பேட்டி எடுக்க வந்த பெண் மீது ஏற்பட்ட காதல் : ரஜினியின் சுவாரசிய காதல் கதை!!

ரஜினியின் சுவாரசிய காதல்கதை!!

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகில் மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ஒரு நடிகர் ரஜினிகாந்த்.வேறு எந்த ஒரு நடிகருக்கும் இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இவ்வளவு ஆண்டுகள் இருந்ததில்லை என்றுதான் கூறவேண்டும்.

தனது எளிமையின் காரணமாகவே ஏழை எளிய மக்களை கவர்ந்த சூப்பர்ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாறு படிக்க படிக்க தீராத நாவல் போன்றது. அவரின் காதல் கதைகளை கேட்டால் ஒரு படமே எடுத்துவிடலாம். அந்த அளவு சுவாரஷ்யங்கள் இருக்கின்றன.

ரஜினி – லதாவின் காதல் கதை பொதுவான காதல் கதை போன்றது அல்ல. உச்சத்தில் இருக்கும் ஓர் நடிகனுக்கு சாதாரண பெண் மீது காதல் வருவது என்பது சாதாரண விடயம் அல்ல.

சூப்பஸ்டாரை பேட்டி எடுக்க வந்த பெண்தான் லதா. அந்த பேட்டி எடுக்க சென்ற தருணம் தான் லதா ரங்காச்சாரி லதா ரஜினிகாந்தாக மாற பாதை போட்டு கொடுத்தது என்று கூறலாம். தில்லுமுல்லு திரைப்பட ஷூட்டிங்-ன் போது தான் ரஜினியும் லதாவும் முதன் முறையாக ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக் கொண்டனர்.

பேட்டியின் போதே லதாவை திருமணம் செய்துக் கொள்கிறாயா? என கேள்விக் கேட்டு திணற வைத்தாராம் ரஜினி. இதற்கு லதா பெற்றோரிடம் கேட்டு சொல்வதாய் கூறி சென்றுள்ளார். ரஜினியின் அண்ணன் சத்யநாராயணன் மற்றும் முரளி பிரசாத் லதாவின் பெற்றோர்களை சந்தித்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார்.

கடந்த 1978-79 என இரண்டு ஆண்டுகளில் தினமும் ஷூட்டிங் சென்று நடித்து வந்தார் ரஜினி. தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என இரவு பகலாக ஓய்வு இன்றி நடித்து வந்துள்ளார். இதனால் நரம்பியல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அறிந்த லதா அவருக்கு தாய்மை பாசம் தேவை என்பதை உணர்ந்துள்ளார். இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.

அவர்களின் உண்மையான காதலும் திருமணத்தில் முடிந்தது. நரம்பியல் பிரச்சினையில் இருந்து சரியாகிய பிறகு 1981-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26-ம் திகதி இருவரும் திருப்பதி கோவிலில் திருமணம் செய்துக் கொண்டனர்.

ரஜினியின் ஆன்மீகம் மற்றும் திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட நிறைய மாற்றங்களுக்கு லதா ரஜினியின் காதலும், அன்பும் தான் காரணம்.அன்பான மனைவி இருந்தால் எந்த பிரச்சினையையும் எளிதாக கடந்து வரலாம் என்பதற்கு இந்த ஜோடி ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.

இதேவேளை, ஜாக்கிசானுக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கிய ஆசிய நடிகர் ரஜினிகாந்த் தானாம். இவரது ஸ்டைலை யாராலும் இன்று வரை இவரைப் போலவே செய்ய முடியாது. இது போன்ற பல விடயங்கள் இவரை இன்றும் தனித்துவமாக காட்டுகின்றது என்றால் மிகையாகாது. நடிகராக இருக்கும் இவரின் வாழ்க்கை வரலாறு கூட மிக விரைவில் படமாக்கப்படலாம்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த கொ லையுதிர்காலம் : திரைவிமர்சனம்!!

கொ லையுதிர் காலம்

பிரிட்டனின் சஸ்ஸெக்ஸில், ஒரு பிரமாண்ட எஸ்டேட் உள்ளிட்ட பல சொத்துகளின் உரிமையாளர் அபா லாசன். அவரது இ றப்புக்குப் பிறகு அந்தச் சொத்துகளும், அவர் நிர்வகிக்கும் அறக்கட்டளைகளின் பொறுப்புகளும் அபா லாசன் தத்தெடுத்த மகளான நயன்தாராவின் கைக்கு வருகிறது. சொத்துகள் முறைப்படி பதிவுசெய்யப்பட, லண்டன் செல்லும் நயனுக்கு அபா லாசனின் அண்ணன் மகன் மூலம் மிரட்டல் வருகிறது. அதன்பிறகு நடப்பவற்றை திகில் கலந்து சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

சினிமா விமர்சனம் : கொ லையுதிர் காலம்
படத்தின் திரைக்கதையில் காட்சிகளில் ஒரு திகில் படத்திற்கான சுவாரஸ்யமோ எதிர்ப்பார்ப்பைத் தூண்டும் பரபரப்போ இல்லை. 110 நிமிடப் படத்தில் நயன்தாரா தத்தெடுக்கப்பட்ட கதையை நீட்டி முழக்கிச் சொல்வது சலிப்பை ஏற்படுத்துகிறது. இடைவேளைக்குப் பிறகு நடக்கும் துரத்தலும், கொலைகளும் எந்தவித உணர்ச்சியையும் பார்வையாளர்களுக்குக் கடத்தவில்லை.

“யாராச்சும் சீக்கிரம் செத்துத் தொலைங்கப்பா. வீட்டுக்குப் போகணும்” என்பதாகத்தான் இருந்தது பார்வையாளர்களின் மனநிலை. ஆங்கிலப் படத்தின் தழுவல்தான் ஆனால், இயக்குநர் சக்ரி டோலட்டியின் முந்தைய படங்களின் உழைப்பில் கொஞ்சமும் இதில் வெளிப்படவில்லை. பிரதாப் போத்தன், பூமிகா, ரோஹிணி ஹட்டாங்கிடி ஆகியோருக்கு, படத்தில் நடிப்பதற்கான சவாலான காட்சிகளோ வாய்ப்போ இல்லை.

காது கேட்காத, வாய் பேச இயலாத நயன்தாராவின் பாத்திரம் படத்திற்குப் புதுமையான ஒன்றாகவெல்லாம் இல்லை. ஆனால், இயக்குநர் அதைப் பெரிதும் நம்பியிருக்கிறார், குறிப்பாக அதை மட்டுமே நம்பியிருக்கிறார். அதன்மூலம் ரசிகர்களுக்குப் பரிதாபத்தைக் கடத்த நினைத்தார்களோ என்னவோ, அவர்களுக்கே வெளிச்சம்.

“இந்தத் திரைக்கதைக்கு நாங்க வேற என்னதான் செய்யறது?” என்று பரிதாபமாகக் கேட்பதுபோல இருந்தது ஒளிப்பதிவாளர் கோரி க்ரேயாக், இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி ஆகியோரின் பங்களிப்புகள்.‘கொ லையுதிர் காலம்’ என்ற படத்தின் தலைப்பு அளவுக்காவது திகிலூட்டியிருக்கலாம்!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ – ஓர் பார்வை!!

கோமாளி

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஜெயம் ரவி , காஜல் அகர்வால் நடிப்பில் அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் கோமாளி.

1990 காலகட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவரான ஜெயம் ரவி, தன்னுடன் படிக்கும் மாணவி சம்யுக்தா ஹெட்ஜ் மீது காதல் வயப்படுகிறார். அதற்கென, தன் அப்பா ‘ஆடுகளம்’ நரேன் பரிசாகக் கொடுத்த பரம்பரை சிலையை சம்யுக்தாவிடம் கொடுத்து தனது காதலைச் சொல்ல செல்கிறார். செல்லும் அதே ஏரியாவில் பெரிய ர வுடி ஆகவேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கே .எஸ் ரவிக்குமார் காத்திருக்கிறார்.

அந்த ஊரின் மிகப்பெரிய ர வுடியான பொன்னம்பலத்தை கொன்று கே .எஸ் ரவிக்குமார் தான் அந்த ஊரின் மிகப்பெரிய ர வுடி ஆகவேண்டும் என்பதற்காக, தனது அ டியாட்களுடன் ஜெயம் ரவியை நெருங்குகிறார். ஜெயம் ரவி சம்யுக்தாவிடம் சிலையை பரிசாகக் கொடுத்து, தனது காதலைச் சொல்ல முயலும் பொழுது கே . எஸ் . ரவிக்குமார் பொன்னம்பலத்தைக் கொ ன்றுவிட்டு த ப்பிக்க முயலும் பொழுது எதிர்பாராத விதமாக ஜெயம் ரவிக்கு வி பத்து ஏற்பட்டு கோமா போகும் நிலை உண்டாகிறது.

20-ஆம் நூற்றாண்டின் கடைசிநாள் அன்று, கோமா நிலைக்குச் சென்ற ஜெயம் ரவி 16 ஆண்டுகளுக்குப் பிறகு, கோமாவில் இருந்து மீண்டும் சுய நினைவுக்குத் திரும்புகிறார். அவரை அத்தனை ஆண்டுகள் வரை, அவரது நண்பர் யோகி யோகிபாபு பார்த்துக்கொள்கிறார். ரவி கோமாவில் இருந்த 16 ஆண்டுகளில் உலகம் பல மாற்றங்களை அடைந்து இருந்தது. அந்த மாற்றங்களுக்கு ஏற்றவாறு ஜெயம் ரவியால் அவ்வளவு எளிதில் தன்னை மாற்றிக் கொள்ள முடிந்ததா? அவர் படும் அவதியையும், அதன்பின் கே .எஸ் . ரவிகுமாரால் அவருக்கு வரும் பிரச்சனைகளையும், அவர் எப்படிச் சமாளித்தார் என்பதைப் பற்றி முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் படம் கோமாளி.

ஜெயம் ரவி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தொடர்ந்து பல படங்களில் ஆக்சன் ஹீரோவாக பார்த்த ஜெயம் ரவியை ஜாலியான அப்பாவித்தனமான நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் பார்ப்பது நன்றாகவே இருக்கிறது.

காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெட்ஜ் , தத்தம் கதாப்பாத்திரங்களை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். யோகிபாபு காமெடியில் கலக்கியிருக்கிறார். நகைச்சுவையையும் தாண்டிய, தனது குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

படத்தில் நிறைய, சிறு சிறு கதாபாத்திரங்கள் இருந்தாலும் அனைத்து கதாபாத்திரங்களுமே படத்துக்கு பலம் சேர்த்து இருக்கின்றன. ஹிப் ஹாப் தமிழா-வின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம் என்றே சொல்லவேண்டும் . குறிப்பாக பின்னணி இசை பல இடங்களில் திரைக்கதைக்கு வலு சேர்க்கிறது. படத்தில் வரும் நண்பா நண்பா பாடலைக் கேட்கும்போது, அது நமக்குள் மனித நேய எண்ணத்தை வரவழைக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஹிப் ஹாப் ஆதி பாடலாசிரியராகவும் கவருகிறார். அவருடைய வரிகள் ஈர்க்கின்றன. ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம். நாதன் சிறந்த ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார். அவரது பிரேம்கள் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக 2016ல் சென்னையில் வந்த வெள்ளக் காட்சிகளை தத்ரூபமாகப் படம் பிடித்திருக்கிறார்.

படத்தில் பாடல் காட்சிகள் நன்றாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஆர்ட் டிபார்ட்மென்ட் வேலைகள் சிறப்பாக இருக்கிறது. ஆர்ட் டைரக்டர் உமேஷ். ஜே. குமார் இந்த படத்தில் சிறந்த பங்களிப்பை தந்து இருக்கிறார். பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தில் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்.

அவருக்கு இது முதல் படமாக இருந்தாலும் அனுபவம் வாய்ந்த இயக்குனர் போல் பணியாற்றியிருக்கிறார். அவர் இந்த படத்தில் ஆட்டோ டிரைவர் ஆகப் பேசும் வசனங்கள் நன்றாகவே இருக்கிறது. பிரதீப் ரங்கநாதனுக்கு கோமாளி சிறந்த இயக்குனர் அந்தஸ்தை கண்டிப்பாகப் பெற்றுத்தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சமந்தா நடிப்பில் வெளியாகியிருக்கும் “ஓ பேபி”-திரைவிமர்சனம்!!

“ஓ பேபி”-திரைவிமர்சனம்!

சுரேஷ் புரொடக்ஷன் தயாரிப்பில் சமந்தா, லக்ஷ்மி , நாக சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஓ பேபி!. இளவயதிலேயே விதவையான , வாழ்வில் துன்பங்களை மட்டுமே அனுபவித்து, மகன் ஒருவர் மட்டுமே உலகமென வாழ்பவர் பேபி.

ஒரு மாயசக்தியினால் அவர் 24 வயது இளம் பெண்ணாக மாற்றமடைகிறார். அதன் பின் நிகழ்பனவற்றை அதகளமாக சொல்லியிருக்கும் படமே ஓ பேபி. படத்துக்கு ஆகப் பெரும் பலம் சமந்தா. 70 வயது மனநிலையுடன் கூடிய 24 வயது பெண்ணாக பேச்சு, நடை, உடை, பாவணை என அசரடிக்கிறார்.

படத்தில் 70 வயது பேபியாக லக்ஷ்மி. தனது மகன் மீதான அதீத பாசத்தால் தனது மருமகளை பகைத்து கொண்டு உடைந்து அழுவது, தனது நண்பன் ராஜேந்திர பிரசாத்தை கலாய்ப்பது என முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

ஒரு காட்சியில் கல்யாணம் பற்றி கேட்கும் நாக சூர்யாவிடம் என் பையனுக்கு கல்யாணமாகி அவன் பசங்க கல்யாண வயசுக்கு வந்துட்டாங்க என்று உலறி பின்பு அதனை சமாளிக்கும் இடம் ரகளை. இப்படி படம் முழுக்க சுவாரசியமான காட்சகளால் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் நந்தினி ரெட்டி.

சிறப்பான பின்னணி இசை மற்றும் பாடல்கள் என படத்துக்கு நியாயம் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் மிக்கி ஜே.மேயர். ரிச்சர்டு பிரசாத்தின் ஒளிப்பதிவு தரம்.

முதுமை பருவம் பற்றிய புரிதலை இந்த படம் வழங்கும். குறிப்பாக மனித வாழ்க்கையில் ஒவ்வொரு வயதுக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதை அந்தந்த மனநிலையுடன் கொண்டாட்டத்துடன் அணுக வேண்டும் என்பதை சுவாரஸியமாக சொல்லியிருக்கும் படம் தான் ஓ பேபி.

துறுதுறு சமந்தாவின் நடிப்பு, படம் முழுக்க வரும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் என ஓ பேபி ஒரு ஃபீல் குட் எண்டர்டெயினர்.

“குருக்ஷேத்திரம்” திரைப்படம் ஒரு பார்வை!!

குருக்ஷேத்திரம்

விருஷபத்ரி புரொடக்ஷன் தயாரித்து வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு வெளியிட்டிருக்கும் படம் குருக்ஷேத்திரம். நமக்கு தெரிந்த மஹாபாரதக் கதையை துரியோதணனை முதன்மைபடுத்தி சொல்லியிருக்கும் படம் தான் குருக்ஷேத்திரம்.

துரியோதணனாக தர்ஷன். தனது வலிமையான உடல் மொழியால் ஈந்த வேடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். கர்ணனாக இந்த படத்துக்கு ஆகப் பெரும் பலம் சேர்த்திருக்கிறார் அர்ஜூன். குறிப்பாக போ ர் காட்சிகளில் தான் ஏன் ஆக்ஷன் கிங் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்.

திரௌபதியாக சினேகா. தன்னை பாண்டவர்கள் சூதாட்டத்தில் இழந்தது குறித்து கேட்டதும் அதிர்வது பின்பு தன்னை அசிங்கப்படுத்திய துரியோதணனுக்கு எதிராக சாபம் விடுவது என அந்த வேடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். சகுனியாக ரவிஷங்கர், அபிமன்யூவாக நிகில் என தங்களுக்கு கொடுத்த வேடத்தை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

சக்கர வியூகம் உள்ளிட்ட போர் தந்திரங்களை தெளிவாக காட்சிகளாக நன்றாக சொல்லப்பட்டிருந்தது. மேலும் போ ர்காட்சிகள் நன்றாக வடிவமைக்கபப்பட்டிருந்தது. விஎஃப்எக்ஸ் மற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

இசையமைப்பாளர் ஹரிகருஷ்ணாவும் ஒளிப்பதிவாளர் ஜெய் வின்சென்ட்டும் படத்துக்கு தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். துரியோதணன் கதாப்பாத்திரத்தின் வழியாகவே கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் பாண்டவர்களுக்கான காட்சிகள் குறைவாகவே இருக்கிறது.

எனவே மஹாபாரதக் கதை தெரிந்தவர்களுக்கு மட்டுமே பாண்டவர்களின் குணாதிசயங்கள் தெரியும் என்பதால் போர் காட்சிகளின்போது சற்றுக்குழப்பம் ஏற்படலாம். முதல் பாதியில் நீளத்தை குறைத்திருக்கலாம். ஆனாலும் துரியோதணன் வழியாக கதை சொன்ன விதத்தில் கவனம் பெறுகிறது இந்த குருக்ஷேத்திரம். மஹாபாரதத்தை மாறுபட்ட கோணத்தில் சுவாரசியமான போர்காட்சிகளுடன் சொன்னவிதத்திற்காக ஒரு முறைபார்க்கலாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை யோகி பாபு தொகுத்து வழங்கினால் செம்மயா இருக்கும் : கோமாளி பட இயக்குனர்!!

யோகி பாபு

கோலிவுட்டில் ஒரு காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த காமெடி பிரபலங்களான சந்தானம், சூரி போன்றவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு வடிவேலுவுக்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்த்திழுத்தவர் நடிகர் யோகி பாபு.

சமீபகாலமாக வெளிவரும் பெரும்பான்மையான படங்களில் யோகி பாபுவின் காமெடி இடம்பெற்றுவிடுகிறது. அந்த அளவுக்கு அவரது யதார்த்தமான நடிப்பும், உருவ அமைப்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி கொண்டே வருகிறது. அந்தவகையில் இன்று வெளிவந்திருக்கும் கோமாளி படத்தில் யோகி பாபுவின் காமெடி வேற லெவல் ஃபன் என ஆடியன்ஸ் கூறி வருகின்றனர்.

இப்பட இயக்குனர் பிரதீப் டிசைன் Behindwoods தளத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் யோகி பாபுவின் நடிப்பு குறித்து பேசிக்கொண்டிருந்தபோது கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை யோகி பாபு தொகுத்து வழங்கினால் செம்மயா இருக்கும் என்று கூறி சிரித்தார். மேலும் அந்த வீட்டிலிருக்கும் அத்தனை பேரையும் கலாய்த்து காமெடி செய்து நிகழ்ச்சியை சூப்பரா தொகுத்து வழங்குவார் என்று கூறியுள்ளார்.

 

பிக்பாஸில் வனிதா முகத்தில் அறைந்தாரா முகேன்? கசிந்த ஷாக்கிங் தகவல்!!!

முகத்தில் அறைந்தாரா முகேன்?

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் வெறும் 1.30 மணிநேர நிகழ்வை மட்டும் தான் பார்க்கும் பார்வையாளர்களுக்கு காட்டுகின்றனர், பிக்பாஸ் நிர்வாகத்தினர்.மீதி நடக்கும் விஷயங்களில், பல சுவாரஸ்யம் இல்லாததினாலும் சில விஷயங்கள் சஸ்பென்ஸை உடைத்துவிட போகிறது என்பதினாலும் ச ர்ச்சைக்குள்ளாக போகிறது என்பதினாலும் மறைக்கப்படுகிறது.

அப்படிதான் இன்று பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக நுழைந்துள்ள வனிதாவை முகேன் முகத்தில் ஓங்கி அறைந்துவிட்டதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. ஆனால் அதனை இதுவரை வெளிவந்துள்ள எந்தவொரு ப்ரோமோவிலும் காட்டப்படவில்லை.

வழக்கம்போல் இதையும் சர்ச்சை விஷயமாக பிக்பாஸ் மறைத்துவிட்டாரா? என்பதை இன்றைய நிகழ்ச்சி பார்த்தால் தான் தெரியவரும்.

மேலும், முகேன் ஷார்ட் டெம்பர் என்பதால் இந்த நிகழ்வு நடைபெற வாய்ப்புள்ளது. ஏனெனில் வனிதாவும் வந்ததிலிருந்து முகேனையும் அபிராமியையும் சீ ண்டியப்படியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை’ குடும்பத் தலைவர் இவரா?

நம்ம வீட்டு பிள்ளை

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தில் அவரது அப்பா, அம்மா, தாத்தா கதாபாத்திரங்களில் நடித்துள்ள பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனை ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் செய்தவர் பாண்டிராஜ். அதைத் தொடர்ந்து ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனை இயக்கினார். தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனு இம்மானுவேல், அர்ச்சனா, ரமா, ஆர்.கே.சுரேஷ், சூரி, யோகி பாபு, வேலராமமூர்த்தி, சுப்பு பஞ்சு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாக ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி (எ) நட்ராஜ் நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றும் நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

கிராமிய பின்னணியில் உருவாகியுள்ள‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக சமுத்திரக்கனியும், அம்மாவாக அர்ச்சனாவும், தாத்தா கேரக்டரில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் நடித்துள்ளதாக தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக வாய்ப்பிருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆணா பெண்ணா? நீயா நானா..? – பிக்பாஸில் முற்றும் பாலின பஞ்சாயத்து!!

பிக்பாஸில் முற்றும் பாலின பஞ்சாயத்து

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்கான 3வது புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இதுவரை காதல், நட்பு, முக்கோண காதல் என்று போய்க் கொண்டிருக்க, கவின் -லாஸ்லியா-சாக்ஷி இடையிலான காதல் கதை மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து 3 வாரங்களாக நாமினேஷனில் வந்த சாக்ஷி கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில், பிக் பாஸ் வீடு சற்றிய அமைதியாக இருந்த நிலையில், புயலை கிளப்பும் விதமாக வைல்ட் கார்ட் எண்ட்ரியில் கஸ்தூரி உள்ளே வந்தார். அவர் வந்தும் பெரிதாக சுவாரஸ்யம் இல்லாமல்போனதால், சிறப்பு விருந்தினராக, நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா அ திரடியாக உள்ளே வந்து அனைவரையும் அ திர்ச்சியில் ஆழ்த்தினார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ-எண்ட்ரி கொடுத்த வனிதா, வந்த உடன் அபிராமி-முகென் இடையிலான ஒருதலை காதலை பிரித்து வைத்து தனது மிஷனை முடித்தார். அவரது அடுத்த டார்கெட் தற்போது கவின் மற்றும் லாஸ்லியா போல் தெரிகிறது. இதற்கு இருவரிடமும் நேரடியாக பற்ற வைத்தால் வேலைக்காகாது என்பதனால், மதுமிதாவை தூண்டிவிட்டு கவின் மற்றும் லாஸ்லியா இடையிலான உறவுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வனிதா மாஸ்டர் பிளான் போட்டிருப்பதாக தெரிகிறது.

தற்போது ஹவுஸ்மேட்ஸ் இடையே ஆண்-பெண் என்ற பாலின பாகுபாடு குறித்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தற்போது 3வது புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அ டிமைப்படுத்துவதாக ஆண்களை கு ற்றம் சாட்டும் மதுமிதாவை கேள்வி கேட்ட கவினை 4 பெண்களை யூஸ் செய்ததாக மதுமிதா கூறியது தன்னை மிகவும் கா யப்படுத்தியதாக கவின் க ண்ணீர் வடித்தார்.

புரொமோ வீடியோவில், இரெண்டு கேள்வி கேட்டதற்கு, மீண்டும் அதே விஷயத்தை வைத்து பேசுவது முறையா? ஒரு முறை கூட நாங்கள் பெண்கள், ஆண்கள் என்று வேறுபாடாக கருதியதில்லை. கேப்டன்சி டாஸ்க்கில் மதுமிதாவிற்கு அடிப்பட்ட போது, அவருக்காக போட்டியை விட்டு கொடுத்தவன் நான் என சாண்டியும் கூற, கஸ்தூரி என்னவோ ஜெயிலுக்குள் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். இன்றைய எபிசோடில் இதற்கான காரணம் என்னவென்று தெரிய வரும்.

இளம் நடிகருக்கு பா லியல் தொ ல்லை கொடுத்த பெண் பாடகி : ஓப்பனாக வெளியான புது சர்ச்சை!!

தொல்லை கொடுத்த பெண் பாடகி

அண்மைகாலமாக Me Too என்ற டேக்கின் மூலம் பல பெண்கள் தாங்கள் சந்தித்த பா லியல் தொந்தரவுகளை பேசி வந்தனர். இதில் சினிமா வட்டாரத்தை சேர்ந்த சிலரின் பெயரும் அண்மையில் சிக்கியது.

தற்போது ஆண்களுக்கும் இதே போல பெண்களால் நடக்கும் தொ ல்லைகள் Men Too என பேசப்பட்டு வருகிறது. இதில் தற்போது அமெரிக்காவை சேர்ந்த மாடலிங் நடிகர் Josh Kloss என்பவர் பாடகி Katy Perry என் பா லியல் தொந்தரவு புகார் அளித்தார்.

இவர்கள் இருவரும் இணைந்து ஒரு பாடல் ஆல்பத்தில் நடித்துள்ளார்கள். பா லியல் தொந்தரவு சம்பவம் 2012 ல் நடைபெற்றதாக Josh கூறியுள்ளார்.

தற்போது எழுந்துள்ள இந்த புதிய சர்ச்சையால் பரபரப்பு சூழ்ந்துள்ளது.