லிப் கிஸ் அடிக்கும் ராகுல் ப்ரீத் சிங் : வைரலான புகைப்படத்தால் எழுந்த ச ர்ச்சை!!

ராகுல் ப்ரீத் சிங்

பாடகி சின்மயி கணவர் ராகுல் ரவீந்திரன் தெலுங்கில் மன்மதுடு 2 என்ற படத்தை இயக்கியுள்ளார்.

நாகர்ஜுனா மற்றும் ராகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கும் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கின்றன.

படத்தில் பல காட்சிகளை சென்சார் நீக்கியுள்ளது ஆனால் வெளிநாடுகளில் அப்படியே தான் வெளியாகியுள்ளது. ஒரு காட்சியில் படத்தில் நடிகை ராகுல் ப்ரீத் சிங், நடிகை ஜான்சிக்கு லிப் லாக் மு த்தம் கொடுக்கிறார்.

அந்த வீடியோ, புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக உங்களது கணவர் என்ன இப்படியெல்லாம் படம் எடுத்திருக்கிறார் என்று சின்மயியை கேள்வி கேட்டு வருகின்றனர்.

வெ டித்தது ச ண்டை, பிக்பாஸ் வீட்டில் சேரை வைத்து தா க்குதல், ஷாக் ஆன பார்வையாளர்கள்!!

பிக்பாஸ் வீட்டில்

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பெரிய ப ரபரப்பை உண்டாக்கி வருகின்றது. அந்த வகையில் இன்று பிக்பாஸ் ப்ரோமோ ஒன்றில் பலரும் ஷாக் ஆகும்படி ஒன்று நடந்துள்ளது.

முகென் மற்றும் அபிராமியிடையே தற்போது மெல்ல அவர்கள் உறவில் விரிசல் விட்டு வருகின்றது, அப்படியிருக்க நேற்று வனிதா இனி முகெனை நம்பாதே என்றே சொல்லிவிட்டார்.

அதை தொடர்ந்து இன்று வந்த ப்ரோமோவில் இருவருக்கு வா க்குவாதம் முற்றியது, ஒரு கட்டத்தில் சேரை தூக்கி அ டிக்க சென்றுவிட்டனர்.

இதை பார்த்த போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளருக்கும் கடும் ஷாக் தான்.

ஆர்த்தியால் அழகாகும் வீடு : காதல் மனைவி பற்றி சிவகார்த்திகேயன் உருக்கம்!!

சிவகார்த்திகேயன் உருக்கம்

வெற்றியடைவது முக்கியமல்ல. அதைத் தக்கவைத்துக் கொள்வதுதான் பெரும் சவால் என்று கூறுகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அந்தச் சவாலை எதிர்கொள்ளத் தோள் கொடுப்பவரே உற்ற துணை. என் அம்மா எனக்குத் தந்த மிகப் பெரிய பரிசு ஆர்த்தி. எத்தனை வருடங்கள் கழித்துக் கேட்டாலும் இது மாறாது.

என் தாய்மாமாவின் மகள்தான் ஆர்த்தி என்றாலும் இருவரும் அவ்வளவாகப் பேசிக்கொண்டதில்லை. நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறித்துவிட்டு, “மாமா பெண்ணைத்தான் உனக்குப் பார்த்திருக்கிறேன்பா” என்று சொன்னார் அம்மா.

திருமணமாகும் போது எனக்குப் பெரிய வசதி இல்லை. ஆனால், ஆர்த்தி வசதியான குடும்பத்துப் பெண். அப்போதும் சரி, இப்போதும் சரி அவர் எதையுமே வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்.

எனக்கு இதெல்லாம் வாங்கிக் கொடுங்க எனக் கேட்டதே கிடையாது. எங்களுக்குத் திருமணமாகும்போது ஆர்த்திக்கு 21 வயது. பொறியியல் படித்திருந்தார். ரொம்ப சீக்கிரமே திருமணம் செய்து கொண்டுவிட்டோமோ என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு.

ஆராதனா பிறந்த நாளை எங்கள் இருவராலும் மறக்க முடியாது. என்ன குழந்தை பிறந்தாலும் சந்தோஷம் என அவர் நினைத்தார். பெண் குழந்தையாக இருந்தால் கூடுதல் சந்தோஷம் என நான் நினைத்துக்கொண்டிருந்தேன். நான் நினைத்தபடியே ஆராதனா கிடைத்தாள்.

எங்களது திருமண வாழ்க்கையை ஆராதனாவுக்கு முன், பின் எனப் பிரிந்துக்கொள்ளலாம். முன்பு நான் மட்டுமே இருந்தேன். இப்போது ஆர்த்தி மேடம், குழந்தை வளர்ப்பில் பயங்கர பிஸி.

இப்போ நாமதான் போன் செய்து அவர்களுடைய வேலையை கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது. நீண்ட நாட்கள் படப்பிடிப்பு என்றால் இடைப்பட்ட நேரத்தில் பேசிக்கொள்வோம். ஆராதனாவிடம் பேச வேண்டுமே, இல்லையென்றால் மேடம் கோபித்துக்கொள்வார்.

என் நண்பர்கள் குழுவில் எனக்குத்தான் முதலில் திருமணமானது. திருமணமான புதிதில் என் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து ஒரே நேரத்தில் 12 பேருக்குச் சமைத்துக் கொடுப்பார் ஆர்த்தி. மட்டன், சிக்கன் என எதைச் சமைத்தாலும் பிரமாதமாக இருக்கும். சமையலில் புதிதாக ட்ரை பண்ணுவது அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.

திருமணத்துக்குப் பிறகு ஆர்த்தியின் முதல் பிறந்த நாளுக்கு என்னால் வர முடியாது என்று சொல்லிவிட்டேன். எல்லாம் சினிமா பாணியில் ஒரு சின்ன சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தத்தான். வீட்டின் சுவர் ஏறி குதித்து, பால்கனி கதவு வழியாக வீட்டுக்குள் கேக் எடுத்துச் சென்றேன்.

என்னைப் பார்த்ததும் பயந்து அழுதுவிட்டார். அவர் அழ ஆரம்பித்தவுடன் எனக்குப் பயமாகிவிட்டது. அன்றைக்கு வந்திருந்த நண்பர்களும் என்னப்பா ஆச்சு என்று பதறிக் கேட்க, அதிலிருந்து அவரை சர்ப்ரைஸ் செய்வதை நிறுத்திவிட்டேன். என்ன நடந்தாலும் அப்படியே சொல்லிவிடுவேன்.

திரையுலகில் நுழைந்தவுடன் ஆரம்பத்தில் சிறிய வதந்தியில்கூடச் சிக்கவில்லை. ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளேன் என்ற பெரிய வதந்தியில்தான் சிக்கினேன். அப்போது அவர் குழந்தையைச் சுமந்துகொண்டிருந்ததால் ரொம்ப வருந்தினேன், பயந்தேன்.

இந்த நேரத்தில் இந்த வதந்திச் செய்தியைப் படித்தால் என்ன நினைப்பார் என்று நினைத்து அதை அவரிடமிருந்து மறைத்தேன். அடுத்த நாள் அவராகவே, “என்னங்க இப்படியொரு செய்தி வந்துருக்கு?” என்று ரொம்ப யதார்த்தமாகக் கேட்டார்.

அப்போதுதான் எதையுமே நேரடியாக எதிர்கொள்ளக்கூடிய பெண் அவர் என்பது புரிந்தது. “சினிமாத் துறையில் இருந்தால் இதெல்லாம் வரும் என்று தெரியும், பார்த்துக்கொள்ளலாம்” என்று எனக்கு ஆறுதல் சொன்னார்.

அவரது பேச்சுக்குப் பிறகு எனக்குப் பொறுப்பு அதிகமானதுபோல் உணர்ந்தேன். திரைத்துறையில் நுழைந்திருந்த நேரத்தில் இப்படி அவர் சொன்னது ஒரே நேரத்தில் அதிர்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

எது உண்மை, எது பொய் என்று புரிந்துகொள்ளக்கூடிய மனைவி நமக்குக் கிடைத்திருக்கிறார் என்று மகிழ்ந்தேன். எனது வருமானவரி தொடர்பான வேலைகளை ஆர்த்திதான் கவனித்துக்கொள்கிறார். கடந்த ஆண்டு நான் அனைத்து வரியையும் சரியாகக் கட்டியுள்ளேன் என்று வருமான வரித் துறையில் ‘தங்கச் சான்றிதழ்’ கொடுத்தார்கள். நான் மட்டுமே பார்த்திருந்தால்கூட, சரியாகப் பார்த்துக் கட்டியிருப்பேனா என்று தெரியவில்லை.

இவ்வளவு நேர்த்தியாகச் செய்திருக்கிறாரே என்று ரொம்ப சந்தோஷப்பட்டேன். அவர் எனக்குக் கொடுத்த பரிசாக நினைத்து, அதை வீட்டில் ஃபிரேம் செய்து மாட்டியிருக்கிறேன்.

நாம் வரியைச் சரியாகக் கட்ட வேண்டும் என்று எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால், வீட்டில் குழந்தை வளர்ப்புக்கு இடையே அனைத்தையும் சரிபார்த்து, சரியாக வரியைச் செலுத்தி ‘தங்கச் சான்றிதழ்’ பெற்றுக் கொடுப்பது சாதாரண விஷயமல்ல. வீட்டு விஷயங்களைப் பொறுத்தவரைக்கும் ஆர்த்திதான் எல்லாமே. அவர்தான் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்துகொண்டிருக்கிறார்.

வீட்டில் என்ன நடக்கிறது என்ற டென்ஷன், பிரஷர் எதுவுமே இல்லாமல் படப்பிடிப்புக்கு நான் போய்வர ஆர்த்திதான் காரணம். வீட்டை எப்போதுமே ஜாலியாகவே வைத்திருப்பார். முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது என்னிடம் கேட்டுக்கொள்வார்.

படப்பிடிப்புக்கு வெளியூர் சென்றால் ஒரு மாதம் வீட்டுக்கு வர முடியாததுதான் சிரமம். முன்பு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊருக்கு ஓடிக்கொண்டிருப்பேன். ஒரு மாதம் வேலை செய்துவிட்டு, ஒரு வாரம்கூட வீட்டில் இருந்தது கிடையாது. அப்போதெல்லாம் அதைப் புரிந்து நடந்துகொண்டார்.

என்னை இந்த ஊருக்குக் கூட்டிட்டுப் போ, இந்த ஊரைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று இதுவரை ஆர்த்தி சொன்னதில்லை. மனைவியையும் மகளையும் பார்க்காமல் இருக்க முடியாது என்பதால் நானே அவர்களை வெளியூர்களுக்கு வரவழைத்துவிடுவேன். மற்றபடி நான் வீட்டிலிருந்தால் அவருக்குப் போதும்.

பொதுவாகவே எந்த மாதிரியான கதைகளில் நடித்துவருகிறேன், நடிக்கப்போகிறேன் என்பதை அவருடன் விவாதிப்பேன். படப்பிடிப்புக்கும் அவர் வருவதால் வேலையில் உள்ள ப்ளஸ், மைனஸைத் தெரிந்துவைத்துள்ளார்.

வேறு ஒரு ஆணுடன் நெருக்கமாக இருக்கும் அபிராமி : இவர்தான் காதலரா?

அபிராமி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிராமி இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.


விளம்பர மாடலான அபிராமி தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். ஆரம்பத்தில் கவினை காதலிப்பதாக கூறியிருந்தார். எனினும், முகேனுடன் நட்பாக பழகிய அவர் பின்னர் முகேனை காதலிக்க தொடங்கிவிட்டார்.

ஆனால் முகெனுக்கு அபிராமி மிது துளியும் காதல் இல்லை. அபிராமியுடன் நட்பாகவே பழகுவதாக முகேன் பல முறை கூறிவிட்டார். இந்நிலையில் அபிராமி வேறு ஒரு ஆணுடன் நெருக்காமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும் அந்த புகைப்படத்தில் யூ ஆர் மைன், என்றும் ஹேப்பி பர்த்டே பேபி என்றும் பதிவிடப்பட்டுள்ளது. அது மாத்திரம் இன்றி ,இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது, இது தான் அபிராமியின் காதலரா என்று எண்ணம் தோன்றுகிறது.

அதே போல இந்த புகைப்படத்தையும் அபிராமி பதிவிட்டாரா இந்த அந்த நபர் பதிவிட்டாரா என்பது தான் தெரியவில்லை. எனினும், இதனை பார்த்த நெட்டிசன்கள் அபிராமியை திட்டி வருகின்றனர்.

பிக்பாஸ் அபிராமியின் உண்மை முகம் முகேனால் தான் வெளிப்படும் : எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி அதிரடி!!

பிக்பாஸ் அபிராமி

நடிகர் ஆர்யா கலந்துகொண்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அபர்ணதி. இவர் அந்த நிகழ்ச்சியில் இறுதி சுற்று வரை சென்றார்.

இவர் சமீபத்தில் பிக்பாஸ் குறித்து அளித்துள்ள பேட்டியில், நான் பிக்பாஸை விட்டு வெளியேறினாலும், நான் முகனிடன் இப்போது எப்படி இருக்கிறேனோ? அப்படி தான் இருப்பேன். எப்போதும் மாறமாட்டேன் என்று சொல்வது போல் எல்லாம் அபிராமியால் இருக்க முடியாது. நானும் தான் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் போது அப்படி இருப்பேன், இப்படி இருப்பேன் என்றெல்லாம் கூறினேன்.

ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமாகவில்லையே, இதே முகன் கொஞ்சம் அபிராமியிடம் பேசாமல் விலகி நிற்க சொல்லுங்கள், அப்போது தெரியும் அபிராமியின் இன்னொரு முகம் என்று கூறியுள்ளார்.

மேலும் பிக்பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளர்கள் நான்கு பெண்களுடன் சுற்றுவதை நாம் விளையாட்டாக பார்க்கிறோம், ஆனால் அதுவே பெண் என்றால் அவளை ஐட்டம் என்று கூறுகிறோம். கஸ்தூரி கவீனிடம் கேட்டது சரியான கேள்வி தான் என்று கூறினார்.

தமன்னாவுக்கு கல்யாணம் : மணமகன் யார் தெரியுமா?

தமன்னாவுக்கு கல்யாணம்

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான தமன்னா, கடந்த 13 அண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

விஜய், அஜித், கார்த்தி, சூர்யா, விஷால் என முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்ட தமன்னா குறித்து அவ்வபோது காதல் கிசுகிசுக்களும் வந்துக் கொண்டிருக்கிறது.

இறுதியாக பிரபல நடன இயக்குநரும் நடிகர் கம் இயக்குநரான ஒருவருடன் தமன்னா கிசுகிசுக்கப்பட்டார். திருமணமாகி விவாகரத்தான அவருக்கு பேய் படத்தில் ஜோடியாக நடித்த தமன்னாவை, அவர் பேயாக காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதை தமன்னா மறுத்தார். இதையடுத்து தமன்னாவின் திருமணம் குறித்து கிசுகிசுக்கப்பட்டது. இதற்கும் தமன்னா மறுத்தார்.

இந்த நிலையில், தமன்னா ஒருவரை காதலிப்பதாகவும், தற்போது அவருடன் டேட்டிங்கில் இருப்பவர், அவரை தான் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதையும் தமன்னா மறுத்துள்ளார்.

இப்படி தொடர்ந்து தனது காதல் மற்றும் கல்யாணம் பற்றிய செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து வரும் தமன்னா, இந்த முறை காதலுக்கு மறுப்பு தெரிவித்தாலும், கல்யாணம் குறித்த செய்தியை மட்டும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

ஆம், தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பது உண்மை தானாம். ஆனால், அது காதல் கல்யாணம் இல்லையாம். பெற்றோர்கள் பார்க்கும் நபரை தான் தமன்னா திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம். தற்போது அவரது பெற்றோர்கள் தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார்களாம். தமன்னாவுக்கு ஏற்றவர் கிடைத்தவுடன் திருமணம் தானாம்.

தனது காதல் கல்யாணம் குறித்து வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமன்னா இந்த இப்படி ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.

நடிகை அமலா பாலை வறுத்தெடுத்த ரசிகர்கள் : என்ன காரணம் தெரியுமா?

நடிகை அமலா பால்

நடிகை அமலா பால் அண்மையில் வெளியான ஆடை படத்தில் கதை கருவாக நடித்திருந்தார். ஆடையில்லாமல் அவர் படத்தில் நடித்திருந்தது பரபரப்பாக பேசப்பட்டது. அவரின் நடிப்பு பாராட்டி பேசப்பட்டது.

பெரும் எதிர்பார்ப்புகள் படத்திற்கு இருந்த போதிலும் கலவையான விமர்சனங்களால் படம் நிற்கமுடியாமல் போய்விட்டது. இது ஒரு பக்கம் இருக்க அவர் அண்மையில் காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து கூறினார்.

இது குறித்து அவர் பதிவிட்டுருந்த புகைப்படத்தால் சமந்தப்பட்ட கட்சியை விரும்பாதோர் அவரை திட்டி தீர்த்துள்ளனர். அதே வேளையில் இந்த பதிவை 1.19 லட்சம் பேர் லைக் செய்துள்ளார்கள்.

 

பிக்பாஸில் இருந்து வெளியே வந்தவுடன் தர்ஷனை தத்தெடுக்க காத்திருக்கும் பிரபல நடிகை!!

தர்ஷனை தத்தெடுக்க காத்திருக்கும் நடிகை..

இவருக்கு பிக்பாஸ் வீட்டில் பாத்திமா பாபு மிகவும் உறுத்துணையாக இருந்தார். அவர் எலிமினேட் ஆகி வெளியேறிய போது தர்ஷன் தேம்பி தேம்பி அழுததை பார்த்திருப்போம்.

இந்நிலையில் பாத்திமா பாபு சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது அங்கு அளித்த பேட்டியில், தர்ஷன் நம்ம வீட்டு பிள்ளை தான், எங்கள் வீட்டில் கூட, அவனை விட்டு தர மாட்டீங்கிறாங்க, அதுமட்டுமல்லாமல், மிக பெரிய பிரபல நடிகை ஒருவர் தர்ஷன் வெளியே வந்தவுடன் தத்தெடுக்க காத்திருக்கிறார்.

ஆனால் இப்போதைக்கு அவர் யார் என்று சொல்லமாட்டேன், தர்ஷன் வெளியே வந்தவுடன் உங்களுக்கெல்லாம் தெரியும் என்று கூறியுள்ளார்.

அழகான மகளை கொ ன்றுவிட்டு நடிகை த ற்கொ லை : சிக்கிய கடிதம்!!

பிரசாந்த் பார்கர்

இந்தியாவில் பிரபல சின்னத்திரை நடிகை பிரக்ன்யா பிரசாந்த் பார்கர், தனது மகளை கொ ன்றுவிட்டு தானும் தற் கொ லை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள கல்வாயில், தனது கணவர் மற்றும் மகளுடன் வசித்து வந்தவர் பிரபல சின்னத்திரை நடிகை பிரக்ன்யா பிரசாந்த் பார்கர். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே நடிப்பதற்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றைய தினம் பிரக்ன்யாவின் கணவர் பார்க்கர் காலை Gym-க்கு சென்று 9.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தனது மனைவி பிரக்ன்யா தூ க்கில் தொ ங்கிய நிலையிலும், மகள் ஸ்ருதி ப டுக்கை அறையில் இ றந்த நிலையிலும் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், அருகில் உள்ளவர்களின் உதவியுடன் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால், அவர்கள் இருவரும் ஏற்கனவே இ றந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, பிரக்ன்யா எழுதிய கடிதம் ஒன்று வீட்டில் கிடைத்தது. அதில், ‘எனது மகளை கொ ன்றுவிட்டு நான் தற் கொ லை செய்து கொள்கிறேன். இதற்கு வேறு யாரும் காரணமல்ல’ என்று எழுதப்பட்டிருந்தது.

நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்காததால் விரக்தியில் பிரக்ன்யா இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நான் தான் முகேனை திருமணம் செய்ய போகிறேன் : ஓப்பானாக பேசும் மாமன் மகள்!!

முகேனின் மாமன் மகள்

பிக்பாஸில் இருக்கும் முகேனின் மாமன் மகள் தற்போது பிரபல சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் அதில் அவர் கூறுகையில், நானும் முகேனும் சின்ன வயதில் இருந்தே பழகி வருகிறோம், அவருக்கு நான் எனக்கு அவர் என்று சின்ன வயதிலே என் பெற்றோர்கள் முடிவு செய்து விட்டனர்.

அனால் பிக்பாஸில் முகேனை சுற்றி வரும் அபிராமிடம் நான் வெளியில் நதியா என்னும் பெண்ணை காதலித்து வருகிறேன் எனக் கூறியிருந்தார். அதற்கு அவர் கூறுகையில் நதியாவிற்கும், முகேனுக்கும் இருப்பாது அக்கா தம்பி உறவுதான்.

நான் நதியைவிடம் பேசியுள்ளேன். அவர் என்னிடம் கூறுகையில் முகேனை என் தம்பியாக பார்க்கிறேன் எனக் கூறியுள்ளார்.

பிக்பாஸில் முகேன் கூறியது அபிராமியிடம் இருந்து தப்பிக்கத்தான் அப்பாடி சொல்லியிருப்பார். எனக்கு தெரியும், அதே போல் முகேனுக்கும் என்னை பற்றி நல்ல தெரியும் அதனால் தான் அபிராமியிடம் அப்பாடி சொல்லியிருப்பார்.

அனாலும் எனக்கு மன வருத்தம் இருக்கு கண்டிப்பா என் பெயரை முகேன் சொல்லிருக்கலாம், ஆனால் ஏன் என் பெயரை சொல்லவில்லை எனத் தெரியவில்லை வருத்தமாக கூறியிருந்தார். ஆனால் அவர் வெளியில் வந்த உடனே அவரே சொல்ல வேண்டும் அப்பாடி இல்லையென்றால் நானே அவரிடம் கேட்பேன் எனக் சொல்லிவருகிறார்.

அதே போல் முகேனுக்கு அதிக கோவம் வரும் அபிராமிடம் அவர் காட்டியது வெறும் 10% தான் அவர் கோவம் வந்த வீட்டில் எதையாவது உடைத்து விடுவார் என அவர் மாமன் மகள் கூறியுள்ளார்.