24 மணி நேரம் என்னையே சுத்தி வந்த கவீன் எங்கே? நள்ளிரவில் அவள் கூட என கண்கலங்கிய ஷாக்சி!!

கண்கலங்கிய ஷாக்சி

பிக்பாஸ் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒன்று செய்து, நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கிவிடுகிறார். அது போன்று தான் மொட்ட கடிதாசி என்ற டாஸ்க் ஒன்றை கொடுத்து, அதில் போட்டியாளர்கள், மற்ற போட்டியாளர்களிடம் என்ன கேட்க விரும்புகிறீர்களோ கேளுங்கள் என்று கூறியிருந்தார்.

அதன் படி மொட்டக் கடிதாசியில், லாஸ்லியா, ஷாக்சிக்கு, கவீனுடன் பிரச்சனை இருக்கு என்று கூறும் அவர் அதன் பின் அவரிடம் பிரச்சனை முடிந்துவிட்டது என்று கூறி, சகஜமாகிவிட்டு, அதன் பின் பிரச்சனையை பற்றி கூறுவது ஏன்? உங்களுக்கும் கவீனுக்கும் அப்படி என்ன தான் பிரச்சனை என்று எழுதியிருந்தார்.

இந்த கடிதம் வந்தவுடன், ஷாக்சி, நான் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவுடன், எனக்கு ஒரு ஆண் நண்பனாக அறிமுகமானது கவீன் தான், அதன் பின் லாஸ்லியா, இவர்கள் இருவரிடமும் நான் அந்த அளவிற்கு பழகி இருக்கிறேன்.

என்னுடைய சொந்த வாழ்க்கை அனுபவங்களை பலவற்றை கூறியிருக்கிறேன். அதன் பின் கவீன் என்னிடம் தொடர்ந்து பேசி வந்தான். என்னுடன் இருந்தவர்கள் அதாவது ஷெரீன் கூட, கவீன் ஏன் ஷாக்சி கூட 24 மணி நேரமும் இருக்க, கொஞ்சம் பிரியா விடு என்று கேட்டார்.

அப்படி எல்லாம் இருந்த கவீன், கமல் சார் எபிசோடுக்கு பின் ஒரே இரவில் முற்றிலும் மாறிவிட்டான். நான் அன்றைய தினம் மனம் நொந்து அழுது கொண்டிருக்கிறேன், அப்போது அவன் லாஸ்லியாவிடம் நள்ளிரவில் சென்று அதிகம் நேரம் பேசிக் கொண்டிருக்கிறான்.

அதுமட்டுமின்றி நான் அதிலிருந்து மீள்வதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, அவளும், அவனும் கையை பிடித்து செல்கின்றனர், கொஞ்சுகின்றனர். எனக்கு இதை எல்லாம் பார்க்கும் போது எப்படி இருக்கும்.

எனக்கு கொஞ்சம் கூட அவன் மதிப்பு தரவில்லை, அதன் பின் நான் சகஜமானேன் தான், ஆனால் அவன் என்னை மதிக்கவில்லை, என்னுடைய உணர்வுகளை புரிந்து கொள்ளவேயில்லை என்று கண்கலங்கிய படி கூறினார்.

பிக்பாஸ் வீட்டின் துரோகி, பச்சோந்தி யார் யார் தெரியுமா?

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் மீரா மிதுனை பலரும் மோசமாக சமூகவலைத்தளங்களில் கமெண்ட் செய்து வந்தனர்.

இதற்கிடையில் விஜய் டிவி மீரா மிதுனுடன் ஒரு நேரலை இருக்கிறது. நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்கலாம் என்று நேற்று டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.

அதன் படி இன்று நடந்த அந்த நேரலையில் பிக்பாஸ் வீட்டில் நட்புக்கு இலக்கணம் யார் என்று கேட்கப்பட்டது, அதற்கு கவீன் என்று கூறிய அவர், ஊம குசும்பு யார் என்று கேட்ட போது, லாஸ்லியா என்று கூறினார்.

அதன் பின் துரோகி பட்டம் யாருக்கு என்றால் தர்ஷன், அழகாக இருப்பது முகின், பச்சோந்தி தர்ஷன் என கூறி முடித்தார்.

பிக்பாஸ்ல நீ இருந்திருக்க முடியாது , நாரடிச்சிருப்பேன் : மதுமிதா மீது பொங்கிய பிரபலம்!!

மதுமிதா மீது பொங்கிய பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3 ல் இந்த வாரம் மதுமிதா, கவின், சாக்‌ஷி, ரேஷ்மா, அபிராமி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாதளவில் அனைவரின் முன்பும் வெளிப்படையாக நாமினேசன் செய்யப்பட்டது.

இது ஒரு பக்கம் இருக்க கிராமத்து டாஸ்கில் சாண்டி மதுமிதா இடையே பிரச்சனை எழுந்தது. ஆனால் சாண்டி மன்னிப்பும் கேட்டார்.

இந்நிலையில் கடந்த முறை மதுமிதாவுக்கு தமிழ் கலாச்சாரம் என்ற சொன்னது பிரச்சனை வந்ததால் அப்போது அவரின் கருத்து சுதந்திரத்தை வரவேற்றவர் முன்னாள் போட்டியாளரான காஜல்.

ஆனால் சாண்டியை காரி துப்பியதோடு, நீயெல்லாம் ஆம்பளையா என கேட்டதோடு கமல்ஹாசனிடம் புகார் அளித்தார். இதுகுறித்து தற்போது பேசிய காஜல், மதுமிதா செய்தது தவறு. சாண்டி மன்னிப்பும் கேட்டுவிட்டார். இதே போல கவின், தர்ஷன், சாக்‌ஷி, முகேன் ஆகியோரிடம் மதுமிதா இப்படி நடந்துகொண்டால் பிக்பாஸ் வீட்டில் இருந்திருக்க முடியாது.

நான் நாரடிச்சிருப்பேன். சாண்டிக்காக மட்டுமில்லை மற்ற யாருக்கு இப்படி பிரச்சனை என்றாலும் நான் தட்டிகேட்பேன்.வனிதா இருந்திருந்தால் இந்த மாதிரி நடந்திருக்காது என கூறியுள்ளார். என மதுமிதாவை சரமாறியாக கேட்டுள்ளார்.

நடிகை நமிதா என்ன தான் ஆனார் தெரியுமா?

நடிகை நமிதா

கவர்ச்சி நடிகை நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பிறகு பெரிதாக படங்களில் நடிக்கவில்லை, திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக அவர் நடிப்பில் வந்த படம் ‘பொட்டு’. அது பிளாப் ஆனது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

அதன் பிறகு அவரை பற்றிய செய்திகள் எதுவும் வரவில்லை. இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் சினிமாவை நடிக்க திரும்பியுள்ளார்.

இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் இயக்கும் படத்தில் தான் நமீதா நடிக்கவுள்ளார். அதில் அவருக்கு நெகடிவ் வேடம் என்று கூறப்படுகிறது.

6 மாத கர்ப்பிணியாக இருந்த பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடுமை : கணவர் செய்த மோசமான செயல்!!

அலினா ஷேக்

சினிமா நடிகைகளுக்கும் சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கும். போஜ்புரி சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை அலினா ஷேக். கடந்த 2016 முதஸ்ஸீர் பெய்க் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 மாத கைக்குழந்தை உள்ளது.

இந்நிலையில் அவர் தன் கணவர் மீது போலிசில் புகார் அளித்துள்ளார். அவர் கூறிதில் எனது கணவர் வீஇரவு 8 மணிக்கு திரும்பி வருவேன் என கூறிவிட்டு வெளியில் சென்றார்.

நீண்ட நேரமாகியும் அவர் வராததால் என் கணவரை காணவில்லை என புகார் செய்தேன். பின் அவர் நலமாக இருப்பது தெரியவந்தது. பின் 10 நாட்கள் கழித்து எனக்கு ரூ 100 பத்திரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தார்.

இதனால் அதிர்ச்சியைடந்த நான் விவாகரத்தை ஏற்கமுடியாது என்பதால் போலிசில் புகார் அளித்தேன். ஆனால் வழக்கு பதிவு செய்ய மறுத்திவிட்டார்கள்.

அதே போல நான் 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோது கணவரின் வீட்டில் இருந்தவர்கள் தொடர்ந்து கொடுமை செய்து வந்தனர். இன்னும் கஷ்டங்களை அனுபவித்து வருகிறேன். புகார் கொடுக்க முயன்ற போது கணவர் என்னை தடுத்துவிட்டார் என அலினா கூறியுள்ளார்.

பெண்களை உரசியதாக ஓப்பனாக பேசிய சரவணன் : சர்ச்சையால் விஜய் டிவி எடுத்த அதிரடி நடவடிக்கை!!

சரவணன்

சென்ற சனிக்கிழமை பிக்பாஸ் எபிசோடில் கமல்ஹாசன் பெண்களிடம் தவறாக நடக்கும் ஆண்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, இடையில் பேசிய சரவணன் ‘நானும் இப்படி செஞ்சிருக்கேன் சார்’ என கூறினார்.

அதற்கு கமல்ஹாசனும் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. செட்டில் இருந்த ரசிகர்களும் கைதட்டினார். இது பெரிய சர்ச்சையான நிலையில் விஜய் டிவி நடவடிக்கை எடுத்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது, மன்னிப்பு கேட்கும்படி பிக்பாஸ் கூறினார்.

அப்போது பேசிய சரவணன் “நான் காலேஜ் படிக்கும் வயதில் செய்த தவறுகள் பற்றி பேசினேன். அது போல யாரும் செய்யாதீர்கள் என சொல்வதற்காகத்தான் அதை சொன்னேன். ஆனால் அப்போது என்னால் முழுவதும் பேச முடியாமல் போனது. இந்த தருணத்தில் நான் மன்னிப்பு கேட்கிறேன்” என கூறியுள்ளார்.

சேரன் இப்படிப்பட்டவரா? வெளியே வந்த மீராவின் முதல் பேட்டி!!

மீராவின் முதல் பேட்டி

பிக்பாஸ் வீட்டில் சேரனுடன் ஏற்பட்ட மனக்கசப்பினால், மக்களிடம் மோசமான விமர்சனங்களை பெற்ற மீரா மிதுன், கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்பட்ட சில மணி நேரங்களிலே கவர்ச்சி புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, வைரலாக்கினார்.

இந்நிலையில் அவர் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு முதல் முறையாக பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவருடன் முதலில் கேட்ட கேள்வியே சேரன் பிரச்சனை தான், அதற்கு மீரா, அவர் என்னை பிடித்த விதம் ஹார்ஷாக இருந்தது, அதன் காரணமாகவே அப்படி கூறினேன்.

அப்புறம் ஏன் சிரீத்து கொண்டே வந்தீர்கள் என்ற போது, நான் பொதுவாகவே எந்த ஒரு விஷயத்தையும் முகத்தில் காட்டமாட்டேன், அதனாலே தான் சிரித்தேன்.

அதுமட்டுமின்றி அந்த விஷயத்தை சேரன் வேறு ஒரு மாதிரி கொண்டு சென்றுவிட்டார். அது எப்படி சொல்வது சென்சிடிவ்வாகவே கொண்டு சென்றுவிட்டார், இதனாலே போட்டியாளர்கள் அவரிடம் சென்று பேசினர்.

என்னை பொறுத்தவரை அவர் ஒரு நாடகத்தை போட்டு, அப்படியே மாற்றிவிட்டார் என்று தான் கூறுவேன், ஒரு வேளை அவருக்கு அது உண்மையாக கூட வலித்திருக்கலாம், ஆனால் என்னுடைய கருத்து இது தான்.

கடைசியில் ஏன் சேரனை அந்த வார்த்தை ஜெயிச்சீட்டேங்க வாழ்த்துக்கள் என்று கூறினீர்கள், என்ற போது பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது சும்மா டயலாக் பற்றி பேசிக் கொண்டிருந்த போது, சேரன் சார் தான்,

இந்த வீட்ல எனக்கு முன்னாடி வெளியே அனுப்புவேன் என்று அண்ணாமலை டயலாக் போன்று செய்து காட்டினார். அதன் காரணமாகவே வெளியேறும் போது, நீங்கள் ஜெயிச்சுட்டேங்க சார் என்று அவரிடம் கூறினேன் என்று முடித்தார்.

கவீனை கட்டிப்பிடித்து தோளில் சாய்ந்து உருக்கமாக உதவி கேட்ட ரேஷ்மா : என்ன கேட்டார் தெரியுமா?

உதவி கேட்ட ரேஷ்மா

பிக்பாஸ் வீட்டில் நேற்று ஓபன் நாமினேஷன் நடந்தது. இந்த ஓபன் நாமினேஷனில் மதுமிதா, கவீன், ஷாக்சி, அபிராமி, ரேஷ்மா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். அதன் பின் கவீனை நாமினேட் செய்த ரேஷ்மா, கிட்சனில் இருந்த போது, கவீனை கட்டிப்பிடித்து, தோளில் சாய்ந்து அவரிடம் ஒரு உதவி கேட்டார்.

அப்போது ரேஷ்மா, நான் இந்த வாரம் வெளியேறிவிட்டால், என் குழந்தைகளுக்கு பணம் கட்டிவிடுடா என்று கேட்டார். அதற்கு கவீன் அதெல்லாம் ஒன்னும் இல்லைடா கண்டிப்பா என்று கூறினார்.

அதன் பின் மீண்டும் ரேஷ்மா மன்னிப்பு கேடக, ஆனால் கவீனோ நான் அதற்காக டல்லாக இல்லை, எல்லா விஷயமும் தெரிந்தும், ஷாக்சி என்னை நாமினேட் செய்தது தான் ஒரு மாதிரி இருக்கிறது என்று கூறினார்.

சேரன் மீது பொய் புகார் கூறியது போல பிரபல நடிகர் மீது பழி சுமத்திய மீரா : அவரே வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

சேரன் மீது பொய் புகார்

மீரா மிதுன் சைக்கோ என்றும், அவர் உண்மை முகம் குறித்தும் நடிகரும் அவருடன் நடனமாடியவருமான சய்ஃப் அலி கான் பேட்டி அளித்துள்ளார். பிக்பாஸில் போட்டியாளர்களில் ஒருவரான மீரா மிதுன் சென்ற வாரம் குறைந்த வாக்குகளால் வெளியேறியுள்ளார். இந்நிலையில் மீரா குறித்து ஜோடி No.1ல் அவருடன் சேர்ந்து நடனமாடிய சய்ஃப் அலி கான் பேசியுள்ளார்.

சய்ஃப் கூறுகயில் நான் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் வேறொரு நபருடன் ஆடுகையில் அவர் அந்த ஷோ வை விட்டு வெளியேறி விட்டார். பின்னர் மீரா எனக்கு ஜோடியாகி என்னுடன் சேர்ந்து நடனமாடினார்.

அப்போது ஒரு நாள், நடன ஒத்திகை செய்து பார்த்துக் கொண்டிருக்கும் போது அவர் திடிரென்று என்னை விட்டு தள்ளி போய்ட்டார். காரணம் நான் அவரை தவறாக தொட்டு நடனமாடினார் என்று அங்குள்ள சகப் போட்டியாளர்கள் மத்தியில் கூறினார்.

அப்போது அந்த வார்த்தை அதிர்ச்சியை அளித்தது, நான் தலை குனிந்து போனேன். அதே போல் தான் பிக்பாஸ் வீட்டில் சேரனுக்கும் நடந்துள்ளது. அவரின் பேச்சு ஒரு சைக்கோ போல இருந்தது என கூறியுள்ளார்.

பிக்பாஸ் சாண்டிக்கு வெளியில் ஜெயில் காத்திருக்கிறது : வசந்ததபாலனால் ஷாக் ஆன ரசிகர்கள்!!

பிக்பாஸ் சாண்டி

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்த நபராக இருப்பவர் தான் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவர் அந்த இடத்தில் இருந்தால் கலகலப்பாக இருக்கும் என்று போட்டியாளர்கள் பலரும் சொல்லியிருக்கார்கள்.

ஆனால் அதுவே சில நேரங்களில் கோபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடுகிறது என சேரன் சார் சமீபத்தில் கமலிடம் நேரடியாக கூறினார். இதனால் சாண்டி கொஞ்சம் அடக்கி வாசிக்கிறே என்று அதை கூட தன்னுடைய தொனியில் சொன்னார்.

இந்நிலையில் வெயில், அங்காடி தெரு, அரவான், காவியத் தலைவன் படங்களை இயக்கிய வசந்த பாலன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், வென்று வாருங்கள், உங்களுக்கு ஜெயில் காத்திருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனால் இதைக் கண்டவுடன் ஷாக் ஆன சாண்டி ரசிகர்கள், அதன் பின் அதை படித்து பார்த்த போது, அவர் இயக்கி வரும் ஜெயில் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கிறார். இதில் நடன இயக்குனராக சாண்டி பணியாற்றியுள்ளார்.

அவர் வெளியில் வரும் போது ஜெயில் படம் ரிலிசாகவுள்ளதால், அதை குறிக்கும் வகையிலே வெளீயில் வாருங்கள் சாண்டி ஜெயில் காத்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…