வனிதா பிக்பாஸில் இருந்து வெளியேற இதுதான் காரணமா?

பிக்பாஸில் வனிதா விஜயகுமார் கடந்த சில வாரங்களாக மக்களால் மறக்க முடியாத நபராக மாறிவிட்டார். அந்தளவிற்கு பிக் பாஸ் வீட்டுக்குள் அவரது செயல்பாடுகள் அமைந்திருந்தன.

வீட்டில் ஒருத்தர் விடாமல் சண்டை போட்டார். மற்றவர்களை பேசவிடாமல் தான் செய்வது தான் சரி என கத்தி பலருக்கு வெறுப்பை சம்பாதித்தார். வனிதா இவ்வளவு சீக்கிரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதற்கு ஏதாவது காரணம் இருக்கும் என்பது மட்டும் மக்களின் எண்ணமாக உள்ளது.

அவர் மீது காவல்துறையின் வழக்குகள் அதிகமாக இருப்பதால் அதன் விசாரணை எல்லாம் நிறைய இருப்பதால் பிக் பாஸ் குழுவினரால் அவரை வீட்டில் வைக்க முடியவில்லை. அதனால் காவல்துறையின் அழுத்தம் காரணமாக அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்கின்றனர் சிலர்.

பச்சை பச்சையா கேப்பேன் : பிக்பாஸில் அடுத்த வனிதா இவர்தானோ?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா நேற்று வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்படுவார் என்று யாருமே எதிர்பார்க்காத நிலையில் இது நடந்ததால், மற்ற பிக்பாஸ் போட்டியாளர்களே அதிர்ச்சியாகினர்.

அவர் போனபிறகு கவின் உள்ளிட்ட சில போட்டியாளர்கள் ‘சண்டை போடவே யாரும் இல்லை?’ என கூறிக்கொண்டிருந்தார். ‘அதான் நான் இருக்கேனே. பச்சை பச்சையாக கேப்பேன்’ என மீரா மீதுன் தெரிவித்துள்ளார்.

‘என்னை பத்தி உங்களுக்கு தெரியல. ஒரு அளவுக்கு தான். அப்புறம் நான் பச்சை பச்சயா கேப்பேன், அவங்க நாக்கை புடுங்கிட்டு சாகிற மாதிரி’ என கூறியுள்ளார். அடுத்த வனிதா இவர்தானோ?

டிஆர்பியை உயர்த்த சேனல் போட்ட புது திட்டம் : பிக் பாஸ் வீட்டுக்குள் சர்ச்சை நடிகை!!

பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், நிகழ்ச்சியில் எலிமினேஷன் ரவுண்டும் தொடங்கிவிட்டது. கடந்த வாரம் பாத்திமா பாபு வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார்? என்பதில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் பிக் பாஸ் சீசனை தொடர்ந்து, தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3 யும் விரைவில் ஒளிபரப்பு தொடங்க இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த நாகர்ஜூனாவையே பிக் பாஸாக்கியிருப்பதால், தெலுங்கு பிக் பாஸ் மூன்றாவது சீசனும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தெலுங்கில் இரண்டாம் பகுதி பிக் பாஸ் குறைவான டிஆர்பியை பெற்றதால், இந்த முறை அதை சரிகட்டுவதற்காக புது திட்டத்தை தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி குழு போட்டிருக்கிறதாம். அதன்படி, பாலியல் புகார் கூறி தெலுங்கு சினிமா பிரபலங்களை கதறவிட்ட ஸ்ரீரெட்டியை போட்டியாளராக களம் இறக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

ஆனால், ஸ்ரீரெட்டிக்கு பட வாய்ப்பு உள்ளிட்ட எந்தவிதத்திலும் தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு அளிக்க கூடாது என்பதில், தெலுங்கு சினிமா இண்டஸ்ட்ரி தெளிவாக இருப்பதால், அவர் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்பதற்கு முடியாத காரியம் என்றும் கூறப்படுகிறது.

அதே சமயம், ஸ்ரீரெட்டியே பிக் பாஸ் குறித்தும், அதில் தான் பங்கேற்பது குறித்தும் அவ்வபோது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

ஷெரீனுக்கு கன்னம் : லாஸ்லியாவுக்கு நெற்றியா? மோகன் வைத்தியவை நோஸ்கட் செய்த கமல்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் மோகன் வைத்தியா வெளியேற்றப்படுவதாக, கூறப்பட்டதால், உடனே உணர்ச்சிவசப்பட்ட மோகன் வைத்தியா அங்கிருந்த பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வந்தார்.

கண்கலங்கிய படி பெண்கள் பக்கமே சென்றார். இதை அங்கிருந்து கண்ட கமல் போதும்…போதும் இதுக்கு மேல எதுவும் வேண்டாம் என்று அவரை செமையாக நோஸ் கட் செய்ய உடனே மோகன் வைத்தியாவும் ஒன்றும் தெரியாதது போல் தன் கண்களை துடைத்தார்.

இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் கை தட்டி கமலுக்கு சப்போர்ட் செய்தனர். இருப்பினும் இதைக் கண்ட இணையவாசிகள் கமல் சொன்னது உண்மை தான், அந்த ஆளு அப்படி தான், அடுத்த சினேகன் என்று கூறி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி லாஸ்லியாவிற்கு எப்படி ஒரு தந்தை போன்று நெற்றியில் முத்தம் கொடுத்தார், அதே போன்று கொடுத்திருக்கலாம், ஆனால் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரி என்ன மாதிரி இதை சொல்றது என்று திட்டியும் வருகின்றனர். அது தொடர்பான புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

திருமணத்திற்கு பிறகும் இது தேவையா? சமந்தாவின் வைரல் புகைப்படம் உள்ளே!!

நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் கொடிக் கட்டி பறந்தார். குறிப்பாக தமிழில் நடிகர் விஜய், சூர்யா, விக்ரம் இப்படி பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

நடிகர் சைதன்யாவை திருமணம் செய்த பின்னர் படங்கள் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

சமந்தா அவரது கணவருடன் இணைந்து நடித்தாலும், மற்ற நடிகர்களுடன் நடிக்கும் போது நல்ல கேரக்டர் உள்ள கதாபாத்திரம் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்போது நடிகை சமந்தாவின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் சமந்தா ஒருவருடன் படு கவர்ச்சியான உடையில் இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகு இது தேவையா எனக் கேட்டு வருகின்றார்கள்.

மீண்டும் சினிமாவில் குஷ்பு : அரசியலில் இருந்து விலக திட்டம்!!

குஷ்பு, தீவிர அரசியலில் இருந்து விலகி மீண்டும் சினிமாவுக்கு திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ள அவரின் டுவிட்டர் பதிவிற்கு ஆதரவு குவிந்து.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக உள்ள குஷ்பு, தீவிர அரசியலில் இருந்து விலகி மீண்டும் சினிமாவுக்கு திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ள அவரின் டுவிட்டர் பதிவிற்கு ஆதரவு குவிந்து வருகிறது.

மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி கடந்த முறை போல, இந்தமுறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறமுடியாமல் படுதோல்வியடைந்தது. இதனையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல், அப்பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார்.

பல்வேறு மாநிலங்களின் தலைவர்கள் தொடர்ந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக உள்ள நடிகை குஷ்புவும், மீண்டும் நடிக்க வந்துவிடவா என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, குஷ்பு, டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, தாம் மீண்டும் சினிமாவுக்கு வர விரும்புவதாகவும் இது தொடர்பாக கருத்துகளை தெரிவிக்குமாறும் அவர் கேட்டிருந்தார்.

குஷ்புவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் ஆதரவு குவிகிறது. மனோபாலா, நடிகை கஸ்தூரி, நீத்து சந்திரா உள்ளிட்டோர், குஷ்பு மீண்டும் சினிமாவிற்கு வர ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல். அதனால் நீங்கள் இப்படி சிந்திப்பது இயல்பானதுதான். அரசியலில் நடிப்பதைவிட சினிமாவில் நடிப்பதற்கு அதிக வாய்புகள் கிடைக்கும் என ஒரு ரசிகர், பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய நடிகர் : உண்மையிலேயே உயி ரிழந்த சோகம்!!

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய நடிகர்

தமிழகத்தில் இறந்ததாகக் கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய வில்லன் நடிகர் ஒருவர் உண்மையில் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் ஆர்.எஸ்.கோபால். இவர் வலியுடன் காதல் என்ற படத்தில் நடித்துள்ளதுடன் நகர ரஜினி ரசிகர் மன்ற செயலாளராகப் பொறுப்பு வகித்தவர். தற்போது இவர் பூதமங்கலம் போஸ்ட் என்ற படத்தில் வட்டம் வரதன் என்ற வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார்.

அதில் அவர் இறப்பது போன்ற காட்சிக்காகக் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களையும், சவபெட்டியில் மாலையுடன் இருப்பது போன்ற தன்னுடைய வீடியோவையும் வாட்ஸ் ஆப்பில் நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.

அவர் காயல்பட்டினத்தில் பானை முதல் யானை வரை கிடைக்கும் என்ற பெயரில் கடை வைத்திருந்ததால், அவருக்கு தெரிந்த பலர் ஆர்.எஸ்.கோபால் மரணம் அடைந்ததாகக் கருதி வீட்டிற்கு இறுதி அஞ்சலி செலுத்த மாலையுடன் சென்றுள்ளனர்.

அப்போது அது நான் நடிக்கும் புது படத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் என்று விளக்கமளித்த அவர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களையும் கிழித்துள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் கோபால் இறந்ததாக காயல்பட்டினம் பகுதியில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டது. இதனையும் சினிமாவிற்காக ஒட்டியிருக்கலாம் என்று அப்பகுதியினர் கருதியுள்ளனர்.

ஆனால் உடல் நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆர்.எஸ்.கோபால் உண்மையிலேயே உயிரிழந்தது தாமதமாகவே தெரியவந்தது. அதன்பின்னர் தான் அப்பகுதி மக்கள் ஆர்.எஸ்.கோபாலுக்கு அஞ்சலி செலுத்த சென்றுள்ளனர்.

சினிமாவுக்காக போலியாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய அடுத்த சில நாட்களிலேயே ஆர்.எஸ். கோபால் உண்மையிலேயே இறந்திருப்பது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

முதல் கணவர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் : அமலாபால் செய்த வேலை!!

சினிமா என்று வந்துவிட்டால் சில நடிகைகள் தங்களது திருமணத்தை தள்ளிப்போடுவார்கள். ஆனால் அமலாபால் அப்படி செய்யாமல் இயக்குனர் விஜய் மீது காதல் வந்ததுமே திருமணம் செய்து கொண்டார், பின் இடையில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட பிரிந்தனர்.

இந்த நிலையில் இயக்குனர் ஏ.எல். விஜய் அவர்களுக்கும் டாக்டருக்கும் திருமணம் நடந்துள்ளது. உடனே ரசிகர்களின் கவனம் அமலாபால் பக்கம் திரும்பியது.

ஆனால் அவரோ திருமணம் குறித்து எதுவும் தெரிவிக்காமல் தான் நடித்துள்ள ஆடை படம் குறித்து டுவிட்டுகள் போட்டு வருகிறார்.

பிக் பாஸ் விதியை மீறிய வனிதா : கடுப்பில் விஜய் டிவி!!

பிக் பாஸ் சீசன் 3 பரபரப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இப்போட்டியின் முதல் எலிமினேஷனில் நடிகை பாத்திமா பாபு வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் வெளியேறப் போவது யார்? என்பதில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்களாக பங்கேற்கும் பிரபலங்களுக்கு நிகழ்ச்சி குழுவினர் பல விதிமுறைகளை எழுத்துப் பூர்வமாக போட்டு, அவர்களிடம் கையெழுத்தும் வாங்கிக் கொள்கிறார்கள். அப்படி போடப்படும் விதிமுறைகளில் போட்டியாளர்கள் சம்பளம் குறித்து எந்த இடத்திலும் பேசக் கூடாது, என்பது முக்கியமானதாகும்.

ஆனால், இந்த விதிமுறையை பிக் பாஸின் ஹீரோவாக திகழும் வனிதா, தற்போது மீறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, விஜய் டிவியை கோபமடைய செய்திருக்கிறது.

அதாவது, பிக் பாஸில் போட்டியாளர்களாக பங்கேற்பவர்களுக்கு ஒரு நாளுக்கு இவ்வளவு தொகை சம்பளம் என்று பேசப்படுதாக கூறப்படுகிறது. அதேபோல், ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக பேசுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த இரண்டில் எது நிஜம் என்பதில் ரசிகர்களுக்கு குழப்பம் நிலவி வந்த நிலையில், அந்த குழப்பத்தை போக்கும் விதமாக, வனிதா பிக் பாஸின் சம்பள ரகசியத்தை கூறியிருக்கிறார். தற்போது பிக் பாஸ் வீட்டில் நடக்கும் தொடர் கொலைகளை கண்டுபிடிப்பது போன்ற டாஸ்க்குகளை போட்டியாளர்கள் செய்து வருகிறார்கள்.

அதன்படி, கொலையாளி வனிதா தான் என பார்வையாளர்களுக்கு தெரிந்தாலும், வனிதா, முகேனை தவிர வேறு எந்த போட்டியாளர்களுக்கும் தெரியாததால் போலீஸ் குழு திணறுகிறது.

இதனால் டென்ஷனான சேரன் ஆவியாகவுள்ள சாக்‌ஷி, ஷெரின், மோகன் வெயிலில் மிகவும் கஷ்டப்படுவதால் இந்த டாஸ்க்கை இப்படியே விட்டுவிட வேண்டும் என பிக்பாஸிடம் கூறுகிறார்.

இதற்கிடையில் குறுக்கிடும் வனிதா, ”நாம் பிக்பாஸ் கேம் விளையாட்டிற்கு வந்திருக்கிறோம், குறிப்பிட்ட சம்பளம் பேசி வந்திருக்கோம். அதை மறக்காதீர்கள்” என தெரியாமல் உளறியுள்ளார்.

வனிதாவின் இந்த ஓவர் வாயால் பிக் பாஸ் விதி மீறப்பட்டதோடு, ரசிகர்களுக்கு இதுவரை தெரியாத சம்பள ரகசியமும் தெரிந்துவிட்டது.

பிக்பாஸ் வீட்டில் சம்பளத்தைப் பற்றி உளறி கொட்டிய வனிதா!!

பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்படும் டாஸ்க்குகளை செய்து முடித்தால், மட்டுமே அடுத்தடுத்த டாஸ்க்குகளை பிக்பாஸ் கொடுப்பார்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் நடந்து வரும் டாஸ்க்கில், ஷெரீன், ஷாக்சி மற்றும் மோகன் வைத்தியா ஆகியோரை கொலை செய்த குற்றவாளி, யார் என்பதை தான் கவீன், சாண்டி மற்றும் மீரா குழு கண்டுபிடிக்க வேண்டும்.

ஆனால் டாஸ்க் துவங்கி 3 நாட்களை கடந்துவிட்டதால், ஷாக்சி, ஷெரீன் மற்றும் மோகன் வைத்தியா வெயிலில் இருக்கிறார்கள், அவர்கள் கஷ்டப்படுகிறார்கள், இந்த டாஸ்க்கை விட்டுவிடுவோம் என்று சேரன் கூறுகிறார்.

ஆனால் கவீன் இத்தனை பட்ட கஷ்டம் வீணாகிவிடும் என்று கூற, அப்போது தீடீரென்று வரும் வனிதா, நாம் பிக்பாஸ் கேம் விளையாட்டிற்கு வந்திருக்கிறோம், குறிப்பிட்ட சம்பளம் பேசி வந்திருக்கிறோம், அதை மறக்காதீர்கள் என்று வனிதா தெரியாமல் உளறிவிடுகிறார்.

இதனால் பிக்பாஸில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள் என்பது தெரியும், ஆனால் அது நாள் கணக்கிலா என்ற சந்தேகம் இருந்த நிலையில், வனிதாவின் இந்த பேச்சு, ஒரு குறிப்பிட்ட தொகையே சம்பளமாக கொடுப்படுவது தெளிவாக தெரிகிறது.