அடிச்சு சாவடிச்சுருவேன் டி…. ஷாக்சியை அடிக்கப்போன கவீன் : ஏன் தெரியுமா?

கவீன்

பிக்பாஸ் விட்டில் நேற்று நாட்டாமை டாஸ்க்கில் யார் நன்றாக செய்தார்கள் என்று 2 பேரை தேர்வு செய்ய வேண்டும் எனவும், அப்படி தேர்வு செய்யப்படும் 2 பேர் தலைவர் பதவிக்கும் நிற்கப்படுவர் என்றும், நன்றாக டாஸ்க் செய்யாத 2 பேர் சிறையில் அடைக்கப்படுவர் எனவும் பிக்பாஸ் கூறினார்.


அதன் படி நாட்டாமை டாஸ்க் நன்றாக செய்தவர்கள் மீரா, ஷெரீன் தான் என்று சிலர் கூற, உடனே அங்கிருந்த மதுமிதா, சேரன், ஷாக்சி போன்றோர் அப்போ நாங்கள் எல்லாம் சரியாக பண்ணவில்லையா என்று கோபப்பட்டனர்.

அதில் ஒரு கட்டத்தில் கவீன், ஷாக்சியிடம் மொழிப்பிரச்சனை இருந்தது என்று கூறியதால், அவரிடம் வந்து ஷாக்சி நான் என்ன சுவாரஸ்யமாக டாஸ்க்கை செய்யவில்லை என்று திரும்ப… திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் கவீனோ நான் சுவாரஸ்யத்தைப் பற்றி பேசவில்லை, மொழிப்பிரச்சனையை பற்றி அதாவது கிராமத்து மொழி போன்று பேசவில்லை என்று விளக்கினார்.

ஆனால் ஷாக்சி மீண்டும்…மீண்டும் அதைப் பற்றியே கேட்டதால், ஒரு கட்டத்தில் கோபமடைந்த கவீன், அடிச்சு சாவடிச்சுருவேன் டி என்று கை நீட்ட ஷாகி அழுது கொண்டே அங்கு பலர் இருக்கும் போது இவன் ஏன் இப்படி கூறினான் என்று கதறி அழுதார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உண்மையில் ஏன் வந்தேன் : அழுதுபடி போட்டியாளர்களிடம் கூறிய சேரன்!!

சேரன்

பிக்பாஸ் வீட்டில் மீரா-சேரன் விவகாரம் தான் இப்போது மிகப் பெரிய டாப்பிக்காக சென்று கொண்டிருக்கிறது. விளையாட்டாக செய்ததை மீரா இவ்வளவு பெரிய விஷயமாக எடுத்து ஊதி பெரிதாக்கி அவரை அசிங்கப்படுத்திவிட்டார்.

இதனால் ஒரு கட்டத்தில் சேரன் இதற்கு மேல் இருந்தால் என்னுடைய மரியாதை, மதிப்பு, நான் ஒரு பத்து படங்கள் எடுத்துள்ளேன். பெண்கள் என்னை ஒரு நல்ல டைரக்டராக நினைக்கிறார்கள், ஆனால் இந்த பெண்ணோ என்னை தவறாக சித்தரிக்க நினைக்கிறாள்.

நான் உண்மையாக பிக்பாஸ் வருவதற்கு காரணமே என் மகள்கள் தான், அவள்களுக்காத தான் நான் இந்த வீட்டிற்குள்ளையே வந்தான், இல்லையென்றால் நான் ஏன் வரப்போகிறேன், எனக்கு எல்லாம் என் மகள் தான், இதைக் கண்டால் இந்த சோசைட்டி என்னை என்ன நினைக்கும் என்று கண்ணீர் விட்டு அழுதார்.

இதற்கு முன்பு சமீபத்திரக்கனி அளித்த பேட்டி ஒன்றில், சேரன் ஏன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார் என்று கேட்ட போது, அவர் இன்றைய தலைமுறை, இப்போது எப்படி இருக்கிறார்கள், அவர்களுக்கு பிடித்தது என்ன? எது போன்று இருக்க வேண்டும் போன்ற பல புதியதை தெரிந்து கொள்வதற்காக சென்றுள்ளதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் செல்லவிருந்த பிரபல நடிகை எடுத்த முடிவு!!

நடிகை எடுத்த முடிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் வெளியுலக தொடர்ப்பு இல்லாமல் 100 நாட்கள் தங்கியிருக்கவேண்டும். பலவிதமான குணம் கொண்ட போட்டியாளர்கள் இருப்பதால் தினமும் சண்டை சச்சரவும் வந்துகொண்டு இருக்கிறது.

இப்போது நடந்துவரும் பிக்பாஸ் 3வது சீசனும் இப்படித்தான் இருக்கிறது. இந்நிலையில் தன்னை கடந்த மூன்றுவருடங்களாக அணுகிவருகிறார்கள் என்றும், அதனால் வீட்டுக்குள் செல்லலாம் என நினைத்ததாக கஸ்தூரி கூறியுள்ளார்.

ஆனால் நேற்றைய எபிசோடை பார்த்த பிறகு “ஐயோ சாமி ஆளை வுடு” என்ற பீலிங் தான் அவருக்கு வருகிறதாம்.

9 வயது டிக்டாக் புகழ் சிறுமி பரிதாபமாக மரணம் : சோகத்தில் ரசிகர்கள்!!

ஆறுனி

டிக்டாக் ஆப் ரசிகர்களிடம் அதிகம் பிரபலம். மலையாளத்தில் டிக்டாக் செயலியில் தனது நடிப்பு திறமையை காட்டி பிரபலமானவர் ஆறுனி.

ஆறுனி கடந்த சில நாட்களுக்கு முன் பீவர் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவ சிகிச்சை பலன் இன்றி சிறுமி பரிதாபமாக உயி ரிழந்துள்ளார்.

இவரது ரசிகர்களுக்கு இது பெறும் சோகத்தை கொடுத்துள்ளது. இவரது தந்தை சவுதி அரேபியாவில் ஒரு விபத்தில் பரிதாபமாக உயி ரிழந்தது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சேரன் உண்மையில் யார் தெரியுமா : பல விசயங்களை சொன்ன பிரபல நடிகை!!

பிக்பாஸ் சேரன்

தற்போது முக்கிய டிவி சானலில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றிருப்பவர் இயக்குனர் சேரன். அவர் மீது மீரா மிதுன் சில தவறாக புகார் கூறியது பலருக்கும் முகம் சுளிப்பை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் சேரன் பற்றி நடிகை சங்கவி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். சேரனை எனக்கு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் நாட்டாமை படத்தில் உதவியாளராக பணியாற்றிய போதிலிருந்தே தெரியும். அவர் நல்ல மனிதர், நண்பர், அற்புதமான இயக்குனர்.

என் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். இன்னும் என் மனதில் இருக்கிறார். அவருக்கும் அவரின் குடும்பத்திற்கும் என் வாழ்த்துக்கள். பிக்பாஸ் அவர் வெற்றி பெற்றால் எனக்கு மகிழ்ச்சியே.

சேரன் அடிக்கடி கோப்படும் கேரக்டர் அல்ல. உதவி இயக்குனர்கள் மற்றவர்கள் என எல்லோரிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டுவருவார் என சங்கவி கூறியுள்ளார்.

தொழிலதிபருக்கு வந்த ஆசை : நயந்தாராவுக்காக பேசப்பட்ட 10 கோடி!!

நயந்தாரா

தென்னிந்தியா சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருந்தாலும், தமிழ்ப் படங்களில் நடிப்பதில் தான் நயன்தாரா தீவிரம் காட்டி வருகிறார். இருப்பினும், சில தெலுங்குப் படங்களிலும் நடித்து வரும் அவர்,

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதோடு, விஜய், ரஜினி, சிரஞ்சீவி போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ள தமிழகத்தை சேர்ந்த பிரபல துணிக்கடை உரிமையாளர் தன்னுடன் ஜோடியாக நயன்தாரா நடிக்க வேண்டும், என்று விரும்பியுள்ளார்.

இதற்காக சம்பளமாக நயன்தாராவுக்கு ரூ.10 கோடி வழங்குவதாக கூறினாராம். ஆனால், நயனோ பணத்தை பார்க்காமல், அந்த தொழிலதிபருடன் நடித்தால் தனது இமேஜ் டேமேஜாகிவிடும் என்று நோ சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, அந்த தொழிலதிபருடன் விளம்பர படங்களில் நடித்த நடிகைகள் கூட படத்தில் நடிக்க முடியாது, என்று கூறியதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த ரூ.10 கோடி மேட்டர் குறித்து கோடம்பாக்கம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த தகவல் உண்மையா அல்லது வதந்தியா, என்பது இதுவரை உறுதியாகவில்லை என்றாலும், அந்த துணிக்கடை தொழிலதிபர் ஹீரோவாவதும், அவருக்காக ஹீரோயின் தேடுதல் வேட்டை நடப்பதும் உறுதியான தகவல் என்றே கூறப்படுகிறது.

லாஸ்லியாவுக்கு கொஞ்சம் கூட அப்பா பீல் இல்ல : வைரலாகு வீடியோவால் சேரனுக்கு குவியும் ஓட்டு!!

சேரனுக்கு குவியும் ஓட்டு

பிக்பாஸ் வீட்டில் எப்போதும் என்னுடைய அப்பா சேரன் அப்பா தான் என்று லாஸ்லியா கூறுவர். மோகன் வைத்தியா எலிமினேட் ஆன போது கூட, கமல் யார் யார் எலிமினேட் ஆக வேண்டும் நினைக்கிறீர்கள் சேரன் அப்பாவா? இல்லை மோகன் அப்பாவா என்ற போது, கொஞ்சமும் யேசிக்காமல் லாஸ்லியா சேரன் அப்பா தான் என்று கூறினார்.

இதனால் நிகழ்ச்சியைக் கண்ட ச்..சே என்னா பொண்ணுப்பா என்று லாஸ்லியா மீது அன்பை வெளிப்படுத்தினர். அவருக்கு ஓட்டை வாரி வழங்கினர்.

இந்நிலையில் நேற்று நடந்த நாட்டாமை டாஸ்க்கின் போது, மதுமிதாவுடன் ஏற்பட்ட பிரச்சனையால், சேரன் சோகத்தில் இருக்கும் போது லாஸ்லியா அதை கண்டுகொள்ளாமல் செல்கிறார்.

இதை இணையவாசி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட, சேரன் அப்பா பாவம் அவர் நியாயத்தை தான் பேசி வருகிறார்.

ஆனால் வர..வர.. இந்த லாஸ்லியா பொண்ணு சரியில்லை இது நாள் வரை நடித்து கொண்டிருந்தாளோ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் லாஸ்லியாவிற்கு முன்பு இருந்த ரசிகர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவது மறுக்க முடியாத உண்மை.

காதல் தோல்வியால் மன உளைச்சல் : வருங்கால கணவருக்கு நிபந்தனை போடும் ராஷ்மிகா!!

ராஷ்மிகா

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ராஷ்மிகா. அந்தப்படம் மிகச் சிறப்பாக ஓடியதால் படத்தில் நடித்த ராஷிமிகாவும் பிரபல ஆனார்.


அதன் பின், தற்போது, அவர், அதே விஜய் தேவரகொண்டாவுடன் மீண்டும் இணைந்து, டியர் காம்ரேட் படத்தில் நடித்திருக்கிறார். தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு என நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் இன்று வெளியாகிறது.

இந்நிலையில், பிரபல ஊடகம் ஒன்றுக்கு நடிகை ராஷ்மிகா பேட்டி அளித்துள்ளார். அதில், தன்னுடைய கணவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பது குறித்து அவர் கூறியிருக்கிறார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது, எனது வருங்காலக் கணவர் எப்போதும் உண்மையைப் பேசுபவராக இருக்க வேண்டும். இனியாகவும் பேச வேண்டும். என்னுடைய உணர்வுகளை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

அவருடைய உணர்வுகளை புரிந்து கொண்டு கட்டாயம், அவர் சொல்படி நடப்பேன். என்னுடன், அவர் அதிக நேரம் செலவிட வேண்டும். மற்றபடி, ஒருவரை மற்றொருவர் புரிந்து கொண்டாலே போதும்; சண்டை-சச்சரவுகள் இருக்காது. இருவருக்குமான வயது வித்தியாசம், ஒரு பொருட்டே அல்ல. இவ்வாறு ராஷ்மிகா மந்தனா கூறியிருக்கிறார்.

முன்னதாக, தன்னுடன் நடித்த ரக்ஷித் ஷெட்டி என்பவரை, நடிகை ராஷ்மிக மந்தனா காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, 2017ல், நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர். பின் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்த காதல் தோல்வியைத் தொடர்ந்துதான், தனக்கு வரும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம், ராஷ்மிகா நிபந்தனை விதிக்கத் துவங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆமா நான் கவினை தெரிஞ்சே சைட் அடிக்குறேன் : காதலை ஏற்றுக்கொண்ட லொஸ்லியா!!

காதலை ஏற்றுக்கொண்ட லொஸ்லியா

பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா சென்ற பிறகு படு போராக சென்று கொண்டு இருந்தது. ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் சாண்டி மற்றும் மதுமிதாவிற்கும் இடையே நிகழ்ச்சியில் சண்டையால் பிக் பாஸ் வீடே இரண்டாக ஆகி விட்டது. இதுநாள் வரை அமைதியாக இருந்த மது நேற்று ருத்ர தாண்டவம் ஆகிவிட்டார்.

இது ஒரு புறம் இருக்க பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் எப்படியோ இணையத்தில் தினமும் வெளியாகிவிடுகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், குறிப்பாக ஆரம்பத்தில் அபிராமியுடன் காதல் கிசுகிசுக்கப்பட்ட கவின் பின்னர் சாக்ஷியுடன் ரொமான்ஸ் செய்ய ஆரம்பித்தார். இதனால் பார்வையாளர்களே மிகுந்த வெறுப்புள்ளாகினர். பின்னர் நெட்டிசன்ஸ் பலரும் பிளே பாய் கவின் என்று மோசமாக விமர்சித்தனர்.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் மதுமிதா மற்றும் ரேஷ்மா இருவரும் லாஸ்லியாவை கவினுடன் இணைத்து கிண்டல் செய்கின்றனர்.

இதனால் லாஸ்லியா கவினுடன் சென்று பஞ்சாயத்து வைக்க, எப்போதும் லாஸ்லியாவிற்கு பரிந்து பேசும் கவின் ‘அந்த புள்ளை தான் வந்த முதல் நாளிலே சொல்லிடிச்சே’ என்று கூற, அதற்கு லாஸ்லியா முன்ன தெரியாமல் அடிச்ச, இப்போ தெரிந்தே சைட் அடிக்கிறேன் என்று கூறுகிறார்.

இதை வைத்து பார்க்கும் போது கவினின் அடுத்த ரூட் லொஸ்லியாவுடன் தான் என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது. எனவே அடுத்த ஒரு வாரத்திற்கு லெஸ்லியா – கவின் ரொமான்ஸ் பிக்பாஸில் ஓடும்.

மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த போலீஸ் : கைதாகும் முக்கிய போட்டியாளர்?

மீரா மிதுன்

பிக் பாஸ் 3ல் பங்கேற்றுள்ள நடிகை மீரா மிதுனிடம் விசாரணை நடத்த போலீஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளது. பிக்பாஸ் செட் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் எழும்பூர் காவல்நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிஸ் தமிழ்நாடு 2019 நடத்துவதாக கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகப் புகார் வந்த நிலையில் அது பற்றிய விசாரணை தான் போலீஸ் மேற்கொண்டு வருகின்றனர்.

மீரா மிதுன் கைத்தவாரா என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது.

Actress Meera Mithun Hot Photoshoot HD Wallpapers