விஷால் திருமணம் நடக்கிறதா, இல்லையா?- அவரது காதலி போட்ட பதிவு!!

புரட்சி தளபதி விஷால்

புரட்சி தளபதி விஷால் அவர்களுக்கு நேற்று பிறந்தநாள். இந்த வருட ஆரம்பத்தில் அவருக்கும் ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் மகள் அனிஷாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

திருமணம் வருட இறுதியில் நடக்கும் என்றனர், ஆனால் கடந்த சில நாட்களாக இருவரின் திருமணம் நின்றுவிட்டது என்றனர்.

அதற்கு ஏற்றார் போல் நேற்று விஷால் பிறந்தநாள், ஆனால் அவருக்கு நிச்சயதார்த்தம் செய்த பெண்ணான அனிஷா விஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

கவினுடன் 3 வருடம் காதலில் இருந்தது ப்ரியா பவானி ஷங்கரா? பழைய போட்டோ மற்றும் Chat-ஆல் வந்த அதிர்ச்சி!!

ப்ரியா பவானி ஷங்கர்

ப்ரியா பவானி ஷங்கர் இன்று தமிழ் சினிமாவின் லீடிங் கதாநாயகி. இவர் இந்தியன் 2, விக்ரம் படம் என பல பெரிய படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் கவின் தான் 3 வருடம் சீரியஸ் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறியிருந்தார், அதை தொடர்ந்து டுவிட்டரில் ரசிகர்கள் அனைவரும் அவர் ப்ரியா பவானி ஷங்கர் தான் என்று கண்டுப்பிடித்துள்ளனர்.

இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், பல புகைப்படங்களை எடுத்து தற்போது ஷேர் செய்து வருகின்றனர். மேலும், அவர்கள் நல்ல நண்பர்களாக கூட இருந்திருக்கலாம், ஒரு சிலர் வேண்டுமென்றே தற்போது எடுத்து இதை வேறு திசையில் பேசுகிறார்களா என்றும் யோசிக்க வைக்கின்றது.

கணவருடன் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள நடிகை சமந்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் : குவியும் லைக்குகள்!!

நடிகை சமந்தா

நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால், திருமணத்திற்கு பிறகு நடித்த படங்கள் அனைத்துமே வெற்றிப்படங்களாக அமைந்தன.

சமீபத்தில் வெளியான, ஓ பேபி திரைப்படம் பிரமாண்ட வசூல் சாதனை படைத்தது. இது சமந்தாவிற்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், அதற்காக சினிமாவில் இருந்து இடைவெளி எடுக்கவுள்ளதாக சமீபத்தில் திரையுலகில் செய்தி பரவி வருகிறது.

ஆனால், நடிகை சமந்தா இது குறித்து எதுவும் விளக்கம் கொடுக்கவில்லை. இந்நிலையில் சமந்தா தன்னுடைய கணவருடன் வெளிநாட்டிற்கு தற்போது சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்த ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மிக சிறிய உடையில், கண்ணுக்கே புலப்படாத சார்ட்ஸ் ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடையும் தெரியும் வண்ணம் அவர் போஸ் கொடுத்துள்ள போட்டோக்கள் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.

அதே வேளையில் அடுத்தவாரம் சமந்தா சைதன்யா ஜோடியின் திருமண நாளும் வருகிறதாம். இதையும் சேர்த்தே அவர்கள் கொண்டாடியுள்ளனர்.

இதில் சமந்தாவை கணவர் சைதன்யா ஹாட் லுக்கில் போட்டோ எடுக்க அதை சமந்தா வெளியிட 10 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

சாஹோ படம் குறித்து வெளிவந்த முதல் விமர்சனம்!!

சாஹோ

சாஹோ இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் படம். இப்படம் ரூ 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

இந்நிலையில் சாஹோ நாளை 4 மொழிகளில் ரிலிஸாக தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இப்படத்தின் புக்கிங் வேற லெவலில் உள்ளது.

தமிழ், மலையாளம் ரிசல்ட் பொருத்து தான் கூட்டம் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, தற்போது இப்படம் குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இதில் ‘படத்தின் இடைவேளை டுவிஸ்ட் சூப்பராகவும், கடைசி அரை மணி நேரம் பிரபாஸ் சண்டைக்காட்சிகள் மெய் சிலிர்க்க வைத்துள்ளதாகவும்’ கூறியுள்ளனர்.

தோற்றம் எதையும் முடிவு செய்வதில்லை, ஆனால்… கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு கருத்து கூறிய நடிகை கிரண் ரத்தோட்!!

கிரண் ரத்தோட்

விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் விஜய், அஜித், கமல்ஹாசன் ஆகிய முன்னணி ஹீரோக்கள் படத்திலும் நடித்தார்.

ஆனால், சரியான வாய்ப்பு இல்லாமல் ஆண்ட்டி ஆகிப் போனார். சுந்தர் சி.இயக்கிய ஆம்பள படத்தில் துணை கதாநாயகிகளில் ஒருவருக்கு அம்மாவாக நடித்தார்.

இந்நிலையில், தற்போது தனது உடலை இளைத்து மீண்டும் தனது பழைய உடல் அழகை அவர் பெற்றுள்ளார். அவரின் தற்போதையை சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து மீண்டும் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் அம்மணி.

மேலும், ” தோற்றம் எதையும் முடிவு செய்வதில்லை. ஆனாலும், தோன்றுகிறேன் ” என்றும் பதிவு செய்துள்ளார்.

பிக் பாஸ் கவினின் தாய்க்கு 7 ஆண்டு சிறை தண்டனை!!

பிக் பாஸ் கவினின் தாய்

சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் கவின். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் கவின் தாயார் பண மோ சடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கே கே நகர் ஐ சேர்ந்த கவினின் தாயாரான ராஜலட்சுமியும் மற்றும் அவரது மருமகள் ராணியும், அருணகிரி மற்றும் தர்மராஜ் ஆகியோருடன் இணைந்து சீட்டு கம்பெனி ஒன்றை அனுமதி இல்லாமல் கடந்த 1998ம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிறுவனத்தில் மொத்தத்தில் 34 நபர்கள் சீட்டு கட்டி வந்துள்ளனர். ஆனால் இந்த சீட்டு கம்பெனியில் பணத்தை கட்டி வந்த யாருக்கும் பணத்தை திருப்பித் தராததால் இந்த கம்பெனியை நடத்தி வந்த கவியின் தாயார் ராஜலட்சுமி அவரது மருமகள் ராணி அருணகிரி சொர்ண ராஜன் ஆகியோர் மீது திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரில் பாதிக்கப்பட்ட 34 நபர்களுக்கு 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை திருப்பித் தரவேண்டும் என்று கடந்த 2007 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. 12 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சொர்ண ராஜன் மற்றும் அருணகிரி ஆகியோர் இறந்த நிலையில் தற்போது கவியின் தாயார் ராஜலட்சுமி அவரது மருமகள் ராணி ஆகியோர் பண மோ சடியில் ஈடுபட்டு உள்ளது தற்போது உறுதியாகியுள்ளது.

எனவே, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இந்த நால்வருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனையும் இந்த வழக்கில் சாட்சி அளித்த 29 பேருக்கு தலா ஒரு லட்சம் என்று 29 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வரலாற்று பட ஜோடி மீண்டும் காதல்!!

கிசுகிசு

வரலாற்று படத்தின் நாயகனும், நாயகியும் மீண்டும் காதலித்து வருவதாக தகவல் பரவுகிறதாம்.தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக வசூல் ஈட்டிய வரலாற்று படத்தின் நாயகனும், நாயகியும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன.

இருவருக்கும் படப்பிடிப்பில் நெருக்கம் ஏற்பட்டதாகவும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் பேசப்பட்டதாம். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதலை முறித்துக் கொண்டார்களாம்.

இதனிடையே வெளிநாட்டில் வசிக்கும் தொழில் அதிபர் மகளை மணக்க நடிகர் தயாரானதாக தகவல்கள் கசிந்ததாம். இந்த நிலையில் வரலாற்று பட நாயகனும், நாயகியும், அமெரிக்காவில் புதிதாக வீடு வாங்க இருப்பதாகவும், இதற்காக அங்கு வீடு பார்க்கும் வேலையை அவர்கள் தொடங்கி இருப்பதாகவும் செய்திகள் பரவுகிறதாம். இதன் மூலம் இருவருக்கும் மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறதாம்.

க்ளாமர் இமேஜ் பத்தி கவலைப்படலை வில்லி விசித்ரா!!

விசித்ரா

நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் சீரியலில் கமிட் ஆகியுள்ளார் நடிகை விசித்ரா.நடிகை விசித்ராவை நினைவிருக்கிறதா? கவர்ச்சி, குத்துப்பாட்டு எனத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி ‘ரசிகன்’, ‘முத்து’, ‘வீரா’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர். தொடர்ந்து குணச்சித்திர நடிகையாகவும், ஒருகட்டத்தில் சீரியல்களிலும் நடித்தார். திருமணமாகி கணவருடன் மைசூரில் செட்டிலானவர், 18 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது தமிழ் சீரியலுக்கு வந்திருக்கிறார். இவர் நடிக்கும் சீரியல் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலில் வில்லியாக நடிக்க இருக்கிறார். முதல் கட்டமாகச் சென்னையிலும், தொடர்ந்து தேனி பகுதியிலும் ஷூட்டிங் நடைபெறுகிறதாம். சென்னைக்கு வந்திருந்தவரிடம் பேசினோம்.

“சினிமாவுக்கு வர்ற எல்லாருக்குமே ஹீரோயின் ஆகணும்கிற ஆசை இருக்கத்தான் செய்யும். நான் மட்டும் விதிவிலக்கா இருப்பேனா? ஆனா குத்துப்பாட்டுக்கு ஆடுறவங்க; கவர்ச்சி நடிகைங்கிற அடையாளம்தான் எனக்கு முதல்ல கிடைச்சது. அதுக்காகப் பெரிசா வருத்தப்படலை. ஏன்னா, அன்னைக்கு கவர்ச்சி நடிகைகளில் விஜய் படத்துல இருந்து ரஜினி படம் வரைக்கும் எல்லா நடிகர்களின் படங்களிலும் வந்தவங்களை விரல்விட்டு எண்ணிடலாம். அதுலேயும் என்னை ரஜினி சாரே தன்னோட ஒரு படத்துக்கு ரெகமெண்டு பண்ணினார். இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், கவுண்டமணினு பெரிய பெரிய ஆளுங்களோட வொர்க் பண்ணிட்டேன்.

நான் எடுத்துக்கிட்ட 18 வருஷம்கிறது பெரிய இடைவெளிதான். ’கல்யாணத்துக்குப் பிறகு நடிப்போமா இல்லையா’ங்கிற கேள்வி அன்னைக்கு எனக்குள்ளும் இருந்தது. அதுக்குப் பதில் கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடியே மும்பை, புனேனு பல இடங்களுக்கு மாறியிருந்தேன்; கணவரோட வேலை அப்படி. தொடர்ந்து குழந்தைகள். மூணு பேரையும் நல்லபடியா வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பும் சேர்ந்துகிடுச்சு.

இதுக்கிடையில பொருளாதார ரீதியா உதவும்னு தொடங்கின ஹோட்டல் பிசினஸ் ஒருபுறம். இவ்வளவுக்கு மத்தியிலும் ‘சினிமாவிலோ, சீரியலிலோ மறுபடியும் நடிப்பேன்’னு மட்டும் ஒரு உள்ளுணர்வு சொல்லிட்டே இருந்தது. நான் சைக்காலஜி படிச்சவள். அதை வச்சு சொல்றேன், நம்முடைய ஆழ் மனசு ஒரு விஷயத்தை நடக்கற மாதிரியே நினைக்குதுன்னா, ஒருநாள் அந்த விஷயம் நிச்சயம் நடந்திடும். இதோ இப்ப கமிட் ஆகிட்டேனே! இனி தினமும் எல்லாரையும் சந்திக்கப் போறேன்’’ – உற்சாகமாகச் சொன்னவரிடம், இந்த நீண்ட இடைவெளிக்குப் பிறகான ஷூட்டிங் அனுபவம் குறித்துக் கேட்டோம்.

‘’சினிமாவுல அறிமுகமானப்போ 18 வயசுகூட ஆகலை. பெரிசா சினிமா பின்னணி இல்லாத, அப்பா கவர்மென்ட்ல வேலை பார்த்த குடும்பம் எங்களோடது. அதனால இயல்பாவே ஒரு பயம் இருந்தது. ஒருவழியா அதையெல்லாம் கடந்து ரஜினி சார் படம் வரைக்கும் நடிச்சுட்டேன்.

ஆனா இன்னைக்கு சீரியலுக்கு கிடைக்கிற வரவேற்பு உண்மையிலேயே வியக்க வைக்குது. சீரியல் நடிகர் நடிகைகளைக் கேரக்டர் பெயர்லயே கூப்பிடறதும், அவங்களை தங்களோட வீட்டுல ஒருவராவே பார்க்கறதுமா, ஆச்சர்யமா இருக்கு. அந்த வகையில கவர்ச்சி நடிகை விசித்ராங்கிறது என்னோட பழைய அடையாளமா இருக்கலாம்.

ஆனா நானும் இனி உங்க வீட்டுல ஒருத்தியா இருக்கப் போறேன்னு நினைக்கிறப்ப சந்தோஷமா இருக்கு. இப்போ, உடன் நடிக்கிறவங்களில் சிலர் என்னோட படங்கள் வெளியான நாள்கள்ல ஸ்கூல்ல படிச்சவங்களாம். அவங்களுக்கெல்லாம் எங்கிட்ட வந்து பேச ஆசை. ஆனா ஏனோ தயங்கவும் செய்றாங்க. ஷூட்டிங் இப்பதானே தொடங்கியிருக்கு, போகப்போக கூச்சம், தயக்கமெல்லாம் சரியாகி தெளிவாகிடுவாங்கன்னு நம்பறேன்’’ எனச் சிரிக்கிறார் விசித்ரா.

நடிகர் பிரபுவை தூக்கி வைத்திருக்கும் சிவாஜி : எப்படி இருக்கின்றார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்

நடிகர் பிரபு

நடிகர் திலகம் சிவாஜியுடன் அவருடைய மகனான பிரபல நடிகர் பிரபு இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சில நினைவுகளை ரீவைன்ட் செய்து பார்க்கும் பொது மிகவும் மகிழ்ச்சியாய் தான் இருக்கும்.செல்பி எடுக்க முடியாத காலகட்டங்களில் பொக்கிஷமான புகைப்படங்கள் நமது முந்தைய தலைமுறையினர் எத்தனையோ சேகரித்து வைத்து உள்ளனர்.

அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்தாலும், அவர் விட்டு சென்ற பொக்கிஷமாக இந்த ஃபோட்டோ பார்க்கப்படுகிறது இது போன்ற போட்டோக்கள். அதுவும் பிரபு என்றால் சொல்லவா வேண்டும்.
ஏராளமான ரசிகர்களுக்கு இந்த போட்டோ ஒரு நல்ல சுவாரஸ்யமான விஷயமாக தான் இருக்கும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது.

இளைய திலகம் பிரபு இன்னும் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு ஒரு ஆர்ட் எக்சிபிஷன் வைக்க போவதாகவும் ஒரு தகவல் கசிந்து வருகிறது.

மணிரத்னம் அழைத்தும் நடிக்க மறுத்த பிரபல நடிகர், காரணம் இது தானாம்!!

மணிரத்னம்

மணிரத்னம் இந்திய சினிமாவில் இன்றும் கொண்டாடப்படும் இயக்குனர். இவர் இயக்கத்தில் கடைசியாக வந்து மெகா ஹிட் ஆன படம் செக்கச்சிவந்த வானம்.

இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்திருந்தார், இவர் தற்போது பாக்ஸர், மாஃபியா ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

இவரை மணிரத்னம் தற்போது இயக்கவிருக்கும் பொன்னியன் செல்வன் படத்தில் நடிக்க அனுகியுள்ளனர்.

ஆனால், அவர் ‘நான் தற்போது தான் ஒரு சில சோலோ ஹீரோ படங்களில் நடித்து வருகின்றேன், இந்த படத்திற்காக கால்ஷிட் ஒதுக்கினால், அதில் கவனம் சிதறும்’ என கூறி விலகிவிட்டாராம்.