மீரா ஒரு சைக்கோ : அன்று எனக்கு நடந்த அநியாயம் : ஒட்டுமொத்த ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர்!!

மீரா மிதுன்

பிக்பாஸில் தற்போது மக்கள் அதிகமாக வெறுக்கப்படும் போட்டியாளர் என்றால் மீரா மிதுன் என்றே கூறலாம். இந்த வாரம் இவர் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியேற்றப்பட்டார்.

தற்போது மீரா மிதுனைக் குறித்து ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் அவருடன் நடனமாடிய சைப் அலி கான் பல உண்மைகளை கூறியுள்ளார். மீரா மிதுன் ஒரு சைக்கோ என்று கூறியுள்ள அவர், தற்போது சேரன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை என் மீது வைத்ததை ஜோடி ப்ரொமோ காட்சியில் அவதானித்திருப்பீர்கள்.

அதுமட்டுமின்றி அத்தருணத்தில் நான் தான் தவறு செய்துவிட்டேனோ என்று தோன்றும் அளவிற்கு அவரது குற்றச்சாட்டு இருந்தது. மீரா இன்னும் இரண்டு வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தால் கமல் சாரே இந்நிகழ்ச்சியை விட்டு கட்டாயம் வெளியே வந்துவிடுவார் என்றும் அவ்வாறு வந்ததும் எனது வீட்டிற்கு வந்து எப்படிடா அந்த பெண்ணுடன் நடனமாடின என்று கட்டாயம் கேட்பார்.

மேலும் 15 பேர் இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரை சமாளிக்க முடியாமல் தவிக்கும் இத்தருணத்தில் நான் ஒற்றை ஆளாக இருந்து சமாளித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

இயக்குனர் சேரனைக் குறித்து பேசுகையில், இப்படியொரு நபரை குற்றம் சொல்வதற்கு எப்படி மனது வருகின்றது. அவருடன் வேலை செய்வதற்கு பல பிரபலங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

மீரா மிதுனின் உண்மையான பெயர் தமிழ்செல்வி, பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அவருக்கு கொடுக்கப்படும் செக் கூட அந்த பெயரிலேயே தான் செல்லும் என்று ஆணித்தரமாக கூறியுள்ளார்.

சின்னத்தம்பி சீரியல் நந்தினிக்கு இரண்டாவது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா?

பாவனி ரெட்டி

சின்ன தம்பி சீரியலில் நந்தினியாக நடித்து வளம் வந்தவர் பாவனி ரெட்டி அவர்க்கு கூடிய விரைவில் இரண்டாவது திருமணம் நடக்கவுள்ளது இவர் விஜய் டிவி தொடரில் வெளிவந்த ரெட்டை வாள் குருவி, சின்ன தம்பி மற்றும் தெலுங்கு சீரியல்கள் போன்ற தொடர்கலில் நடித்திருக்கிரார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ந் தேதி ப்ரதீப் என்றவருடன் திருமணம் நடந்தது. பாவனி ரெட்டி மற்றும் ப்ரதீப் இருவரும் சன் டிவி தொடர் பாசமலர் என்னும் சீரியலில் (2013-2016) ஜோடியாக நடித்தார்கள்.

அதன் பின் அந்த தொடரிலேயே இவர்கள் இருவரும் காதல் வயப்பட்டு காதலித்து வந்தார்கள். அதன் பின் பெற்றோர்கள் சம்மத்துடன் நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர்ந்தார்கள்.

இந்நிலையில் 2017-ம் ஆண்டு மே மாதம் 3-ந் தேதி அன்று பாவனியின் கணவர் த ற்கொ லை செய்துக்கொண்ட செய்தி பாவனிக்கும் அவர்களது ரசிககளுக்கும், குடும்பத்தினருக்கும் பெரும் அ திர்ச்சியையும் வேதனையை தந்தது.

அச்சம்பவத்திலிருந்து வெளிவந்த பாவனி விஜய் டிவி தொடர் சின்ன தம்பி என்னும் சீரியலில் நந்தினி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் பாவனி ரெட்டி சமீபத்தில் தனக்கு இரண்டாம் திருமணம் நடக்க போவதாக தெறிவித்துள்ளார்.

இவருக்கு மாப்பிள்ளையாக வர இருப்பவர் பாவனி குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர் பியூ ஆனந்த் ஆவர். இவர்கள் திருமண தேதியும் உறுதியாகி உள்ளது. இந்த செய்தி பாவனியின் ரசிகர்களுக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

மீராவிற்கு செம ஆப்பு அடித்த மக்கள் : இந்த வாரம் வெளியேறுவது யார்?

மீராவிற்கு செம ஆப்பு

பிக்பாஸ் வீட்டில் நடந்த நாட்டாமை டாஸ்க்கின் போது, சேரன் என்னுடைய இடுப்பை இழுத்துவிட்டார் என்று கூறி மிகப் பெரிய பிரச்சனையை உண்டாக்கினார்.

இதனால் ஒன்னும் இல்லாத விஷயத்தை இந்தளவிற்கு ஊதி பெரிதாக்கியிருக்க வேண்டாம், அல்லது அவரை தனியாகவாக அழைத்தாவது பேசியிருக்கலாம், ஏன் இப்படி இந்த மீரா டிராமா செய்கிறாள் என்று மக்கள் திட்டம் ஆரம்பித்துவிட்டனர்.

திட்டியதோடு மட்டுமின்றி, அந்த கோபத்தை ஓட்டு போடுவதிலும் காண்பித்துள்ளனர். நேற்று முன் தினம் வரை ஷாக்சி தான் கடைசி இடத்தில் இருந்தார். ஆனால் இன்று அதை பார்த்தால்,

அப்படியே ஷாக்சி ஒரு இடம் முன்னேறியும், அந்த இடத்தில் இருந்த மீரா தற்போது கீழே இறங்கியுள்ளார். இதனால் ஷாக்சி இந்த வாரம் காப்பாற்றப்பட்டு, மீரா வெளியேற்ற மக்கள் முடிவு செய்துள்ளனர் என்பது தெரிகிறது.

அடிச்சு சாவடிச்சுருவேன் டி…. ஷாக்சியை அடிக்கப்போன கவீன் : ஏன் தெரியுமா?

கவீன்

பிக்பாஸ் விட்டில் நேற்று நாட்டாமை டாஸ்க்கில் யார் நன்றாக செய்தார்கள் என்று 2 பேரை தேர்வு செய்ய வேண்டும் எனவும், அப்படி தேர்வு செய்யப்படும் 2 பேர் தலைவர் பதவிக்கும் நிற்கப்படுவர் என்றும், நன்றாக டாஸ்க் செய்யாத 2 பேர் சிறையில் அடைக்கப்படுவர் எனவும் பிக்பாஸ் கூறினார்.


அதன் படி நாட்டாமை டாஸ்க் நன்றாக செய்தவர்கள் மீரா, ஷெரீன் தான் என்று சிலர் கூற, உடனே அங்கிருந்த மதுமிதா, சேரன், ஷாக்சி போன்றோர் அப்போ நாங்கள் எல்லாம் சரியாக பண்ணவில்லையா என்று கோபப்பட்டனர்.

அதில் ஒரு கட்டத்தில் கவீன், ஷாக்சியிடம் மொழிப்பிரச்சனை இருந்தது என்று கூறியதால், அவரிடம் வந்து ஷாக்சி நான் என்ன சுவாரஸ்யமாக டாஸ்க்கை செய்யவில்லை என்று திரும்ப… திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் கவீனோ நான் சுவாரஸ்யத்தைப் பற்றி பேசவில்லை, மொழிப்பிரச்சனையை பற்றி அதாவது கிராமத்து மொழி போன்று பேசவில்லை என்று விளக்கினார்.

ஆனால் ஷாக்சி மீண்டும்…மீண்டும் அதைப் பற்றியே கேட்டதால், ஒரு கட்டத்தில் கோபமடைந்த கவீன், அடிச்சு சாவடிச்சுருவேன் டி என்று கை நீட்ட ஷாகி அழுது கொண்டே அங்கு பலர் இருக்கும் போது இவன் ஏன் இப்படி கூறினான் என்று கதறி அழுதார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உண்மையில் ஏன் வந்தேன் : அழுதுபடி போட்டியாளர்களிடம் கூறிய சேரன்!!

சேரன்

பிக்பாஸ் வீட்டில் மீரா-சேரன் விவகாரம் தான் இப்போது மிகப் பெரிய டாப்பிக்காக சென்று கொண்டிருக்கிறது. விளையாட்டாக செய்ததை மீரா இவ்வளவு பெரிய விஷயமாக எடுத்து ஊதி பெரிதாக்கி அவரை அசிங்கப்படுத்திவிட்டார்.

இதனால் ஒரு கட்டத்தில் சேரன் இதற்கு மேல் இருந்தால் என்னுடைய மரியாதை, மதிப்பு, நான் ஒரு பத்து படங்கள் எடுத்துள்ளேன். பெண்கள் என்னை ஒரு நல்ல டைரக்டராக நினைக்கிறார்கள், ஆனால் இந்த பெண்ணோ என்னை தவறாக சித்தரிக்க நினைக்கிறாள்.

நான் உண்மையாக பிக்பாஸ் வருவதற்கு காரணமே என் மகள்கள் தான், அவள்களுக்காத தான் நான் இந்த வீட்டிற்குள்ளையே வந்தான், இல்லையென்றால் நான் ஏன் வரப்போகிறேன், எனக்கு எல்லாம் என் மகள் தான், இதைக் கண்டால் இந்த சோசைட்டி என்னை என்ன நினைக்கும் என்று கண்ணீர் விட்டு அழுதார்.

இதற்கு முன்பு சமீபத்திரக்கனி அளித்த பேட்டி ஒன்றில், சேரன் ஏன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார் என்று கேட்ட போது, அவர் இன்றைய தலைமுறை, இப்போது எப்படி இருக்கிறார்கள், அவர்களுக்கு பிடித்தது என்ன? எது போன்று இருக்க வேண்டும் போன்ற பல புதியதை தெரிந்து கொள்வதற்காக சென்றுள்ளதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் செல்லவிருந்த பிரபல நடிகை எடுத்த முடிவு!!

நடிகை எடுத்த முடிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் வெளியுலக தொடர்ப்பு இல்லாமல் 100 நாட்கள் தங்கியிருக்கவேண்டும். பலவிதமான குணம் கொண்ட போட்டியாளர்கள் இருப்பதால் தினமும் சண்டை சச்சரவும் வந்துகொண்டு இருக்கிறது.

இப்போது நடந்துவரும் பிக்பாஸ் 3வது சீசனும் இப்படித்தான் இருக்கிறது. இந்நிலையில் தன்னை கடந்த மூன்றுவருடங்களாக அணுகிவருகிறார்கள் என்றும், அதனால் வீட்டுக்குள் செல்லலாம் என நினைத்ததாக கஸ்தூரி கூறியுள்ளார்.

ஆனால் நேற்றைய எபிசோடை பார்த்த பிறகு “ஐயோ சாமி ஆளை வுடு” என்ற பீலிங் தான் அவருக்கு வருகிறதாம்.

9 வயது டிக்டாக் புகழ் சிறுமி பரிதாபமாக மரணம் : சோகத்தில் ரசிகர்கள்!!

ஆறுனி

டிக்டாக் ஆப் ரசிகர்களிடம் அதிகம் பிரபலம். மலையாளத்தில் டிக்டாக் செயலியில் தனது நடிப்பு திறமையை காட்டி பிரபலமானவர் ஆறுனி.

ஆறுனி கடந்த சில நாட்களுக்கு முன் பீவர் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவ சிகிச்சை பலன் இன்றி சிறுமி பரிதாபமாக உயி ரிழந்துள்ளார்.

இவரது ரசிகர்களுக்கு இது பெறும் சோகத்தை கொடுத்துள்ளது. இவரது தந்தை சவுதி அரேபியாவில் ஒரு விபத்தில் பரிதாபமாக உயி ரிழந்தது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சேரன் உண்மையில் யார் தெரியுமா : பல விசயங்களை சொன்ன பிரபல நடிகை!!

பிக்பாஸ் சேரன்

தற்போது முக்கிய டிவி சானலில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றிருப்பவர் இயக்குனர் சேரன். அவர் மீது மீரா மிதுன் சில தவறாக புகார் கூறியது பலருக்கும் முகம் சுளிப்பை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் சேரன் பற்றி நடிகை சங்கவி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். சேரனை எனக்கு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் நாட்டாமை படத்தில் உதவியாளராக பணியாற்றிய போதிலிருந்தே தெரியும். அவர் நல்ல மனிதர், நண்பர், அற்புதமான இயக்குனர்.

என் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். இன்னும் என் மனதில் இருக்கிறார். அவருக்கும் அவரின் குடும்பத்திற்கும் என் வாழ்த்துக்கள். பிக்பாஸ் அவர் வெற்றி பெற்றால் எனக்கு மகிழ்ச்சியே.

சேரன் அடிக்கடி கோப்படும் கேரக்டர் அல்ல. உதவி இயக்குனர்கள் மற்றவர்கள் என எல்லோரிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டுவருவார் என சங்கவி கூறியுள்ளார்.

தொழிலதிபருக்கு வந்த ஆசை : நயந்தாராவுக்காக பேசப்பட்ட 10 கோடி!!

நயந்தாரா

தென்னிந்தியா சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருந்தாலும், தமிழ்ப் படங்களில் நடிப்பதில் தான் நயன்தாரா தீவிரம் காட்டி வருகிறார். இருப்பினும், சில தெலுங்குப் படங்களிலும் நடித்து வரும் அவர்,

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதோடு, விஜய், ரஜினி, சிரஞ்சீவி போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ள தமிழகத்தை சேர்ந்த பிரபல துணிக்கடை உரிமையாளர் தன்னுடன் ஜோடியாக நயன்தாரா நடிக்க வேண்டும், என்று விரும்பியுள்ளார்.

இதற்காக சம்பளமாக நயன்தாராவுக்கு ரூ.10 கோடி வழங்குவதாக கூறினாராம். ஆனால், நயனோ பணத்தை பார்க்காமல், அந்த தொழிலதிபருடன் நடித்தால் தனது இமேஜ் டேமேஜாகிவிடும் என்று நோ சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, அந்த தொழிலதிபருடன் விளம்பர படங்களில் நடித்த நடிகைகள் கூட படத்தில் நடிக்க முடியாது, என்று கூறியதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த ரூ.10 கோடி மேட்டர் குறித்து கோடம்பாக்கம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த தகவல் உண்மையா அல்லது வதந்தியா, என்பது இதுவரை உறுதியாகவில்லை என்றாலும், அந்த துணிக்கடை தொழிலதிபர் ஹீரோவாவதும், அவருக்காக ஹீரோயின் தேடுதல் வேட்டை நடப்பதும் உறுதியான தகவல் என்றே கூறப்படுகிறது.

லாஸ்லியாவுக்கு கொஞ்சம் கூட அப்பா பீல் இல்ல : வைரலாகு வீடியோவால் சேரனுக்கு குவியும் ஓட்டு!!

சேரனுக்கு குவியும் ஓட்டு

பிக்பாஸ் வீட்டில் எப்போதும் என்னுடைய அப்பா சேரன் அப்பா தான் என்று லாஸ்லியா கூறுவர். மோகன் வைத்தியா எலிமினேட் ஆன போது கூட, கமல் யார் யார் எலிமினேட் ஆக வேண்டும் நினைக்கிறீர்கள் சேரன் அப்பாவா? இல்லை மோகன் அப்பாவா என்ற போது, கொஞ்சமும் யேசிக்காமல் லாஸ்லியா சேரன் அப்பா தான் என்று கூறினார்.

இதனால் நிகழ்ச்சியைக் கண்ட ச்..சே என்னா பொண்ணுப்பா என்று லாஸ்லியா மீது அன்பை வெளிப்படுத்தினர். அவருக்கு ஓட்டை வாரி வழங்கினர்.

இந்நிலையில் நேற்று நடந்த நாட்டாமை டாஸ்க்கின் போது, மதுமிதாவுடன் ஏற்பட்ட பிரச்சனையால், சேரன் சோகத்தில் இருக்கும் போது லாஸ்லியா அதை கண்டுகொள்ளாமல் செல்கிறார்.

இதை இணையவாசி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட, சேரன் அப்பா பாவம் அவர் நியாயத்தை தான் பேசி வருகிறார்.

ஆனால் வர..வர.. இந்த லாஸ்லியா பொண்ணு சரியில்லை இது நாள் வரை நடித்து கொண்டிருந்தாளோ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் லாஸ்லியாவிற்கு முன்பு இருந்த ரசிகர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவது மறுக்க முடியாத உண்மை.