பிக் பாஸ் வீட்டில் நடந்த வெ றிச்செயல் : அ திர்ச்சியில் அபிராமி!!

அதிர்ச்சியில் அபிராமி

பிக் பாஸ் சீசன் 3 கடந்த சில நாட்களாக பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. சேரன், சரவணன் இடையிலா ச ண்டை, ஐந்தாவது எலிமினேஷனில் நடந்த ட்விஸ்ட், என்று நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்த நிலையில்,

வைல்ட் கார்டு போட்டியாளராக கஸ்தூரி எண்ட்ரியாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அது இதுவரை நடக்கவில்லை. இந்த நிலையில், நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ஐந்தாவது போட்டியாளராக ரேஷ்மா வெளியேறியதற்கு முகேன் தான் காரணம்.

அவர் தான், ரேஷ்மாவை எலிமினேட்டுக்காக நாமினேட் செய்தார். அதே சமயம், ரேஷ்மா வெளியேறிய பிறகு அது குறித்து நினைத்து முகேன் வருத்தப்பட்டார்.

இந்த நிலையில், ரேஷ்மாவுக்காக வருத்தப்பட்டு, கதறி அழுத முகேன், தனது கையாளேயே கட்டிலை அடித்து உடைக்கிறார். அவர் முன்னாள் இருக்கும் அபிராமி அதிர்ச்சியில் உரைந்து போகிறார். இந்த காட்சியைக் கொண்ட டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

முகேன் ஏன் இப்படி வெறித்தனமாக நடந்துக் கொள்கிறார். அதற்கு அபிராமி தான் காரணமா அல்லது ரேஷ்மா வெளியேறியது காரணமா, என்று ரசிகர்கள் மனதில் பல கேள்விகள் எழு, அதற்கான விடை இன்றைய எப்பிசோட்டில் தெரிந்துவிடும் என்பதாலும், இந்த காட்சி ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேரன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சரவணன்!!

மன்னிப்பு கேட்ட சரவணன்

பிக்பாஸ் வீட்டில் சேரன்-சரவணன் பிரச்சனை தான் இப்போது வரைக்கும் மிகப் பெரிய ஹாட்டாப்பிக்காக இருந்து வருகிறது. இதனால் கமல் இருவரையும் சரமாரி கேள்வி கேட்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிபார்த்து கொண்டிருந்தனர்.

அதன் படி நேற்று வந்த கமல், சரவணனிடம் நீங்கள் உச்சநட்சத்திரமாக இருந்த போது, அவர் என்னுடைய அசிஸ்டெண்ட் என்று கூறியது தவறு என சுட்டிக் காட்டினார்.

இதனால் சரவணன் உடனடியாக என்னை மன்னித்துவிடுங்க என்று கமலிடம் கூறிவிட்டு, அதன் பின் சேரன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.

எப்படி இருந்த லாஸ்லியா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க?

லாஸ்லியா

பிக்பாஸ் வீடு இப்போது தான் கொஞ்சம், கொஞ்சமாக ரணகள வீடாக மாறி வருகிறது. குறிப்பாக அமைதிப் புறாவாக இருந்த லாஸ்லியா தன்னுடைய உண்மையான முகத்தை காட்டி வருகிறார்.

இதனால் அவருக்கு முன்பு இருந்ததை விட ரசிகர்களின் எண்ணிக்கை கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருகிறது என்றே கூறலாம். ஆனால் அவர் தொடர்பான புகைப்படமோ, வீடியோவோ வந்தால், அதை டிரண்டாக்கி வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது லாஸ்லியா கல்லூரி விழாவில், நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட வீடியோ செம வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் செம ஒல்லியாக இருக்கும், லாஸ்லியா இப்போது பார்க்கும் போது கொஞ்சம் ஆச்சரியமாகவே இருக்கிறது.

ஷெரீனிடம் காதலை சொன்ன தர்ஷன் : கடைசியில் அப்படியே மாற்றி பேசியதை பாத்தீங்களா?

ஷெரீனிடம் காதலை சொன்ன தர்ஷன்

பிக்பாஸ் வீட்டில் நேற்றுஆண்கள் பெண்கள் என்று இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டது. அப்படி பிரிக்கப்பட்ட ஆண் போட்டியாளர்கள் குறிப்பிட்ட பெண் போட்டியாளர்களிடம் தங்களுடைய அன்பை வெளிப்படுத்த வேண்டும்.

அப்படி வெளிப்படுத்தப்படும் போட்டியாளர்களுக்கும் சிறப்பு அவார்ட் ஒன்று கொடுக்கப்படும் என்று பிக்பாஸ் தெரிவித்தார். அதன் படி தர்ஷன் தன்னுடைய தோழியான, ஷெரீனிடம் அன்பை அற்புதமாக வெளிப்படுத்தி, சிறப்பாக அன்பை வெளிப்படுத்தியவர் என்ற விருதை பெற்றார்.

வெற்றி பெறும் நபர் தங்கள் வாழ்வில் சந்தித்த முதல் அன்பின் வெளிப்படுத்துதலை கூற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி தர்ஷன் நான் இலங்கையில் இருக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்தேன், அப்போது அவரிடம் என்னுடைய காதலை எப்படி தெரிவிப்பது என்று யோசித்தேன், இதனால் நானும் என் நண்பர்களும் ஒரு கடிதம் எழுதினோம்.

ஆனால் அதை ஆங்கிலத்தில் எழுதலாம் என்று நினைத்த போது, எங்களுக்கு ஆங்கிலம் அப்போது சரியாக தெரியாது என்பதால், தங்கிலீஷில் கடிதம் எழுதினோம், கொடுத்தோம். ஆனால் அவள் என்னை ஒன்சைடாக காதலித்து வந்திருக்கிறாள் என்பது அதன் பின் தான் தெரியும். இப்படி எங்கள் காதல் 10 மாதங்கள் சென்று கொண்டிருக்க, கடிதத்தில் எங்கள் காதல் வளர்ந்தது.

அதன் பின் நான் வெளியில் வந்தவிட, எங்கள் காதல் முடிந்தது, அவள் இப்போ ரஷ்யாவில் திருமணமாகி குழந்தைகளோடு சந்தோஷமாக இருக்கிறாள், எங்கிருந்தாலும் சந்தோஷமாக இரு அபிராமி என்று கூறி முடித்தார்.

அதன் பின் கமெரா முன்பு வந்து பேசிய தர்ஷன், நான் சொன்ன கதை எல்லாம் பொய் என்று அப்படியே மாற்றி பேசினார். அவர் ஷெரீனிடம் அன்பாக காதலை வெளிப்படுத்தியதை கூறினாரா? அல்லது காதல் கதையை பொய் என்று கூறினாரா? என்பது தான் புரியாமல் உள்ளது.

ஜாக்கெட்ல ஜன்னல் வைப்பாங்க : இவங்க என்ன கதவே வச்சிருக்காங்க : பிரபல நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்!!

கலாய்க்கும் ரசிகர்கள்

நடிகை அர்ச்சனா ஹரிஷ். தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார்.

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார்.சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த இவர் தன்னுடைய முழு முதுகும் தெரியும் அளவுக்கு ஒரு சுடிதார் அணிந்து வந்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் எல்லோரு ஜாக்கெட்டில் ஜன்னல் வைப்பார்கள். இவங்க கதவையே வச்சிருக்காங்களே என்று கூறி வருகிறார்கள்.

மிகவும் கஷ்டப்படுகிறேன் : மீண்டும் சினிமாவில் நான் நடிக்க வேண்டும் : நடிகை உருக்கம்!!

நடிகை தேஜஸ்ஸ்ரீ

கடந்த 2003 ஆம் ஆண்டு நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த ஒற்றன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ‘சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா” என்ற பாடலை நம்மால் எளிதில் மறந்து விட முடியாது.


‌இந்தப் பாடலில் நடிகை தேஜஸ்ஸ்ரீ நடனமாடி இருப்பார். அடிப்படையில் நடிகை தேஜஸ்ஸ்ரீ ஒரு நடன கலைஞர் ஆவார். இவர் தகதிமிதா, கோடம்பாக்கம், நீயே நிஜம், கள்வனின் காதலி, இம்சை அரசன், நான் அவனில்லை, ஜூட், மதுர உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இறுதியாக பரஞ்சோதி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை தேஜஸ்ஸ்ரீ.

இதனையடுத்து இவருக்கு சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் கடந்த 4 ஆண்டுகளாக திரை உலக வாழ்க்கையில் இருந்து விலகியிருந்தார் . ஆனால் தற்போது மீண்டும் திரைப்பட வாய்ப்பிற்காக ஏங்கி வருகிறார்.

தற்போது இவர் ஒரு வீடியோ பதிவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் தன்னுடைய அம்மாவிற்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் அவரை கூடவே இருந்து பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவானது .

 

ஆகையால் கடந்த சில வருடங்களாக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை கவனித்துக் கொள்ள இயலவில்லை ஆனால் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறேன்.

ஆகையால் எனக்கு சிறிய ரோலாக இருந்தாலும் பரவாயில்லை சிறந்த ரோலாக இருந்தால் மட்டும் போதும் , மேலும் திரைப்படம் இல்லாமல் வெப் சீரிசாக ஆக இருந்தாலும் தான் நடிக்க தயார் என்று கூறி அந்த பதிவில் வெளியிட்டுள்ளார்.

எனக்கும் ரசிகர்கள் கோவில் கட்டுவார்கள் : நடிகை ராஷ்மிகா!!

நடிகை ராஷ்மிகா

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா, எனக்கும் ரசிகர்கள் கோவில் கட்டினால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

கன்னடத்தில் அறிமுகமாகி தெலுங்கில் முன்னணி கதாநாயகியாகி இருக்கிறார் ராஷ்மிகா. தமிழில் தற்போது கார்த்தி படத்திலும் அதை தொடர்ந்து விஜய் படத்திலும் நடிக்க உள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘நடிக்க தொடங்கியபோது மக்களுக்கு என் முகம் நினைவில் நிற்குமா என்பதுகூட தெரியாது. முயற்சி செய்யலாம் என்றுதான் சினிமா வாழ்க்கையை தொடங்கினேன். முதல் பட வெற்றிக்கு பிறகு வரிசையாக வாய்ப்புகள் குவிகின்றன.

விறுவிறுவென்று மேலே சென்று பின் உடனே வீழக் கூடாது. ஒவ்வொரு படத்தையும் கவனமாக ஒப்புக்கொண்டு அவற்றிலிருந்து கற்க முயல்கிறேன். ஒருவரைப் பிடித்துவிட்டால் அவருக்காக கோவில் கட்டும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

என் அப்பா குஷ்புவுக்குக் கோயில் கட்டியதைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருப்பார். என்னால் இப்போதுவரை நம்ப முடியவில்லை. எனக்கும் கோவில் கட்டினால் நன்றாக இருக்குமே என்று நினைத்திருக்கிறேன்’. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸில் இருந்து வெளியே போனது இவர்தான் : யாருமே எதிர்பார்க்காத திருப்பம்!!

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷன் யார் என்பது பற்றி ரசிகர்கள் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கின்றனர். இந்த வாரம் சாக்ஷி, கவின், மதுமிதா, அபிராமி மற்றும் ரேஷ்மா எவிக்ஷன் பட்டியலில் உள்ளனர்.

அவர்களில் மதுமிதா காப்பாற்றப்படுவதாக கமல் சனிக்கிழமை எபிசோடில் அறிவித்துவிட்டார். இந்நிலையில் தற்போத ரேஷ்மா பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வந்துள்ளது.

கவின் அல்லது சாக்‌ஷி ஆகியோரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத இந்த ட்விஸ்ட் நாளை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிறது .

நடிகர் ஜே.கே ரித்தீஷின் மனைவிக்கு மிரட்டல் விடும் நண்பர்கள் : முடிவுக்கு வராத சொத்துப்பிரச்சனை!!

ஜே.கே.ரித்தீஷ்

திரைப்பிபலமும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே ரித்தீஷின் மனைவிக்கு ரித்தீஷின் நண்பர்களால் பல மிரட்டல்கள் வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பிரபல திரைப்பட நடிகரும், முன்னாள் எம்.பியும்மான ஜே.கே.ரித்தீஷ் கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். ரித்தீஷின் மறைவுக்கு பிறகு அவரது மனைவிக்கு அவரது நண்பர்களால் நிறைய மிரட்டல் வருவதாக ரித்தீஷின் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

ரித்தீஷின் நண்பரான பாவா என்பவர் ரித்தீஷ் மனைவிக்கு கொ லை மிரட்டல் விடுவதாக கூறப்படுகின்றது. அதாவது கடந்த ஜனவரி மாதம் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புடைய பள்ளிக்கூடம் மற்றும் சில வீடுகளை சுப்பிரமணி என்பவரிடம் இருந்து வாங்க ரித்தீஷ் ஒப்பந்தம் போட்டுள்ளார் என்று கூறுகின்றனர்.

இதற்காக சுமார் 4 கோடி ரூபாய் வரை சுப்பிரமணிக்கு முன்பணம் கொடுக்கப்பட்டதாக சொல்கின்றனர். இந்த சொத்தை வாங்குவதற்கு முன்பே ஜே.கே.ரித்தீஷ் இறந்து விட்டதால், சுப்பிரமணியிடம் கொடுத்த முன்பணத்தை ரித்தீஷின் மனைவி ஜோதிஸ்வரி கேட்டுள்ளார்.

இதற்கு அந்த பணத்தை ஜோதிஸ்வரியிடம் கொடுப்பதாக சுப்பிரமணியும் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இந்த 25 கோடி மதிப்பிலான சொத்தை ரித்தீஷின் நண்பரான ஆதம்பாவா அபகரிக்க முயல்வதாக ஜோதிஸ்வரி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

மேலும் ரித்தீஷின் நண்பர் ஆதம்பாவா திடீரென திருவான்மியூர் மற்றும் தியாகராயநகரில் உள்ள தன் வீட்டிற்கு வந்து தனக்கு கொ லை மிரட்டல் விடுத்ததாக ஜோதீஸ்வரி கூறியுள்ளார். மேலும், தனது கணவனின் சொத்துகளை அபகரிக்க நினைப்பதாகவும் அதனால் கடும் மன உழைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த நடிகையுடன் மட்டும் என்னை ஒப்பிடாதீர்கள் : நடிகை அனுபமா ஆவேசம்!!

நடிகை அனுபமா

ப்ரேமம் படத்தின் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்தியா சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் அனுபமா. இவர் தனுஷிற்கு ஜோடியாக கொடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.

தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது அதர்வாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான நின்னுக்கோரி படத்தின் ரீமேக், இதை கண்ணன் இயக்கவுள்ளாராம்.

இதன் தெலுங்குப்பதிப்பில் நிவேதா தாமஸ் நடித்திருப்பார், அதுக்குறித்து அனுபமாவிடம் கேட்க, அதற்கு அவர் ‘நிவேதாவுடன் என்னை ஒப்பிடாதீர்கள்.

இது முழுக்க என் ஸ்டைலில் நடிக்கவுள்ளேன், அதனால், தேவையில்லாத ஒப்பிடு வேண்டாம்’ என கூறியுள்ளார்.