வாடா போடா என கூறிய சரவணன் : சேரனுக்கு ஆதரவாக பொங்கியெழுந்த பிரபல காமெடி நடிகர்!!

சரவணன்

நேற்று பிக்பாஸ் வீட்டில் சரவணன்- சேரன் இடையே பெரிய சண்டை மூண்டது. சேரனை தரக்குறைவான வார்த்தைகளால் சரவணன் திட்டிய பொது பிஸ்போஸ் வீட்டில் உள்ள அனைவரும் பொங்கி எழுந்தனர்.

அதேசமயம் சேரனுக்கு ஆதரவாக பலர் சமூக வலைத்தளங்களில் பொங்கியெழுந்துள்ளனர். அவர்களில் ஒருவர் பிரபலமான நடிகர் பயில்வான் ரங்கநாதன். பிக்பாஸில் சேரன் படும் வேதனைகளை குறித்து பேசியுள்ள அவர், சேரனுக்கு பட வாய்ப்பு இல்லை என்றால் சீரியலில் நடிக்கலாம், அப்பா கேரக்டரில் நடிக்கலாம்.

அதையெல்லாம் விட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இப்படி அவமானப்பட்டு சீரழிய வேண்டுமா? சரவணன் போன்ற ஆட்களிடம் வாடா போடா போன்ற வார்த்தைகளை அவர் கேட்க என்ன தலையெழுத்தா?

ஆட்டோகிராப் போன்ற திரப்படங்களை கொடுத்துவிட்டு சேரன் இப்படி சீப்பாக அசிங்கப்படுவதை பார்க்கமுடியவில்லை என வேதனையுடன் கூறியுள்ளார்.

சேரன் – சரவணன் சண்டையால் பற்றி எரியும் பிக்பாஸ் வீடு : மதுமிதா மூக்கை உடைத்த சாண்டி!!

மதுமிதா மூக்கை உடைத்த சாண்டி

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் வீட்டில் இன்று ஒரேநாளில் ஏகப்பட்ட களேபரங்கள் நடக்கும் என்றே தோன்றுகிறது. சரவணனுக்கும் சேரனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சண்டையால் பிக்பாஸ் வீடு பற்றி எரிகிறது. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் வீட்டில் இன்று ஒரேநாளில் ஏகப்பட்ட களேபரங்கள் நடக்கும் என்றே தோன்றுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை சேரனுக்கு பின்னால் பேசி, திட்டி வந்த சரவணன் இன்று சேரனை நேருக்கு நேராக தரக்குறைவாக பேசிவிட்டார். இன்று சேரனை போயா வாயா என்றும் போடா வாடா என்றும் கேவலமாக பேசினார் சரவணன்.

சாண்டியிடம் சேரனை கை காண்பித்து அவர் லூசு மாதிரி பேசி வருகின்றார் என்று கூறுகிறார் சரவணன். அதற்கு உடனடியாக பதிலடி கொடுக்கும் தர்ஷன், லூஸ் என்ற வார்த்தையெல்லாம் ஏன் சொல்கிறீர்கள் என்று கேட்கிறார். மேலும் அவர் அவருடைய ஒபினியனைதான் சொல்கிறார் என்றும் சேரனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார் தர்ஷன்.

அப்போது நீங்கள் லுசு என்று என்னை கூறினீர்கள் ஏன் அப்படி பேசுகிறீர்கள், லூசு, போயா வாயா, போடா வாடா என்று பேச வேண்டிய அவசியம் இல்லை என மிக பொறுமையாக கூறுகிறார் சேரன்.

உடனே உங்களை சொல்லவில்லை என மாற்றி பேசுகிறார் சரவணன். நீங்கள் என்னைதான் சொன்னீர்கள் என்று சேரன் கூற, உன்னை சொல்லவில்லை என்று குரலை உயர்த்திய சரவணன், நீ நீ என்றும் கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் பேசினார்.

ஏன் நீ என்று மரியாதை இல்லாமல் பேசுகிறீர்கள் என்று சேரன் கேட்க அப்படிதான் பேசுவேன் என்று திமிராக சொல்கிறார் சரவணன்.இதனால் நொந்துபோன சேரன், அப்படி பேசாதீங்க அண்ணே என்று கூறிவிட்டு எழுந்து செல்கிறார்.

அடுத்த வாரத்துக்கான கேப்டனை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி நடைபெறுகிறது. முகென், சாண்டி, மதுமிதா ஆகியோர் போட்டியில் பங்கேற்றுள்ளனர். பனி சறுக்கு விளையாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு ஸ்கேட்டர்களை மூவரும் வரிசையாக காலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

போட்டியில் வெற்றி பெற என்ன யுக்தியை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என பிக் பாஸ் அறிவிக்கிறார். சாண்டி மற்றும் முகெனின் ஆக்ரோஷமான சண்டையில் இடையே மாட்டிக்கொண்டு மூக்கில் காயமடைகிறார் மதுமிதா. இதனால் பிக் பாஸ் வீடே பரபரப்பாகிறது.

மீண்டும் லோஸ்லியாவை கொஞ்ச ஆரம்பித்த கவின் : கோபமடைந்த சாண்டி!!

கோபமடைந்த சாண்டி

பிக்பாஸ் வீட்டில் நேற்று வரை முக்கோண காதல் பிரச்சினையால் தகித்துக்கொண்டிருந்த பிக் பாஸ் வீட்டில், இன்றில் இருந்து வேறுவிதமான பிரச்சினைகள் ஆரம்பித்துள்ளன. சித்தப்பு சரவணனுக்கும், சேரனுக்கும் இன்று புதிய பிரச்சனை வெடித்தது. அதில், சித்தப்பு சேரானைப் பார்த்து மரியாதை இல்லாமல் பேசினார்.

இதனால், சிறிது நேரம் பிக்பாஸ் வீடு பரபரப்பாக இருந்த நிலையில், இந்த வாரம் டாஸ்க்கில் சரியாக பெர்ஃபாம் பன்னாதவர்கள் ஜெயிலில் இருக்க வேண்டும் என்று கூற லோஸ்லியாவையும், செரினையும் கேப்டன் தர்ஷன் செலக்ட் செய்தார்.

இந்நிலையில், ஜெயிலுக்கு செல்லும் லோஸ்லியாவை கவின் பார்த்து பேசிக் கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த சாண்டி, பேசமாட்டேன், என்று கூறிவிட்டு அந்த பெண்ணுடன் ஏன் பேசினாய் என்று கேட்க, உடனே கவின் அந்த பொண்ணை பார்த்தால் பாவமாக இருந்தது. அதனால் தான் பேசினேன்.

கடந்த முறை ஜெயிலுக்கு போய் வந்ததில், அவளுக்கு உடம்பு சரியில்லை. பார்க்க பாவமாக இருந்தது, அதனால் தான் பேசினேன் வேர ஒன்னுமில்லை என்று கூறியுள்ளார்.

கவின்-ஷாக்சி விஷயத்தில் பொய் பேசி மாட்டிக் கொண்ட லாஸ்லியா!!

மாட்டிக் கொண்ட லாஸ்லியா

பிக்பாஸில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக இருந்த லாஸ்லியா கொஞ்சம், கொஞ்சமாக மக்களால் வெறுக்கப்படும் போட்டியாளராக மாறி வருகிறார். போட்டியாளர்கள் பலரும் முன்பிருந்த லாஸ்லியா இது கிடையாது, அவள் மொத்தமாக மாறிவிட்டாள் என்று கூறி வருகின்றனர்.

நேற்று கூட, கவீன்-ஷாக்சி விஷயத்தில் இருவரும் என்னிடம் வந்து அவர்களுடைய உணர்வுகளைப் பற்றி பகிரவே இல்லை என்று கூறினார். குறிப்பாக ஷாக்சி கவினிடம் எந்தளவிற்கு இருக்கிறேன் என்பதைப் பற்றி கூறவேயில்லை என்று கூறினார்.

இந்நிலையில் ஷாக்சி மற்றும் கவீன் இருவருமே தாங்கள் என்ன செய்தோம், எப்படி இருந்தோம், அதன் பின் ஏன் பிரிந்தோம் என்பதை கூறியுள்ளனர்.

அந்த வீடியோக்களை இணையவாசிகள் ஒன்றாக சேர்த்து வைத்து எடிட் செய்து வெளியிட்டு வருகின்றனர். இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் இப்படி மாட்டிக்கிட்டாங்களே லாஸ்லியா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிக்பாஸில் போட்டியாளர்களுக்கு சம்பளம் எப்படி கொடுக்கப்படுகிறது? கோபத்தில் உளறி கொட்டிய கவின்!!

உளறிய கவின்

பிக்பாஸ் வீட்டில் இப்போது இருக்கும் மிகப் பெரிய பிரச்சனையே ஷாக்சி -கவீன் தான் , இவர்கள் இருவரால் பிக்பாஸே இப்போது சூடுபிடித்திருக்கிறது என்று கூட சொல்லலாம்.

அந்தளவிற்கு இருவரும் சரியான கண்டெண்ட் கொடுத்து வருகின்றனர். இதனால் விஜய் டிவியின் டி.ஆர்.பியும் எகிறிக் கொண்டே போகிறது. இந்நிலையில் நேற்றைய எபிசோடின் போது ஷாக்சிக்கும், கவீனுக்கும் இடையே இருந்த விரிசல் மிகவும் பெரிதானதால், கவீன் ஒரு கட்டத்தில் ஷாக்சியிடம் நீ நல்லா இரு, நீ ஒரு பெண் என்னிடம் இனிமேல் பேசாதே என்று ஒதுங்கினார்.

அதன் பின் நான் இந்த வீட்டில் 7 வாரம் டார்கெட் செய்து வந்தேன், ஏனெனில் எனக்கு கடன் இருக்கிறது. 6 வாரத்தை கடந்து விட்டேன், இன்னும் ஒரு வாரம் தான் பார்த்துக் கொள்ளலாம் என்று மதுமிதாவிடம் மிகவும் வேதனையுடன் கூறினார்.

அப்போது பிக்பாஸ் வீட்டில் வருபவர்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு பின் வாரத்திற்கு ஏற்ற வகையில் போட்டியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டு வருவது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

நான் காசில்லாமல் நடுரோட்டில் இருந்தபோது சேரன் அவமானப்படுத்தினார் : பழைய கதையை கூறிய சரவணன்!!

சரவணன் – சேரன்

பிக்பாஸில் நேற்று நடிகர் சரவணன் மற்றும் இயக்குனர் சேரன் இடையே பெரிய சண்டை வெடித்தது. வாயா போயா.. லூசு… என சரவணன் கோபத்தில் பேசினார்.

அதன் பிறகு சரவணன் இயக்குனர் சேரன் பற்றி பல விஷயங்களை கூறினார். “நான் ஹீரோவாக இருந்தபோது சாதாரண அசிஸ்டென்ட் டைரக்டராக ஆபிசில் வந்து உட்கார்ந்திருந்தவர் சேரன்” என கூறினார் சரவணன்.

1999ல் நான் பெரிய நஷ்டப்பட்டு கையில் காசில்லாமல் செங்கல்பட்டுக்கு அருகில் நடுரோட்டில் பஞ்சர் ஆனதால் நின்று கொண்டிருந்தேன். என் வண்டியை பார்த்துவிட்டு சேரன் உடன் இருந்த சிலர் வண்டியை நிறுத்தி என்னிடம் பேசினர்.

அவர்கள் கிளம்பும்போது நான் சேரனை பார்த்து “சார் உங்க படத்தில் நடிக்க சான்ஸ் இருந்த கொடுங்க” என கேட்டேன். அதற்கு அவர் “நீங்கள் எவ்வளோ உயரத்தை அடைந்துவிட்டிர்கள். எவ்வளவோ நடித்துவிட்டிர்கள். பிறகு என்கிட்டே எதற்கு சினிமா சான்ஸ் கேட்கிறீங்க” என சொன்னார். அப்போ எனக்கு எவ்ளோ வலித்தது என தெரியாது என சரவணன் உருக்கமாக பேசினார்.

ஷெரினுடன் ஜோடியாக ஜெயிலுக்கு போய் ரொமான்ஸ் பன்ன நினைத்த தர்ஷன் : பிக்பாஸ் வைத்த ஆப்பு!!

பிக்பாஸ் வைத்த ஆப்பு

பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சி 40வது நாளை எட்டியுள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் யார் சரியாக கேரக்டர் செய்யாதவர்கள் என்ற பிரச்சனையில் சேரனுக்கும், சரவணனுக்கும் சண்டை உண்டானது. இதனிடையில் தர்ஷன் தன்னையே நாமினேட் செய்தார்.


ஆனால் தன்னையே நாமினேஷன் செய்யக்கூடாது என்று பிக்பாஸ் கூறினார். இதனால் லாஸ்லியா, ஷெரினை செலக்ட் செய்தார். இதையடுத்து இருவரும் ஜெயிலுக்கு சென்றனர்.

அதன்பின்னர் கவின் பேசுகையில், தர்ஷன், ஷெரினுடன் ஜெயிலுக்கு சென்று ரொமான்ஸ் செய்ய பிளான் செய்தாராம். ஆனால் பிக்பாஸ் செய்த குளறுபடியால் அது நடக்காமல் போனது என்று கூறியதும் முகேன் அதை ராப் பாட்டாக பாடி தர்ஷனை கிண்டல் செய்தார்.

கலாச்சாரத்தை கெடுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்துங்கள் : கமலுக்கு மி ரட்டல்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி

கலாச்சாரத்தை கெடுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்தி கொள்ளவில்லை என்றால் வேலையை காட்ட வேண்டி இருக்கும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ் கலாசாரத்தைக் கெடுக்கும் டி.வி நிகழ்ச்சியை நடத்திவரும் கமல்ஹாசன், தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில், எங்கள் வேலையைக் காட்டுவோம் என்று மேடையிலேயே பகிரங்க மி ரட்டல் விடுத்திருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.

இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில், ஒரு தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார் அவர்.

அதில், அது வேண்டுகோள்தான்… மி ரட்டல் அல்ல. ஏற்கெனவே ஒருமுறை அதே டி.வி-யில் ‘கேரளப் பெண்கள் அழகா… தமிழகப் பெண்கள் அழகா என்று விவாதம் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியானதும் இது போன்று ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தோம் என தெரிவித்துள்ளார்.

தண்ணீரில் படு க வர்ச்சியாக பிக்பாஸ் புகழ் மீராமிதுன் எடுத்த போட்டோ ஷுட் : திட்டும் ரசிகர்கள்!!

மீராமிதுன்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பலரின் கோபத்திற்கு ஆளானவர் மீரா மிதுன்.
நடிகையான இவர் ஒரு மாடலாகவும் உள்ளார், பல நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.

நடுவில் மாடல் ஷோ நடத்தி மோ சடி செய்ததாக அவர் மீது போலீஸ் புகார் எல்லாம் வந்திருக்கிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர் நிறைய போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்.

அண்மையில் அவர் தண்ணீரில் உடையை படு க வர்ச்சியாக அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு புகைப்படம் தேவையா என திட்டி வருகின்றனர்.

 

லாஸ்லியாவுடன் இரவு 2 மணிக்கு… : கவின் மீது பரபரப்பு கு ற்றச்சாட்டு!!

லாஸ்லியாவுடன் இரவு 2 மணிக்கு..

பிக் பாஸ் சீசன் 3 யின் ஆரம்பத்தில், முதல் சீசனை போல காதல் விவகாரத்தை வைத்து ப ரபரப்பு ஏற்படுத்த நினைத்தார்கள். அதன்படி, கவின் தனது காதல் விளையாட்டை தொடங்கினாலும் அவரது ஆட்டம் அந்த அளவுக்கு சூடு பிடிக்கவில்லை.

மாறாக லாஸ்லியாவின் சேட்டைகள் தான் மக்களிடம் பிரபலமானது. தற்போது எலிமினேட் ரவுண்ட் மூலம் ப ரபரப்பை ஏற்படுத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எப்பிசோட்டில் கவினின் காதல் சேட்டை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

அதாவது, லாஸ்லியா பின்னாடி சுற்றிய கவின் தற்போது சாக்‌ஷியை காதலிப்பதாக கூறி வந்தார். ஆனால், தற்போது சாக்‌ஷியை கழட்டிவிட்டவர், மீண்டும் லாஸ்லியா மீது காதல் கொண்டிருக்கிறாராம்.

இன்றைய எப்பிசோட்டில் சாக்‌ஷிக்கு ஆதரவாக அனைத்து போட்டியாளர்களும் பேச, நடுவில் தர்ஷனோ “இரவு 2 மணிக்கு லாஸ்லியாவுடன் என்ன பிரன்ஷிப்” என்று கவினிடம் கேட்கிறார். இதனால், இன்றைய எப்பிசோட்டில் கவினின் காதல் பஞ்சாயத்து பெரும் ப ரபரப்பு ஏற்படுத்தும் என்று தெரிகிறது.