பிக்பாஸை விட்டு வெளியே வந்தவுடன் மீரா யாரோட இருக்கார் பாருங்க : திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!!

மீரா

பிக்பாஸிலிருந்து நேற்று முன்தினம் மீரா வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேற்றப்பட்டதற்கு முக்கிய காரணமே சேரனைப் பற்றி இவர் சொன்ன விதம் தான், அதன் காரணமாகவே ஒரே நாளில் ஷாக்சி தப்பி மீரா வெளியேற்றப்பட்டார்.


இதனால் வெளியேற்றப்பட்ட அவர், எந்த ஒரு ஊடகத்திற்கும் பேட்டி கொடுக்காமல் இருந்ததால், இவர் சீக்ரெட் ரூமில் அடைக்கப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் மீரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்று கூறி, ஒரு ஹாட்டான புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

இதைக் கண்ட இணையவாசிகள் நீ செய்தது தவறு என்று அவருடைய கமெண்ட்டில் திட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி அவர் தன்னுடைய ஸ்டோரியில் யாரோ ஒரு இளைஞனோடு இருப்பது போன்றும், அதற்கு மீரா ஒரு மாதிரி ரியாக்‌ஷன் கொடுப்பது போன்றும், உள்ளது.

அதைக் கண்டதும் இணையவாசிகள் வெளியில் வந்தும் கூட சேரனிடம் மன்னிப்பு கேட்கவில்லை, அதற்கு இது வேறா என்றும் திட்டி வருகின்றனர்.

மீரா மிதுன் பல பேரை ஏமாத்தியிருக்கா : பல்வேறு ரகசியங்களை உடைத்த நெருங்கிய தோழி!!

மீரா மிதுன்

மீரா மிதுன் குறித்து யாருக்கும் தெரியாத பல திடுக்கிடும் தகவல்களை அவரின் முன்னாள் தோழி நிஷா ஷெரீப் பகிர்ந்து கொண்டுள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மீரா யார் சொல்வதையும் காது கொடுத்து கேட்க மாட்டார். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என இருப்பார்.

அவளுக்காக இரண்டு முறை பேஷன் ஷோ செய்து கொடுத்தேன், ஆனால் அதற்கு பணம் கொடுக்காமல் அவர் என்னை ஏமாற்றிவிட்டார், இதன்பின்னர் அவருக்காக நான் ஷோ நடத்தவில்லை.

பின்னர் என்னை பற்றி மற்றவர்களிடம் அவர் தவறாக பேசினார் என்பதை என் நண்பர் மூலம் தெரிந்து கொண்டேன். இதிலிருந்து அவருடன் பேசுவதை விட்டு விட்டேன், அவரே போன் செய்தால் பேசுவேன்.

இன்ஸ்டாகிராமில் ஒருவர் எனக்கு மெசேஜ் அனுப்பினார், மீரா மிதுனுடன் நான் வெளியில் சென்றேன், என்னிடம் அவர் பத்தாயிரம் ரூபாய் வாங்கி கொண்டு ஏமாற்றிவிட்டார் என கூறினார்.

அவளால் வாழ்க்கையில் ஏமாந்து பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானவர்கள் உள்ளார்கள். நண்பர்கள் உறவினர்கள் என பலரை அவர் ஏமாற்றியுள்ளார் என கூறியுள்ளார்.

ஜாக்குலினை காக்க வைத்த வெள்ளித்திரை : மீண்டும் அழைத்துக் கொண்ட சின்னத்திரை!!

ஜாக்குலின்

கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக தொலைக்காட்சி ஏரியாவில் அறிமுகமான ஜாக்குலினுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருக்கு என்று பல ரசிகர் ஆர்மிகள் உருவாகியுள்ள நிலையில், அம்மணிக்கு வெள்ளித்திரை அழைப்புகளும் ஏராளமாக வர தொடங்கியது.

இதையடுத்து நயன்தாரா நடிப்பில் உருவான ‘கோலமாவு கோகிலா’ படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த ஜாக்குலின், சினிமாவில் ஹீரோயின் அவதாரம் எடுக்க காத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் எதிர்ப்பார்த்தபடி நல்ல வாய்ப்புகள் எதுவுமே அவரை தேடி வரவில்லை.

வரும் வாய்ப்புகள் அனைத்தும் உப்புமா படங்களாகவும், அல்லது ஹீரோயின் தங்கை, தோழி என்ற குணச்சித்திர வேடங்களாகவே வந்ததால் அம்மணி நொந்து போய்விட்டால்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்திற்குப் பிறகு, சுமார் ஒரு வருடமான சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருந்த ஜாக்குலினுக்கு இதுவரை அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காததால், வெறுத்துப் போனவர் தற்போதும் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பிவிட்டார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘தேன்மொழி பி.ஏ’ என்ற புதிய தொடரில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் ஜாக்குலின் நடிக்கிறார். இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.

சீக்ரெட் ரூமில் ஹெட்போனுடன் அடைக்கப்பட்ட மீரா? வைரலாகும் புகைப்படத்தின் உண்மை!!

மீரா

பிக்பாஸ் வீட்டில் நேற்று கமல் மக்கள் நினைத்தது போன்றே மீராவை சரியான கேள்வியால் கதறவிட்டார். நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு கமல் போட்டியாளர் ஒருவர்சீக்ரெட் ரூமில் அடைக்கப்படுவார் என்று கூறினார்.

இதனால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ள மீரா தான் சீக்ரெட் ரூமில் அடைத்து வைத்திருப்பதாக கூறி, புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களி வைரலாகி வருகின்றன.

ஆனால் அந்த புகைப்படம் உண்மையில்லை எனவும், அவர் வீட்டை விட்டே வெளியேற்றப்பட்டுவிட்டார் என நிகழ்ச்சியை கண்டவர்கள் தங்களுடைய டுவிட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பிக்பாஸிலிருந்து வெளியேறிய மீரா இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்? செமையாய் கலாய்த்த சாண்டியின் முன்னாள் மனைவி!!

வெளியேறிய மீரா மிதுன்

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மீரா மிதுன் குறித்து சாண்டியின் முன்னாள் மனைவி காஜல் பசுபதி பேசியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் சேரன் தன்னை தவறாக தொட்டார் என கூறினார் மீரா.

ஆனால் கமல்ஹாசன் காட்டிய குறும்படத்தில் அவர் முகத்திரை கிழிந்தது. இந்நிலையில் நேற்று மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் சேரனுக்கு எதிராக பொய் புகார் கூறியதால் மீராவுக்கு எதிராக மக்கள் ஓட்டு போட்டதாக தெரிகிறது. இந்நிலையில் ரகசிய அறைக்குள் மீரா செல்வாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இது குறித்து டுவிட்டரில் சாண்டியின் முன்னாள் மனைவி காஜல், சீக்ரட் அறையை ஆரம்பத்திலேயே காட்டிவிட்டதால் அந்த ஆப்ஷனை இந்த வாரம் காட்ட மாட்டங்கன்னு நினைக்கிறேன் என கூறினார்.

அதற்கு ரசிகர் ஒருவர், ஆனால் நீங்கள் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கூற அதற்கு காஜல், பொருத்திருந்து பார்ப்போம், மீரா நாம் இப்போது போடும் டுவீட்களை கூட பார்த்து கொண்டிருக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

அதாவது அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி தன்னை பற்றி மக்கள் என்ன பேசி கொள்கிறார்கள் என டுவிட்டரில் பார்த்து கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

லாஸ்லியாவின் கன்னத்தை பிடித்து கொஞ்சிய கவீன் : செம காண்டான ஷாக்சி!!

லாஸ்லியா- கவீன்

பிக்பாஸ் வீட்டில் இருந்த அனைத்து பெண்களிடமும் பழகி காதல் மன்னனாக வலம் வந்த கவீன், அதன் பின் ஷாக்சியிடம் நெருங்கி பழகியதால், அந்த பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமானார்.

பாத்ரூமுக்குள் சென்று கதறி அழுதார். ஆனால் ஷாக்சியோ இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தார். இருப்பினும் கவீன் ஷாக்சியிடம் நடந்து கொண்ட விதத்தை எல்லாம் மறந்து லாஸ்லியாவிடம் ஜாலியாக பேசி வருகிறார். இதைக் கூட ரேஷ்மா சமீபத்தில் எபிசோடில் ஷாக்சியிடம் கூறினார்.

இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சிறைக்குள் இருக்கும் அபிராமி பிக்பாஸிடம் நாங்கள் செய்தது தவறு தான் என்று கூறிக் கொண்டிருக்க, அப்போது அருகில் இருந்த லாஸ்லியாவிடம் கவீன், கையை பிடிப்பது கன்னத்தை பிடித்து கொஞ்சுவது போன்று இருக்கிறார்.

அப்போது அங்கிருந்த ஷாக்சி கவீன் மற்றும் லாஸ்லியாவை செம கோபத்தில் பார்க்கிறார். இதனால் இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் அது எப்படியோ கவீனுக்கு ஷாக்சி இல்லைனா? லாஸ்லியா? என்று ஜாலியாக இருக்கிறான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஒரே அப்பார்ட்மெண்டில் 8 பேருடன் : வாய்ப்புக்காக பாகுபலி நடிகை அனுபவித்த கொடுமை!!

பாகுபலி நடிகை

சினிமாவில் வாய்ப்புக்காக நடிகை பல்வேறு வகையில் கொ டுமைகளை அனுபவித்து வருகிறார்கள். குறிப்பாக பா லியல் ரீதியான சீ ண்டல்களுக்கு அதிகம் ஆளாவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இந்திய சினிமாவில் நடிப்பதற்கு வரும் பெண்கள் இதைவிட அதிகமான கொடுமைகளை அனுபவித்து வருவதாக நடிகை நோரா பதேகி கூறியிருக்கிறார்.

கனடாவை சேர்ந்த நடிகை நோரா பதேகி, கார்த்தியின் ‘தோழா’ மற்றும் ‘பாகுபலி’ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தம் ஆட்டம் ஆடியிருக்கிறார். பெரும்பாலான படங்களில் சிறு வேடங்களிலும், ஒரு பாடலுக்கு நடனம் ஆடி வரும் இவர், தற்போது வருண் தவான் நடிப்பில் உருவாகும் ‘ஸ்ட்ரீட் டான்ஸர்’ இந்தி படத்ஹ்டில் நடித்து வருகிறார்.

தனது திரையுலக வாழ்க்கை குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில், பட வாய்ப்புகளுக்காக தான் அனுபவித்த கொ டுமைகளை நோரா பதேகி, பகிர்ந்துக் கொண்டது பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், ”இந்தியாவில் வெளிநாட்டவர்கல் வாழ்வது எளிதானதல்ல. நாங்கள் நிறைய கஷ்ட்டப்படுகிறோம். அது யாருக்கும் தெரியாது. எங்களிடம் இருந்து பணம் பறிக்கிறார்கள். என்னிடம் இருந்து பணம் பறித்திருக்கிறார்கள்.

என்னை கனடாவில் இருந்து இங்கு அழைத்து வந்த ஏஜென்சி என்னை மிக மோசமாக நடத்தினார்கள். அதனால், அந்த ஏஜென்சியில் இருந்து நான் வெளியேற நினைத்த போது, எனது ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்க மாட்டோம், என்று மி ரட்டினார்கள்.

அடுத்து 8 பெண்களுடன் ஒரே அப்பார்ட்மெண்டில் தங்க வைத்தனர். அந்த அப்பார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்த போது அ திர்ச்சியடைந்தேன். எனது பார்போர்ட்டை அங்கிருந்தவர்கள் திருடி விட்டனர். அதனால், என்னால் கனடாவுக்கு செல்ல முடியவில்லை. அங்கு நான் வசித்தது எல்லாம் பெரிய கொ டுமை.

நான் மனதளவில் தயாராகாததால் ரொம்பவே கஷ்ட்டப்பட்டேன். பட வாய்ப்புகளுக்காக நான் அனுபவித்த கொடுமைகளை எண்ணி தூங்காமல் தவித்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.

சேரன் மீது சாண்டிக்கு ஏன் இவ்வளவு கோபம் தெரியுமா? பழைய அந்த பிரச்சனை தான் காரணம்!!

சேரன் மீது சாண்டிக்கு ஏன் இவ்வளவு கோபம்

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சாண்டி அங்கிருக்கும் அனைவரிடமும் சகஜமாக பழகி வருகிறார். ஆனால் சேரனிடம் மட்டும் அவர் சகஜமாக பழக முடியாமல், அவரைப் பற்றி பேசினாலே அந்த இடத்தில் இருந்து காணமல் போய்விடுகிறார்.

குறிப்பாக ஷாக்சி, லாஸியா பிரச்சனையின் போது கவீனிடம் சேரன் பேசினார். அப்போது அவர் போன பின்பு சாண்டி என்ன சாத்தான் வேதம் ஓதுச்சா என்று கேட்டார்.

இதை கமல் அப்படியே சேரனிடம் எபிசோடில் போட்டுக் கொடுத்தார், இப்போது வரையும் கூட சாண்டியால் அவரிடம் சகஜமாக பழக முடியவில்லை.

இதனால் இதற்கு என்ன காரணம் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் சேரனின் இளைய மகளான தாமினி சந்துரூ என்பவரை காதலித்து வந்தார். இதனால் தாமினி அவருடன் செல்ல முடிவெடித்தார்.

ஆனால் இறுதியில் தாமினி மனம் மாறி சேரனுடனே சேர்ந்துவிட்டார். ஆனால் அந்த சந்துரு சூளமேட்டைச் சேர்ந்தவர், அவர் ஒரு நடன இயக்குனர், அதுமட்டுமின்றி சாண்டியின் நெருங்கிய நண்பர்.

தாமினி மற்றும் சந்துருவின் காதலுக்கு உதவியாகவும் இருந்துள்ளார். இது போன்ற சமயத்தில் சேரன் ஏதோ கூறிவிட்டு தாமினியை தன்னுடன் வைத்துக் கொண்டதால் அப்போதிருந்தே சேரனை சாண்டிக்கு பிடிக்காதாம், சும்மா தான் இருவரும் பேசிக் கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

பிக்பாஸில் லாஸ்லியாவின் இரட்டை வேடம் : ஆதாரத்துடன் வெளிகொண்டு வந்த நடிகை சுஜா வருணி!!

லாஸ்லியாவின் இரட்டை வேடம்

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 3-யில் மக்களால் அதிகம் விரும்பப்பபடும் போட்டியாளர்களில் லாஸ்லியாவும் ஒருவர்.

ஆரம்பத்தில் ரசிகர்கள் இவரை தூக்கி வைத்து கொண்டாடினர். அதன் பின் நாட்கள் செல்ல, செல்ல லாஸ்லியாவிற்கு எதிராகவும்மக்கள் கருத்துகள் தெரிவிக்க தொடங்கியுள்ளனர். மிகவும் பாதுகாப்பாக டபுள் கேம் விளையாடி வருவதாக பலரும் விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சுஜா வருநீயுடன் ரசிகர் ஒருவர் லாஸ்லியா குறித்து கேள்வி கேட்டதற்கு அவர் டபுள் கேம் விளையாடுவதாக கூறியுள்ளார். மேலும் கிராமத்து டாஸ்கில் கவினுடன் ஜாலியாக பேசி கொண்டிருந்ததாக குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.

குத்து பாடல் நடன நடிகைக்கு நேர்ந்த கொடுமை : வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம்!!

நோரா பதேகி

பாகுபலி படத்தில் நடித்தவர் இளம் நடிகை நோரா பதேகி. கார்த்தி நடித்த தோழா படத்திலும் குத்துபாடல்களுக்கு நடமாடியுள்ளார். தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் கவுரவ வேடங்களிலும் நடித்து வருகிறார்.

ஹிந்தி பிக்பாஸ் சீசன் 9 ல் கலந்துகொண்டார். கனடாவில் இருந்து சினிமாவில் நடிக்க இந்தியா வந்தவர் மிக மோசமான அனுபவங்களை பெற்றிருக்கிறார்.

அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் வெளிநாட்டவர்கள் இந்தியாவில் வாழ்வது எளிது கிடையாது. கஷ்டங்களை நிறைய அனுபவத்திருக்கிறோம். எங்களிடமிருந்து நிறைய பணம் பறிக்கிறார்கள்.

நானும் அதை இழந்திருக்கிறேன். என்னை இங்கு அழைத்து வந்த ஏஜென்சி மிக மோசமாக என்னிடம் நடந்துகொண்டது. இதனால் இதிலிருந்து வெளியேற நினைத்தேன். ஆனால் ஏஜென்சி என்னை என்னுடைய பணம் ரூ 20 லட்சத்தை திருப்பிதர மாட்டேன் என மிரட்டியது.

இதனால் விளம்பரத்தில் நடித்த பணம் ரூ 20 லட்சத்தை இழந்தேன். 8 பெண்களுடன் ஒரு அபார்ட்மெண்டில் இருந்தேன். அங்கு இருந்தவர்கள் என் பாஸ்போர்ட்டை திருடிக்கொண்டார்கள். அதனால் கனடாவுக்கு செல்ல முடியாமல் போனது. பின் ஹிந்தி கற்றேன். ஆடிசன் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. கோமாளி போல என்னை கேலி செய்தார்கள்.

சீண்டினார்கள். வீட்டிற்கு அழுதுகொண்டே வந்தேன் நீ வேண்டாம் திரும்பி போய்விடு என காஸ்டிங் ஏஜென்ட் கூறினார்கள். நான் இந்த சம்பவத்தை வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன் என நோரா கூறியுள்ளார்.