தமிழ், தெலுங்கு என 2 மொழி படங்களிலும் பிரபல கதாநாயகர்களுடன் இணைந்து நடித்திருப்பவர், தமன்னா. இந்தி படத்திலும் நடிக்கிறார். தனது சினிமா உலக பயணம் பற்றி அவர் பேட்டி அளித்தார்.
அப்போது, ‘‘உங்களுடன் ஜோடியாக நடித்த ஒரு நாயகனை நீங்கள் காதலித்ததாக வந்த தகவல் உண்மையா?’’ என்று கேட்கப்பட்டது.
உடனே தமன்னா கடுப்பாகி விட்டார். பின்னர் சமாளித்துக்கொண்டு சிரித்தபடி, பதில் அளித்தார். ‘‘அந்த நடிகர் எனக்கு வெறும் சக நடிகர் மட்டுமே…அவருடன் நான் நட்பு ரீதியாக கூட நெருங்கி பழகியதில்லை.
எனக்கு காதல் வந்தால், அதை மறைக்காமல் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வேன்’’ என்று அவர் கூறினார்.
பேருந்தில் பெண்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாக கூறியது தொடர்பாக, சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் நேற்று முன்தினம் தான் ரேஷ்மா, ஐந்தாவது போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். அடுத்த வாரம் வெளியேற்றப் படுபவர்களுக்கான நாமினேசன் லிஸ்ட் நேற்று வெளியானது. அதில் சரவணன், அபிராமி, லாஸ்லியா மற்றும் சாக்ஷி ஆகியோரது பெயர் இருந்தது.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வேளையில் அதிரடியாக சரவணனை, கன்பெக்சன் ரூமுக்கு அழைத்தார் பிக் பாஸ். அங்கு வைத்து சரவணன் பெண்களைப் பேருந்தில் உரசியது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றி அவர் பேசினார்.
அதோடு, இந்த விவகாரத்தில் சரவணன் மன்னிப்பு கேட்ட போதும், தேசிய அளவில் பேசு பொருளாகி விட்ட இந்தப் பிரச்சினையில் அவருக்கு தண்டனை தரும் விதமாக, உடனடியாக அவரை வீட்டில் இருந்து வெளியேற்ற முடிவு செய்திருப்பதாக பிக் பாஸ் அறிவித்தார். சக போட்டியாளர்களுக்குத் தெரியாமல், அவர் கன்பெக்சன் ரூமில் இருந்த கதவு வழியாகவே வெளியேற்றப்பட்டார்.
சரவணனும் பிக் பாஸின் உத்தரவை மதித்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெண்களைப் பற்றி கமல் பேசிக் கொண்டிருந்த போது, தானும் தனது கல்லூரிக் காலத்தில் பேருந்தில் பெண்களை உரசியதாக சரவணன் தெரிவித்தார்.
இதைக் கேட்டு அப்போது கமலும் சிரித்தார், அங்கு கூடியிருந்த மக்களும் சிரித்தனர். ஆனால், இந்த விவகாரம் பின்பு பூதாகரமாக வெடித்தது. சரவணனும் கன்பெக்சன் ரூமில் வைத்து மன்னிப்பு கேட்டார். தற்போது அதன் தொடர்ச்சியாகத் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை விந்தியாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழ் சில படங்களில் மட்டுமே இவர் நடித்திருந்தார். ஒரு கவர்ச்சி நடிகை போல இவரின் மீது ஒரு கண்ணோட்டமும் இருந்தது.
படங்கள் பெரிதளவில் இல்லாததால் அரசியலில் இறங்கினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை மிகவும் நேசித்தவர். அவரின் கட்சியில் மேடையில் இவர் பேசிய பேச்சு நட்சத்திர பேச்சாளராக மாற்றியது.
மேடையில் இவர் எதிர்கட்சியினரை தைரியமாக கேலி, கிண்டல் செய்து சாட்டையடி கொடுத்து போல தாக்கி பேசியது மொத்த கட்சியினரையும் திரும்பி பார்க்கவைத்தது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அவர் கட்சியிலிருந்து முழுமையாக விலகிவிட்டார். இந்நிலையில் தற்போது அவரை கட்சியின் துணை கொள்கை பரப்பு செயலாளராக பதவியில் அமர்த்த கட்சி முடிவு செய்துள்ளதாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 3 மூலம் வந்த சில நாட்களிலே பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் லொஸ்லியா. இவருக்கு லொஸ்லியா ஆர்மியே உருவாகிவிட்டது.
இவரை ரசிகர்கள் பலருக்கும் பிடித்திருந்தாலும், வந்த சில நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிடித்து போனது. ஆனால் சமீப நாட்களில் அவரின் அமைதி அவருக்கு என்ன ஆனது என பலரையும் கேட்கவைத்துவிட்டது.
கமல்ஹாசனும் இதுகுறித்து அவரிடம் நேரிடையாகவே கூறிவிட்டார். எல்லாம் அந்த கவின் விசயம் என்றே பலருக்கு தோன்றுகிறது.
இந்நிலையில் இந்த வாரம் திங்கள் கிழமையான இன்று நாமினேசன் நாள் என்பதால அவரை சரவணன், சாக்ஷி, ஷெரின் ஆகியோர் நாமினேட் செய்கிறார்கள். லொஸ்லியாவுக்கு எதிராக செயல்படும் இவர்களை லொல்ஸியா ஆர்மி விட்டு வைக்கும் என்ன?? பொறுத்திருந்து பார்ப்போம்..
பிக்பாஸின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. சற்றுமுன்னர் வெளியான ப்ரோமோவில் அபிராமி முகேன் குறித்து பேசி கதறி அழுகிறார்.
சாக்ஷி அபிராமியை பார்த்து நான் முகேனிடம் பேசுவது உனக்கு பிடிக்கவில்லையா என கேட்க அபிராமி எழுந்து செல்கிறார். பின்னர் லோஸ்லியாவிடம் சென்று கதறி அழுத அபிராமி, முகேன் எதிரில் நான் வரும் போது கூட அவன் பார்க்கவில்லை.
அவங்களுக்கு எப்ப பார்த்தாலும் அவங்க பிரச்சனை தான், அவங்க தான் ஹர்ட் ஆயிற்காங்க, அவங்களுக்கு மட்டும் தான் மனசு என கூறினார். பின்னர் எல்லாம் தெரிந்து முகேன் இப்படி உட்கார்ந்துள்ளதை தாங்கமுடியவில்லை என அழுதபடி கூறினார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள ரகுல் ர்பீத் சிங், சில பாலிவுட் படங்களில் நடித்தாலும், தற்போது தென்னிந்திய படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் ஒருவர் மீது தனக்கு காதல் இருப்பதாக, சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய ரகுல், அந்த நடிகருக்கு திருமணமாகிவிட்டது.
இல்லை என்றால், அவரை நான் திருமணம் செய்திருப்பேன், என்றும் கூறியிருக்கிறார். அந்த நடிகர் பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் தான். இவருக்கும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கும் திருமணமாகிவிட்டது.
இருப்பினும், ரன்வீர் சிங், மீது தனக்கு அதிக ஈர்ப்பு உள்ளதாக ரகுல் ப்ரீத் சிங் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
பிக் பாஸ் சீசன் 3 கடந்த சில நாட்களாக பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. சேரன், சரவணன் இடையிலா ச ண்டை, ஐந்தாவது எலிமினேஷனில் நடந்த ட்விஸ்ட், என்று நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்த நிலையில்,
வைல்ட் கார்டு போட்டியாளராக கஸ்தூரி எண்ட்ரியாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அது இதுவரை நடக்கவில்லை. இந்த நிலையில், நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ஐந்தாவது போட்டியாளராக ரேஷ்மா வெளியேறியதற்கு முகேன் தான் காரணம்.
அவர் தான், ரேஷ்மாவை எலிமினேட்டுக்காக நாமினேட் செய்தார். அதே சமயம், ரேஷ்மா வெளியேறிய பிறகு அது குறித்து நினைத்து முகேன் வருத்தப்பட்டார்.
இந்த நிலையில், ரேஷ்மாவுக்காக வருத்தப்பட்டு, கதறி அழுத முகேன், தனது கையாளேயே கட்டிலை அடித்து உடைக்கிறார். அவர் முன்னாள் இருக்கும் அபிராமி அதிர்ச்சியில் உரைந்து போகிறார். இந்த காட்சியைக் கொண்ட டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
முகேன் ஏன் இப்படி வெறித்தனமாக நடந்துக் கொள்கிறார். அதற்கு அபிராமி தான் காரணமா அல்லது ரேஷ்மா வெளியேறியது காரணமா, என்று ரசிகர்கள் மனதில் பல கேள்விகள் எழு, அதற்கான விடை இன்றைய எப்பிசோட்டில் தெரிந்துவிடும் என்பதாலும், இந்த காட்சி ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் சேரன்-சரவணன் பிரச்சனை தான் இப்போது வரைக்கும் மிகப் பெரிய ஹாட்டாப்பிக்காக இருந்து வருகிறது. இதனால் கமல் இருவரையும் சரமாரி கேள்வி கேட்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிபார்த்து கொண்டிருந்தனர்.
அதன் படி நேற்று வந்த கமல், சரவணனிடம் நீங்கள் உச்சநட்சத்திரமாக இருந்த போது, அவர் என்னுடைய அசிஸ்டெண்ட் என்று கூறியது தவறு என சுட்டிக் காட்டினார்.
இதனால் சரவணன் உடனடியாக என்னை மன்னித்துவிடுங்க என்று கமலிடம் கூறிவிட்டு, அதன் பின் சேரன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.
பிக்பாஸ் வீடு இப்போது தான் கொஞ்சம், கொஞ்சமாக ரணகள வீடாக மாறி வருகிறது. குறிப்பாக அமைதிப் புறாவாக இருந்த லாஸ்லியா தன்னுடைய உண்மையான முகத்தை காட்டி வருகிறார்.
இதனால் அவருக்கு முன்பு இருந்ததை விட ரசிகர்களின் எண்ணிக்கை கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருகிறது என்றே கூறலாம். ஆனால் அவர் தொடர்பான புகைப்படமோ, வீடியோவோ வந்தால், அதை டிரண்டாக்கி வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது லாஸ்லியா கல்லூரி விழாவில், நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட வீடியோ செம வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் செம ஒல்லியாக இருக்கும், லாஸ்லியா இப்போது பார்க்கும் போது கொஞ்சம் ஆச்சரியமாகவே இருக்கிறது.
பிக்பாஸ் வீட்டில் நேற்றுஆண்கள் பெண்கள் என்று இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டது. அப்படி பிரிக்கப்பட்ட ஆண் போட்டியாளர்கள் குறிப்பிட்ட பெண் போட்டியாளர்களிடம் தங்களுடைய அன்பை வெளிப்படுத்த வேண்டும்.
அப்படி வெளிப்படுத்தப்படும் போட்டியாளர்களுக்கும் சிறப்பு அவார்ட் ஒன்று கொடுக்கப்படும் என்று பிக்பாஸ் தெரிவித்தார். அதன் படி தர்ஷன் தன்னுடைய தோழியான, ஷெரீனிடம் அன்பை அற்புதமாக வெளிப்படுத்தி, சிறப்பாக அன்பை வெளிப்படுத்தியவர் என்ற விருதை பெற்றார்.
வெற்றி பெறும் நபர் தங்கள் வாழ்வில் சந்தித்த முதல் அன்பின் வெளிப்படுத்துதலை கூற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி தர்ஷன் நான் இலங்கையில் இருக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்தேன், அப்போது அவரிடம் என்னுடைய காதலை எப்படி தெரிவிப்பது என்று யோசித்தேன், இதனால் நானும் என் நண்பர்களும் ஒரு கடிதம் எழுதினோம்.
ஆனால் அதை ஆங்கிலத்தில் எழுதலாம் என்று நினைத்த போது, எங்களுக்கு ஆங்கிலம் அப்போது சரியாக தெரியாது என்பதால், தங்கிலீஷில் கடிதம் எழுதினோம், கொடுத்தோம். ஆனால் அவள் என்னை ஒன்சைடாக காதலித்து வந்திருக்கிறாள் என்பது அதன் பின் தான் தெரியும். இப்படி எங்கள் காதல் 10 மாதங்கள் சென்று கொண்டிருக்க, கடிதத்தில் எங்கள் காதல் வளர்ந்தது.
அதன் பின் நான் வெளியில் வந்தவிட, எங்கள் காதல் முடிந்தது, அவள் இப்போ ரஷ்யாவில் திருமணமாகி குழந்தைகளோடு சந்தோஷமாக இருக்கிறாள், எங்கிருந்தாலும் சந்தோஷமாக இரு அபிராமி என்று கூறி முடித்தார்.
அதன் பின் கமெரா முன்பு வந்து பேசிய தர்ஷன், நான் சொன்ன கதை எல்லாம் பொய் என்று அப்படியே மாற்றி பேசினார். அவர் ஷெரீனிடம் அன்பாக காதலை வெளிப்படுத்தியதை கூறினாரா? அல்லது காதல் கதையை பொய் என்று கூறினாரா? என்பது தான் புரியாமல் உள்ளது.