நானும் என் கணவரும் பிரிய இந்த பிரபலம் காரணமா? பிரபல நடிகை பதில்!!

நடிகை தியா மிர்சா

நானும் என் கணவரும் பிரிய அந்த பெண் பிரபலம் தான் காரணம் என பரவும் செய்திகள் உண்மை இல்லை என பாலிவுட் நடிகை தியா மிர்சா விளக்கம் அளித்துள்ளார்.


பாலிவுட் நடிகை தியா மிர்சா தனது காதல் கணவர் சாஹில் சங்காவை பிரிவதாக அண்மையில் அறிவித்தார். ஆனால் பிரிவுக்கு என்ன காரணம் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் அன்று மாலையே தனது கணவரான இயக்குநர் பிரகாஷ் கோவிலமுடியை பிரிவதாக பிரபல சினிமா எழுத்தாளர் கனிகா தில்லன் அறிவிப்பு வெளியிட்டார்.

இதையடுத்து கனிகாவுக்கும் சாஹிலுக்கும் இடையே ரகசிய உறவு இருப்பதால் தான் தியா மிர்சா பிரிந்து செல்வதாக செய்திகள் வெளியாகி. இதனை முற்றிலும் மறுத்துள்ள தியா, இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், பொறுப்பில்லாமல் செய்தி வெளியிடுகிறார்கள். துரதிர்ஷ்டவசமானது. இதில் மேலும் துரதிர்ஷ்டம் என்னவென்றால் திரைத்துறையை சேர்ந்தவர்களின் பெயர்களை பயன்படுத்தி அவர்களின் தனிமதிப்பு சீர்குலைக்கப்படுகிறது.

பொய்யான தகவலில் ஒரு பெண்ணின் பெயரை பயன்படுத்தியிருப்பதை நான் பொருத்துக்கொள்ள மாட்டேன். நானும், கணவரும் பிரிந்துள்ளது குறித்து வெளியான தகவல்களில் சுத்தமாக உண்மை இல்லை.


நாங்கள் பிரிய மூன்றாவது நபர் யாரும் காரணம் இல்லை என்றார். தியாவின் விளக்கத்தை பார்த்த கனிகா அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ரொம்ப டீசன்டான நடிகை என்று பெயர் எடுத்துள்ள தியா மிர்சா கனிகா விஷயத்தை கையாண்ட விதமும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

ரசிகர்களை கிறங்கடித்த சிம்பு நாயகி மஞ்சிமா மோகன் : லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

மஞ்சிமா மோகன்

அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இந்த படம் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியானது.


அதன் பிறகு விக்ரம் பிரபுவுடன் சத்ரியன் படத்தில் நடித்தார். அந்த படத்தில் ஒரு குடும்பப் பாங்கான பெண்ணாக நடித்த அனைத்து ரசிகர்களிடமும் பாராட்டைப் பெற்றார்.

அதன் பிறகு உதயநிதி ஸ்டாலினுடன் ‘இப்படை வெல்லும்’ என்ற படத்தில் நடித்தார் ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அந்த படத்தில் பாராட்டும் புகழும் கிடைக்கவில்லை.

இவர் தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெண்கள் உடல் அழகானது : நி ர்வாண யோகா புகைப்படங்களை வெளியிட்ட பிக் பாஸ் நடிகை!!

பிக் பாஸ் நடிகை

பெண்ணின் உடல் அழகானது’ என ஆடையில்லாமல் நி ர்வாணமாக யோகா செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான நடிகை ஆஷ்கா.

இந்தி தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து பிரபலமானவர் ஆஷ்கா கோர்டியா. இவர் நடிப்பில் வெளியான நாகினி சீரியல் சூப்பர் ஹிட்டானது. நாகினி தொடரில் ஆஷ்காவின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.

ஆஷ்காவை சினிமாவில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சித்தனர். ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதே போதுமானது என நிறுத்திக்கொண்டார். ஆனால், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனின் கலந்து கொண்டார் ஆஷ்கா. அதன் மூலம் மேலும் நல்ல பெயரை அவர் சம்பாதித்தார்.

எப்போதும் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவரான ஆஷ்காவை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். இதனால் தன்னைப் பற்றிய பதிவுகளை, புகைப்படங்களை அவ்வப்போது சமூகவலைதளப் பக்கத்தில் ஆஷ்மா வெளியிட்டு வருகிறார்.

உடலை பிட்டாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் உடையவரான அவர், சமீபத்தில் வித்தியாசமான முறையில் நி ர்வாணமாக யோகா பயிற்சி மேற்கொண்டார்.

அதனை தற்போது புகைப்படமாக எடுத்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இந்திய பெண்கள் தங்கள் உடலை எப்போதும் துணியால் மூடி வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை.

அது தேவையும் இல்லை. கடவுளின் படைப்பில் பெண்களின் உருவ அமைப்பு அற்புதமானது. போற்றத்ததக்கது. பாதுகாக்கப்பட வேண்டியது. மொத்தத்தில் அழகானது.

பெண் உருவம் என்பது மனித வாழ்க்கையை உருவாக்கும் சிறந்த வாகனம். ஆகவே அந்த வாகனத்தை எந்த சூழ்நிலையிலும் சிதைத்துவிடக்கூடாது. கொண்டாடி மகிழ வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆபாசம் நிறைந்த இணைய உலகத்தில் நடிகை மீனா!!

நடிகை மீனா

இந்திய பொழுதுபோக்கு துறையில் வெப்சீரிஸ் வேகமாக வளர்ந்து வருகிறது. பல முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் வெப்சீரிஸ் தொடர்களில் ஈடுபட்டு வருவதால், திரைப்படங்களுக்கு நிகராக வெப்சீரிஸ்கள் உருவாகி வருகிறது.

அதே சமயம், திரைப்படங்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் வெப்சீரிஸ்களுக்கு இல்லை என்பதால், படைப்பாளிகள் தாங்கள் நினைத்ததை முழுமையாக சொல்ல முடிகிறது.

மேலும், சில வெப்சீரிஸ்களில் வசனங்களும், காட்சிகளும் ஆபாசம் நிறைந்தவைகளாகவும் இருக்கின்றன. ஆனால், தமிழ் வெப்சீரிஸ்களை பொருத்தவரை குடும்ப பொழுதுபோக்கு மற்றும் காமெடியை மையமாக வைத்தே வெப்சீரிஸ்கள் தயாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா, ‘கரோலின் காமாட்சி’ என்ற வெப் சீரிஸ் மூலம் இணைய உலகத்தில் அறிமுகமாகிறார். டிரண்ட் லவுட் டிஜிட்டல் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜீ5 இணைந்து தயாரிக்கும் இந்த வெப் சீரிஸ் காமெடி நிறைந்த தொடராக உருவாக உள்ளது.

இந்திய உளவுத்துறை அதிகாரியான காமாட்சியும், பிரெஞ்ச் உளவுத்துறை அதிகாரியான கரோலினும் இணைந்து, கடத்தல்காரர்களின் சிக்கியுள்ள சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கலை பொக்கிஷத்தை மீட்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

கலாச்சாரத்தில், பழக்க வழக்கங்களில் மாறுபட்டு இருந்தாலும், பணியில் ஒத்துப்போகும் இவர்களது பயணத்தை காமெடியும், அதிரடியும் கலந்து சொல்லியிருக்கிறார்களாம்.

இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்தவரும், அருண் விஜய் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘பாக்ஸர்’ படத்தின் இயக்குநருமான விவேக் குமார் கண்ணன், இந்த வெப் சீரிஸை இயக்குகிறார்.

பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார். இவர்களுடன் பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இதில் பணியாற்றுகிறார்கள். இந்த வெப் சீரிஸின் துவக்க விழா மற்றும் போட்டோ ஷுட் நேற்று பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது. இதில் மீனா, கரோலின் வேடத்தில் நடிக்கும் ஜியோர்ஜியா அன்ரியானி உள்ளிட்ட தொடர் குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.

காதல் என்றதும் கடுப்பான நாயகி!!

தமன்னா

தமிழ், தெலுங்கு என 2 மொழி படங்களிலும் பிரபல கதாநாயகர்களுடன் இணைந்து நடித்திருப்பவர், தமன்னா. இந்தி படத்திலும் நடிக்கிறார். தனது சினிமா உலக பயணம் பற்றி அவர் பேட்டி அளித்தார்.

அப்போது, ‘‘உங்களுடன் ஜோடியாக நடித்த ஒரு நாயகனை நீங்கள் காதலித்ததாக வந்த தகவல் உண்மையா?’’ என்று கேட்கப்பட்டது.

உடனே தமன்னா கடுப்பாகி விட்டார். பின்னர் சமாளித்துக்கொண்டு சிரித்தபடி, பதில் அளித்தார். ‘‘அந்த நடிகர் எனக்கு வெறும் சக நடிகர் மட்டுமே…அவருடன் நான் நட்பு ரீதியாக கூட நெருங்கி பழகியதில்லை.

எனக்கு காதல் வந்தால், அதை மறைக்காமல் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வேன்’’ என்று அவர் கூறினார்.

 

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சரவணன் : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

வெளியேற்றப்பட்ட சரவணன்

பேருந்தில் பெண்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாக கூறியது தொடர்பாக, சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் நேற்று முன்தினம் தான் ரேஷ்மா, ஐந்தாவது போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். அடுத்த வாரம் வெளியேற்றப் படுபவர்களுக்கான நாமினேசன் லிஸ்ட் நேற்று வெளியானது. அதில் சரவணன், அபிராமி, லாஸ்லியா மற்றும் சாக்‌ஷி ஆகியோரது பெயர் இருந்தது.


இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வேளையில் அதிரடியாக சரவணனை, கன்பெக்சன் ரூமுக்கு அழைத்தார் பிக் பாஸ். அங்கு வைத்து சரவணன் பெண்களைப் பேருந்தில் உரசியது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றி அவர் பேசினார்.

அதோடு, இந்த விவகாரத்தில் சரவணன் மன்னிப்பு கேட்ட போதும், தேசிய அளவில் பேசு பொருளாகி விட்ட இந்தப் பிரச்சினையில் அவருக்கு தண்டனை தரும் விதமாக, உடனடியாக அவரை வீட்டில் இருந்து வெளியேற்ற முடிவு செய்திருப்பதாக பிக் பாஸ் அறிவித்தார். சக போட்டியாளர்களுக்குத் தெரியாமல், அவர் கன்பெக்சன் ரூமில் இருந்த கதவு வழியாகவே வெளியேற்றப்பட்டார்.

சரவணனும் பிக் பாஸின் உத்தரவை மதித்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெண்களைப் பற்றி கமல் பேசிக் கொண்டிருந்த போது, தானும் தனது கல்லூரிக் காலத்தில் பேருந்தில் பெண்களை உரசியதாக சரவணன் தெரிவித்தார்.

இதைக் கேட்டு அப்போது கமலும் சிரித்தார், அங்கு கூடியிருந்த மக்களும் சிரித்தனர். ஆனால், இந்த விவகாரம் பின்பு பூதாகரமாக வெடித்தது. சரவணனும் கன்பெக்சன் ரூமில் வைத்து மன்னிப்பு கேட்டார். தற்போது அதன் தொடர்ச்சியாகத் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தனை பேருக்கும் சாட்டையடி கொடுத்த நடிகை : மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்!!

நடிகை விந்தியா

நடிகை விந்தியாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழ் சில படங்களில் மட்டுமே இவர் நடித்திருந்தார். ஒரு கவர்ச்சி நடிகை போல இவரின் மீது ஒரு கண்ணோட்டமும் இருந்தது.

படங்கள் பெரிதளவில் இல்லாததால் அரசியலில் இறங்கினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை மிகவும் நேசித்தவர். அவரின் கட்சியில் மேடையில் இவர் பேசிய பேச்சு நட்சத்திர பேச்சாளராக மாற்றியது.

மேடையில் இவர் எதிர்கட்சியினரை தைரியமாக கேலி, கிண்டல் செய்து சாட்டையடி கொடுத்து போல தாக்கி பேசியது மொத்த கட்சியினரையும் திரும்பி பார்க்கவைத்தது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அவர் கட்சியிலிருந்து முழுமையாக விலகிவிட்டார். இந்நிலையில் தற்போது அவரை கட்சியின் துணை கொள்கை பரப்பு செயலாளராக பதவியில் அமர்த்த கட்சி முடிவு செய்துள்ளதாம்.

லொஸ்லியாவுக்கு பின்னால் நடக்கும் சதி : ஆர்மியிடம் சிக்கிய பிக்பாஸ் போட்டியாளர்கள்!!

லொஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 3 மூலம் வந்த சில நாட்களிலே பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் லொஸ்லியா. இவருக்கு லொஸ்லியா ஆர்மியே உருவாகிவிட்டது.

இவரை ரசிகர்கள் பலருக்கும் பிடித்திருந்தாலும், வந்த சில நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிடித்து போனது. ஆனால் சமீப நாட்களில் அவரின் அமைதி அவருக்கு என்ன ஆனது என பலரையும் கேட்கவைத்துவிட்டது.

கமல்ஹாசனும் இதுகுறித்து அவரிடம் நேரிடையாகவே கூறிவிட்டார். எல்லாம் அந்த கவின் விசயம் என்றே பலருக்கு தோன்றுகிறது.

இந்நிலையில் இந்த வாரம் திங்கள் கிழமையான இன்று நாமினேசன் நாள் என்பதால அவரை சரவணன், சாக்‌ஷி, ஷெரின் ஆகியோர் நாமினேட் செய்கிறார்கள். லொஸ்லியாவுக்கு எதிராக செயல்படும் இவர்களை லொல்ஸியா ஆர்மி விட்டு வைக்கும் என்ன?? பொறுத்திருந்து பார்ப்போம்..

கதறி அழும் அபிராமி : மீண்டும் ஒரு காதலா?

கதறி அழும் அபிராமி

பிக்பாஸின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. சற்றுமுன்னர் வெளியான ப்ரோமோவில் அபிராமி முகேன் குறித்து பேசி கதறி அழுகிறார்.

சாக்‌ஷி அபிராமியை பார்த்து நான் முகேனிடம் பேசுவது உனக்கு பிடிக்கவில்லையா என கேட்க அபிராமி எழுந்து செல்கிறார். பின்னர் லோஸ்லியாவிடம் சென்று கதறி அழுத அபிராமி, முகேன் எதிரில் நான் வரும் போது கூட அவன் பார்க்கவில்லை.

அவங்களுக்கு எப்ப பார்த்தாலும் அவங்க பிரச்சனை தான், அவங்க தான் ஹர்ட் ஆயிற்காங்க, அவங்களுக்கு மட்டும் தான் மனசு என கூறினார். பின்னர் எல்லாம் தெரிந்து முகேன் இப்படி உட்கார்ந்துள்ளதை தாங்கமுடியவில்லை என அழுதபடி கூறினார்.

திருமணமான நடிகர் மீது காதல் : மனம் திறந்த ரகுல் ப்ரீத் சிங்!!

ரகுல் ப்ரீத் சிங்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள ரகுல் ர்பீத் சிங், சில பாலிவுட் படங்களில் நடித்தாலும், தற்போது தென்னிந்திய படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் ஒருவர் மீது தனக்கு காதல் இருப்பதாக, சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய ரகுல், அந்த நடிகருக்கு திருமணமாகிவிட்டது.

இல்லை என்றால், அவரை நான் திருமணம் செய்திருப்பேன், என்றும் கூறியிருக்கிறார். அந்த நடிகர் பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் தான். இவருக்கும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கும் திருமணமாகிவிட்டது.

இருப்பினும், ரன்வீர் சிங், மீது தனக்கு அதிக ஈர்ப்பு உள்ளதாக ரகுல் ப்ரீத் சிங் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.