாக லொஸ்லியாவின் புகழ் அதிகமாவதை தொடர்ந்து குறைந்து தான் வருகிறது, பார்ப்போம், வரும் நாட்களில் சுதாரித்து ஆடுகிறாரா என்று,காத்திருப்போம்.
பிரபிரபல நடிகர் தீபக்கின் தந்தை சென்னையில் உள்ள அவரது வீட்டில் ம ர்மமான முறையில் இ றந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தக திமி தா, முன் தினம் பார்த்தேனே, இவனுக்கு தண்ணில கண்டம் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் தீபக் தினகர்.
இவர் திருமதி செல்வம், தென்றல் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளதோடு தொகுப்பாளராகவும் மக்களிடையே பிரபலமானவராக இருந்து வருகிறார்.
தீபக் சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வருகிறார். அவர் தந்தை விட்டர் திகார் ராவ் மற்றும் தாய் விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் விட்டலின் மனைவி கடந்த 26 -ஆம் திகதி கும்பகோணத்துக்கு சென்றார்.
இதனால் விட்டல் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், விட்டல் மனைவி கும்பகோணத்தில் இருந்து சனிக்கிழமை அதிகாலை ஊர் திரும்பினார். அப்போது வீட்டில், விட்டல் ர த்தக் கா யங்களுடன் இ றந்து கிடப்பதைப் பார்த்து அ திர்ச்சியடைந்தார்.
இது குறித்து தகவலறிந்த விருகம்பாக்கம் பொலிசார் வழக்குப் பதிவு செய்து, விட்டல் திகார் ராவ் இ றந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல திரைப்பட நடிகையின் வயிற்றில் ஏதோ கோடு, கோடாக இருக்கிறதே என்று கிண்டல் செய்த நபர்களுக்கு அவர் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
பாலிவுட் நடிகையான கத்ரீனா கைப் போன்றே இருக்கிறார் என்று பலராலும் கூறப்பட்டவர் தான் நடிகை ஜரீன் கான். இவர் சல்மான் கானின் வீர் திரைப்படம் மூலம் அறிமுகமாகினார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது வயிறு தெரியும்படி புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்திருந்தார். அதைக் கண்ட இணையவாசிகள், அது என்ன உங்களின் வயிற்றில் கோடு, கோடாக உள்ளது. வயிறை பார்த்தாலே ஒரு மாதிரியாக இருக்கிறது.
இப்படி ஒரு வயிறை வைத்துக் கொண்டு அது தெரியுமம்படி புகைப்படம் வெளியிடலாமா? பாலிவுட் நடிகையாக இருக்கும் உங்களுக்கு இப்படி ஒரு மோசமான வயிறா என்று மோசமாக விமர்சித்தனர்.
சிலரோ ஜரீன் உங்களை நினைத்து பெருமையாக உள்ளது. வயிற்றுக்கு மேக்கப் போட்டு அழகாக காட்டாமல் உள்ளதை உள்ளபடி பெருமையாக காட்டியுள்ளீர்கள் என்றும் பாராட்டினர்.
நெட்டிசன்கள் தன்னை விளாசியதை பார்த்த ஜரீன் கான் கூறியதாவது, என் வயிறு ஏன் அப்படி இருக்கிறது என்று வியப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
50 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்த ஒருவரின் வயிறு இப்படித் தான் இருக்கும். போட்டோஷாப் செய்யவில்லை என்றால் வயிறு இப்படி தான் தெரியும்.
எப்போதும் உண்மையாக இருக்க விரும்புபவள் நான். அதனால் என் வயிறை நினைத்து நான் வெட்கப்படவில்லை. எனவே, என்னை கிண்டல் செய்வது தேவையில்லாதது என்று தெரிவித்துள்ளார்.
இளம் நடிகை ஒருவர் தனது அப்பா வயது நடிகர் ஒருவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறார். பிரபல இயக்குநர் ஒருவரால் திரையுலகில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் அந்த நடிகை. அவர் அழகையும், சிரிப்பையும் மட்டும் வைத்து காலத்தை ஓட்டுவதாக தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது.
அவரை நம்பி வெயிட்டான கதாபாத்திரங்களை கொடுக்க இயக்குநர்கள் தயாராக இல்லை. அதனால் ஹீரோவை காதலித்து, மரத்தை சுற்றி சுற்றி வந்து டூயட் பாடும் கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார். அவர் ஹீரோயின் தான் என்றாலும் சில படங்களில் அவர் எதற்காக இருக்கிறாரே என்பது தெரியாமல் உள்ளது. இந்நிலையில் நடிகை அண்மையில் சர்ச்சை ஒன்றில் சிக்கினார். இதையடுத்து அவரை பலரும் கண்டபடி விமர்சனம் செய்தனர்.
ஆனால் நடிகை அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அமைதியாக உள்ளார். இந்நிலையில் நடிகைக்கு ஒரு ஆசையாம். அதாவது தனது அப்பாவை விட பெரியவரான நடிகர் ஒருவருடன் அதுவும் ஜோடியாக நடிக்க வேண்டுமாம்.
நடிகையின் இந்த ஆசை காத்து வாக்கில் அந்த சீனியர் நடிகரின் காதுகளில் விழுந்துள்ளதாம். அந்த சீனியரின் அடுத்த படத்தில் அம்மணி தான் ஹீரோயின் என்று கூறப்படுகிறது. அந்த சீனியரின் படத்தில் நடித்தாலும் அவருக்கு நிச்சயம் வெயிட்டான கதாபாத்திரம் எல்லாம் கிடைக்காது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
என்னால் சிறப்பாக நடிக்க முடியும், நடிக்க ஸ்கோப் உள்ள கதாபாத்திரங்களை கொடுங்கள் என்று நடிகை சில இயக்குநர்களிடம் கேட்டும் அவர்கள் அதை காதில் வாங்கவில்லையாம்.
நடிகை குஷ்பூ தற்போது முக்கிய டிவி சானல் சீரியலில் நடித்து வருகிறார். தீவிர அரசியலில் இருந்து வந்த அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க அண்மையில் விருப்பம் தெரிவித்திருந்தார்.
தற்போது அவர் லண்டலில் ஓய்வுக்காக சென்றுள்ளார். அங்கு அவர் வெளியே சென்றபோது ஷாப்பிங் மாலில் இருந்த மொபைல் கவர் ஒன்றை புகைப்படம் எடுத்து அதில் இருப்பது ரஜினிகாந்த் என பெருமையாக பதிவிட்டிருந்தார்.
இதை ரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கும் டேக் செய்திருந்தார். ஆனால் அந்த மொபைல் கவரில் இருந்தது ரஜினி இல்லையாம். அவர் கத்தார் நாட்டின் எமிர் என்று சொல்லப்படுகிற தமிம் பின் ஹமத் என்பவராம்.