உடைந்து போன லாஸ்லியா, சோகத்தில் கவின், புலம்பி தவிக்கும் சேரன் – நடந்தது என்ன?

புலம்பி தவிக்கும் சேரன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 70 ம் நாளை எட்டிவிட்டது. இந்த வாரம் எவிக்‌ஷன் இல்லை என்பது போட்டியாளர்களுக்கு தெரியாது.

காலை முதலே லாஸ்லியா வந்த போன் கால், சேரப்பா லாஸ்லியா உறவை கவின் டிராமா என கூறியது குறித்து நேயர் ஒருவர் போனில் கேட்க லாஸ்லியா அழுகிறார்.

பின் கமல்ஹாசன் லாஸ்லியா செய்யும் தவறுகளை நேரடியாக பக்குவமாக கேட்கிறார். தற்போது சேரன் இன்னும் லாஸ்லியா மீதான அக்கறையில் தர்ஷணிடம் லாஸ்லியா செய்யும் தவறுகளை எடுத்துச்சொல்கிறார்.

கதைக்கு தேவையென்றால் எந்த மாதிரியும் நடிப்பேன் – மனம் திறந்த ரெஜினா!!

மனம் திறந்த ரெஜினா

தமிழ் திரையுலகில் முத்திரை பதித்துள்ள இளம் நாயகிகளில் ஒருவர் ரெஜினா கஸாண்ட்ரா. தமிழில் சரவணன் இருக்க பயமேன், மாநகரம், கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் “நான் நடிக்க வந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் சினிமாவை பற்றி அதிகம் தெரியாது., எந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரியாது. ஆனால் இப்போது நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு படத்திலும் நான் என்னை பற்றியே ஆராய்ச்சி செய்கிறேன். ஒரு படம் தோல்வி அடைந்தால் அதில் எனது பங்கு என்ன என்பது குறித்து யோசிக்கிறேன்.

சில நேரம் நான் செய்வது தவறாகவும் முடிந்து விடுவது உண்டு. இப்போது சினிமா நன்றாக புரிகிறது. கதைக்கு தேவைப்பட்டால் எந்தமாதிரியான கதாப்பாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடிப்பேன்” என்று கூறியிருக்கிறார்.

நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி 17 வயது சிறுமியிடம் வரம்பு மீறிய நடிகர்!!

மந்தர் குல்கர்னி

நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை காட்டி 17 வயது சிறுமியை அரைநிர் வாணமாக புகைப்படம் எடுத்த மராட்டிய நடிகரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த நடிகரும், இயக்குனருமான மந்தர் குல்கர்னி, நடிகர்களை உருவாக்குவதற்காக தனியாக நாடக வொர்க்ஷாப் ஒன்றினை நடத்தி வருகிறார். அங்கு நடிப்பு கற்றுக்கொள்வதற்காக 17 வயது சிறுமி சேர்ந்துள்ளார்.

நாடகத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக சிறுமியிடம் ஆசை வார்த்தை காட்டிய மந்தர், அதற்காக சில புகைப்படங்கள் எடுக்க வேண்டும் எனக்கூறி 16ம் திகதியன்று வீட்டிற்கு தனியாக வருமாறு அழைத்துள்ளார்.

அதனை நம்பி சென்ற சிறுமிக்கு பல்வேறு ஆடைகளை கொடுத்து அணிந்து வருமாறு கூறியுள்ளார். அவர் கொடுத்த அனைத்து ஆடைகளையும் அணிந்து சிறுமியும் புகைப்படம் எடுத்துள்ளார்.

இறுதியில் பிகினி உடையில் வருமாறு அந்த சிறுமியிடம் குல்கர்னி கூறியுள்ளார். அந்த ஆடையினையும் சிறுமி அணிந்து வந்த போது அதன் அளவை எடுத்துக்கொண்டுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பிய சிறுமி, அங்கு நடந்த அனைத்தையும் தன்னுடைய அம்மாவிடம் கூறியுள்ளார்.

இதனைக்கேட்டு அ திர்ச்சியடைந்த அவருடைய அம்மா பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் 22ம் திகதியன்று மந்தர் குல்கர்னியை கைது செய்தனர். இந்த சம்பவமானது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாமியார் ஜக்கி வாசுதேவை சந்தித்த திரிஷா : ஏன் தெரியுமா?

நடிகை திரிஷா

நடிகை திரிஷா சமூக, ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார். யுனிசெப் அமைப்பில் நல்லெண்ண தூதராக இருந்து பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு குரல் கொடுக்கிறார்.

பா லியல் வ ன்கொடு மையில் ஈடுபடுவோரை தண்டிக்க அரபு நாடுகளை போன்று கடுமையான சட்டங்களை இந்தியாவிலும் கொண்டுவர வேண்டும் என்றார்.

வெளியூர்களில் படப்பிடிப்புகள் நடக்கும்போது அருகில் உள்ள கோவில் கள் பற்றி விசாரித்து அறிந்து நேரில் சென்று வழிபடுகிறார். வாரணாசியில் ‘பேட்ட’ படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.

இந்த நிலையில் தற்போது ஈஷா அறக்கட்டளை என்ற அமைப்பை தொடங்கி உலக நாடுகளில் யோகா நிகழ்ச்சிகளை நடத்தி வரும் சாமியார் ஜக்கி வாசுதேவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “ஆன்மிகம் என்பது ஒரு சிறப்பான விஷயம். அமைதியான தெய்வீகம் உள்ள ஆன்மிக குருவை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது” என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஏற்கனவே தமன்னா உள்ளிட்ட சில நடிகைகள் ஈஷா மையத்துக்கு சென்று சிவராத்திரி விழாக்களில் பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கர்ஜனை, பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

அவளுக்கு தெரிஞ்சுடக்கூடாதுன்னு ட்விட்டர்ல டேக் கூட பண்ணலை : விஜி சந்திரசேகர்!!

விஜி சந்திரசேகர்

நடிகை விஜி சந்திரசேகர் இயற்கை விவசாயத்தில் ஆர்வமிக்கவர் என்பது எல்லோருக்குமே தெரியும். “இயற்கை விவசாயத்துல ஈடுபாடு காட்டுவதற்கு என் சின்ன வயசிலிருந்தே, ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு என் மனசுல ஊறிப்போனதுதான் காரணம். சென்னையடுத்த மகாபலிபுரம் பக்கத்துல இருக்கிற எங்களோட பண்ணையில, கிட்டத்தட்ட 20 வருஷமா இயற்கை முறையில் விவசாயம் பண்ணிக்கிட்டிருக்கோம்.

கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளின்னு சில காய்கறிகளை மட்டும் விளைவிக்கலாம்னுதான் ஆரம்பிச்சோம். ஆனா, கடையில் வாங்குற காய்கறிகளுக்கும், எங்க பண்ணையில் இயற்கை முறையில் வளர்ந்த காய்கறிகளுக்கும் இருந்த சுவை வித்தியாசம், ரசாயன மருந்து ஏதும் தெளிக்காத ஃபிரஷ்ஷான காய்கறிகள் ஆகியவை பிடிச்சுப் போச்சு.

வெங்காயத்துல ஆரம்பிச்சு கறிவேப்பிலை, கொத்தமல்லி வரைக்கும் எங்க பண்ணையில இருந்துதான் எங்க வீட்டு சமையல் அறைக்கு வந்துக்கிட்டிருக்கு. அதனால, வீட்டுக்குத் தேவையான அத்தனை காய்கறிகளையும் நம்ம பண்ணையில்தான் சாகுபடி செய்யணும்னு முடிவு பண்ணி, ஆள்களை வேலைக்கு அமர்த்திக் களத்துல இறங்கினோம்.

இப்ப வெங்காயத்துல ஆரம்பிச்சு கறிவேப்பிலை, கொத்துமல்லி வரைக்கும் எங்க பண்ணையில இருந்துதான் எங்க வீட்டு சமையல் அறைக்கு வந்துக்கிட்டிருக்கு. தவிர, நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்க்காக எள்ளு, நிலக்கடலையும்கூட விதைச்சிருக்கோம்” என்று விகடனுக்கு அளித்த பேட்டியொன்றில் அவரே இதைச் சொல்லியும் இருக்கிறார்.

தற்போது, அமேசான் காடுகளில் தீப்பிடித்ததையொட்டி, இயற்கை குறித்த விழிப்புணர்வு பிரசாரமாக விஜி சந்திரசேகரும் அவர் மகள் லவ்லினும் தங்கள் பண்ணையில் வளர்ந்த மரக்கன்றுகளை மற்றவர்களுக்கு இலவசமாக வழங்க ஆரம்பித்திருக்கிறார்கள். பூமியைப் பாதுகாக்கும் இந்தப் பெண்களுடைய செயலுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்க போன் செய்தோம்.

”லவ்லின்கிட்டேயும் என்னைப் போலவே இயற்கை நேசிக்கிற இயல்பு இருக்கு. அமேசான் காடுகள் எரிகிற செய்தி கேள்விப்பட்டதிலிருந்தே அவ அப்செட்டாதான் இருந்தா. சரியா தூங்க மாட்டேங்கிறா. நம்மளால முடிஞ்சதை செய்யணும் மம்மி’ன்னு சொல்லிட்டே இருந்தா. சிலர், அவகிட்டே ‘ஹவுஸ் ஓனருக்குப் பிறகு, அடுத்த படம் என்ன பண்ணப் போறீங்க’ன்னு கேட்டாங்க.

அதுக்கு லவ்லின், ‘உலகம் குளோபல் வார்மிங், அமேசான் காடு எரியறதுன்னு செ த்துக்கிட்டிருக்கு. இந்த நேரத்துல என் அடுத்த படத்தைப் பத்தி யோசிக்கிறதுக்கு எனக்கு நேரமில்லை. என்னால முடிஞ்ச அளவுக்கு மரங்கள் நடப்போறேன். மத்தவங்களுக்கும் கொடுக்கப்போறேன்’னு சொன்னா. அவளுடைய பதில் எனக்கு ஒரு நிமிஷம் ஷாக்காக இருந்தாலும் அடுத்த நிமிஷம் பயங்கர சந்தோஷமாயிட்டேன். இந்தச் சின்ன வயசுல உலகத்தைப் பத்தி கவலைப்படறா என் பொண்ணுன்னு அப்படியே உடம்பு சிலிர்த்துப்போச்சு.

ஃபிளாட்ல குடியிருக்கிறவங்ககிட்டே ‘உங்க வீட்டுக்கு முன்னாடி தெருவுலகூட நான் கொடுக்கிற மரங்களை நடுங்க’ன்னு ரெக்வெஸ்ட் வைக்கிறா.சரி, லவ்லின் ஆசைப்பட்டபடியே மரங்கள் நடலாம்னு முடிவு பண்ணிட்டு, எங்க பண்ணையில் இருந்தே ஆரம்பிச்சோம்.

எங்க பண்ணையில மாமரம், எலுமிச்சை, மாதுளைனு பலவகை மரங்கள் இருக்கு. அதோட விதைகளெல்லாம் கீழே விழுந்து முளைச்சிருக்கும். தரையில அள்ளாம மக்கிப் போய் கிடக்கிற சருகுகள் எல்லாம் அந்த மரங்களுக்கு உரமாகியிருக்கும். அந்த மரக்கன்றுகளையெல்லாம் எடுத்து, எனக்குத் தெரிஞ்சவங்க, அவளுக்குத் தெரிஞ்சவங்கன்னு எல்லாருக்கும் கொடுக்க ஆரம்பிச்சா.

ஃபிளாட்ல குடியிருக்கிறவங்ககிட்டே ‘உங்க வீட்டுக்கு முன்னாடி தெருவுலகூட நான் கொடுக்கிற மரங்களை நடுங்க’ன்னு ரெக்வெஸ்ட் வைக்கிறா. அவளோட சீரியஸ்னஸை புரிஞ்சுக்கிட்டு, இது எல்லாருடைய மனசுக்கும் போய்ச் சேரணும்னுதான் பாரதிராஜா சாரை எங்க பண்ணைக்கு இன்வைட் செஞ்சேன்.

அவரும் பெருந்தன்மையா வந்து ஒரு மாமரத்தை நட்டுவிட்டு, ‘நல்ல காரியம் பண்றேம்மா. உன்னை நினைச்சு நான் ரொம்ப பெருமைப்படுறேன்மா. உன் மனசுக்கு நல்ல நிலைமைக்கு வருவேன்’னு சொல்லி, அவ நெத்தியில முத்தமிட்டு வாழ்த்திட்டுப் போனார்” என்றவர் தொடர்ந்தார்.

” ‘நான் இப்படிப் பண்றதைப் போட்டோ எடுக்கக் கூடாது; ஃபேஸ்புக்ல, ட்விட்டர்ல போடக்கூடாது’ன்னு கண்டிச்சுச் சொல்லிட்டா லவ்லின். ரொம்ப கெஞ்சிக்கேட்டுத்தான் போட்டோ எடுத்தேன். அவளுக்குத் தெரியாமத்தான் என் ட்விட்டர் அக்கவுன்ட்ல போட்டிருக்கேன். அவளுக்குத் தெரிஞ்சிடக் கூடாதுன்னு அவளை நான் டேக்கூட பண்ணலை” என்று சிரிக்கிறார் விஜி சந்திரசேகர்.

மீண்டும் கிளம்பும் 2.0 சப்டைட்டில் விவகாரம்!!

எந்திரன்

ரஜினியின் 2.0 படத்தின் சப்டைட்டில் பணியை மேற்கொண்ட தனக்கு சம்பளம் வரவில்லை என்று கூறிய ரேக்ஸின் குற்றச்சாட்டிற்கு லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது விளக்கம் கொடுத்துள்ளது.

லைகா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 2.0. இப்படத்தில் எமி ஜாக்சன், அக்ஷய்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். மிகப்பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகளோடு உருவான இப்படம் 3 ஆண்டுகள் தயாரிப்பில் இருந்து வெளியானது.

2010ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்கப்பட்டது தான் 2.0. அந்த நேரத்தில் இந்திய சினிமாவிலேயே மிகப்பிரமாண்ட படைப்பாக உருவான படம் தான் எந்திரன்.

இந்த இரண்டு படங்களுக்கும் சப்டைட்டில் பணிகளை மேற்கொண்ட ரேக்ஸ் இன்னும் தனக்கு சம்பளம் வரவில்லை என டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல பெரிய படங்களுக்கு சப்டைடில் பணிகள் செய்து வரும் அவர் லைகா நிறுவனம் இதுவரை 2.0 படத்திற்கான சம்பளத்தை தரவில்லை என்று கூறினார்.

மேலும் எந்திரன் படத்திற்கே இன்னும் தனக்கு சம்பளம் வரவில்லை என்றும் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: எந்திரன் படத்திற்கு எனக்கு சம்பளம் வரவில்லை என சன் பிகசர்ஸ்க்கு மெயில் அனுப்பினேன். ஏதோ நான் சொல்வது பொய் போல, நீங்கள் சொல்வது உண்மையா என விசாரித்து உங்களை தொடர்பு கொள்கிறோம் என்றனர்.

ஆனால் இது வரை தொடர்பு கொள்ளவில்லை. இதையறிந்த ஷஙகர் நண்பன் படத்திற்கு வேலைக்கு முன்னதாக சம்பளம் தந்தார். ஆனால் லைகா நிறுவனம் 2.0 படத்திற்கு இதுவரைக்கும் சம்பளம் தரவில்லை. எனக்கு பின்னால் ஒரு பெரிய டீம் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு உரிய சம்பளத்தை நான் தரவேண்டும் என்று கூறினார்.

மக்களிடம் தர்ம அடிவாங்கிய ஹீரோ!

அ டிவாங்கிய ஹீரோ

2003 ஆம் ஆண்டில் கன்னடத்தில் வெளியான வெங்கட் படம் மூலம் பிரபலமானவர் நடிகர் ஹூச்சா வெங்கட். இவர் பாடகர், பாடலாசிரியர், கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்ட திறமையாளர். சினிமாவில் நிறைய சாதித்தாலும் இவரது சொந்த வாழ்க்கை சர்ச்சைகள் சூழ்ந்ததாகவே உள்ளது.

நடிகை ஒருவரை ஒருதலையாக காதலித்து, அவர் தன்னை காதலிக்கவில்லை என த ற்கொ லைக்கு முயன்றதால் பரபரப்பானர். இப்படி எப்பொழுதும் அவரைச் சுற்றி ஏதாவது சர்ச்சைகள் சூழ்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் இவர் நேற்று குடகுக்கு பயணமாகியுள்ளார். அங்கே பஸ் நிலையத்திற்கு வெளியே நின்றிருந்த ஒரு காரை கதவை பிடித்து இழுத்திருக்கிறார்.

மேலும் கண்ணாடியில் கல்லை தூக்கி அ டித்து சேதப்படுத்தியுள்ளார். திடீரென அவர் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் என்பது தெரியவில்லை. ஆனால் அங்கிருந்தவர்கள் முதலில் அவரை தடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர் கட்டுக்கடங்காமல் எல்லை மீறிப்போகவே அங்கிருந்த பொதுமக்கள் அவரை அ டித்துள்ளனர். பலரும் அவரை போட்டு அ டிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குடகு போலீசார் அவரைக் கை து செய்துள்ளது. அவரிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது. அவர் இவ்வாறு நடந்து கொண்டதற்கான காரணத்தை இதுவரை வெளியிடவில்லை. போலீஸ் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

சம்பளத்தை தராமல் தயாரிப்பாளர்கள் ஏமாற்றினார்கள் : கவலையில் தனுஷ்!!

தனுஷ்

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘அசுரன்’ என்ற படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் இரு பாடல்கள் வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது அங்கு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தனுஷ் தன்னை தயாரிப்பாளர்கள் ஏமாற்றுவதாக கூறினார்.

இலக்கிய எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது “அசுரன்” திரைப்படம். வெற்றிமாறன் இயக்கத்தில் இப்படத்தில் அப்பா, மகன் என்று இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறார் தனுஷ். மேலும் இப்படத்தில் பசுபதி,மலையாள நடிகை மஞ்சு வாரியார்,இயக்குநர் பாலாஜி சக்திவேல், கென், பவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படம் அக்டோபர் 4 ஆம் தேதி ரிலீசாகும் என்று அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளனர் படக் குழுவினர். இந்த வருடம் ஜனவரி 26 ஆம் தேதி துவங்கப் பட்டது அசுரன் படம். வெகு சீக்கிரத்தில் முடிந்த வெற்றிமாறனின் படமாக இந்தப்படம் கருதப்படுகிறது.இப்படத்தின் பாடல் வெளீடு விழா சென்னையில் நேற்று நடந்தது. இரண்டு பாடல்கள் வெளியானது இதனால், தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

அங்கு பேட்டியளித்த தனுஷ் பத்திரிகையாளர்களிடம் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பற்றி பேசியதாவது…
கலைப்புலி தாணு மிகச்சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவர். இவர் தான் இயக்குநர் எனக்கூறியபின் நாங்கள் கமர்ஷியலாக ஒரு கதை சொன்னபோதும் அவர் தான் இந்த அசுரன் கதை நன்றாக இருக்கிறது இதைச் செய்யலாம் என்றார்.

எனக்கு பல தயாரிப்பாளர்கள் சம்பளத்தை முழுதாக தராமல் ஏமாற்றினார்கள். இப்போதும் ஏமாற்றிகொண்டிருக்கிறார்கள் ஆனால் முதல் முறையாக படம் முடியும் முன்னரே முழுச்சம்பளத்தையும் தந்த தயாரிப்பாளர் அவர்தான் என்றார்.

கௌதம் மேனன் தயாரித்து இயக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா பல தடங்கலுக்கு பிறகு விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு சம்பளம் முழுதாக தரப்படவில்லை என புகார் எழுந்தது. மேலும் இது போல பல தயாரிப்பாளர்கள் தனுஷுக்கு சம்பள பாக்கி வைத்திருக்கிறார்கள். இதைப் பற்றி முதல் முறையாக தனுஷ் பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

சொத்துக்களை பிரித்து கொடுக்கும் நடிகர் அமிதாப் பச்சன்.. மொத்த சொத்து மதிப்பு இவ்வளவு ஆயிரம் கோடியா?

நடிகர் அமிதாப் பச்சன்

நடிகர் அமிதாப் பச்சன் தற்போதும் சினிமா, டிவி நிகழ்ச்சிகள் என பிசியாக இருப்பவர். அதற்காக அவர் பல கோடிகள் சம்பளமாகவும் பெறுகிறார். அவருக்கு அபிஷேக் பச்சன் என்ற மகன், ஸ்வேதா பச்சன் என்ற மகள் உள்ளனர்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமிதாப் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தும் தன்னுடன் மகன் மற்றும் மகள் இருவருக்கும் சரி சமமாக பிரித்து தரவுள்ளதாக கூறியுள்ளார்.

அமிதாப் பச்சனுக்கு சுமார் 400 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 2800 கோடிக்கும் மேல்) சொத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் 60வது படத்திற்கு பாலிவுட் வில்லனா? அதுவும் இவரா மாஸா இருக்குமே?

அஜித்

அஜித்தின் 60வது படத்தை வினோத் அவர்களே இயக்க இருக்கிறார். இப்படத்திற்கான பூஜை இன்று தான் நடக்க இருக்கிறது என போனி கபூர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் படத்தில் வில்லன் குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் வந்துள்ளது. அதாவது படத்தில் வில்லனாக பாலிவுட்டின் பெரிய நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.