உலக மக்களை பெரிதும் உலுக்கிய துயர சம்பவம் : பொங்கி எழுந்த சிம்ரன் கேட்ட கேள்வி!!

சிம்ரன்

ஸ்டார் ஹீரோயினாக கனவு கன்னியாக பலருக்கும் இருந்த நடிகை சிம்ரன் பல வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

ரஜினிக்கு ஜோடியாக நடித்த பேட்ட படம் அவரின் ரீ எண்ட்ரி எனலாம். பின் சமந்தாவுக்கு அம்மாவாக சீமராஜா படத்திலும் அவர் நடித்திருந்தார்.

தற்போது அவர் டிவிட்டரில் கோபத்துடன் கேள்வி கேட்டுள்ளார். பூமியின் நுரையீரல் எரிந்துகொண்டிருக்கிறது. உலகை காப்பாற்ற நாம் இன்னும் என்ன செய்யப்போகிறோம். பூமியில் 20 சதவீதம் ஆக்ஸிஜனை வெளியிடும் காடுகளை எரிவதை பார்க்கையில் மிகவும் வேதனையாக இருக்கிறது.ஏன் இந்த சம்பவம் குறித்து ஊடகம் என கேட்டுள்ளார்.

Simran

@SimranbaggaOffc
The “lungs of the planet” are burning.
What can we do more to save the planet?
It’s painful to see the forest that creates 20% of the earth’s oxygen has been on fire with NO media coverage!!

சினேகா-பிரசன்னா வீட்டில் விசேஷம் : வாழ்த்து கூறும் மக்கள்!!

சினேகா-பிரசன்னா

பிரபலங்களில் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடிகள் அதிகம் உள்ளார்கள். அப்படி ஒரு சில பிரபலமான ஜோடி நடிகர்களே காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

அப்படி சினேகா-பிரசன்னாவை கூறலாம். 2012ம் ஆண்டு மே மாதம் இவர்களுக்கு திருமணம் நடந்தது, 2015 செப்டம்பர் மாதம் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தங்களது குழந்தைக்கு விஹான் என்றும் பெயர் வைத்துள்ளனர்.

தற்போது சினேகா மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாராம், இதை அறிந்துகொண்ட ரசிகர்களுக்கு அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

பேமென்ட் தர்றோம்னு சொல்லிட்டு புகார் கொடுத்திருக்காங்க : மதுமிதா!!

மதுமிதா

தனியார் நிறுவனம், தன்மீது காவல் நிலையத்தில் ஒரு பொய்யான புகாரை கொடுத்துள்ளதாக மதுமிதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படம் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமானவர், நடிகை மதுமிதா. இவர், தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். சில தினங்களுக்கு முன், நிகழ்ச்சியின் விதிமுறைகளை மீறியதாகத் திடீரென அதிலிருந்து வெளியேற்றப்பட்டார். அந்த நிறுவனத்தின் சார்பில் மதுமிதா மீது காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுமிதா செய்தியாளர்களைச் சந்தித்தார். “தனியார் நிறுவனம் என்மீது காவல் நிலையத்தில் ஒரு பொய்யான புகாரைக் கொடுத்துள்ளது. இந்தப் புகாரை கொடுப்பதற்கு முன், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்னைத் தொடர்புகொண்டு, உங்களுக்கு வரவேண்டிய செட்டில்மென்டுகளைக் கொடுத்துவிடுகிறோம். இன்வாய்ஸ் அனுப்புங்கள் என என்னிடம் கூறினர். என் கணவர் மூலமாக அவர்கள் கேட்டதைக் கொடுத்துவிட்டோம். உங்களுக்கான தொகை விரைவில் வந்துவிடும் எனக் கூறி அனுப்பினர். அதன் பின்னர், ஏன் இப்படி ஒரு புகாரை அளிக்க வேண்டும் என எனக்குத் தெரியவில்லை.

என்மீது புகார் கொடுத்ததே எனக்குத் தெரியாது. நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து என்னிடம் கேட்டபோதுகூட அப்படி இருக்காது. வாட்ஸ்அப்-பில் பரவும் வதந்தியாகத்தான் இருக்கும் என முதலில் நினைத்தேன். அதன்பின்னர் வந்த தொடர் அழைப்புகளையடுத்து, எனது வழக்கறிஞரைத் தொடர்புகொண்டு, காவல்நிலையத்தில் விசாரிக்கச் சொன்னேன். இதுதொடர்பாக கிண்டி காவல் நிலையத்தில் விசாரித்தபோது, புகார் கொடுத்திருப்பதாகத் தெரிவித்தனர்.

கடந்த 10 வருடங்களாக நான் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். யார்மீதும் நான் இதுவரை புகார் கொடுத்ததில்லை. என் மீதும் ஒரு சிறிய புகார் கூட வந்ததில்லை. என் மீதான புகாரையடுத்து நான் நிர்வாகத்தைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தேன். என்னால் அவர்களை அணுகமுடியவில்லை. எனக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையைத் தர தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் சம்மதம் தெரிவித்த பின்னர், ஏன் புகார் கொடுக்க வேண்டும் என்று எனக்கே தெரியவில்லை” என்றார்.

தனியார் நிறுவனத்திடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தினால் இதற்கு மேல் எதுவும் கூற முடியாது என முடித்துக்கொண்டார்.

கவினை ரொம்ப பிடிக்கும் : ஆனால் என் பெற்றோர்…உண்மையை போட்டுடைத்த லாஸ்லியா!!

லாஸ்லியா

லாஸ்லியா மற்றும் கவின் ஆகியோரின் பிக்பாஸ் காதல் கதை அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் அது பற்றி அவர்கள் வெளிப்படையாக அறிவித்ததில்லை.

இந்நிலையில் இன்று சேரன் பேசியபோது அவர்கள் இருவரும் காதலை உறுதி செய்தனர். லாஸ்லியா பேசும்போது “முன்பு எனக்கு கவினை பிடிக்கும், தற்போது அது ரொம்ப பிடிக்கும் என்கிற நிலைக்கு மாறிவிட்டது. ஆனால் என் பெற்றோர் என்ன நினைக்கிறார்கள் என தெரியவில்லை. அதனால் எங்கள் நட்பை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வது வெளியில் சென்ற பிறகுதான்” என கூறினார்.

இதனால் பெற்றோர் ஏற்றுக்கொண்டால் மட்டுமே கவின் உடன் காதல் தொடரும் என்பதை லாஸ்லியா மறைமுகமாக கூறியுள்ளார்.

மேலும், கவின் பேசும்போது நான் லாஸ்லியாவை குழந்தைபோல பார்த்துக்கொள்வேன் என கூறியுள்ளார்.

நடிகையின் மன அழுத்தத்துக்கு இதுதான் காரணமா?

நடிகை

எந்த படத்திலும் ஒப்பந்தமாகாமல் மன அழுத்தத்தில் இருந்த நடிகை, எதற்கு அப்படி இருந்தார் என்பதற்கான காரணம் வெளியாகி இருக்கிறதாம்.

நடிகையாகவும், பாடகியாகவும் மிகவும் பிரபலமானவர், சில மாதங்களாக எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்தாராம். மன அழுத்தம், காரணமாக உடல் மற்றும் மனரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட்டு, ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டதால் விலகியிருந்ததாக தெரிவித்திருந்தாராம்.

திருமணமான ஒரு நபருடன் உறவு வைத்திருந்ததுதான் இதற்கு காரணம் என்று தற்போது கோலிவுட்டில் பேசி வருகிறாராம். நடிகையோ தற்போது மன அழுத்தத்தில் இருந்து மீண்டு இருப்பதாக நடிகை தரப்பில் கூறுகிறார்களாம்.

திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் கர்ஜனை : புதிய அப்டேட்!!

கர்ஜனை

சுந்தர் பாலு இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் கர்ஜனை படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.

திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கர்ஜனை’. இதில் திரிஷாவுடன் வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, தவசி, ஆரியன், அமித், லொள்ளுசபா சுவாமிநாதன், ஸ்ரீரஞ்சனி, மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். சுந்தர் பாலு இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் அவர் தயங்காமல் டூப் இல்லாமல் நடித்துள்ளார்.

விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தை பற்றிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பெண் வேடத்தில் நடிக்கும் அங்காடித்தெரு மகேஷ்!!

அங்காடித்தெரு மகேஷ்!!

அங்காடித்தெரு படம் மூலம் மிகவும் பிரபலமான மகேஷ், தற்போது தேனாம்பேட்டை மகேஷ் படத்தில் பெண் வேடத்தில் நடிக்க இருக்கிறார்.ஜி.எஸ்.எம் (Grand Service Makers) பிலிம்ஸ் சார்பில் பூர்வீகன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தேனாம்பேட்டை மகேஷ்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.சித்திக். இதில் அங்காடித்தெரு மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிச்சுவாகத்தி நடிகை அனிஷா நடிக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் எம்.சித்திக் கூறும்போது, ‘எதற்கெடுத்தாலும் பயப்படுவது, பலரிடம் அடிவாங்குவது என்று இருக்கிறார் மகேஷ். இவரை எப்போதும் திட்டிக் கொண்டிருக்கிறார் இவரது தந்தை. ஆனால், பிற்பாதியில் மகேஷ் யார் என்பது அவரது தந்தைக்கு தெரிய வருகிறது. அதன்பின் மகேஷின் வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறேன்.

இப்படத்தில் மகேஷ் வாட்டர் கேன் சப்ளை செய்யும் வாலிபராகவும் பெண் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இவருடன் அம்பானி சங்கர், மகாநதி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, கமலா தியேட்டர் ஓனர் சி.டி.கணேசன், ‘குட்டிபுலி’ ராஜசிம்மன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் ஒளிப்பதிவு – முனீஷ், இசை – ஸ்ரீ சாய் தேவ், எடிட்டர் – பாசில், கலை – கார்த்திக், நடனம் – தீனா, பாடலாசிரியர் – சிவசங்கர், சண்டை பயிற்சி – எஸ்.ஆர்.முருகன் ஆகியோர் தொழில் நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள்’ என்றார்.

2 மாதம் தான் ஆயுள் : சீமான் தயவுசெஞ்சு என்ன நிம்மதியுடன் வாழவிடுங்க.. கண்ணீர் விட்டு க தறிய நடிகை!!

விஜயலட்சுமி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கோரிக்கை விடுத்து நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் நடிகர் ரஜினகாந்திடம் உதவி கேட்டு நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டார். சில தினங்களுக்கு பிறகு ரஜினி தன்னை தொடர்புக்கொண்டு பேசிய உதவி செய்ததாக மற்றொரு வீடியோ பதிவிட்டார்.

தற்போது, சீமானுக்கு கோரிக்கை விடுத்து நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரஜினிகாந்த உதவி செய்ததை பலர் அரசியல் ஆக்குகிறார்கள். என்னை தவறான பெண்ணாக சித்தரித்து பலர் செய்தி வெளியிடுகின்றனர்.

இதனால், நான் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். எனக்கு இதயப்பிரச்சினை இருக்கிறது, 2 மாதம் தான் ஆயுள் அதற்குள் குடும்பத்திற்காக எதாவது நான் செய்ய வேண்டும். கமல், ரஜினி என யாரிடம் வேண்டுமானாலும் நான் உதவி கேட்பேன். அதை அரசியல் ஆக்குகிறார்கள்.

சீமானுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. எனது வாழ்கை சூழ்நிலையே மோசமாக மாறிவிட்டது. அவருக்கு ஆதரவாக எழுதும் பலர் என்னை தவறாக சித்தரிக்கின்றனர். இது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. நான் முன் குறிப்பிட்டது போல் அனைத்தையும் விளாவாரியாக எழுத்து வைத்து த ற்கொ லை செய்துக்கொள்வேன். உங்களுக்கு தான் பிரச்சினை.

எனவே, சீமான் நீங்கள் உங்கள் ஆதவாளர்களிடம் இனி என்னை தவறாக சித்தரித்து எழுதுவதை நிறுத்தும் படி கூற வேண்டும். அந்த நிலையில் தான் நீங்கள் இருக்கிறீர்கள் என கோரியுள்ளார்.

புற்றுநோய் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்த நடிகை!!

நடிகை சரண்யா

புற்றுநோய் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை சீரியல் மற்றும் திரைப்பட நடிகையான சரண்யா கேரள வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார்.

கேரளாவில் சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சரண்யா. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அதிலிருந்து தற்போது வரை 7 முறை புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை செய்துவிட்டார். இவருடைய சம்பளத்தில் மட்டுமே குடும்ப செலவுகள் அனைத்தும் கவனிக்கப்பட்டு வருவதால், 8வது முறை அறுவை சிகிச்சை செய்வதற்கு போதிய பணம் இல்லை என கடந்த சில மாதங்களுக்கு முன் சமூகவலைத்தளத்தில் கோரிக்கை வைத்தார்.

அதனை பார்த்த சில நடிகர்கள் அவருக்கு பண உதவி கொடுக்க முன்வந்தனர். இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை, கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு நடிகை சரண்யா கொடுத்துள்ளார்.

அவருடைய இந்த சேவையினை இணையதளவாசிகள் பாராட்டி வருகின்றனர். இதேபோல நடிகர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நிவாரண நிதியினை தொடர்ந்து அளித்து வருகின்றனர்.

பிக்பாஸ் தர்ஷனின் உண்மை முகமே இதுதான் : போட்டுடைத்த இளம் நடிகர்!!

பிக்பாஸ் தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 3 க்கு இலங்கையை சேர்ந்த தர்ஷன் போட்டியாளராக வந்துள்ளார். அவருக்கு பெண் ரசிகைகள் நிறைய கிடைத்துள்ளார்கள்.

வெளியில் மட்டுமில்லாது பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் அனைவருக்கும் பிடித்தமான நபராக இருக்கிறார். அவருக்கும் அண்மையில் சில விசயங்களில் கோபம் வருகிறது.

அதை தூண்டிவிட்டது வனிதா என்பது உங்களுக்கே தெரியும். இந்நிலையில் அவருடன் படத்தில் பணியாற்றிய நடிகர் டாம் அபிலாஷ், தர்ஷன் பற்றி பேசியுள்ளார்.

தர்ஷன் மிக பணிவாக இருப்பான். ஹீரோ என அலட்டல் இருக்காது. சாதாரணமாக இருப்பான். நிறைய விசயங்கள் பேசுவான். ஆனால் ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டில் அவனை 5 சதவீதம் மட்டுமே காட்டியுள்ளார்கள் என தோன்றியது.

தற்போது அவனை அதிகம் காட்டுகிறார்கள். நிறைய பேசுவது தெரிகிறது. தர்ஷணுக்கு கோவம் வரும். வந்தால் அவ்வளவு தான். முகமே காட்டிவிடும் என கூறியுள்ளார்.